செவ்வாய், மே 31, 2011

உள்ளத்தில் தோன்றியது.....

இந்த வாரம் முழுவதும் எனக்கு  நொந்து நூடுல்ஸ் ஆன வாரம் என்று தலைப்பு கொடுக்கலாம்...(the most frustrating week at the farm), சாதாரண foal heat diarrhoea வாக துவங்கிய பேதி(எனக்கு இல்லை குட்டிக்கு) என்னை பாடாய் படுத்தி விட்டது, எனக்கே ஏற்பட்டு இருந்தாலும் நான் இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க மாட்டேன்.  மூன்று நாள் நிற்காமல் தண்ணி தண்ணியாய் ஆக அதற்கு இருபத்தி நாலு மணி நேரமும் சிகிச்சை அளித்து எனக்கு dehydration ஆகி விட்டது, இந்த குட்டியின் விலைதான் பிரச்சனைக்கு மூல காரணம் (மூன்று லட்சம் அமெரிக்க டாலருக்கு வாங்கப்பட்டது), மேலும் அதன் பெடிகிரீ, பேதியில் தொடங்கி septicaemia வந்து மண்டையை போடும் நிலைக்கு வந்து கொஞ்சம் தேறி வந்துள்ளது. இன்னும் சில நாட்கள் ஆகும் என் நிலை என்ன ஆகும் என தெரிவதற்கு. என்ன கொடும சொக்கா இது குட்டியோட தலை எழுத்து  டாக்டரோட விதியோட விளையாடுது பாரு. இதுல வீட்டுக்கு போனா என் சின்ன பொண்ணு வேற ஏம்ப்பா நான் சின்ன கொழந்தையா இருந்தப்ப  பால் குடிச்சனா, பேதி நின்னிச்சான்னு ஒரு வார்த்த கேட்டு இருப்பியா, பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை stable- க்கு போன் பண்ணி குட்டி பால் குடிச்சுதா, பேதியாச்சா, நிக்குதா, தூங்குதா, நடக்குதான்னு கேக்குறே என நக்கல் பண்றா...என்ன செய்ய யானை  படுத்தா எலி கூட  ஏறி மிதிச்சிட்டு போகும்பாங்க , இந்த குதிர குட்டியால எவ்வளவெல்லாம் பட வேண்டியிருக்கு... எம் பொண்டாட்டி எங்கிட்ட  உங்க முகமே மறந்துடும் போல, எத்தன மணிக்கு வரீங்க எத்தன மணிக்கு போறீங்க எதுவுமே தெரிய மாட்டேங்குது, ராத்திரி குதிர நாத்தம் பக்கத்துல அடிச்சா நீங்க வீட்டுக்கு வந்துட்டீங்க, அடிக்கலன்னா stable க்கு கிளம்பி போயிட்டீங்க என்று நானே முடிவு பண்ணிக்குறேன் என்று அவள் பங்குக்கு நையாண்டி.

தொடருவேன்....(அந்த குட்டிக்கு drip போடணும்  அப்புறம் எழுதுறேன்....)

கரையான்

ஞாயிறு, மே 29, 2011

ஆச்சரியப் பட வைக்கும் ஆட்டோ கிராப்ஸ்-9

இன்றையவை,நம் ப்லொக்கிற்கு,உயிர் கொடுத்துக் கொண்டிருப்பவர்களது ,கைவண்ணங்கள்.இவர்கள் இல்லையேல்,நான் ப்லொக்கில் இல்லை.

1.தாஸ்-கோழி அறிவியலில் முட்டைகளை எடுத்தான் அன்று;
                 இவனது கோழிகள் இடும் முட்டைகள் நமக்கு இன்று.
                  முகப் பெரிய முன்னேற்றம்.
 2.கரையான்-ஆம்,இவன் எழுதியது போல்,இவனே வாழ்ந்து வருகிறான்.
                           இவன் திறமைக் கேற்ற வசதிகள் , இந்தியாவில்                                  தரப்படவில்லை.ஆகையால்,வெளிநாடு வாசகம். 
 3.சொக்ஸ்-சிறுவதிலேயே கவிநர்.அவனுக்கு "கவிகாமணி'என்று பெயர் சூட்டுகிறேன்.பச்சை மையில் எழுதிய இவன்,ஒரு VAS ஆக வந்திருக்க வேண்டும்.சட்டம் இடம் தரவில்லை.இப்போது ஒன்றும் குறைச்சல் இல்லை.
பிரியமுடன்,
பாய்.

kalyana pughai padangal


மகளை மாப்பிள்ளையிடம் தந்தை கொடுக்க போகிறார்.

கடந்த மே 22 அன்று பிலிப் மூத்த மகள் கல்யாணம் மிக மங்களமாக நடந்தது. அப்போது எடுத்த சில படங்கள்  

 

மணமுடித்த தம்பதிகள்


கல்யாண தம்பதியருடன் பொண்ணு தோழியும் மாப்ளை தோழர்களும் 

பெண்ண தோழிகளுடன் .. இடது பக்கம் இர்ருபது பெண்ணின் தங்கை. - பிலிப்பின் இரண்டாவது மகள்


இது யார் என்று உங்கள்ளுக்கு தெரியும்
 Gujili

Super Engineering









அன்புடன்,
பாய்.

வியாழன், மே 26, 2011

நாவல் ஐடியா

நேற்று  ஒரு மாடு டிச்டோக்கியவுக்கு சென்று இருந்தேன்.மிகவும் மோசமான கிள்ய்மாத்.சூறாவளி புழுதிக் காற்று. கம்ப்ளீட் லேட்ரல் டீவிஏசன் ஆப் ஹெட் அண்ட் நெக்.கன்று மிகவும் பெரிய சைஸ்.செத்து வேறே விட்டது.மிகவும் கஷ்டப்பட்டு வலது கையை உள்ளே விட்டு ,தலையை கொஞ்சம் தான் இழுக்க முடிந்தது.மிகவும் கஷ்டப்பட்டு இடது கையை உள்ளே விட்டு ,ஒரு காலைத்தான்  இழுக்கமுடின்தது.இரண்டு கண்களுக்கும் ஹூக்ஸ் போட்டு ஒரு வழியாக தலையை வெளியே கொண்டுவந்தேன்.வெறும் இரண்டு பேர் தான்.எவ்வளவோ ,இழுத்தும் வரவில்லை.ஸ்டாமினா வேறு போய்விட்டது.
திடீரென்று  ஒரு ஐடியா உதித்தது.காரை பக்கத்தில் கொண்டு வந்து,அதை ட்டோ செய்ய பயன்படும் ரோப்பால் ,கன்றின் கழுத்திலும்,காலிலும்,கட்டி காரை இயக்கினோம்.ஒரே நிமிடத்தில்,கன்று முழுவதும்,வெளியே வந்து விட்டது.ரொம்ப மகிழ்ச்சி.
குறிப்பு:
1.எனக்கு "ஐடியா அஹ்மத்" என்ற பெயரும் உண்டு.
2.இன்று பாலோ அப் செய்ததில்,மாடு நன்றாக உள்ளது.
பாய்.

புதன், மே 25, 2011

HAPPY BIRTH DAY


இன்று பிறந்தநாள் கொண்டாடும் 
நண்பர் "கெமின்" சுரேஷ்குமார்
அவர்களை வாழ்த்தி
பிறந்தநாள் கவிதை எழுதுமாறு
கவிஞர் சொக்கன் அவர்களை
வேண்டி விரும்பி மிரட்டி
கேட்டுக்கொள்கிறோம்.

சென்னை நட்சத்திரங்கள்.

செவ்வாய், மே 24, 2011

சமீபத்தில் ரசித்த வீடியோ


கரையான்.

ஆச்சரியப் பட வைக்கும் ஆட்டோ கிராப்ஸ்-8

இன்றைய நண்பர்களது,எழுத்தை படிக்க ரொம்ப சிரமம்.
 1.ஆமாம்,இவன் எழுதி இருப்பது போல,நாங்கள் 1995 வரை பிரியவில்லை.1992 TO 1995 காலத்தில்,சென்னைக்கு வரும் போதெல்லாம் ,  ஹாஸ்டலுக்கு  செல்லுவேன்.அவன் இதயத்தில் மட்டுமல்ல,ரூமிலும், எனக்கு இடம் தந்தான்.இதே நேரம்,M.V.Sc., படித்து கொண்டிருந்த நம் கிளாஸ் மேட்ஸ்,பலர் அந்த தருணங்களில்,என்னை கண்டு கொள்ளவில்லை.அவர்களில்,பலர் என்னால் வெளியே வந்தவர்கள்.
 2.எத்தனையோ வாத்தியார்கள்,இவன் அன்செர் பேப்பரை,படிக்க சொல்லி,பாஸ் கொடுத்தார்கள்.இன்று,இவன்,பெரிய வாத்தியார்.
3.ஆம்,முதல் ப்ளாக் -ஏழாம் நம்பர் ரூம்,ரொம்ப பெயர்  போனது.நல்ல ஜாலியாக இருந்தோம்.பொருளாதரத்தில் மிகவும் கீல்தங்கி இருந்த இவன்,இன்று VAS ஆக இருப்பது ரொம்ப மகிழ்ச்சி.
அன்புடன்,
பாய்.

சனி, மே 21, 2011

கருத்துக்கணிப்பு

அநியாயத்துக்கு நல்லவுங்கப்பா நாமெல்லாம், நமக்கு பதினேழு வோட்டா, எவ்வளவு அடிச்சாலும்  தாங்கிகிட்டு இத்தனை நாளா வெளியே சொல்லாம இருந்து, நம்ம தமிழ் நாட்டு சனம் மாதிரி தேர்தல் வந்தவுடன் வோட்டு போட்டு தனி மஜாரிடியில நம்ம அடி வாங்குறத இப்புடி நாமளே ஒத்துக்கிட்டோமே. ஒரு வகையில சந்தோசம், நாம் மட்டும்தான் அடி வாங்குறோம்னு தனிமையில் பொருமி கிட்டு இருந்தவனெல்லாம், அட ஊரே அடி வாங்குது, நாம வாங்குனத பத்தி கவலை படுறத விட்டு விட்டு பொழப்ப பாப்போம் அப்படின்னு அடுத்த வேலையை பாக்க போகலாம். இதுல கொடுமை என்னவென்றால் நம் பெண் நண்பர்களும் உண்மையை ஒத்துக்கிட்ட மாதிரிதான் தெரியுது, நம்ம வலைப்பதிவுல ரெண்டு பெண் நண்பிகள் தினமும் கலந்துக்குரவுங்க, மனைவிக்கு ஒரு வோட்டு தான் விழுந்துள்ளதை பார்த்தால் ஒருவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த மாதிரிதான் தெரியுது.

கரையான்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள்


தமிழகத்தின் விவசாயமே
விவசாயத்தின் விடிவிளக்கே
விவசாயிகளின் உரமே
விவசாயிகளை காக்கும்
எங்கள் குமார வேலே
நீ பல்லாண்டு வாழ  
வாழ்த்தும்

"நாற்றுக்கள்" குமாரவேல் ரசிகர் மன்றம்
சென்னை
( எங்களுக்கு கிளைகள் இல்லை)






கனியிருப்ப..-

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை கனிமொழியைச் சுழற்றி அடித்து திகாரில் தள்ளியிருக்கிறது. நேற்று தொடங்கி இன்றுவரை ட்விட்டரில் கனியும் திகாரும் டாப் ட்ரெண்டிங். (தமிழகத்தில் கிடைக்காவிட்டால் என்ன, திகாரில் நாங்கள்தான் மெஜாரிட்டி). ஃபேஸ்புக்கிலும் கனிமொழியே நிறைந்திருந்தார். (முதலில், ஆ. ராசா. இப்போது, கனிமொழி. ஏக் 2ஜி கேலியே!) பர்கா தத் தொடங்கி இணையத்தில் நேற்று அக்கவுண்ட் ஆரம்பித்தவர்கள் வரை அனைவரும் கனிமொழியின் கைதை ஒருவித பரவசத்துடன் கொண்டாடித் தீர்த்துவிட்டார்கள்.


அன்னா ஹசாரேவுக்காக மெழுகுவர்த்தி ஏற்றியவர்கள் கனிமொழியின் கைதை ஊழலுக்கு எதிரான குறிப்பிடத்தக்க வெற்றி என்கிறார்கள். சட்டம் தன் கடமையைச் செய்திருக்கிறது. எத்தனை பெரிய அரசியல்வாதியாக இருந்தாலும், எவ்வளவு சக்தி வாய்ந்தவராக இருந்தாலும் சட்டத்தின் நீண்ட கரம் அவர்களை விட்டு வைக்காது. இது ஜனநாயகத்தின் வெற்றி. ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் வெற்றி. ஜனநாயகத்தின் வெற்றி. மீடியாவின் வெற்றி. ஸோ அண்ட் ஸோ.


ஒன்று மட்டும்தான் உண்மை. இது மீடியாவின் வெற்றி. இந்தக் கொண்டாட்டத்துக்காக நம்மை கிட்டத்தட்ட ஒரு மாதமாக தயார் படுத்திக்கொண்டிருக்கிறது மீடியா. இன்று, நாளை, அடுத்த வாரம், தேர்தல் முடிந்த பிறகு என்று கனிமொழி கைதாகப்போவதை ஒரு த்ரில்லர் கதையாக மாற்றி ஒவ்வொரு நாளும் நம்மை இருக்கை நுனிக்கு தள்ளிக்கொண்டிருந்தார்கள். தேர்தல் முடிந்து, அதிமுக வெற்றி பெற்றதும் நேற்று க்ளைமேக்ஸ் அரங்கேறிவிட்டது. திரை.


இன்னும் கொஞ்ச காலம் மீடியா கனிமொழியைச் சுற்றிக்கொண்டிருக்கும். கருணாநிதி தயாளுவுடன் வந்து தன் மகளைப் பார்ப்பாரா, அப்படியே வந்தாலும் காங்கிரஸ் தலைவர்கள் யாரையாவது சந்திப்பாரா, அப்படியே சந்தித்தாலும் பேசுவாரா, அப்படியே பேசினாலும் ஏதாவது உபயோகம் இருக்குமா? அடுத்து யார்? தயாளுவா? அவருக்குப் பிறகு? வேறு பெரிய தலைகள் சிக்குமா?


குழல் ஊதிக்கொண்டே செல்லும் பேக்பைப்பரைப் பின்தொடர்ந்து ஓடும் எலிகள் போல் மீடியாவை நாம் பின்தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறோம். மீடியா எது பற்றியெல்லாம் கவலைப்படுகிறதோ அது பற்றியெல்லாம் நாமும் கவலைப்படுகிறோம். மீடியாவின் சந்தேகங்களும் கவலைகளும் எதிர்பார்ப்புகளும் நம் சந்தேகங்களாக, கவலைகளாக, எதிர்பார்ப்புகளாக மாறிவிட்டன.


இதோ உன் டார்கெட் என்று மீடியா நேற்று கனிமொழியை வட்டமிட்டு காட்டியது. உடனே ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் நாம் கத்தி எறிய ஆரம்பித்துவிட்டோம். ஈழத்தமிழர்களுக்காக அன்று நீ அழுதிருந்தால் இன்று நான் உனக்காக அழுதிருப்பேன். இது பழிக்குப் பழி வாங்கும் கத்தி. நேற்று வரை ஏஸியில் இருந்தவர், இனி எப்படிக் கஷ்டப்படப் போகிறாரோ? இது ஐயோ பாவம் கத்தி. ஜெயலலிதா விடமாட்டார், கருணாநிதியின் குடும்பம் முழுவதையும் திகாருக்கு அனுப்பிவிட்டுதான் ஓய்வார். இது கட்சி அனுதாபக் கத்தி.


இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவிலும் ஆ. ராசாவும் கருணாநிதியும் தயாளுவும் கனிமொழியும் கலைஞர் டிவியும் இன்று பிரபலமான பெயர்கள். உலகம் தழுவிய டாப் ஊழல்வாதிகள் பட்டியலில் நிக்ஸனுக்கு அடுத்து இரண்டாவது இடத்தை ஆ. ராசாவுக்கு வழங்கியிருக்கிறது டைம்ஸ் பத்திரிகை. இந்தியாவின் ஆகப் பெரும் ஊழல் என்பதாக 2ஜி உலக மீடியாவில் அலசப்பட்டுக்கொண்டிருக்கிறது.


சந்தேகமில்லாமல் இது பெரும் ஊழல். ஆ. ராசாவும் கனிமொழியும் மட்டுமல்ல இந்த ஊழலோடு சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்படவேண்டியவர்களே. ஆனால், மீடியாவின் நோக்கம் இதுதானா? யோசித்துப் பாருங்கள். மீடியா பிரச்னையின் அசலான மையப்புள்ளியை என்றாவது நேர்மையாக வெளிப்படுத்தியிருக்கிறதா? காஷ்மிரில் கல் வீச்சு நடந்தால் அது பரபரப்பு செய்தி. காஷ்மிர் பிரச்னையின் மையம் என்ன? பாகிஸ்தான் தீவிரவாதம் பரபரப்பு செய்தி. அதன் தோற்றுவாய் என்ன? ஒசாமா பின்லேடன் கொலை சென்சேஷன். ஒசாமாவை உருவாக்கியவர்களின் கதை? அவர்கள் நோக்கம்? இராக் யுத்தமும் ஆப்கனிஸ்தான் யுத்தமும் பல்லாயிரம் முறை செய்திகளாக வலம் வந்தன. ஆனால், எத்தனை முறை போர்க்காரணம் உண்மையாக அலசப்பட்டிருக்கிறது?


கனிமொழியும் அவ்வாறே. கருணாநிதியின் மகள். அரசியல்வாதி. திமுகவின் முக்கியப் புள்ளி. மக்களுக்குப் பரிச்சயமான முகம். அவர் ஒரு வழக்கில் மாட்டும்போது, முக்கியத்துவம் பலமடங்கு அதிகரிக்கிறது. பல கதைகளையும் யூகங்களையும் அவரை வைத்து பின்னமுடிகிறது. பத்திரிகைகளுக்குப் பல பக்கங்கள். தொலைக்காட்சிகளுக்குப் பல மணி நேர ஒளிபரப்பு. பரபரப்பு. பைசா.


கனிமொழியை அம்பலப்படுத்துவதிலும் ஆ. ராசாவை அம்பலப்படுத்துவதிலும் அடுத்து தயாளுவை கட்டம் கட்டுவதிலும் முனைப்புடன் இருக்கும் 24து7 மீடியா என்றாவது, 2ஜி பிரச்னையின் மையப்புள்ளியான தனியார்மயத்தை அம்பலப்படுத்தியிருக்கிறதா? நீரா ராடியா டேப் வெளிவந்த பிறகும்கூட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான ரகசிய உறவு போதுமான அளவு அம்பலப்படுத்தப்படவில்லை.


ஜெயலலிதாவின் வெற்றியையும் ஆட்சி மாற்றத்தையும் மட்டுமே மீடியா ஆரவாரமாக வெளிச்சம் போட்டு காட்டும். ஆனால், ஆட்சி மாற்றம் எந்தவித அடிப்படை மாற்றத்தையும் கொண்டு வரப்போவதில்லை என்பதையும், இந்தியாவின் அடிப்படை கொள்கைகளான தனியார்மயமும் தாராளமயமும் எந்த நிலையிலும் மாறப்போவதில்லை என்பதையும் மீடியா என்றும் அம்பலப்படுத்தப்போவதில்லை.
காரணம் அவர்கள் பிரச்னைகள் குறித்து கவலைப்படுவதில்லை. தேவை கவர்ச்சிகரமான, பரபரப்பான கதைகள் மட்டுமே. எனவேதான் ஆ. ராசாவும் கனிமொழியும் திகாரும் நமக்கு பிளேட்டில் வைத்து பரிமாறப்படுகின்றன. மீடியா விரிக்கும் வலையில் நாம் அனைவரும் வலியச் சென்று சிக்கிக்கொள்கிறோம். கனிமொழி மீது கத்தி வீசி நம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்கிறோம். உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தே தீருவான் என்று தேற்றிக்கொள்கிறோம். கருணாநிதி குடும்பத்தின் ஆதிக்கத்தை நான் ஆணையிட்டால் பாணியில் சவுக்கைச் சுழற்றி ஜெயலலிதா முறியடிப்பார் என்று உள்ளுக்குள் மகிழ்ந்துபோகிறோம்.


சரி அடுத்து என்ன? பேக்பைப்பரின் குழலுக்காக நாம் காத்துக்கொண்டிருக்கிறோம்.

நன்றி  - மருதன்   (தமிழ் பேப்பர்)

சொக்ஸ்



வெள்ளி, மே 20, 2011

VETS JOKES

A man riding out in the bush fell from his horse and broke his leg.

He was a long way out, so the situation looked pretty grim.
Then the horse grabbed the man's belt in his teeth and dragged him
to the shade of a nearby tree. He made the man as comfortable as he
could and then galloped off to get help.
The man discussed the incident a few weeks later with a friend,
who--very impressed--praised the horse's intelligence.
"He's not so smart," said the animal's owner. "He came back
with a vet."

Kumaran took his Saint Bernard to the vet friend Bhai. "Bhai," he said sadly,

"I'm afraid I'm going to have to ask you to cut off my dog's tail."
Bhai stepped back, "Kumaran, why should I do such a terrible thing?"
"Because my mother-in-law's arriving tomorrow, and I don't want
anything to make her think she's welcome."

karaiyan

வியாழன், மே 19, 2011

ஆச்சரியப் பட வைக்கும் ஆட்டோ கிராப்ஸ்-7

கீழே உள்ள முதல் படத்தை ,இந்த தொடரின் ஆரம்ப படமாக போட்டிருக்கவேண்டும்.நேற்று தான் பார்த்தேன்.இது,உங்களை நான்  ஆட்டோ கிராப் எழுத ,வேண்டிய விதம்.


கீழே உள்ள மூன்று ,எனது மிக நெருங்கிய ஹாஸ்டல் நண்பர்களுடையது.பாருங்கள்,அவர்களது கையெழுத்தை-அச்சுப்பிரதி போல் உள்ளது.தங்களது கைஎளுதினாலேயே,பாசாகி வெளியே வந்தவர்கள் [என்ன புரிகிறதா?]இவற்றை ஸ்கேன் செய்ய ஆரம்பித்ததில் இருந்து, இப்போது வரை,எங்கள் கல்லூரி வாழ்க்கையை நினைத்து ,நினைத்து சிரித்துக் கொண்டிருக்கிறேன்.வீட்டில் உள்ளவர்களும்,ஆபிசில் உள்ளவர்களும்  ,"என்ன ,எதையோ நினைத்து சிரிக்கிறீர்கள்?' என்று கேட்கிறார்கள்.

 அந்து,இதிலாவது, சுருக்கி எழுதுவான் என நினைத்தேன்.இங்கேயும்,முழுசு தான்.
 இன்று நிலைமை ,பாபு எழுதியதற்கு தலைகீழ்.ஏன்,அவன் வீட்டில் கூட இருக்கலாம்.
கோடிட்ட இடைத்தை நிரப்பவும்.
"அலெக்ஸ் என்றால்,      .........க்ஸ்.
.........க்ஸ் என்றால்,அலெக்ஸ்" .

குறிப்பு:நீங்களும்,நினைத்து ,நினைத்து , சிரிப்பது,ஏன் கண் மும் தெரிகிறது.

அன்புடன்,
பாய்.


புதன், மே 18, 2011

உங்களுக்கு தெரியுமா...


How does a fish pick its nose?


With a fish finger!


What happens when a cat eats a lemon?

It becomes a sour puss!


Why are elephants wrinkled?

Have you ever tried to iron one?


What do you get if you cross a fish with an elephant?

Swimming trunks!

Why do elephants never forget?

Because nobody ever tells them anything!


What day do fish hate?

Fry-day.

What do call a bear with no ears?

                     B!

Where do cows go on Saturday nights?

To the MOOO-vies!


Why is it hard to play cards in the jungle?

There are too many cheetahs!

When is it bad luck to see a black cat?

When you’re a mouse!


What time is it when an elephant sits on your fence?

Time to get a new fence!


What does a kitten become after it's three days old?

Four days old!


What do you get when you cross a parrot with a centipede?

A walkie talkie!


What kind of animal goes OOM?

A cow walking backwards!


What animal has more lives than the cat?

A frog, he croaks every night.


What is a crocodiles favorite game

                       Snap


What happens when a frog’s car breaks down?

He gets toad away.


What do you get when you cross a parrot with a pig?

A bird who hogs the conversation.


What did one flea say to the other flea?

Shall we walk or take the dog?


What do you get if you cross a crocodile with a flower?

I don't know, but I'm not going to smell it!


What’s the difference between an injured lion and a wet day?

One pours with rain, the other roars with pain!


What is the strongest animal?

A snail. He carries his house on his back!


What is the difference between a flea and a wolf ?

One prowls on the hairy and the other howls on the prairie!


What did the clean dog say to the insect ?

Long time no flea!


How do you find where a flea has bitten you?

Start from scratch!                  


What do you call an elephant in a phone box?

                         Stuck!

What do you get when you cross a porcupine with a balloon?

                               POP!

Where do hamsters come from?

            Hamsterdam.


What kind of snake is good at math?

                An adder.

Why are igloos round?

So polar bears can’t hide in the corners!


What do you give an elephant with big feet?

Plenty of room!


How do you get an elephant down from a tree?

Put him on a leaf and wait until autumn!


What’s grey and squirts jam at you?

A mouse eating a doughnut!


Why aren’t elephants allowed on beaches?

They can’t keep their trunks up!


What has six eyes but cannot see?

Three blind mice!

Joey: I lost my dog.

Lauren:Why don't you put an ad in the newspaper?

Joey: Don't be silly! He can't read


How does a hedgehog play leap-frog?

Very carefully!


What happened to the cat that swallowed a ball of wool?

She had mittens!


What do you call a gorilla wearing ear-muffs?

Anything you like! He can’t hear you!


What do you give an elephant that’s going to be sick?

Plenty of space!


Chocks