வியாழன், டிசம்பர் 31, 2009

புத்தாண்டு vazhthukkal

அன்பு மிக்க சென்னை நட்சத்திரங்களே, உங்கள் அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்துக்கள்! வாழ்க வழமுடன்!!
குஜிலி

வியாழன், டிசம்பர் 03, 2009

என் மகன் கார்த்திகேயன்பக்கத்து வீட்டு எகிப்தியன் பசங்களோட அடிக்கடி விளையாட செல்வான். நேற்று அவன் அவர்கள் வீட்டுக்கு விளையாட சென்ற போது அவர்கள் வீட்டு தோட்டத்தில் ஒரு மூட்டையை பார்த்திருக்கிறான், அதனுள் கோழி எரு (droppings or poultry manure) இருந்துள்ளது. இவன் அவர்களிடம் அது என்ன என்று கேட்க கார்த்தியின் நண்பனான எகிப்திய சிறுவன் அது என்ன என்பதற்கு ஆங்கிலத்தில் சொல்ல தெரியாமல் செய்து காட்டிய ஆக்ஷன்தான் நாம் இந்த வீடியோ வில் பார்ப்பது.

கரையான்.

புதன், டிசம்பர் 02, 2009

படத்தில இருக்கிறவரை யாரென்று தெரியுதா, நம்ம நண்பர்தான். சுரேஷ், கல்லூரியில படிக்கும்போது ஒரு டப்பா ராஜ்தூத் பைக்குல வருவானே அவனேதான். இப்ப இவனும் வெளி நாட்டுல தான் குப்ப கொட்டுறான். டாலர் தேசம் அமெரிக்காவுல Mayo Clinic College of Medicine ல பணி புரிகின்றான்.
கரையான்.

சனி, நவம்பர் 28, 2009

பொம்பளைங்க என்னத்ததான் அவ்வளவு நேரம் பேசுவாங்களோ தெரியாது, அவங்களுக்கு மட்டும் மணிக்கணக்குல உக்காந்து பேச அப்படி என்னதான் இருக்குனு தெரியல. பக்ரித் விடுமுறைல தமிழ் நண்பர்கள் சிலர் வந்தாங்க, ஆண்களா தனியாக உட்காந்து கதை அளந்து கொண்டிருந்தோம், கொஞ்சம் நேரம் தான் பேச முடிந்தது, அதற்கு பின் என்னமோ பேச ஒண்ணுமே இல்லாதது போல் போராட்டித்து விட்டது. ஆனால் பெண்கள் பேசினார்கள் பேசினார்கள் பேசிக்கொண்டே இருந்தார்கள் கிளம்ப வேண்டிய நேரம் வந்தவுடன்(கிட்டத்தட்ட மூன்று நான்கு மணி நேரம் கழித்து) இப்பதான் பேச ஆரம்பித்தோம் அதுக்குள் கிளம்ப சொல்றீங்களே என்று அலுத்து கொண்டு கிளம்பினார்கள். இது கூட பரவாயில்லை, என்னுடைய பக்கத்து வீட்டு சூடான் நாட்டுக்காரன் அவன் குழந்தை பிறந்ததற்காக பார்ட்டி கொடுத்தான், நான் என் குடும்பத்துடன் சென்று விருந்தை சிறப்பிக்க சென்றேன், அங்கு என் மனைவி ஒரு சூடானி மற்றும் ஒரு எகிப்திய பெண்ணுடன் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கதை அளந்து கொண்டிருந்தாள். இது என்ன பெரிய விஷயம் என்கிறீர்களா , விஷயம் என்ன வென்றால் என் மனைவிக்கு அரபி சுத்தமாக வராது, அந்த பெண்களுக்கு அரபி தவிர எந்த மொழியும் கொஞ்சமும் தெரியாது.

கரையான்.







TO ALL " ID MUBARAK"

கரையான்.

திங்கள், நவம்பர் 23, 2009

தமிழுக்கு அமுது என்ற பேர்

அந்ததமிழில் தங்கள் தொழிலை சுட்டி காட்ட இதுவே நல்ல தருணம். வாழ்க ,வளமுடன் வாழ்க தமிழ்!
Doctor -- Vaidyanathan Dentist -- Pallavan Lawyer -- Kesavan North Indian Lawyer -- Panjabakesan Financier -- Dhanasekaran Cardiologist -- Irudhayaraj Pediatrist -- Kuzhandaisamy Psychiatrist -- Mano Sex Therapist -- Kamadevan Marriage Counselor -- Kalyanasundaram Ophthalmologist --Kannayiram ENT Specialist -- Neelakandan Diabetologist -- Sakkarapani Nutritionist -- Arogyasamy Hypnotist -- Sokkalingam Mentalist -- Budhisikamani Exorcist -- Maatruboodham Magician -- Mayandi Builder -- Sengalvarayan Painter -- Chitraguptan Meteorologist -- Kaarmegam Agriculturist -- Pachaiyappan Horticulturist -- Pushpavanam Landscaper -- Bhuminathan Barber -- Kondaiappan Beggar -- Pichai Bartender -- Madhusudhan Alcoholic -- Kallapiraan Exhibitionist -- Ambalavaanan Fiction writer -- Naavalan Makeup Man -- Singaram Milk Man -- Paul Raj Dairy Farmer -- Pasupathi Dog Groomer -- Naayagan Snake Charmer -- Nagamurthi Mountain Climber -- Yezhumalai Javelin Thrower -- Velayudam Polevaulter -- Thaandavarayan Weight Lifter -- Balaraman Sumo Wrestler -- Gundu Rao Karate Expert -- Kailaasam Kick Boxer -- Ethiraj Batsman -- Dhandiappan Bowler -- Balaji Spin Bowler -- Thirupathi Female Spin Bowler -- Thirupura Sundari
Driver -- Sarathy Attentive Driver -- பார்த்தசாரதி

அன்புடன்,
பாய்.

ஞாயிறு, நவம்பர் 22, 2009

வான்கோழி வாரம் விடுமுறை..

இந்த வாரம் எங்கள் ஊரில் நன்றி விடுமுறை. எல்லோரும் வான்கோழி செய்து சாப்பிடுவார்கள். என்னக்கு வான்கோழி கரி கொஞ்சமும் பிடிக்காது. ஆனால் அத்துடன் நச்ச உருளைகிழங்கும், கிரான்பெரி சாஸ் நல்ல ருசியாக இருக்கும். இந்த ஒரு நாள் எல்லா மக்கள்ழும் தங்கள் இன ஜன பந்துக்களோடு சேர்ந்து சாப்பிட்டு டிவி இல் கேம்ஸ் பார்த்து கொண்டாடுவார்கள். நாங்கள் வருஷந்தோறும் எங்கள் நாதுனார் மற்றும் சகல இனதொரோடு கூட சேர்ந்து சாபிடோவோம்; ஆனால் இந்த ஆண்டு எங்கள் அத்தைக்கு வயசு ஆகிவிட்டதால் ஹோடேலில் சாபிடபோகிறோம். பின்னர் வீட்டுக்கு வந்து எல்லோரும் இனிப்பு பலகாரங்கள் சாப்பிட அதை வீட்டிற்கு செல்கிறோம். நான் ஓஹியோ வில் இருக்கும் போது ஒரும் முறை நமது தேசி வாத்தியார் வீட்டிற்கு இந்த தன்க்ச்கிவிங் சாப்பாடு சாப்பிட சென்றேன். அவர் மனைவி (அயிர்) சைவம் ஆகிலும் அவர்கள் அசைவ உன்னவு சாப்பிடுவதை பொருத்தி கொழ்வார். அன்றைக்கு வான்கோழியும், சகல் வித பண்டங்களும் சாப்பிட்ட பிறகு அவர் மனைவியின் சொந்தக்காரர் பக்கத்து ஊரில் இருந்து வருவதாக தொலைபேசியில் செய்தி வந்தது. அவர்களும் ஐயர் சைவ ஆசாமிகள். ஆகையால் வாத்தியாரின் மனைவி அய்யய்யோ உடனே எல்லா மாமிசமான சாபட்டுகளையும் தூக்கி போடவேண்டும் என்று எங்களை அவசரிபடிதானர்கள். வீட்டில் மெழுகுவர்த்தி கொழுத்தி வான்கோழி நாற்றம் எப்படியாவது போய்விடும் என்று நம்பிக்கையோடு சமையல் அறை முழுவதையும் சுத்தம் செய்தார்கள். வாத்தியார் பயந்து நீ மீதியிருக்கும் வான்கோழியை தயவு செய்து எடுத்துகொண்டு போ என்று என்னிடம் சொன்னார். நானும் அதை வீட்டிற்கு எடுதொகொண்டு சென்றேன். வாங்கோழியில் ஒரு மசாலை கிடையாது; சப்பென்று இருந்ததால் நான் அத்துடன் மிளகாய் தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு அரிது எப்படியாவது அதை மாற்றி சாபிடலாம் என்று நினைத்தேன். ஆனால் என்ன செய்தாலும் நாற்றம் வீடு முழுதும் பக்கத்து தெரு வரைக்கும் சென்று விட்டது. அந்த நாளில் இருந்து வான்கோழியை கண்டால் பேஜார்!
எல்லோருக்கும் எங்கள் தன்க்ச்கிவிங் வாழ்த்துக்கள்...
குஜிலி.

ஞாயிறு, நவம்பர் 15, 2009

நமது வாத்தியார்கள்

முதல் ட்ட்ரிமேச்டேர் :
ஆங்கிலம் - சிவமோகன்
வேதியியல் -சுப்ரமணியம்
தாவரவியல் -ராஜலக்ஷ்மி
புள்ளியியல் -ராதாகிருஷ்ணன்
உயிர்வேதியியல் -முஸ்தாக் அஹ்மத்
இயற்பியல் -சீனிவாசன்
எல்.பீ.எம்.- விஸ்வநாதன்
உங்களது கருத்துக்களை எழுதவும்.
பாய்.

வயதாகினாலும் பழைய கேலி கிண்டல்கள் குறையாமல் நண்பர்களுடன் பேசுவது ஒரு தனி சுகம்தான் . என்ன இப்போது உள்ள ஒரே வித்தியாசம் எல்லை மீறாமல் கேலி கிண்டல்கள் இருக்க வேண்டும் , ஏனென்றால் மனைவிகள் குழந்தைகள் தவறாக எடுத்துக்கொள்ள கூடாது .கணேச பாண்டியனை நான் இந்த பிக்னிக் இக்கிற்கு அழைத்தவுடன் அவன் எனக்கு போட்ட முதல் கண்டிஷன் அவனுடைய உருவத்தை பற்றி நான் ஏதும் கமென்ட் அடிக்க கூடாது என்பதுதான். அவனை என்னுடன் ஒரு போட்டோ எடுத்துக்கொள்ள அழைத்த போது அவனுடைய வயிற்றை இறுக்கி தொப்பை தெரியாமல் இருக்க மிகவும் கஷ்டபட்டான்.
கரையான்.

சனி, நவம்பர் 14, 2009










சென்னை விஜயத்தின் போது நிகழ்ந்த சுவாரஸ்யமான சந்திப்புகள் நம் மக்களுக்காக







செவ்வாய், நவம்பர் 10, 2009

நண்பர்கள் சந்திப்பில் சில பல சுவாரஸ்யமான விஷயங்கள் பகிர்ந்துக்கப்பட்டது. பலது இங்கே எழுத முடியாது, வெளிப்படுத்த முடிந்த சிலவற்றை எழுதுகிறேன்...
நம்ம பாண்டு மனோகரன் டைரி சயின்ஸ் வகுப்பில் செய்த காமெடியை பாய் போட்டு உடைத்தார். Dairy Microbiology நமக்கு டாக்டர் நரசிம்மன் எடுத்தார். அந்த சுப்ஜெக்ட் இன் இறுதி தேர்வில் எல்லோருக்கும் கேள்வித்தாள்கள் கொடுத்தார், பாண்டுக்கு மட்டும் கேள்வித்தாள் மாறி கொடுக்கப்பட்டு விட்டது, அதாவது அடுத்த trimester க்கான Dairy Technology question paper தவறுதலாக கொடுக்கப்பட்டு விட்டது. கேள்வித்தாள் பார்த்த பாண்டும் அதில் இருந்த பால் கோவா செய்வது எப்படி, சீஸ் செய்வது எப்படி என பல் கேள்விகளுக்கும் ஒன்றும் தெரியவில்லை என்றாலும் ஏதோ எழுதி வைத்தான். முழுதாக மூணு மணி நேரம் எழுதி தள்ளி விட்டுதான் பரீட்சை ஹால் விட்டு வெளியில் வந்தான். மற்ற நண்பர்களுடன் பேசும்போதுதான் தவறை உணர்ந்தான், நரசிம்மனிடம் சென்று அது பற்றி கூறினான், நரசிம்மனும் தவறை உணர்ந்து அவனுக்கு மறு பரீட்சை வைத்தார்.
எப்படிடா ஒன்றும் படிக்காமல் அவ்வளவு நேரம் எழுதினாய் என்று பான்டிடம் கேட்டால் "கோவா செய்யறது, தயிர் செய்யறது எல்லாம் நாம வீட்ல பாக்காததா? அத்தான் கொஞ்சம் உல்டா பண்ணி எழுதினேன் அதுக்குதான் இவ்வளவு டைம் ஆயிடிச்சி" என்று சொல்லி அசத்தினான்.
கரையான்.




















சில காட்சிகள்






திங்கள், நவம்பர் 09, 2009

ரொம்ப நீண்ட இடைவெளி விழுந்து விட்டது. அவரவர் தம் தம் வேலைகளில் கொஞ்சம் பிசியாகி விட்டதால் எழுத முடிய வில்லை. இன்று முதல் தொடங்குவோம்.

விடுமுறையில் சென்னை சென்றிருந்த பொது ஒரு குட்டி get-to-gether நம்ம மக்கள் அப்படியேதான் இருக்காங்க, உருவம் மட்டும்தான் மாறியுள்ளது உள்ளம் அப்படியேதான் இருக்கு. Beverly Bar ல சாயந்திரம் ஏழு மணிக்கு சந்திக்கலாம்டான்னு சொன்னால், பாண்டு மனோகரன் சாயந்திரம் ஆறு மணிக்கே பாருக்கு வெளியில நின்னுக்கிட்டு எப்பட எல்லாம் வருவீங்க என்று போன் மேல போனா போட்டு தள்ளுரான், ரமேஷ் முக்கியமான கல்யாணத்துக்கு போகனும்டா, வந்து தலைய மட்டும் காட்டிட்டு போயிடுவேன் இருக்க சொல்லி கம்பெல் பண்ணக்கூடாது என்று பந்தா விட்டவன் நைட்டு பன்னெண்டு மணிக்கு பாரு முடியதுக்கு அப்புறம்தான் சீட்டை விட்டு எழுந்தான் . நம்ம பாண்டியன் நான் டயத்துல இருக்கேன் பாத்துக்க கொஞ்சமாதான் drinks எடுத்துக்குவேன், ரொம்பல்லாம் குடிக்க முடியாது என்று பந்தா விட்டவன் நாலு பாட்டில் பீர் உள்ளே போன பின்னாலும் அவ்வளவுதானா என்பது போல் அலுத்துக்கொண்டான், பாண்டியா இதுதான் உன்னுடைய dieting ஆ எப்பா சாமி தாங்காதுடா என்று அலற வைத்து விட்டான்.(டயட் ல இல்லையென்றால் எத்தன பாட்டில் உள்ள போய் இருக்குமோ), TP அடுத்த ரவுண்டுக்கு ரிபீட் சொல்ல சொல்ல எனக்கு கொஞ்சம் பயம்தான், அவனுக்கு உள்ள போன வேகத்துல திரும்ப எல்லாம் வெளியில வந்திடுமே என்ற கவலை எனக்கு நான்தானே அவன் பக்கத்திலே உட்காந்திருக்கேன். உழவர் பயிற்சி முகாம் இருக்கு மச்சி நான் வர்றது கொஞ்சம் கஷ்டம்டா என்று பந்தா விட்ட குமாரவேலு மதியம் மூணு மணிக்கெல்லாம் போன் செய்து "உனக்காக உழவர் பயிற்சிய அப்பறம் பாத்துக்கலாம்னு ஒத்தி போட்டுட்டேண்டா வருஷத்துக்கு ஒருமுறை வர்றே இது கூட செய்யலன்ன எப்படி"

ஐயா சாமி என்னால நம்ம நாட்டோட விவசாய முன்னேற்றம் பாதிக்க வேண்டாம் நீ வேணும்னா வேலைய பாரு " என்றேன் நான்.

பாய் "டேய் நான் நெல்லைய புடிக்கணும் ஏழு மணிக்கெல்லாம் எக்மோருக்கு கெளம்பிடுவேன் என்ன சீக்கிரம் வுட்டுடுங்கடா என்று பந்தா விட்டு வந்து மாம்பழ ஜூஸ் குடிச்சு கெளம்பிட்டாரு நெல்லை சீமைய புடிக்க. டேய் வீட்டுக்கு போகணும் ரெண்டு ரவுண்டுதான் அதுக்கு மேல முடியாது என்று கூறிவிட்டு என்னடா நாலு ரௌண்டுதானா என்று கூறி பார விட்டு எழுந்திரிக்க மனம் இல்லாமல் வந்தான் பாண்டு. சேவியர் தொழிலதிபர் கெட் அப்புல வந்து கொஞ்சமா பெப்சி மட்டும் குடிச்சிட்டு கோழி விக்கிற தொழில ரகசியத்த எல்லாம் போட்டு உடைச்சான், பழைய கதையெல்லாம் பேசி சிரிச்சு பார கலக்கிட்டு அவுங்க அவுங்க வீட்டுக்கு நல்ல புள்ளையா அஜந்தா பாக்கு போட்டு நாத்தத்தை மறக்கரதா நினச்சு போனால் பொண்டாட்டி சிரிக்கிறா "இன்னைக்கி தண்ணியா "

எப்படி கண்டிபுடிச்ச நான்தான் நாத்தம் வராம இருக்க பாக்கெல்லாம் போட்டிருக்கேனே."தண்ணி அடிக்கிற அன்னைக்கிதானே பாக்கு போடுவே அது கூடவா எனக்கு தெரியாது."

கரையான்.

திங்கள், அக்டோபர் 12, 2009

என்ன ஆச்சு?

கரையான் வீட்டில் கரையான் தொல்லையா?
குஜிலி வீட்டில் கொசு தொல்லையா?
GFK வீட்டில் துப்பாக்கி சண்டையா?
பீர் வீட்டில் பாச்சான் தொல்லையா?

பாய்.

திங்கள், ஆகஸ்ட் 31, 2009

வணக்கம் விடுமுறை முடித்து நேற்றுத்தான் பணிக்கு திரும்பினேன். மிக நீண்ட இடைவெளி, பரவாயில்லை நாம் படிப்பதற்காக சில நெட் ஜோக்ஸ்.
கண்ணா நீகல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன்,
கல்யாணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன்,
பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன்,
நாற்பது வருஷத்திற்கு பிறகு டாபர்மேன்...

ஒரு பொண்ணு போட்டோவுலதேவதைமாதிரி
இருந்தாலும்நெகடிவ்லபிசாசு மாதிரிதான் இருப்பா

அப்பா அடிச்சா வலிக்கும்அம்மா அடிச்சா வலிக்கும்ஆனால் சைட் அடிச்சா
வலிக்காது

உன்னை யாரவதுலூசுன்னு சொன்னாகவலை படாதே!வருத்த படாதே!ஃபீல் பண்ணாதே!உங்களுக்கு எப்படிதெரியும்ன்னு கேள்!

காதல் ஒரு மழை மாதிரி,நனையும் போது சந்தோஷம்.
நனைந்த பின்பு ஜலதோஷம்.

மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது?
ஐந்து கேள்விப்பா
நீ எத்தனை கேள்வி விட்டுட்டே?
முதல் மூணும் கடைசி இரண்டும்
வெரி குட் கீபிடப்

என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு???????

என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?
டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பன்னிக்க சொன்னார் அதான்.

நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்.

டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா'' எந்த அளவுக்கு பாக்குறாங்க?''கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு!!!

வக்கீல்: உனக்கு திருமணமாகிவிட்டதா?
சர்தார்: ஆகிவிட்டது.
வக்கீல்: யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய்?
சர்தார்: ஒர் பெண்ணை.
வக்கீல்: பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து கொள்வார்கள்?
சர்தார்: ஆம் என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!..

சார்,டீ மாஸ்டர்டீ போடறாரு,பரோட்டா மாஸ்டர்பரோட்டா போடறாரு,மேக்ஸ் மாஸ்டர்மேக்ஸ் போடறாரு,நீங்க ஹெட்மாஸ்டர் தானேஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?...

''நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க''''அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை.... பத்திரமா
இருக்கும்'
'ஒரு காப்பி எவ்வளவு சார் ?
5 ரூபாய்.
எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?
டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா!

உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.

இன்னிக்கி 8 மணிக்கு கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி.வி யில சொன்னாங்க. நீங்க கேட்டீங்களா?இல்லை அவங்களே சொன்னங்க...

கரையான்.

வெள்ளி, ஜூலை 10, 2009

கல்யாணத்துக்கு முன்ன சாப்பாடு கிடைக்காம கஷ்டப்பட்டேன். அப்புறம்?... ஒரு வழியா கல்யாணம் ஆயிடிச்சி... இப்ப?.... இப்ப..நல்ல சாப்பாடு கிடைக்காம கஷ்டப்படுறேன்--------

நாம மத்தவங்களுக்கு உதவத்தான் பிறந்து இருக்கோம்.... சரி ... அப்ப மத்தவங்க எதுக்குப் பிறந்து இருக்காங்க?--------

பதற்றம் VS நடுக்கம் :காதலி மாசமாய் இருப்பது தெரிய வரும்போது வருவது பதற்றம். காதலி மாசமாய் இருப்பது மனைவிக்கு தெரிய வரும்போது வருவது நடுக்கம்

.--------வீட்ல எப்பவும் சிரிப்பு சத்தம் கேக்குதே? மனைவி என் மேல பாத்திரத்த தூக்கி போடுவா. மேல படலேன்னா நான் சிரிப்பேன், பட்டதுன்னா அவள் சிரிப்பா.--------

கண்ணே! நான் உன்னை என் மனச் சிறையில் வைத்திருந்தேன், உன் அப்பா என்னை மத்திய சிறையில் வைத்துவிட்டார்.---------

மனுஷனாப் பொறந்தா வாழ்க்கையில ஏதாவது பெரிசா சாதிக்கணும்... நல்லவேளை…நான் கொழந்தையாத் தான் பொறந்தேன்.----------

மனைவியை அடிப்பவர்களுக்கு ஒரு வருட சிறை தண்டனை என்று அறிவித்து விடலாமா

அரசே?.... வேண்டாம் அவ்வளவு தைரியமானவர்களை நம் படையில் சேர்த்துக்கொள்ளுங்கள்!!-----------

நான் படித்தவை நண்பர்களுக்காக.....

கரையான்.

வியாழன், ஜூலை 09, 2009

திடீரென்று மனைவி தாயகம் செல்ல வேண்டிய நெருக்கடி, பிள்ளைகளுக்கு பரீட்சை நேரம் என்பதால், நான்தான் பார்த்துக்கொள்ள வேண்டும், பண்ணையில் வேலை செய்வதால், இது ஒரு சவுகரியம் பணி நேரத்தை கொஞ்சம் மாற்றிக்கொள்ளலாம் , இருபத்தைந்து நாட்களுக்கு குழந்தைகளை கவனித்து, உணவு சமைத்து,பாத்திரம் கழுவி,துணி துவைத்து,etc..etc எல்லாம் செய்ய வேண்டிய கட்டாயம். புள்ளைங்க எப்படியெல்லாம் என்ன நெனச்சி கஷ்டப்படபோவுதோ,சின்னவ ராத்திரி எழுந்து அழுதா அவளுக்கு பூஸ்ட் பாலில் கலந்து கொடுத்திடுங்க,"செல்லங்களா உங்க எல்லோருக்கும் அம்மா ஐந்து ரியால் கொடுக்கிறேன், பள்ளியில ஏதாவது வாங்கி சாப்பிடுங்க, என்ன அப்பாவ கஷ்டப்படுத்த கூடாது.என்று ஒரு பெரிய லெக்சர் கொடுத்துவிட்டு என் மனைவி ஊருக்கு கிளம்பி சென்ற வுடன் குழந்தைகள் அனைவரும் என்னமோ "20-20 உலக கோப்பை ஜெயித்த வீரர்கள் போல ரெண்டு கையையும் உயர்த்தி தட்டிக்கொண்டு குதியாட்டம் போட்டதை பார்த்து கொஞ்சம் மிரண்டு போய் விட்டேன். என்னவோ ஹிட்லர் கொஞ்ச நாளுக்கு casual leave போட்டுட்டு போறது போல பசங்க குதியாட்டம் போட்டத என் பொண்டாட்டி பாத்திருந்தால் அவ்வளவுதான்....
மனைவியை ஊருக்கு அனுப்பிய அடுத்த நாள், கண்ணீர் சிந்தி கஷ்டப்பட்டு வெங்காயம் வெட்டிக்கொண்டு இருக்கிறேன், சின்னவள் அக்ஷ்யா என்னிடம் வந்து ஏனப்பா அம்மா ஊருக்கு போய்ட்டாங்கன்னு அழரயா, இன்னும் கொஞ்சம் நாள்தான்ப்பா நம்ம எல்லாம் ஊருக்கு போய் அம்மாவ பாக்குலாம்,கவலைப்படாதே" உங்களுக்கெல்லாம் அம்மா ஊருக்கு போனது கஷ்டமா இல்லையாம்மா என நான் கேட்டேன், இதெல்லாம் பெரிய விஷயமாப்பா, அதான் நீ இருக்கிறே சமைக்க மற்ற எல்லாம் வேலையும் பார்க்க, உன்னால முடியலன்னா HERFY இலையோ MC டானல்ட்,KFC லியோ சாப்பிட்டுக்க வேண்டியதுதான்.
பண்ணையில வேலை நெருக்கடி போதாதுன்னு வீட்டு வேலையும் சேர்ந்ததால், சிக்கன் செய்யும்போது உப்புக்கு பதில் சர்க்கரையை கொட்டி குழந்தைகிளின் கிண்டலை சமாளித்தது ஒரு பெரிய காமெடி.
பெரியவள் காயத்திரி" அப்பா நீயே அம்மாவ விட நல்லாத்தான் சமைக்கிரே அம்மாவ வேணும்னா அங்கயே இருந்து பாட்டியை பாத்துக்க சொல்லலாம்பா"
ஒரு முறை குஜிலி நான் செட்டிநாடு குதிரைப்பன்னையில் பணிபுரியும்போது அங்கு வந்திருந்தார், "குமரன் குழந்தைங்க ரொம்ப வேகமா வளருவாங்க, இப்பதான் குழந்தையா பாத்தா மாதிரி இருக்கும் அதுக்குல்ள்ள இவ்வளவு பெரிசாயிட்டங்கலேன்னு மலைப்பா இருக்கும்" என்று கூறியதுதான் இப்போது நினைவு வருகிறது.
"டேய் கார்த்தி பரீட்சைக்கு படிக்கிறயா, நான் சொல்லி தர்றேன் உன்னோட பாட புத்தகம் எடுத்து வா" என்று நான் கூறினால் "அப்பா உனக்கு இதெல்லாம் தெரியாதுப்பா, நீ படிச்சது வேற இப்ப நாங்க படிக்கறது வேற, இது கொஞ்சம் கஷ்டமப்பா" அவன் எனக்கு சொல்லி தருகிறான்.
நான் படும் கஷ்டத்தை பார்த்து இங்குள்ள நண்பர் ஒருவர் அவர் குடும்பத்துடன் வந்து அவர் மனைவியை விட்டு சமைத்து கொடுத்து விட்டு சென்றார், குழந்தைகள் சாப்பிட்டு விட்டு "ஐயோ பாவம்ப்பா அந்த அங்கிள்" என்று அடிக்கும் கமென்ட் கொஞ்சம் எனக்கே ஓவராகத்தான் படுகிறது.
இன்னும் பதினாறு நாட்கள் கடத்த வேண்டும், அதற்குள் இன்னும் என்னவெல்லாம் காமெடி நடக்கப்போவுதோ.....
கரையான்.

செவ்வாய், ஜூலை 07, 2009

Blogspot Vs GetTogether

List out the differences :Blogspot /Gettogether
1.True Friendship/Tour Friendship.
2.get in touch round the clock/once in a bluemoon[Kurinchippoo]
3.cheap/expensive.
4.no need to travel/should travel.
5.indirect communication/direct.
Dear Friends-try to list out some other differences.
BHAI.

சனி, ஜூலை 04, 2009

நம் நண்பர்கள் சிரிக்க சில சர்தார்ஜி/மதராசி ஜோக்ஸ்
சர்தாரின் அப்பா இறந்து போனார். துக்கம் தாளாமல் சர்தார் உக்கார்ந்து அழுது கொண்டிருந்தார். அப்போது அவருக்கு ஒரு போன் கால் வருகிறது. பேசி முடித்தவுடன் இன்னும் பலமாக அழத் தொடங்கினார்.
நண்பர்: இப்போ என்ன ஆச்சு?
சர்தார்: என் தங்கை போன் பண்ணினா.. அவளோட அப்பாவும் இறந்துட்டாராம்...!!

கோர்ட்டில்...
ஜட்ஜ்: ஆர்டர்..ஆர்டர்..ஆர்டர்..
சர்தார்: பிட்சா, ரெண்டு இட்லி, மூணு தோசை, நாலு பூரி, அஞ்சு வடை, ஒரு கூல் ட்ரின்க்...
ஜட்ஜ் : ஷட் அப்..
சர்தார்: இல்ல.. இல்ல.. எனக்கு செவன் அப்..

சர்தாரின் மனைவி இறந்த போது அவர் தனது பெயரை மாற்றிக் கொண்டார். எப்படி தெரியுமா?
சர்தார் B.A (Bachelor Again)
சர்தாருக்கு மறுமணம் நடந்தது. மீண்டும் அவர் தனது பெயரை மாற்றிக் கொண்டார். இப்போ அவரோட பேர் என்ன தெரியுமா?
சர்தார் M.A (Married Again)

சர்தார்: சார், என்னோட செக் புக் தொலஞ்சு போச்சு..
மேனஜர்: பார்த்து சார், யாராவது உங்க கையெழுத்தை போட்டு ஏமாத்திடப் போறாங்க..
சர்தார்: நான் என்ன பேக்கா? இப்படி ஏதாவது நடக்கும்னு தான் முதலிலேயே எல்லா செக்கிலையும் கையெழுத்து போட்டு வச்சிருக்கேன்..
சர்தார்ஜிகளின் புத்திசாலி தனத்திற்காகவும் ஒரு ஜோக்

இங்கிலாந்து. ரயில் நிலையம். மூன்று சர்தார்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எதிரே மூன்று வெள்ளையர்கள். சர்தார் போய் ஒரே ஒரு டிக்கட் மட்டும் வாங்கி வந்தார். வெள்ளைக்காரர்களுக்கோ ஆச்சரியம். எப்படி ஒரே ஒரு டிக்கட்டில் இவர்கள் பயணம் செய்கிறார்கள் என்று பார்க்க விரும்பினார்கள் . ரயில் வந்ததும் எல்லோரும் ஏறினர். டிக்கட் செக் பண்ண ஆள் வந்தபோது மூன்று சர்தாரும் எழுந்து கழிவறைக்குள் சென்று நின்று கொண்டார்கள். TTE கதவை தட்ட ஒரே ஒரு கையை மட்டும் நீட்டி டிக்கட்டை நீட்ட, அவர் போய் விட்டார். ஆகா, இத்தனை நாள் இதை நாம் செய்யாமல் போய் விட்டோமே என்று வெள்ளைக்காரர்களுக்கு தோன்றியது. திரும்பி வரும்போது வெள்ளைக்காரர் ஒரே ஒரு டிக்கட் மட்டும் எடுத்தார்கள். இந்த முறை சர்தார்கள் ஒரு டிக்கட் கூட எடுக்க வில்லை. மற்றவர்களுக்கோ குழப்பம். என்னடா இந்தத் தடவை டிக்கட்டே எடுக்க வில்லை, சரி பார்ப்போம் என்று ரயிலில் ஏறினார்கள். வெள்ளை மக்கள் மூவரும் TTE வருவதைப் பார்த்தவுடன் கழிவறைக்குள் ஓடி விட்டனர். இப்போது சர்தார் ஒருவர் பொறுமையாக எழுந்து போய் கழிவறையின் கதவைத் தட்டினார்.."சார்.. டிக்கட்..?"
இதெல்லாம் மாற்ற பிளாகில் நான் படித்தது, நண்பர்களுக்காக....
கரையான்.

வெள்ளி, ஜூலை 03, 2009

gujili avarkale பல நகைச்சுவை அனுபவங்கள் என் சொந்த அனுபவங்களும் உண்டு என்பதை நான் வெட்கம் இல்லாமல் ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும்.

நண்பர்கள் சிரிக்க மேலும் சில நகைச்சுவைகள் biலாகில் படித்தது.

பேரங்கள் எப்படிப் படியும்? அதீத சாமர்த்தியசாலி யாரோ அவருடையநோக்கத்திற்குப் படியும்.அதை விளக்கிக் கற்பனைச் சம்பவம் ஒன்றை ஒருவர் எழுதியிருக்கிறார்.அதை நீங்கள் அறியத்தருவதில் உவகை கொள்கிறேன்.படித்து மகிழுங்கள்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

காட்சி ஒன்று:ஒரு தந்தைக்கும் அவருடைய மகனுக்கும் நடக்கும் உரையாடல்!"மகனே, நான் தேர்ந்தெடுக்கும் பெண்ணை நீ திருமணம் செய்துகொள்ள வேண்டும்""நோ, டாடி, என் விருப்பப்படி என் திருமணம் அமைவது நல்லது. பெண்ணைத்தேர்ந்தெடுப்பதை என்னிடம் விட்டு விடுங்கள்"பெண் யாரென்று தெரிந்தால் நீ மறுக்க மாட்டாய்"ஆர்வத்துடன் மகன் கேட்டான்: "யாரது டாடி!"பெண் பில்கேட்ஸின் மகள்""அப்படியென்றால் டபுள்ஓக்கே !"

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

காட்சி இரண்டு:அடுத்து அந்தப் பையனின் தந்தை பில்கேட்ஸைச் சந்தித்துப் பேசுகிறார்"உங்களுடைய மகளுக்கு என்னிடம் ஒரு நல்ல வரன் இருக்கிறது!""என் மகளுக்கு இப்போது திருமணம் செய்யும் உத்தேசம் இல்லை. ஒரு ஆண்டுசெல்லட்டும்.""நான் சொல்லும் இளைஞன் உலக வங்கியின் துணைத் தலைவர்."ஆச்சரியம் அடைந்த பில்கேட்ஸ், உற்சாகமாகச் சொல்கிறார் "ஆகா, சின்னவயதிலேயே உலக வங்கியின் துணைத் தலைவரா? அப்படியென்றால் எனக்குச்சம்மதமே!"

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பையனின் அப்பா, முடிவாக உலகவங்கியின் தலைவரைச் சந்திக்கிறார்."உங்கள் வங்கியின் துணைத்தலைவர் பதவிக்கு அசத்தலாகப் பொருந்தக்கூடியஇளைஞன் ஒருவனை எனக்குத் தெரியும். அழைத்து வரவா?""வேண்டாம். ஏற்கனவே அந்தப் பதவியில் இருவர் இருக்கிறார்கள்""ஆனால் நான் சொல்லும் இளைஞன் பில்கேட்ஸின் மாப்பிள்ளை!""ஓ..... அப்படியென்றால் உடனே பதவியளிக்க நான் தயார்!+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இப்படித்தான் உலகலவில் முக்கியமான பேரங்கள் நடக்கின்றன!

புதன், ஜூலை 01, 2009

பிளாகில் படித்தது நண்பர்களுக்காக

இரு நண்பர்கள், பார்டியில்...ந1 : "என் மனைவி தேவதை! "

ந2 : "நீ அதிர்ஷ்டசாலி, என் மனைவி உயிரோட இருக்கா!!"

நிச்சயத்தின்போது...மகன்: "யப்பாடி.. ஒரு வழியா அம்மா மாதிரி பெண் கிடச்சாச்சு!"

அப்பா: "உனக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!!

"மகன்: "கல்யாணம் செஞ்சா எவ்வளவு செலவாகும்ப்பா?"

அப்பா: "தெரியலப்பா... இன்னமும் செலவு செஞ்சிகிட்டுதான் இருகேன்!!

"மனைவி: "ஏங்க.. திருடுபோன "கிரிடிட் கார்ட்" பத்தி ஏன் போலீஸ் கம்பளென்ட் செய்யல?"

கணவன்: "திருடன் உன்னவிட கம்மியா செலவு பண்றான், அதான்!"

இரண்டு நண்பர்கள் பாரில்...கண்ணா: சே!.. இந்த பொண்டாடிங்களை அடக்கவே முடியாது போல.. நீ எப்டிடா?

விநோத்: நேத்து என் பொண்டாட்டி முட்டி போட்டு நடக்க வச்சேன்.

கண்ணா: ஆஆ.. அப்புறம்?

விநோத்: அப்புறம் சொன்னா.. "மரியாதையா, ஆம்பள மாதிரி கட்டிலுக்கு கீழ இருந்து வெளிய வந்து சண்ட போடுன்னு!"

மனைவிகிட்ட சண்டை வராமல் இருக்க... 5 வார்தை மந்திரம்!

"என்னை மன்னிச்சிகோ!" & "நீ சொன்னா சரிதான்!"

கரையான்.


சனி, ஜூன் 27, 2009

சமிபத்தில் ஒரு பிலாகில் படித்த ஜோக் நம் மக்களுக்காக
The IAS InterviewOne young man went for an IAS Interview."When did India get independence?" He was asked."The efforts began a few years earlier and final result was in 1947" He replied.
"Who was responsible for our independence?""There were so many. Whom to mention? If I name one, it will be a injustice to another." He replied.
"Is corruption the number one enemy in our country?""Some research is going on the subject and I can answer with certainly only after seeing the report" He replied.
The interview board was very pleased with his original and thoughtful answers and asked him not to reveal the questions to others, since they were planning to ask the same questions. When he went out naturally others were curious to know what was asked. He politely declined, but one persistent Santa would not leave him. "At least tell me the answers" he pleaded, and our friend obliged.
Then it was the turn of this Santa. When he went inside, since his resume was slightly illegible, the board member asked him." By the way, what is your date of birth?"He replied, "The effort began a few years earlier and final result was in 1947."
Somewhat puzzled, they asked another clarification. "What is your fathers name?"He replied, "There were so many. Whom to mention". If I name one, it will be injustice to another".The interviewer was incensed."Hey! Are you mad or what?"He replied. "Some research is going on the subject. I can answer with certainty only after seeing the report."
கரையான்.

புதன், ஜூன் 24, 2009

உடம்பு சரியில்லாத பொது தான் நாம் வயது முதிர்ச்சி அடைகிறோம் என்பது உரைக்கிறது. அதுவும் வெளி நாட்டில் இருந்து கொண்டு உடல் நிலை சரியில்லை என்றாலும் நாமே காரை ஒட்டிக்கொண்டு மருத்துவமனை செல்வது கொடுமை. இங்கு நண்பர்கள் இருந்தாலும், அவர்கள் அனைவரும் நகரத்தில் வசிப்பதால், என்னைப்போன்ற கிராம வாசிகள் பாடு திண்டாட்டம்தான். உடல் நிலை சரியில்லாத பொது பற்பல எண்ணங்கள் வந்து போகின்றது, " ச்சே என்ன வாழ்க்கை இது, அறைவயித்து கஞ்சி என்றாலும் அதை நம்ம ஊரிலேயே குடிக்கலாமே இங்க வந்து ஏன் கஷ்டப்பட வேண்டும் , பேசாம எல்லாத்தையும் விட்டு விட்டு ஊருல போய் மாசம் பத்தாயிரம் சம்பாதிச்சால் கூட போதுமே " இப்படி பல எண்ணங்கள். ஆனால் இது சாத்தியமா. இல்லை தான். இப்படி பல குழப்பங்கள், உடல் நிலை சரியான வுடன் குழப்பங்களும் சரியாகி விடுகிறது.
தொடர்ந்து எழுதுவேன்...
கரையான்.

திங்கள், ஜூன் 15, 2009

சென்னை நட்சத்திரங்களிடம் இன்னும் மூச்சு உள்ளதா?

அன்பார்ந்த நண்பர்களே, நமது ப்ளோகில் எழுத யாருக்கும் நேரம் இல்லையா?
கோடை கால விடுமுறை யாதலால் அங்கும் இங்கும் ட்ரிப் செய்து கொண்டிருக்கிறோம். எல்லோரும் நலம் தானா? சமயம் கிடைத்தால் கதைகள் எழுதவும்..
குஜிலி

வெள்ளி, மே 29, 2009

மாணவர்களின் கட்டுகதைகள்

எல்ல நாட்டிலும் இருப்பது போல் இந்த ஊரிலும் மாணவர்கள் பொய், மட்டும் கட்டு கதைகள் சொல்வது சகஜம். எங்கள் ஊரில் ஸ்ப்ரிங் செமஸ்டர் இல் அதிகமாக SNOW இருக்கும். 1 அடிக்கு மேல் SNOW இருந்தால் எங்கள் ஊரில் வகுப்புகளை CANCEL செய்து விடுவர். கடந்த செமஸ்டர் பெப்ரவரி மாதத்தில் அதிக SNOW இருந்ததால் காலை வகுப்புகளை மட்டும் CANCEL செய்தனர். நானும் என் கண் கண்ட தெய்வமும் (KKD) ஒரே கல்லூரியில் ஆசிரியர்கள இருப்பதால் அவ்வப்போது என் வகுப்பில் இருக்கும் மாணவர்கள் KKD இன் வகுப்பிலும் இருப்பார்கள். அன்றைக்கு KKD இன் காலை வகுப்பில் பரீட்சை. காலை வகுப்புகள் CANCEL செய்ததால் KKD பரீட்சையை மதியம் கொடுப்பதாக திட்டம் பண்ணியிருந்தார். KKD இன் வகுப்பிலும் என் வகுப்பிலும் இருந்த ஒரு மாணவி KKD இன் பரீட்சையை எழுதுவதற்கு சோம்பல் பட்டு எங்கள் தெருவில் இன்னு SNOW PLOUGH வரவில்லை, ஆகையால் என்னால் பரீட்சை எடுக்க முடியாது என்று பீலா விட்டு அவருக்கு E MAIL எழுதினாள். எங்கள் வகுப்பில் இருக்கும் எல்லா மாணவர்களின் vaguppu schedule எங்கள்ளுக்கு access இருப்பதால் KKD அவள் வகுப்பு schedule கண்டு என் வகுப்பிலும் அந்த மாணவி இருப்பதை கண்டு என்னிடம் - இந்த மாணவி இன்றைக்கு வகுப்பிற்கு வரமுடியாது என்று உனக்கும் E MAIL அனுபினாள்ள என்று வினவினார்? அந்த மாணவி என்னகு ஒரு E MAIL அனுப்பவில்லை என்று கூறினேன். அப்பொழுது KKD நிலைமையை சுதாரிதுகொண்டார். பின்னர் அன்றைக்கு மதியம் என் வகுப்பு அறையின் வழியை சென்று ஜன்னல் வழியாக பார்த்தால் பீலா உட்ட மாணவியை கண்டார். அந்த மாணவி அடுத்த நாள் அவரிடம் சென்று நேற்று SNOW அதிகமாக இருந்ததால் நான் வகுப்பிற்கு வரவில்லை என்று நன்றாக பீலா விட்டாள். உடனே KKD அவளிடம் நீ என் இவ்வாறு பொய் சொல்லுகிறாய் நான் உன்னை நேற்று வேறு வகுப்பில் உட்கர்ந்திருந்தடை பார்த்தேனே என்று வினவினார். உடனே அந்த மாணவி KKD இடம் - மதியம் போல் என் boy friend எனக்கு அவர் வாகனத்தில் சவாரி கொடுத்தார் என்று மேலும் பீலா விட்டால்! KKD மிக்க கோபம் அடைந்து அவழுக்கு பரீட்சையில் முட்டை கொடுத்துவிட்டார்.. நமது கால் நடை கல்லூரி நாட்களில் உட்ட பீலாக்கள் இப்போது மெதுவாக என் ஞாயபகத்திற்கு வருகிறது.
குஜிலி

செவ்வாய், மே 26, 2009

எங்களுடைய ரைசிங் இஸ்டபிளில் கொஞ்சம் குதிரைகளுக்கு கேள்டிங் மற்றும் கஸ்லிக்க் செய்ய வேண்டி இருந்ததால் அங்கு சென்று விட்டு பணி முடிந்த வுடன் அந்த பகுதியில் நான் ஏற்கனவே வேலை செய்தபோது அறிமுகமான என்னுடைய பழைய நண்பர்களை சந்திக்கலாம் என சென்றேன். அப்போது என் நண்பர் எகிப்து நாட்டை சேர்ந்த கால்நடை மருத்துவர் அவருடைய open-air surgical theatre - ல் (அதுதான் பிக் அப் டிரக்கின் பின் புறம்) வைத்து ஒரு ஆட்டுக்கு mammectomy செய்து கொண்டு இருந்தார், அவர் கொஞ்சம் கொஞ்சமாக அறுத்து விட்டு அந்த ரத்தம் வடியுமிடத்தில் தயாராக வைத்திருந்த கல் உப்பை வைத்து அழுத்திகொண்டிருந்தார், அவர் அருகில் மற்றொரு கால்நடை மருத்துவ நண்பரான ஒரு சூடானி கவனித்துக்கொண்டு இருந்தார். நான் அருகில் சென்று நண்டப்பதை பார்த்து விட்டு மனதுக்குள்ளேயே "கடவுளே அவர் rigor mortis set ஆவதற்குள் சர்ஜரியை முடித்து விடவேண்டும்" என வேண்டிக்கொண்டேன், பின்னர் சூடானி நண்பரை அழைத்துக்கொண்டு அவரிடம் கொஞ்சம் கதை அளந்து விட்டு வரலாம் என எண்ணி அவருடைய பார்மசியை நோக்கி நடந்தேன். அந்த சுடானிக்கு அந்த எகிப்திய டாக்டர் ஏன் ரத்தம் வரும்போது உப்பை வைத்து அழுத்தினார், அதனால் என்ன பயன் என தெரிந்து கொள்வதில் மிக ஆர்வமாக இருந்தார், என்னிடம் அது பற்றி கேட்டுக்கொண்டே இருந்தார், அந்த எகிப்து நாட்டு மருத்துவருக்கு தெரியும் இந்த ஆடு எப்படியும் செத்து விடும் என்று அதனால் செத்த பிறகு உப்பு கண்டம் போடுவதற்கு பதில் இப்போதே தொடக்கி விட்டார், இது ஒரு வகையான pickling (ஊறுகாய் போடுவது) என்று கூறினேன் . நண்பர்கள் உங்களுக்கு ஏதாவது இந்த சிகிச்சை பற்றி தெரிந்தால் தெளிவு படுத்தவும்.
கரையான்.

செவ்வாய், மே 19, 2009

நண்பர்களே நண்பிகளே
இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 மற்றும் 16 தேதிகளில் நம் வகுப்பின் get-to-gether நடைபெற உள்ளது, இடம் அனேகமாக Yercaud அல்லது Pondicherry ஆக இருக்கும், அனைவரும் குடும்பத்துடன் வந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். அனைத்து ஏற்பாடுகளும் நண்பர்கள் SKB மற்றும் Kumaravel இணைந்து செய்ய இருக்கின்றார்கள்.(கொசுவாயனிடம் கெட்ட விலாசங்கள் மற்றும் தொலை பேசி எண் களை அவர் இதுவரை தர வில்லை.)
கரையான்.

வெள்ளி, மே 15, 2009

When I read Karaiyan's point about life and maturity, my thoughts flew back to Gujili and my behavior in first year of College. We both were only 16 years old and of course thought we were all grown up and mature to be in College.!!
This incident that I am going to narrate happened in Physiology lab. We had to Urine analysis and of course everybody in our blog knows what samples we used. After much giggling and discussion between the two of us we managed to get a sample and started our experiments. Then I have no clue what possessed us but we decided to chase each other carrying the test tubes around the lab!!
A PG student was supervising us and was extremely shocked at our behavior and promptly sent us off to the professor's office.(as usual can't remember who it was,gujili might help here) And we got yelled at and thrown out of the lab. We of course continued laughing and giggling all the way to the canteen!!
Now my question is, how will gujili's students react if they got to know about this story of their strict and mature professor!!!!
GFK

வியாழன், மே 14, 2009

குஜிலி அவங்க கல்லூரியில பெற்றோர் தொல்லை பற்றி எழுதி இருந்தார், நம்ம கல்லூரி நாட்களில் கடைசி ஆண்டோ அல்லது நான்காம் ஆண்டோ சரியாக நினைவில் இல்லை animal husbandary economics டாக்டர் திருநாவுக்கரசு எடுத்தார், final exam இல் நம் நண்பர் பல்லு ஜெயராமன் கேள்வித்தாள் கொடுத்தவுடன் அதை மேலு கீழும் திருப்பி பார்த்தார், பக்க வாட்டில் மற்றும் எந்தெந்த கோணத்தில் பார்க்க முடியுமோ எல்லா வகையிலும் பார்த்தார், ஆனால் அந்த கேள்வித்தாளில் அவர் படித்த பகுதியிலில் இருந்து ஒன்றும் கேட்கப்படவில்லையோ அல்லது அவர் எடுத்து வந்திருந்த பிட்டில் இருந்து எந்த பகுதியும் கேட்கபடவில்லையோ தெரியவில்லை, கோபமாக அவருக்கு கொடுக்கப்பட்ட கேள்வித்தாள் மற்றும் விடைத்தாளை எடுத்துக்கொண்டு விறுவிறு வென்று வகுப்பை விட்டு வெளியேறி விட்டார். டாக்டர் திருநாவுக்கரசு மிகுந்த கோபம் அடைந்து விட்டார், அவன் எப்படி பாஸ் செய்து வெளியே போகிறான் என பார்த்து விடுகிறேன், இந்த பாடத்தில் அவன் எத்தனை வருஷம் ஆனாலும் பாஸ் செய்யவே முடியாது அவன் என கருவிக்கொண்டே இருந்தார். வெளியேறிய நண்பர் ஜெயராமன் பின்னர்தான் தன்னுடைய தவறை உணர்ந்தார், உடனே அவருடைய ஜாதியை சேர்ந்த பேராசிரியர் சுந்தரராசு (கோழி துறை) விடம் சென்று நடந்தவற்றை கூறி காப்பாற்றுமாறு வேண்டிக்கொண்டார், அவரும் கவலைப்படாதே டாக்டர் திருநாவுக்கரசும் நம்ம ஆளுதான் நான் பேசி சரி செய்து விடுகிறேன் என அவனுக்கு தேறுதல் கூறினார், டாக்டர் திருநாவுக்கரசு ஜாதியாவது மண்ணாவது அவனை தண்டிக்காமல் விடமாட்டேன் என கண்டிப்பாக கூறி விட்டார், விஷயம் பெரிதாவதை உணர்ந்த நண்பர் ஜெயராமன் parasitology professor டாக்டர் லலிதா ஜான் அவர்களிடம் சென்று அவனை காப்பாற்றுமாறு வேண்டிக்கொண்டார், பின்னர் டாக்டர் லலிதா ஜான் கேட்டுக்கொண்டதால் அவனுக்கு re-test வைத்து பாஸ் போட்டு அனுப்பி வைத்தார். குஜிலி அவர்கள் இந்த மாதிரி links தொல்லைகள் இல்லையே என்று எண்ணி சந்தோஷ பட்டுக்கொண்டு இந்த மாதிரி D grade வாங்கும் மாணர்வகளை பார்க்கும் பொது கரையான் போன்ற நண்பர்களை மனதில் நினைத்து(அவங்கல்லாம் எங்க ஜாதி -D grade ஜாதி),உதவி செய்ய வேண்டி கொள்கிறேன்.
கரையான்.

மாணவர்களுடைய பெற்றோரின் தொந்தரவுகள்.

கடந்த semesteril நான் நான்கு விதமான course teach பண்ணினேன். ஒரு course anatomy and physiology (A&P). மாணவர்கள் A&P இல் C க்ரடே வாங்கினால் தான் அவர்களுடைய வெவ்வேறு program இற்குள் நுழைய முடியும். இல்லாவிட்டால் அந்த ப்ரோக்ராமில் இருந்து அந்த மாணவர்களை நீக்கிவிடுவார்கள். நான் பரீட்சைகள் யாவற்றையும் திருத்தி முடித்த பின்னர் ஒவ்வொரு செமஸ்டர் முடிவில் D grade வாங்குகிற சில மாணவர்கள் வந்து எப்படியாவது C grade வாங்க முடியுமா என்று முறை போடுவார்கள். C grade இற்கும் D grade இற்கும் கிட்டதட்ட 30 மார்குகள் வித்தியாசம் உண்டு. ஏதோ ஒன்று அல்லது இரண்டு மார்குகள் என்றால் மனம் இறங்கி கொடுத்துவிடுவேன், ஆனால் 30 மார்குகள் கூடவேண்டும் என்றால் முடியாது என்று ஏன் மனசாட்சிக்கு கீள்படிந்துவிடுவேன். இந்த செமஸ்டர் முடிவிலும் ஒரு மனைவி ஏன் ஆபீஸ் இல் வந்து முறையிட்டால். அவள் வாங்கினது D grade ஆனால் C கொடுக்க வேண்டும் என்று கெஞ்சினாள். அவளுடய grade C ஆவதற்கு நான் 30 மார்க் கூடவேண்டும். என்னால் இயலாது, இந்த மாதிரி செய்வது மற்ற மாணவர்களுக்கு நியாயம் இல்லை என்றும் சொல்லி அனுபிவிட்டேன். கடவுளின் கருணையால் அவள் D grade வாங்கிநேது பெரிய காரியம். மேலும் நான் grade கொடுக்கவில்லை அவழுடைய முயற்சியால் அவள் அதை வாங்கினால் என்றெல்லாம் சொல்லி அவள்ளுக்கு விளக்கினேன். அவள் தன் அம்மாவிடம் சொல்லியிருப்பள் போல. ஏனெனில் அவளுடைய தாய் எனனக்கு 4 போன் MESSAGES விட்டிருந்தால் . மேலும் காலேஜ் DEAN, பல்கலை கழகத்தின் PRESIDENT மற்றும் LEARNING COORDINATOR எல்லோரையும் கூப்பிட்டு இந்த ஆசிரியர் ஏன் மகளுக்கு C grade கொடுக்க மாட்டேன் எங்கிரல் என்று ஒப்பாரி வைத்து தொலை பேசியில் எல்லோரிடமும் பெசியுள்ளல். நல்ல வேழை DEAN, PRESIDENT யாவரும் asiriyaridam நாங்கள் grade maatra சொல்ல இயலாது என்று சொல்லிவிட்டனர். நல்ல வேழை என்று கடவுள்களுக்கு நன்றி சொல்லி போய்விட்டேன். எங்கள் கல்லூரியில் அவபோது தாய் தகப்பன்மார் தங்கள் பிள்ளைகளுக்கு குறிப்பன grade வேண்டும் என்று தொந்தரவு seyvadhu சகஜம். நம்ம நாட்களில் நமது பெற்றோர்கள் ஆசிரியர் என்ன சொல்கிறாரோ அதை கேட்டு நடவென்று நமக்கு போதித்து வழர்ததினால் இந்தா மாதிரி பெற்றோர் ஆசிரியர்களை கூப்பிட்டு தொந்தரவு செய்வது நமக்கு பேஜார்..
Gujili

Construction வேலை and self-sufficiency

அன்புக்குரிய நண்பர்களே, எங்கள் ஸ்ப்ரிங் செமஸ்டர் முடிந்து விட்டது. ஆகையால் கோடி கால விடுமுறை ஆரம்பித்து விட்டது. திங்கள் கிழமை மாணவர்களின் GRADES submit செய்து முடித்துவிட்டேன். இவ்வளவு நாட்களும் பரீட்சைகளும், திருத்துவதிலும் பிஸி ஆக இருந்ததால் ப்லோக் செய்யவில்லை, மன்னிக்கவும். இன்னும் மூன்று மாதத்திற்கு விடுமுறை ஆவதால் நிம்மதி. ஆனால் ஒரு மாதிரியா RELAX பண்ண இயலவில்லை, ஏனெனில் எதாவது வேலை இருந்து கொண்டே இருக்கிறது. எங்கள் வீட்டில் எப்போதும் REMODELING construction projects நடந்து கொண்டே இருக்கிறது. நமது நாட்டில் ஆட்களை வைத்து வேலை வாங்கி கொள்ளலாம், ஆனால் இங்கு எல்ல வேலையும் நாம் தான் செய்ய வேண்டும். ஆட்கள் வைத்து வேலை செய்வதற்கு கொள்ள காசு தேவை... மேலரை ஒன்றை முற்றுமாக DEMOLITION செய்து அதை புதுசாக REMODEL செய்கிறோம். சுவர் மற்றும் CEILING யாவையும் இடித்து PLASTER எல்லாவற்றையும் சுத்தம் செய்து மர SLATS எல்லாவற்றையும் போன வாரம் எடுத்து விட்டோம். எங்கள் வீடு ஏறக்குறைய 80 வருஷதிற்கு முன்னர் kattapattadhu. வீடு முழுவதிலும் பழைய கால மர வேலை ஒவொரு அறையிலும் உள்ளது. நம்ம ஊரில் பழைய வீடெல்லாம் வாங்க மாட்டோம் , ஆனால் இங்கு அந்த மாதிரி ஆட்சேபனை ஒன்றும் கிடையாது. பழைய வீடு என்பதற்கு பதிலாக "ANTIQUE" என்று சொல்லிகொள்ளுவார்கள்.. அதை REMODEL பண்ணி பாடுபடுவது பெரிய தலைவலி. இந்தியாவில் இருக்கும் போது சுவரோ CEILING, drywall, PLASTER என்று ஒரு மண்ணும் தெரியாது. ஆனால் இப்போதோ இதை எல்லாம் கற்று கொள்ள ஆரம்பித்து விட்டேன். இந்த ஊரில் "self-sufficiency" மிக்க இன்றியமையாதது!
gujili

வெள்ளி, மே 08, 2009

படிப்பை முடித்து வேலையில் சேரும்போது நமக்கெல்லாம் தெரியும் என்ற ஒரு சிறய கர்வத்துடனே கொஞ்ச நாட்களுக்கு இருப்போம், வாழ்க்கை சக்கரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அடி வாங்கி பக்குவப்பட்டு போவோம். நான் செட்டிநாடு பண்ணையில் சேர்ந்த புதிதில் ஒரு குதிரைக்கு காலிக், நான் அந்த குதிரையை பரிசோதனை செய்து கொண்டு இருக்கும்போதே என்னுடைய hospital assistant விறு விறு வென 20 cc Novalgin, 20cc Buscopan and 10cc Avil சிரிங்கில் எடுத்து வைத்து விட்டான், மேலும் tube இல் கொடுப்பதற்காக Liquid paraffin, bloatosil எல்லாமும் தயார் செய்ய ஆரம்பித்து விட்டான், எனக்கு கடும் கோபம் வந்து விட்டது, அதெப்படி, நான் ஒரு படித்த டாக்டர் , நான் சொன்ன பிறகுதானே இதெல்லாம் தயார் செய்ய வேண்டும், அவனே எல்லாம் தெரிந்த மாதிரி எப்படி தயார் செய்யலாம், இப்படியெல்லாம் மனதில் நினைத்து கொண்டே அவனை கடிந்து கொண்டேன். அடுத்த முறை காலிக் வந்தால் நான் சொன்ன பிறகுதான் நீ எல்லா மருந்துகளையும் தயார் செய்ய வேண்டும் என instruction கொடுத்தேன்.அடுத்த முறை காலிக் வந்தபோது பல்ஸ், mucous membrane எல்லாம், பரிசோதித்து விட்டு "பத்து சிசி அவில், இருபது சிசி பஸ்கொபன், இருபது சிசி நோவல்ஜின் எடுத்து விட்டு , லிகிட் பாரபின் புலோடோசில் டியுப் தயார் செய்" என்று கூறினேன். "இதைத்தானே நானும் செய்தேன்" போன காலிக் வந்தப்ப இவுரு ஏன் அவ்வளவு கோவபட்டாரு என கண்டிப்பாக மனசுக்குள் நினைத்திருப்பான்.

கரையான்.

வியாழன், ஏப்ரல் 30, 2009

வனக்கம் நண்பர்களே : நான் இந்த போஸ்ட் பெங்கலூரிளிரிந்து அனுப்பிகிறேன் !
ஏன்? திடீரென்று ஏன் அப்பாவிக்கு உடம்பு சரி இல்லாமல் போயிற்று. இப்போது கடவுள் கிருபையால் சரியாகி போயிற்று . இப்போது நான் மீண்டும் அமெரிக்கா வில் இருந்து தொடருவேன்.
Take Care,
GFK

செவ்வாய், ஏப்ரல் 28, 2009

குஜிலி அவர்களின் போஸ்டிங் ஐ படித்தவுடன் மக்களின் மன நிலை எல்லா இடத்திலும் ஒண்ணுதான் என்று தோணுது, அது அமெரிக்காவா இருந்தாலும் ஆப்பிரிக்காவா இருந்தாலும் ஒண்ணுதான். சமீபத்தில் படித்தது நினைவுக்கு வருது, செல் போனும் பொண்டாட்டியும் ஒன்னு என்றார் நண்பர், ஏன் அப்படி கூறுகிறீர்கள் என்றார் மற்றொருவர்,"கொஞ்சம் வெயிட் பண்ணி இருந்தால் better ஆ புடிச்சி இருக்கலாமேன்னு தோண வைக்கறதால ரெண்டுமே ஒண்ணுதான்" என்றார். அதுபோல தான் மக்களுக்கு எப்பவுமே திருப்தி வராது. குஜிலி வெயிலை காதலிக்கறதா சொல்றாங்க இங்க அடிக்குற வெய்யிலில் கொண்டு வந்து ஒரு பத்து நிமிஷம் நிக்க்க வைக்கணும், ஆப்பிரிக்கா காரண நெருப்புல குளிப்பாட்டி நிக்க வச்ச மாதிரி ஆயிடுவாங்க. மண்டை பிளக்க ஆரம்பித்து விட்டது, கூடவே கண்ணு மூக்குல அப்புற மண்ணு வேற. குஜிலி சொன்னா மாதிரி இப்ப எல்லோருமே ரொம்ப வேலைப்பளுவுல இருக்கின்றோம், இந்த வேலைப்பளுவுல உண்டாகுற மன உளைச்சலை குறைக்க பிளாக் ரொம்ப உதவியாக இருக்கு. அதனால வேலை அதிகமாக இருக்குன்னு சொல்லி தப்பிக்க வேண்டாம், எழுதுங்க,படிங்க டென்சனை குறையுங்க.
கரையான்.

பிஸி ஏப்ரல்...

ஸ்ப்ரிங் செமஸ்டர் முடிவதற்கு இரண்டு வாரம் தான் உள்ளது. அதற்கு பிறகு YENGALLUKU கோடை காலம்!! ஆனால் இந்த இரண்டு வாரமும் வேலை இன்னும் வேகமான PACE இல் போகிறது... ஆகையால் BLOG எழுதவோ வாசிக்க நேரம் இல்லை. கடந்தநான்கு நாட்களாக எங்கள் ஊரில் நல்ல வெயில்.. இந்த தொன்னுரூ டிகிரி வெயில் காக AARU மாசம் காத்திருந்தேன். சென்னையில் வெயில் என்றால் பேஜார் ஆனால் இங்கு வெயில் என்றல் எனக்கு மிக்க சந்தோசம்!
இந்த ஊரு ஜனங்கள் வெயிலை கண்டதும் சூரிய நமஸ்காரம் செய்யாத குறை தான். வெயிலில் படுத்து தங்கள் தோலை "tan" செய்து கொள்வார்கள். சிலர் சூப்பர் வெள்ளையாக இருப்பதால் அவர்களின் தோல் நிறம் சிவப்பாகி "sun burnt" ஆகி விடும்.. தோல் வதக்கின தக்காளி மாதிரி இறக்கும். என் வகுப்பில் இருக்கும் சில மாணவர்களுக்கு என் நிறம் போல் "tan' ஆகா வேண்டும் என்று ஆசை. நமது நாட்டில் கருப்பாக இருந்தால் கேலி செய்வர் - நான் பெரும்பாலும் அந்த கேலியை ஜோக் ஆகா எடுத்து கொண்டு கண்டு கொள்வதில்லை. இங்கோ எனது கருப்பு நிறத்தை கண்டு MANAVARGALUKU பொறாமை. ஒரு முறை எனது வகுப்பில் இருக்கும் மான்னவி தன் நிறத்தை ஏன் நிறம் போல அகவேண்டும் என்று நினைத்து வெயிலில் காய்ந்து விட்டு வந்தால். அதன் நிமித்தம் தோல் சிவப்பாகி தோல் உரிய ஆரம்பித்துவிட்டது. டாக்டர் இடம் சென்று மருந்து வாங்கவேண்டிய அளவுக்கு சென்று விட்டது. இறைவன் நமக்கு எது கொடுத்திருந்தாலும் நமக்கு திருப்தி இல்லை - எப்போதும் இக்கரைக்கு அக்கறை பச்சையாகவே தோன்றும் pola .
Gujili

புதன், ஏப்ரல் 22, 2009

பிறந்த நாள் வாழ்த்துக்கள் to GFK

சென்னை ஸ்டார்ஸ் சார்பில் GFK அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!
Gujili
வெளி நாட்டுல வந்து பாஷ தெரியாம கஷ்டம் பட்டாலும் கொஞ்சம் காமெடியாகவும் இருக்குது, இங்க வந்த புதிதில எங்க வீட்டை சுத்தி இருக்கிற புள் பூண்டு களை சுத்தம் செய்ய என்னோட கண்கண்ட தெய்வம் ரெண்டு நேபாளி பணியாளர்களை அழைத்து வந்து விட்டு விட்டு என்னிடம் அவர்களுக்கு ஏதாவது குடிக்க கொடுக்குமாறு கூறி விட்டு சென்று விட்டார். எனக்கோ தமிழ் தவிர எந்த மொழியும் தெரியாது, அதனால எங்க வீட்டிலேயே இந்தியில் பாண்டியத்யம் பெற்ற (பிராத்மிக் ) காயத்திரிய அழைத்து அவர்களிடம் cool drinks குடிக்கிறார்களா என இந்தியில் கேள் என கூறினேன். காயத்திரியும் அவர்களிடம் எதோ கேட்க அவர்கள் "தோடா பஸ்" என கூறினார்கள், நான் காயதிரியிடம் அவர்கள் என்ன கூறினார்கள் என கேட்க, காயத்திரி "அம்மா அவர்களுக்கு தொண்டை வலியாம் வேண்டாம் என கூறிவிட்டார்கள், தோடா என்றால் தொண்டை," என்று எனக்கு விளக்கம் அளித்தாள். நானும் விட்டு விட்டேன். சிறிது நேரம் கழித்து வீடு வந்த என் கணவர், என்ன ஏதாவது குடிக்க குடுத்தியா இல்லையா என கேட்டார், நான் அவரிடம் நடந்ததை கூறியவுடன், விழுந்து விழுந்து சிரித்தார், தோடா என்றால் கொஞ்சம், பஸ் என்றால் போதும், கொஞ்சம் போதும் என்று அவர்கள் கூறி உள்ளார்கள் என விளக்கினார்.
இப்ப பக்கத்து வீட்டுல இருக்கிற சூடானி,எமேணி மற்றும் எகிப்து பெண்களுடன் வாரத்தில் ஒரு நாள் பார்டியில் கலந்து கொள்ளும் அளவுக்கு முன்னேறி விட்டேன், கொஞ்சம் அரபி, கொஞ்சம் ஆங்கிலம்,கொஞ்சம் தமிழ் என கலக்கி சமாளித்துக்கொண்டு இருக்கிறேன்.
திருமதி.கரையான்.

ஞாயிறு, ஏப்ரல் 19, 2009

பாயின் உள்ளத்திலிருந்து-II

Dear Friends,

If one day if u feel like crying ,Call me.
I don’t promise to make u laugh,But i can cry with u.
If one day if u want to run away, call me.
I don’t promise to ask u to stop,But i can run with u.
If one day if u don’t want to listen to anyone,Call me.
I promise to be there for u,but also promise to remain quiet.
But one day if u call me,And there is no anwser,

Come fast to see me,Perhaps i need you.

அன்புடன்,

பாய்.

வெள்ளி, ஏப்ரல் 17, 2009

பணி சார்ந்த மன அழுத்தங்கள் மற்றும் சோர்வின் காரணமாக சில நாட்களாக என்னால் பிளாகில் எழுத முடியவில்லை அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டு உற்ச்சாகமாக தொடர்கிறேன்......
ஒரு முறை இந்த நாட்டுகார குதிரை முதலாளி ஒருவர் என்னிடம் வந்து அவருடைய குதிரைக்கு castration செய்ய வேண்டும் என கூறினார், நானும் அதற்கென்ன செய்து விடுவோம், உங்கள் பணியாளிடம் சொல்லிவிடுங்கள் நாளை காலை வந்து செய்து விடுகிறேன் என கூறினேன், அவர் அதற்கு அடுத்ததாக போட்ட கண்டிசந்தான் கொஞ்சம் வினோதமாக இருந்தது. அந்த குதிரைக்கு வலது புற testicle ஐ விட்டு விட்டு இடது புற testicle மட்டும் தான் எடுக்க வேண்டும் என்று கூறினார், நான் அவரிடம் அதனால் ஒரு பயனும் இல்லை என்று கூறினேன், அவரோ என்னிடம் பிடிவாதமாக அவர் சொன்னதை செய்ய வேண்டும் என்பதை கூறினார், நானும் அவரிடம் ஒரு testicle அல்லது இரண்டு testicle எடுத்தாலும் பீஸ் ஒன்றுதான் என்பதை கூறி அவர் சொன்ன மாதிரியே செய்தேன். சில நாட்கள் கழித்து திரும்ப வந்து இரண்டாவதை யும் எடுக்க வேண்டினார், மீண்டும் ஒருமுறை முழு கட்டணத்தையும் வாங்கி கொண்டு வலது புற testicle ஐயும் எடுத்தேன். அதற்கான காரணத்தை எத்தனை முறை கேட்டும் அவர் கூற வே இல்லை. அது என்னவாக இருக்கும் தோழர்/தோழியர் தெரிந்தால் comment டலாம். இந்தியாவாக இருந்தால் வாஸ்து படி அவர் ஈசான மூளை, சனி மூளை , etc etc என ஏதாவது ஒரு மூலையில் ஏதாவது இருக்க கூடாது என நம் நண்பர் பாண்டியன் விளக்கம் அளிப்பார், ஆனால் சவுதியில் அப்படியெல்லாம் கிடையாதே......

கரையான்.

திங்கள், ஏப்ரல் 13, 2009

Isla Mujeres-an Island off of Cancun
Main Road in Cancun
Neal with the Dancers in our resort
ManiKonaar and Neal attempting to Snorkel!!!
ManiKonaar and Neal in the balcony of our resort
Cancun Photos

அன்புமிக்கு நண்பர்களே நண்பிகளே :
எல்லோருக்கும் GFK யின் குடும்பத்தில் இருந்து அன்பார்ந்த தமிழ் மற்றும் Baisakhi வாழ்த்துக்கள். உங்கள் புத்தாண்டு இன்பமய மாக, இறைவனின் ஆசிர்வாதங்கள் நிறைந்த , நல் ஆரோக்யமும் சுபிக்ஷமும் நிறைததாகவும் இருக்கட்டும். இது தான் எங்களுடிய பிரார்த்தனை.
GFK குடும்பம்
இந்த படம் Chichen Itza வில் எடுதது. This is one of the seven wonders of the world and is 2 hours away from Cancun, Mexico. It was built by the Mayans.

வெள்ளி, ஏப்ரல் 10, 2009



லங்குடு மாமா மேலும் பல்லாண்டு வாழ்ந்து பல வகையிலும் சமூகத்திருக்கு சேவை செய்ய வாழ்த்த உடல் பருமன் போதாததால் வணங்குகிறேன் .


கரையான்.

வியாழன், ஏப்ரல் 09, 2009

சென்னை ஸ்டார்ஸ் யின் சாரபில்
லங்குடு மாமா விக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!
வாழ்க வளமுடன் . நல்ல ஆரோக்யம் , நீண்ட ஆயு , எல்லா சந்தோஷமும் நிறைந்த ஆண்டாக இருக்கட்டும்!
GFK

திங்கள், ஏப்ரல் 06, 2009

ஏப்ரல் fools day!!

நேற்று இரவு சாப்பாடு தயார் செய்யும் போது ரசம், சாதம் மட்டும் செய்தேன். கூட்டு எதுவும் செய்ய நேரம் இல்லை. ஆதலால் கொழுப்பு இல்லாத காய்கறி crisps கூடாக வைத்து ரசம் சாதத்தை சாப்பிட்டேன். அந்த காய்கறி crisps உருளைகிழங்கு சிப்ஸ் போல இருக்கும் என்று வாங்கினேன், ஆனால் அதில் ருசியே இல்லை, THERMOCOAL/STYROFOAM மாதிரி TASTE . அந்த கறுமமான சிப்ஸ் சாப்பிடும் பொது II ND YR ஏப்ரல் FOOLS day ஞாயபகம் வந்தது. லங்குடு மாமா ஒரு முறை ஏப்ரல் FOOLS day அன்றைக்கு எல்லோருக்கும் சிப்ஸ் பக்கெட் வாங்கி கொடுத்தார். வாங்கினவர்கள் எல்லோரும் உருளைகிழங்கு சிப்ஸ் என்று நினைத்து, நான்கு அல்லது ஆறு சிப்ஸ் எடுத்து வாய்க்குள் போட்டனர். அந்த சிப்ஸ் யாவும் மஞ்சள் நிற THERMOCOAL ஆல் செயப்பட்டது. லங்குடு மாமா அந்த சிப்ஸ் அப்படி தான் வாங்கினாரா அல்லது THERMOCOAL எடுத்து பொறுமையாக கீரினாரா என்று தெரியாது. ஆனால் நம் மக்கள் - seniors, juniors யாவரும் சிப்சை வாயில் போட்டதும் துப்ப ஆரம்பித்தனர். அவர்கள் முழியும், முக பாவனைகளும் மிக்க வேடிக்கையாக இருந்தது. MVC canteenil இருந்து எல்லாருடைய முகத்தை பார்த்து நன்றாய் சிரித்தோம்!
Gujili

செவ்வாய், மார்ச் 31, 2009

நண்பர் பாய் அவர்கள் வரும் தேர்வில் தேர்ச்சி பெற வாழ்த்து கவிதை
ஒரு அடி ஸ்கேலில் உள்ள அனைத்து பதில்களும் கேள்வியாய் வரட்டும்
திருத்துபவர் டாடிஆகி கிரிக்கட்டுபற்றிய செய்திக்கும் மார்க்கு அள்ளி கொட்டட்டும்
அந்துவன் போல் நண்பர் கிடைத்து பிட்டுகளை ஜெராக்ஸ் செய்து கொடுக்கட்டும்
சப்பாதிபோல் ஆசிரியர் கிடைத்து கேள்வித்தாள் அவுட் செய்யட்டும்
மேலும் பல வெற்றிகளை குவித்து "A" கிரேடு களாக வாங்கி குவிக்கட்டும்.
கரையான்.

பாய் படும் பாடு

நண்பர்/நண்பிகளே,

நான் எங்கு சென்றாலும் ,அரசாங்கங்கள் ,விட மாட்டேன்கின்றன.அதுவும் ஒரு நாட்டில் இருந்து, கால்நடை நோய்களை விரட்ட வேண்டுமேன்றால்,என்னை தான் கெஞ்சுகிறார்கள்.தமிழ்நாடு அரசுப் பணியில் சேர்ந்த உடன் "றிந்டெர்பெஸ்த்" நோயை விரட்டினேன்.தற்போது கத்தார் அரசு ,அதே நோயை இங்கு விரட்ட கோரியுள்ளார்கள்.தினமும் செம வேலை.சரியான அலுப்பு.ஆதலால் ,ப்லொக்கில் வரமுடியவில்லை.எப்போது முடியுமோ தெரியவில்லை.இதற்கிடையில் M.B.A. முதல் வருட தேர்வுக்கு படித்து வருகிறேன்.[Examiner களாக நம் வெட் பல்கலைக்கழக வாத்தியார்கள் வந்தால் ,படிக்க வேண்டியது இல்லை. இம் .என்ன செய்ய!].

பாய்.

புதன், மார்ச் 25, 2009

நாயூறான் தண்ணியை போட்டு விட்டு செய்யும் தமாசுகளை பெரும்பாலும் தூர நின்று தான் நாங்கள் வேடிக்கை பார்ப்போம், சில சமயங்களில் நம் நண்பர்களில் சிலர் அவனை சமாதானம் செய்வதாக நினைத்து வம்பில் மாட்டிகொள்வதுண்டு. அப்படி ஒரு முறை நம் நண்பர் எம்பிரியோ செல்வராசு, நாயூரானிடம் மாட்டிக்கொண்டு மரண அவஸ்தை பட்டது இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது. ஒரு முறை நாயூறான் காசு இல்லாத காரணத்தால் பக்கத்தில் உள்ள நாவல் ஆஸ்பிடல் ரோட்டில் கிடைக்கும் பாக்கெட் சரக்கை அடித்து விட்டு, ஓவராகி விட்டது. திடீர் என்று ஞானோதயம் பிறந்து, தாம் தவறு செய்து விட்டோமே என எண்ணி வருந்தி, இனியும் நான் உயிர் வாழ்வது தவறு ஆகவே தற்கொலை செய்து கொள்ளபோகிறேன் என அறிவித்தார், பின்னர் விறு விறு வென்று நம் கல்லூரி ஆஸ்டலில் நியூ பிளாக், sun shade மேலே ஏறி அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக எல்லோரையும் மிரட்டிகொண்டு இருந்தார். நம் நண்பர்கள் குழாம் அவன் குதிப்பதை live ஆக பார்க்கும் ஆசையில் கீழே வரிசையாக உட்கார்ந்து பார்த்துகொண்டிருந்தார்கள், அப்போது நம் நண்பர் எம்பிரியோ செல்வராசு வெளியில் சென்று விட்டு வந்தவர், பதறிப்போய், நம் நண்பர்களை பார்த்து திட்டி விட்டு, நாயூரானை காப்பாற்ற விடு விடு வென்று மாடியில் ஏறி, நாயூரானிடம் பக்குவமாக எடுத்து சொல்லி அவனை கீழே இறக்க முயற்சி செய்தார், அந்த முயற்ச்சியில் மாடியில் நின்று கொண்டு அவர் தன்னுடைய கையை கொடுக்க, நாயூறான் செல்வராசுவின் கையை இறுக்கமாக பற்றிக்கொண்டு மேலே எழ முயற்சி செய்தான்,நாயூரன் செல்வராசுவை விட எடை அதிகம், செல்வராசுவால் நாயூரானை மேலே தூக்க முடியாது, அவரால் முடியாததால் அவரும் அவனுடம் சேர்ந்து விழுந்து விடுமோ என்ற பயத்தில் அவரும் கத்த தொடங் கி விட்டார் (நாயூறான் துணைக்கு அவனையும் அழைத்து செல்லாலாம் என நினைத்தானோ என்னவோ), பின்னர் ஒரு வழியாக செல்வராசுவின் கையை விட்டு விட்டு அவனாகவே ஏறி வந்து சேர்ந்தான். மற்ற நண்பர்கள் எல்லாம் சேர்ந்து நண்பர் செல்வராசு விடம் சென்று" நாங்கெல்லாம் என்ன கேணையங்களா, நீயும் நின்று வேடிக்கை பாத்துட்டு போவது தானே, அதை விட்டு விட்டு வீராப்பா பேசுனே" என நக்கல் அடித்து விட்டு சென்றார்கள்.
கரையான்.

என்ன ஆனார்கள்?

1. பிய்சரில் [Pfizer] பைசா இல்லையா?
2. குவைத்தில் குழப்பமா ?
3. மலேசியாவில் மயக்கமா ?
விடைக்காக காத்திருக்கும் ,
பாய்.

ஞாயிறு, மார்ச் 22, 2009

நம் கல்லூரி ஆடிடோரியத்தில் ஒரு விழா நடந்து கொண்டு இருந்தது, அதற்கு தலைமை டாக்டர் ரிச்சர்டு மாசிலாமணி, அவர் மேடையில் வந்தமர்ந்தவுடன் நம் வகுப்பு தோழர்கள் சிலர் விசில் அடித்தார்கள், இதை பார்த்த அவர் டென்சன் ஆகி விட்டார்,(முகம் சிவந்து அல்லது கருத்து விட்டார் என்று சொல்லவே முடியாது-இந்த இரண்டுமே அவருக்கு பொருந்தாது),உடனே மைக்கை பிடித்த அவர் கிட்ட தட்ட அரை மணி நேரம் நம் கழுத்தில் ரத்தம் வரும் வரை கத்தி போட்டு பலவிதமாக அறிவுரை கூறினார், அவரின் கோபத்தை பார்த்து auditorium நிசப்தமாகி விட்டது. ஒரு வழியாக அவர் கோபம் தணிந்து , அவரிடமிருந்த அறிவுரைகள் எல்லாம் காலியாகிய வுடன் இனியாவது திருந்தி மாணவர்கள் போல் நடந்து கொள்ளுங்கள், ரவுடிகள் போல் நடக்காதீர்கள் என்று கூறி முடித்தார், அவர் முடிக்கவும் நம் நண்பர்கள் திரும்பவும் விசில் அடிக்க அவர் கோபத்தின் உச்சிக்கே சென்று பின்னர் நொந்து நூடுல்ஸ் ஆகி எக்கேடோ கேட்டுப்போங்கள் என்று கூறி அவருடைய நாற்காலியில் உட்கார்ந்து விட்டார்.
கரையான்.

2008 பிற்பகுதியில் பாய்











சனி, மார்ச் 21, 2009

நம் கல்லூரியில் நானும் நாயூரானும் படித்தோமோ இல்லையோ மற்ற விஷயங்களில் நன்றாகவே அனுபவித்தோம் என்றுதான் சொல்ல வேண்டும். நம் கல்லூரி inter-class games பல முறை எதோ இந்தியா -பாகிஸ்தான் போர் போன்ற சூழலை உருவாக்கும், அதுவும் volley-ball போட்டியில் நம் ஜுனியர் (immediate juniors) களுடன் மோதும் பொது பெரிய போர் களம் போல் காட்சி அளிக்கும். ஒரு முறை அந்த மாதிரியான போட்டியில் மிகப்போராடி நம் வகுப்பு வெற்றி பெற்று விட்டோம், அதை கொண்டாடும் விதமாக நாயூறான் ஆர்வ மிகுதியில் நம் வகுப்பு நண்பர்களிடமிருந்து ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என வசூல் செய்து ஒரு பீர் பாட்டில் ஒன்றை வாங்கி வந்து விட்டான், அந்த பாட்டிலை திறந்து நுரை வருமாறு குலுக்கி எல்லார் மேலும் பீச்சி அடித்து கொண்டாடினான், அதை பார்த்து விட்ட நம் Physical Director வேகமாக ஓடி வந்து மிக கோபமாக கத்த ஆரம்பித்தார் மேலும் வழக்கம் போல் அவருடைய தங்லிஷில் எங்களுக்கு அறிவுரை கூற ஆரம்பித்தார்" see you know how much கஷ்டப்பட்டு your father and mother படிக்க வைக்கிறாங்க you people don't understand their கஷ்டம். you people are drinking in the வேர்வை சிந்தி உழைத்த பைசா." இப்படியாக அவர் கூறி முடித்து விட்டு இனிமேல் அப்படியெல்லாம் நீங்கள் செய்ய மாட்டீர்கள் என நம்புகிறேன் என அவரே அவருக்கு உறுதி கூறிவிட்டு திரும்பி செல்ல முனைந்தார், அப்போது நயூறான் அவன் கையில் இருந்த பீர் பாட்டிலை parasitology department முன் இருந்த சுவற்றில் வேகமாக அடித்து உடைத்தான், Physical Director முகம் சிவந்து, உங்களை எல்லாம் திருத்தவே முடியாது, என்று கூறி விட்டு அந்த இடத்திலிருந்து வேகமாக வெளியேறி விட்டார்.

கரையான்

வெள்ளி, மார்ச் 20, 2009




புழுதிப்புயல் இங்கு அடிக்கடி நாங்கள் அனுபவிக்கும் ஒன்று . குதிரையில் பணிபுரிவதால் பெரும்பாலான பணி நேரம் திறந்த வெளியில்தான் இருக்க வேண்டிய கட்டாயம். நான் இங்கு பணிக்கு வந்த புதிதில் தூசு ஒவ்வாமை (dust allergy) இருந்தது, தொடர்ந்து தூசியிலேய இருந்து விட்டதால் இப்போது அந்த பிரச்னை ஏற்படுவதில்லை. இந்த முறை ஏற்பட்ட புயல் கொஞ்சம் பலமாகவே இருந்தது, இருபதடி தூரத்தில் இருக்கும் பொருட்கள் கூட சரியாக தெரிய வில்லை.என்னுடைய கவலை, paddock இல் இருக்கும் yearlings கண் மண் தெரியாமல் ஓடி கை கால் ஒடிந்து விடுமோ என்பதுதான். இரு வருடங்களுக்கு முன்னர் என் நண்பர் பணி புரியும் பண்ணையில் இந்த மாதிரி புழுதி புயலின் பொது paddock ல் இருந்த ஐந்து yearlings கண் மண் தெரியாமல் ஓடி fencing post இருப்பது தெரியாமல் அதில் மோதி கால்கள், தலை முதலியவற்றில் பலத்த காயம் ஏற்பட்டு euthanise செய்யப்பட்டன., அந்த நினைப்பு எனக்கு உண்டாகி கொஞ்சம் கவலை அளிப்பதாக இருந்தது. மேலே உள்ள புகைப்படங்கள் இந்த முறை எடுத்தது இல்லை, நான் பணி புரிந்த பழைய கிளினிக்கில் எடுத்தது. நான் பணிபுரிந்து வீட்ட்க்கு செல்லும் பொது, எதோ கட்டடம் கட்டும் தொழிலில் இருந்து வரும் தொழிலாளி போல் காட்சி அளிப்பதாக என் குழந்தைகள் கிண்டலடித்தனர் , அந்த அளவுக்கு என் மேல் தூசு ஒட்டியிருந்தது.
கரையான்.

வியாழன், மார்ச் 19, 2009

இன்னும் சில படங்கள் from ஜூன் 08




நான் ஜூன் மாடத்தில் இந்தியா செல்லும் போது எடுத்த படங்களை போஸ்ட் செய்திருக்கிறேன். போட்டு சித்ரா பாபு மற்றும் கௌரி அவர்களை MVC இல் பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது
- குஜிலி








இன்னும் சில படங்கள் - Gujili










திங்கள், மார்ச் 16, 2009

என்னுடைய இன்டர்நெட் கனக்ஷன் கடந்த சில நாட்களாக பழுதடைந்து விட்டதால் என்னால் எழுத முடியாததற்கு வருத்தம் தெரிவித்து கொண்டு தொடருவோம்.
நாயூறான் எதற்கு தகராறு செய்கிறோம் என்பதே தெரியாமல் சில சமயங்களில் தகராறு செய்து விட்டு வம்பில் மாட்டிக்கொள்வான். மெஸ்ஸில் ஒரு முறை அவனுக்கு கொடுக்கப்பட்ட உணவு சரியாக இல்லை என்று மெஸ் செகரெட்டரி (அவரும் நம் வகுப்பு தோழர்தான்) இடம் சென்று புகார் செய்தான், அவர் என்ன மன நிலையில் இருந்தாரோ என்னவோ, சாப்பாடு அப்படிதான் இருக்கும் இஷ்டம் இருந்தால் சாப்பிடு இல்லை என்றால் போ என கூற, வாக்குவாதம் முற்றி, நாயூரன் அவரை அடிக்க முயல அவர் தப்பிக்கும் முயற்சியில் கீழே விழுந்து கையில் hair line fracture ஆகி விட்டது, உடனே அவர் கையில் பெரிய கட்டு போட்டுக்கொண்டு வந்து அப்போதைய கல்லூரி முதல்வர் டாக்டர் ரிச்சர்டு மாசிலா மணி இடம் புகார் செய்து விட்டார், நாயூரன் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார் என்பது நிச்சயமாகி விட்டது(அனேகமாக சில நாட்கள் suspend செய்யப்படுவார் என்ற நிலை). நாயூரன் அன்று இரவே அவன் சொந்த ஊர் MLA வை சென்னையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் சென்று சந்தித்து நடந்தவற்றை எடுத்து கூறி நடவடிக்கை எடுக்காமல் செய்ய வேண்டி கொண்டார் அவர் உடனே அப்போதைய தி.மு.க அமைச்சரிடம் கூறி அவரை விட்டே தொலைபேசி மூலம் கல்லூரி முதல்வரிடம் பேச சொல்லி விட்டார். பிறகு கண் துடைப்பாக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணை முடிக்கப்பட்டது. அது நடந்து சில நாட்களில் டாக்டர் ரிச்சர்டு மாசிலாமணி நம் பல்கலைகழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப்பட்டார், அவருக்கு மாணவர்களின் சார்பில் முதல் வாழ்த்து சொன்னது நம் நண்பர் நாயுராந்தான். அவருக்கு மாலை அணிவித்து வாழ்த்து சொல்லும்போது அவர் அவனிடம்" தம்பி நீ போயி பாத்த MLA வையும் எனக்கு தெரியும், மந்திரியையும் எனக்கு தெரியும், இனியாவது, இந்த மாதிரி ரவுடி தனம் செய்யாமல் ஒழுங்காக படிச்சு முடிக்கிற வழியை பாரு" என்று கூறினார்.இந்த அனைத்து பிரச்சனைகளிலும் அதிகம் பாதிக்கப்பட்டது யார் என்றால் இந்த விஷயத்தில் சம்பந்தமே இல்லாத Dr.Paulraj (நம் co-ordinator department -ல் இருந்த ஒரு Associate Professor), அவரை இந்த பிரச்சினையை விசாரிக்க கல்லூரி முதல்வர் நியமித்திருந்தார், அவர் விசாரணைக்கு அழைக்கும் ஒவ்வொரு முறையும், நாயூறான் கண்டு கொள்ளாமல் இருக்க ஏன் விசாரணையை முடிக்கவில்லை என்று அவருக்கு கல்லூரி முதல்வர் memo கொடுத்து விட்டார், ஓய்வு பெரும் நேரத்தில் எனக்கு மெமோ வாங்கி கொடுத்து விட்டாயே என்று அவர் ஒரு பக்கம் அவனிடம் புலம்பி கொண்டு இருந்தார்.
கரையான்.

வெள்ளி, மார்ச் 13, 2009

NCC நாட்கள்

கரையானின் கதிரேசன் கதைகளை வாசித்ததும் NCC நாட்கள் அனுபவங்கள் உடனே என் நினைவுக்கு வந்தது. MVC இல் இரண்டாம் வருஷம் நான் NCC இல் சேர்ந்தேன். நான், மற்றும் gfk, தங்கநிர்மலாஎல்லோரும் CAVALRY UNIT இல் இருந்தோம். ஆகையால் குதிரை சவ்வாரி செய்வோம். எங்கள் CAVALRY UNIT இல் ஒரு malaysian பெண்ணும் இருந்தாள். அவள் நமக்கு ஒரு வருஷம் சீனியர். அவள் பேர் கிம் என்று நினைக்கிறேன். gfk இன் குதிரை பெயர் ungad. எல்ல குதிரைகளும் ஒரு திசையில் சென்றால் ungad எப்போதும் எதிர் திசையில் செல்லும். வாரத்தில் இரண்டு முறை மீட் science department பக்கமுள்ள field ஐ சுத்தி சவாரி செய்தோம். ஒரு முறை சவாரி செய்யும் போது கிம் உடைய குதிரை ருமானி ஓட ஆரம்பித்துவிட்டது. எல்லோரும் trot செய்து கொண்டிருக்கும் போது ருமானி gallop செய்ய ஆரம்பித்து பின்னர் ஓட ஆரம்பித்து விட்டது. கிம் உடனே லுமாணி no! லுமாணி no! (அவள்ளுக்கு ஆங்கில எழுது r சொல்ல இயலாது ருமானி என்று சொல்வதுர்க பதிலாக லுமாணி என்பாள்) என்று கூக்குரல் விட்டால். சிறிது நேரம் பிறகு அவள் சத்தம் கேட்கவில்லை, ருமானி அவளை காலேஜ் சுத்தி எங்கோ சென்று விட்டது, அவள் அந்த குதிரை கழுத்தை கட்டிக்கொண்டு சத்தம் போட்டு கொண்டிருந்தால் ஆணால் குதிரையில் இருந்து விழவில்லை. கடைசியாக ருமானி அவளை அங்கும் இங்கும் சுத்தி பிறகு field பக்கமாக கூட்டி கொண்டு வந்தது. கடைசியாக ஒரு வட நாட்டு NCC officer ருமனியை பிடித்து நிறுத்தினார். டும் mugam சிவப்பாகி நடுங்கினாள் . இந்த அனுபவத்திற்கும் பின்னும் அவள் குதிரை சவாரி செய்வாள். ருமானி வேறு சில மக்களையும் அவ்வபோது கிழே தள்ளிவிடும்.. NCC நாட்கள் வேறு சில நினைவுகளையும் கொண்டு வருகிறது. ஒவ்வொரு NCC மீட்டிங் இருக்கும் போது ஓசி சாப்பாடு கிடைக்கும் - Gujili

செவ்வாய், மார்ச் 10, 2009

yaaah

மதிய உணவு இடைவேளைக்கு பிறகு நரசிம்மனின் dairy science வகுப்பில் மும்முரமாக கண்ணை திறந்து வைத்துக்கொண்டு தூங்கி கொண்டு இருந்தோம் பெரும்பாலான நண்பர்கள், சிலர் பின் வரிசையில் நிம்மதியாக படுத்து தூங்கி கொண்டு இருந்தார்கள். அப்போது Dr. கதிரேசன் அவர்கள் NCC யில் இருந்த நண்பர்கள் தங்களின் உடை மற்றும் பூட்ஸ் திரும்ப ஒப்படைக்க வில்லை என அது பற்றி விசாரிக்க வந்தார். அவர் வந்து கிட்ட தட்ட பத்து நிமிடம் அர்ச்சனை செய்தார், யு பீபில் ஆர் நாட் ரிடர்நிங் த பூட்ஸ் அண்ட் யுனிபார்ம், ஐ ஆம் டெல்லிங் மேனி டைம்ஸ் யு ஆர் எக்ச்பரிமேண்டிங் மை பேஷன்ஸ் (பொறுமையை சோதிக்கிறீர்கள்), யு திங்க் யு பீபில் ஆர் பிக் , என்று கூறி நிறுத்தி விட்டு "என்ன நீங்கெல்லாம் அவ்வளவு பெரிய ஆட்களா" என தமிழிலும் கேட்டார்,உடனே பின்னால் படுத்திருந்த நம் நண்பர்களில் ஒருவர்"yaah" என கூறியதும், அவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க ஆரம்பித்து விட்டது. அவருடைய கோபம் மேலும் பல மடங்கு அதிகரித்து விட்டது,"ஹூ இஸ் தட் .... ஹூ இஸ் தட் " என கேட்டுக்கொண்டே gallery ஏற ஆரம்பித்து விட்டார், உட்கார்ந்திருந்த நாங்களெல்லாம் மிகுந்த டென்சன் ஆகி விட்டோம், நல்ல வேலையாக சில படிகள் மேலே ஏறியவர், என்ன நினைத்தாரோ திரும்பி சென்று விட்டார்.

கரையான்.

உயிர்க் கப்பல்

பரந்தமணற் பெருங்கடலில்பயணம் செல்லும் கப்பல் -
இதுபக்குவமாய் உயர் முதுகில்பாரம் சுமக்கும் கப்பல்!
வறட்சி மிகு நீரிலாவனத்தில்போகுங் கப்பல் -
இதுவாலும் முதுகும் கால்கள் நான்கும்வாய்த்திருக்கும் கப்பல்!
நீர்குடிக்க வாய்ப்பிருந்தால்நிறையக் குடிக்கும் கப்பல் -
மிகநெடும் பொழுது தாகம் தாங்கிநிற்கும் உயிர்க் கப்பல்!
பார் முழுதும் உள்ள மக்கள்பார்த்து வியக்கும் கப்பல் -
இதுபாதம் மணலில் புதைந்திடாமல்பாங்காய்ப் போகும் கப்பல்!
ஊர்ப் பயணம் செல்ல மக்கள்ஓட்டிப் போகும் கப்பல் -
மிகஉயர்ந்த உடலும் தடித்த தோலும்உடையதிந்தக் கப்பல்!
பார்த்துப் புல்லை மேய்ந்து நல்லபால் கொடுக்கும் கப்பல் -
இதுபாலைவனக் கப்பல் தம்பிபார்! பார்! ஒட்டகக் கப்பல்!-
திட்டக்குடி முத்து முருகன்
Posted By Bhai.

திங்கள், மார்ச் 09, 2009

படங்கள் பிரோம் 1991

அன்பு நண்பர்களே,
படங்கள் யாவையும் JPEG FORMATIL போஸ்ட் செய்துள்ளேன். இருந்த எல்ல படங்களும் போஸ்ட் பண்ணியாச்சி. Please comment away
Gujili

ஆல் இந்தியா டூர் படங்கள் - gujili

FAREWELL PARTY, HOSUR NEW YEAR PARTY 1992, HYDERABAD EXPRESS மே, 30, 1991
இன் HYDERABAD EXPRESS, HYDERABAD, இன் THE BOAT TO TIRUVENI SANGAM

Chota Kashmir, Thiruveni sangam

Nainital மே 16, 1991
Missourie - மே 12, 1991

TAJ MAHAL & இன் THE BUS TO HARIDWAR, RISHIKESH

காந்தி MEMORIAL, BAHAI HOUSE OF WORSHIP, REDFORT, DELHI

Bombay, எல்லோர kugaigal

daulatabad fort, pseudotajmahal - 5-2-1991

சென்ட்ரல் ஸ்டேஷன் மே 29, 1991
qutubமினார், பரோடா - ஆனந்த் கால்நடை மருத்துவ நிலையம் மே 3, 4 1991