புதன், டிசம்பர் 11, 2013

மறக்க முடியுமா...

ஹாக்கி விளையாட தெரிந்தவர்கள்  நம்ம வகுப்பில் ரெண்டு பேர்தான் தேறுவார்கள் என நினைக்கிறேன் வரதராஜன் மற்றும் வைரவசாமி , மற்ற வேறு யாரும் விளையாடியதாக நினைவில் இல்லை. நம்முடைய ஜூனியர்  அணியில் கிட்டத்தட்ட எட்டு பேர் கல்லூரி அணிக்காக விளையாடி கொண்டு இருந்தார்கள், அவர்கள் அணியின் முன் நம் அணி அர்ஜென்டினா கால்பந்து அணியுடன் இந்திய கால்பந்து அணி விளையாடினால் எப்படி இருக்குமோ அதுபோன்ற நிலைதான். இருந்தாலும் நம் அணி வீரர்கள் அருமையான ஒரு கூட்டமாக எதிரணியை குழப்பி, குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதில் வல்லவர்கள். இந்த முறை வரதராஜன் எனக்கு கோல் கீபர் வேலை கொடுக்காமல் மிட் பீல்ட் பதவி கொடுத்தார்(அப்போதுதான் முதல் முறையாக நான்  ஹாக்கி ஸ்டிக்-ஐ தொட்டேன்), ஓடி கொண்டே இரு எங்கேயும் நிற்காதே, பந்து எவரிடம் போனாலும் குச்சியுடன்(ஸ்டிக்) அவர்களை விரட்டிக்கொண்டே இரு இதுதான் கேப்டன்-ன் கட்டளை. மற்ற நண்பர்களுக்கும் அதே கட்டளைதான், இதிலே கொடுமை என்னவென்றால் பலருக்கும் ஆட்ட விதிமுறைகள் கூட தெரியாது, ஆனால் எல்லோரும் ஸ்டிக் ஐ எடுத்துக்கொண்டு களம் இறங்கி விட்டார்கள். காப்டனின் இன்னொரு கட்டளை "அவர்கள் கோல்  அடிக்க விட்டுவிட கூடாது, tie breaker ல் பார்த்து கொள்ளலாம்."  இருந்தாலும் அவர்கள் ஒரு கோல் அடிக்க ஆட்டத்தில்  பரபரப்பு கூடி விட்டது, தட்டு தடுமாறி நம் அணிக்காக வரதராஜனும் ஒரு கோல் அடிக்க எதிரணி வலுவாக இருந்தாலும் கொஞ்சம் அவர்களின் தன்னம்பிக்கையில் ஒரு சிறு விரிசல்...இது போதுமே நம்ம ஆட்கள் வழக்கமான கோஷ்டி கோஷ்டியாக தடுப்பாட்டம் ஆடி மேலும் அவர்கள் வெற்றி கோலை  அடிக்காமல் தடுத்து வெற்றி-தோல்வியை நிர்ணயம் செய்ய tie breaker முறைக்கு பந்தயத்தை நடத்தி சென்றார்கள். Tie breaker -ல் வரதராஜன் goal keeper  ஆக செயல் பட்டார், அந்த முறையிலும் 3-3 என டிரா ஆகி விட்டது, அடுத்ததாக sudden death முறை, அந்த முறையில் நாம் வெற்றி பெற்றோம். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் நம் அணி யானையின் காதில் புகுந்த எறும்பு, வெறும் இரண்டு வீரர்கள்களை வைத்துக்கொண்டு ஒரு பெரிய அணியை வீழ்த்தினோம். 
(சென்ற பதிவில் பாய் பௌலிங் பற்றி சொல்ல மறந்து விட்டேன் நம் அணி pg அணியுடன் விளையாடிய ஒரு மாட்சில் dr .iyappan அவர்களை முதல் பந்திலேயே கிளீன் போல்ட் ஆக்கி வீழ்த்தியது இன்னும் கண் முன்னே நிற்கிறது, நான்தான் அப்போது wicket -keeper )

கரையான்.

திங்கள், டிசம்பர் 09, 2013

சனி, டிசம்பர் 07, 2013

மறக்க முடியுமா??

கிரிக்கெட்டில் நம்ம வகுப்பில் பல ஜாம்பவான்கள் இருந்தாலும் கல்லூரி அணிக்கு தேர்வானவர்கள் குறைவுதான். அருண்,செந்தில்,பாய், பாபு, பார்த்திபன்,தாஸ்,குமாரவேல்  இப்படிப்பட்ட சூப்பர் டூபர் வீரர்கள் இருந்தாலும் நமக்கு இரண்டு வருட ஜூனியர்கள் பாஸ்கர் சேதுபதி தலைமையிலான அணி ரொம்பவும் வலிமை வாய்ந்ததாக  இருந்தது. நம்ம வகுப்பு அணி எப்போதும் முதல் சுற்றில் தோற்று வெளியேறியதில்லை, எப்படியோ அடித்து பிடித்து இறுதி சுற்றுக்கு வந்து சேர்ந்து விடுவோம். அப்படி ஒரு ஆட்டத்தில் நமக்கு இரு வருட ஜூனியர் களுடனான ஆட்டம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. டாசில் வென்ற எதிரணி நம்மை பாட்டிங் செய்ய அழைத்தது. நம்ம அணியின் "the wall" என்று அழைக்கப்படும் பாபு, முதல் ஓவரிலேயே திரும்பி விட்டான், தலை சிறந்த மட்டையாளர்கள் எல்லாம் தலை தப்பினால் போதும் என்று சென்ற வேகத்திலேயே சுவற்றில் அடித்த பந்தாய் திரும்பி விட்டார்கள்,எதிரணியை சேர்ந்த சத்தியமூர்த்தி மேற்கிந்திய தீவு வேகப்பந்து வீச்சாளர்களான Holding, Garner, Marshal ரேஞ்சுக்கு பந்து வீசிக்கூண்டு இருந்தான், இருபது ரன்னுக்குள் 4 விக்கெட்களை பறி  கொடுத்து விட்டு நம் அணி தடுமாறி கொண்டு இருந்தது, நம்முடைய அணி வீரர்களுக்குள்ளே கடும் போட்டி யார் பாட்டிங் செய்ய கடைசியாக செல்வதென்று (நான் போகல நீ போ அடுத்து என்று ஒவ்வொருவரும் அடுத்தவரை அனுப்புவதிலேயே குறியாக இருந்தார்கள்) ஜாம்பவான் களுக்கே இந்த நிலை என்றால் என்னைப்போன்ற tailenders நிலைமை என்னவாகும், இப்படி நீ போ நான் போ என்ற போட்டியில் ஐந்தாவது ஆட்டகாரனாக என்னை தள்ளி விட்டார்கள்(அனுப்பினார்கள் என்ற சொல் இங்கே உபயோகப்படுத்த முடியாது), முதல் சில பந்துகள் வயிற்றில், கையில் என உதை  வாங்கி கதறிக்கொண்டு நின்றேன், சில அடிகள் வாங்கிய பின் கொஞ்சம் கோபம், பொண்ணுங்க முன்னாள் அடி வாங்கியதால் ஏற்பட்ட அவமானம் (நம்முடைய ஜூனியர் களை ஊக்கப்படுத்த அவர்கள் பாட்ச் பெண்கள் மைதானத்திற்கு வந்திருந்தார்கள்) எல்லாமாக சேர்ந்து இனி தப்பிக்க வேறு வழியே இல்லை பதில் தாக்குதல்தான் ஒரே வழி என முடிவு செய்தேன்..சத்தியமூர்த்தியின் பந்து வீச்சை சமாளிக்க ஒரே வழி திரும்ப தாக்குவது, கண்ணை மூடிக்கொண்டு மட்டை சுழட்ட இரண்டு சிக்ஸர், அது வரை தெனாவட்டாக பந்து வீசிக்கொண்டு இருந்த எதிர் அணி கொஞ்சம் இறங்கி  வந்தது, என்னுடன் தாஸ் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினான், நாங்கள் இருவரும் கிட்டத்தட்ட அறுபது ரன்கள் சேர்த்தோம், பின்னர் தாஸ் அவுட்டாகி வெளியேற அருண் வந்தான், நன்றாக விளையாடிக்கொண்டு இருக்கும்போது அருண் ஒரு single run -க்கு அழைக்க நான் வேகமாக ஓடினேன், ஆனால் அவன் அழைத்தானே தவிர ஓட வில்லை, நான் அவுட்டாகி வெளியேற வேண்டியதாகியது , பயங்கர கடுப்பில் பிட்சிலேயே வைத்து அவனை திட்டி விட்டு வந்தேன்.(அதற்காக பிறகு மன்னிப்பு கேட்டேன்), முடிவில் ஓரளவு மரியாதையான ரன்கள் எடுத்திருந்தோம், 130 என்று நினைக்கிறேன். நாம் அந்த மாட்சில் தோற்றாலும் போராடி தோற்றோம் அவர்கள் 8 விக்கட்டுகளை இழந்து கடைசி ஓவரில்தான் வெல்ல முடிந்தது....நம் அணியில் பாய், பார்த்திபன், பாபு, அருண், செந்தில், குமாரவேல் சிறப்பாக பந்து வீசினார்கள்.

கரையான்.

வெள்ளி, டிசம்பர் 06, 2013

மறக்கமுடியுமா...


இந்த புகைப்படத்தை  பார்க்கும்போது பழைய நினைவுகள் சிறகடித்து பறக்க ஆரம்பித்து விட்டது....
நம்ம பாட்ச் -ல ஒரு பெரிய பலம்  நான் பெரியவன் என்ற எண்ணம் இல்லாமல்  ஒரு அணியாக செயல் படுவது... நான் கைப்பந்து மற்றும் சிறகுப்பந்து ஆகிய  விளையாட்டுகளிலும் நன்றாக விளையாடக்கூடியவனாக இருந்தாலும், கிட்டத்தட்ட எல்லா விளையாட்டுகளிலும் கலந்து கொண்டு விளையாடினேன்.(செஸ், carrom ஆகிய மூளையை உபயோகித்து விளையாட வேண்டிய விளையாட்டுக்கள் தவிர) அதில் நடந்த சுவாரஸ்யமான தகவல்கள் என் நினைவிலிருந்து.....
நம்முடைய immediate juniors உடன் விளையாடிய கால்பந்து போட்டி மறக்கமுடியாத ஒன்று...வரதராஜன் வைரவசாமி அப்பாலோ ஆகிய முக்கிய வீரர்கள் சேர்ந்து ஒரு அணியை உருவாக்கினார்கள் என்னை goal keeper(பலி கடா) ஆக தேர்வு செய்து, மிகப்பெரிய பொறுப்பை(காக்கை  தலையில் பனம்பழம்) என்னிடம் ஒப்படைத்தார்கள், நமக்கு எதிர் அணி நல்ல பலம் வாய்ந்தது, அதில் நம் கல்லூரி அணியின் முக்கியமான வீரர்கள் இருந்தது அவர்களுக்கு பெரும் பலம். என்னதான் சிறந்த வீரர்களாக இருந்தாலும் எதிர் அணியில் உள்ளவர்கள் ஒரு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு விளையாடா  விட்டால் நன்றாக விளையாடுபவர்களின் ரிதம்(rhythm ) பாதித்து   அவர்களால் சிறப்பாக விளையாட்டை வெளி படுத்த முடியாது, நம் ஜூனியர்கள் ராணுவ வீர்கள் போல் சிறப்பாக அணி வகுத்து விளையாடுபவர்கள் நம் அணி வீரர்கள் நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்து விட்டது போல் சிதறி ஓடி அணி வகுப்பை சீர் குலைப்பவர்கள், இதனால் அந்த சிறந்த அணி திணறி விட்டது. நம் அணியில் எல்லோரும் mid fielders , defenders, forward எல்லா நிலைகளிலும் விளையாடி எதிரணியின் அனைத்து ஆட்டக்காரர்களையும் நிலைகுலைய வைத்து வெறுப்பேற்றி கொண்டு இருந்தார்கள், ஒரே இடத்தில் நின்று ஆடியவர்கள் என்றால் நான் கோல் கீபர் மற்றவர் அப்பாலோ அவன் முட்டியில் அடிபட்டிருந்ததால் அதிகம் ஓட முடியாமல் defendfer ஆக விளையாடிக்கொண்டு இருந்தான். முதல் பாதியில் கோல்  இல்லை , இரண்டாவது பாதியிலும் அதே நிலை , வரதராஜன் நாம் எப்படியாவது சமன் செய்து விட்டால் tie breaker  இல் ஜெயித்து விடலாம் என்று ஆலோசனை கொடுத்தார். இன்னும் பத்து நிமிடங்கள்தான் அவர்கள் ஜெயிக்க விளையாடிக்கொண்டு இருந்தார்கள் நாங்கள் தோற்காமல் இருக்க விளையாடி கொண்டு இருந்தோம். ஒரு கட்டத்தில் அவர்கள் அணியின் ஐயப்பன் மிகவும் கடுப்பாகி மைதானத்தின் அவர்கள் பக்க பாதியிலிருந்து பந்தை வேகமாக உதைத்தான்,பந்து என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது, சுலபமாக பிடிக்க கூடியதாக பறந்து வந்து கொண்டிருந்தது, நானும் முன்னேறி பிடிக்க செல்கிறேன், அது வரை சும்மா இருந்த அப்பாலோ தலையால் முட்டி பந்தை திருப்பி அனுப்ப முயற்சி செய்ய அவன் நடு  மண்டையில் பட்டு பந்து மேலெழுந்து பின்னோக்கி பறக்க தொடங்கியது, அதாவது என் தலைக்கு மேல் கோலை நோக்கி, அவ்வளவுதான் ஆட்டம் முடிந்து விட்டது...
இன்னும் சுவாரஸ்யமான தமாஷ்களுடன்  தொடரலாம்....

கரையான்.

திங்கள், டிசம்பர் 02, 2013

யாரிடமும் சொல்லிடாத சொக்கா.....

நம்மிடம் பல நேரங்களில் நண்பர்கள் "உனக்கு மட்டும்தான் தெரியும் வேற யாருகிட்டயும் இத பத்தி பேசாத" என முக்கியமான அல்லது உப்புசப்பில்லாத விஷயங்களை சொல்வதுண்டு.  இந்த உனக்கு மட்டும் தெரிந்த மேட்டர் பலருக்கும் தெரியும் என்பதுதான் உண்மை.
சென்ற முறை தாயகம் வந்திருந்தபோது நம்ம எஸ்.கே.பீ மற்றும் நண்பர்களை சந்திப்பதற்காக ஈரோடு சென்றிருந்தேன். எஸ்.கே.பீ என்னை அழைக்க ரயில் நிலையம் வந்திருந்தான், சம்பிரதாயமான நலம் விசாரிப்புகளுக்கு பின் "மாப்பிள நான் துபாய் போவது யாருக்கும் தெரியாது நீ இத பத்தி யாருக்கிட்டயும் பேச வேணாம்" என்றான், ஒருவேள நாம பிரதமர் மன்மோகனுக்கோ, முதல்வர் ஜெயலலிதாவுக்கோ சொல்லி இவன் துபாய் போவதா தடுத்துடுவோம்னு நினைக்கிறானோ என்று நினைத்து சத்தியம் செய்யாத குறையாக நான் யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று கூறினேன். அவனுடன் கால்நடை மருத்துவமனையில் உள்ள வீட்டிற்கு சென்றடைந்தேன். வீட்டிற்கு வெளியே வேறொரு கால்நடை மருந்தகத்தில் பணி  புரியும் கால்நடை மருத்துவர் நின்றிருந்தார், நாங்கள் காரை விட்டு இறங்கியவுடன் அறிமுகப்படலம் முடிந்த வுடன், "நீங்க எப்ப சார் துபாய் போறீங்க " என்று எஸ்.கே.பீ இடம் கேட்டார், அவரிடம் எதையோ சொல்லி சமாளித்தான்,பின்னர் என்னிடம்"வேற ஒன்னும் இல்லடா துறை ரீதியா அனுமதிக்கு விண்ணபித்து இருக்கேன் அதான் அவனுக்கு தெரிஞ்சிருக்கு" என்றான். கொஞ்சம் நேரம் கழித்து வேறொரு கால்நடை மருத்துவர், அவர் வேறொரு துறையில்(கால்நடை மருத்துவத்திற்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத) பணி  புரிகிறார், "என்ன அண்ணாச்சி துபாய் போறீங்கன்னு கேள்வி பட்டேன் " என்று எஸ்.கே.பீ யை பார்த்து வினவினார்.  அடுத்த நாள் நாங்கள் இருவரும் ஒரு பால்பண்ணைக்கு சென்றோம், எங்கள் இருவரையும் அந்த பண்ணைக்கு வேறொரு கால்நடை மருத்துவர் அழைத்து சென்றார், அவரும் எஸ்.கே.பீ இடம் துபாய் செல்வதை பற்றி விசாரித்தார், இப்போது எனக்கு பழகி விட்டது, அந்த பண்ணையில் எங்கள் பணி முடிந்தவுடன் அந்த பண்ணையின் முதலாளி " என்னங் டாக்டர்  துபாய் போராருங்க்லாட்ருக்கு...சொல்லவே இல்லீங்...." எஸ் கே பீ "உங்களுக்கு எப்படி தெரியும் " என்றான் "அட போங்  இந்த விஷயம் ஊரு பூர தெரியுங் அல்லாம் பேசிக்றாங்  "   எனக்கு மட்டுமே தெரிந்த  ராணுவ ரகசியம் ஊரு பூரா சிரிப்பா சிரிக்குதே என நினைத்து கொண்டேன். பின்னர் சந்தித்த அனைவரும் (பகவதி , தங்கவேல் உட்பட) இந்த ரகசியத்தை எஸ் கே பீ இடம் கேட்டார்கள்.
நாங்கள் இருவரும் அந்த பால் பண்ணையிலிருந்து வெளியேறும்போது ஒரு மாடு மற்றொரு மாட்டிடம் எங்களை காட்டி ஏதோ கத்தியது அதன் பாஷை புரியாததால் அந்த வார்த்தைகளை கூகிள் மொழிபெயர்ப்பில் போட்டு பார்த்தேன், கீழ்கண்டவாறு மொழி பெயர்த்தது...
 " ஏற்கனவே நமக்காக இருந்த ஒரே நல்ல மருத்துவர் பொள்ளாச்சி இப்ராஹிம்  பாய் அவரு துபாய் போய்ட்டார் , அடுத்த சூப்பர் மருத்துவர் இவரும் துபாய் போறாரு நம்ம கதி இனி அதோகதிதான்"

கரையான்.

வியாழன், நவம்பர் 28, 2013

சனி, நவம்பர் 23, 2013

ரத்த தானம்

 என்னுடன் பணி  புரியும் ஒரு தொழிலாளிக்கு குதிரை அடித்ததால் கால் முறிவு ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டார், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறிவிட்டார்கள், அதற்கு அவருக்கு நான்கு யூனிட் ரத்தம் O +ve  ரத்தம் தேவை, தயார் ஆனவுடன் அறுவை சிகிச்சை செய்வதாக கூறினார்கள், எங்கள் பண்ணையில் பணி புரியும் மற்ற வேலை ஆட்கள் மற்றும் நான் என எட்டு பேர் சென்றோம், ஆனால் அதில் மூன்று பேரிடம் மட்டுமே ரத்தம் எடுக்க முடியும் என கூறி விட்டார்கள், வேறு குரூப், மற்றும் haemoglobin அளவு குறைவாக இருந்தது என கூறி நிராகரித்து விட்டார்கள், குறைந்தது 13.0mg இருக்க வேண்டும் எனக்கு 12.9 mg என்பதால் என்னிடமும் ரத்தம் எடுக்க முடியாது என்று கூறி விட்டார்கள், பின்னர் நண்பர்களுக்கு தகவல் கூறி இரண்டு பேர் வந்து ரத்தம் கொடுத்தார்கள்,  ரத்த வங்கியில் காத்திருக்கும் நேரத்தில் அங்கு பணியிலிருந்த பிலிப்பின்ஸ் நாட்டை சேர்ந்த nurse -ஐ பார்த்து மிக பரிதாபமாக இருந்தது. பல நாட்டவர்கள் பல மொழி பேசுபவர்கள் என அவர்களை சமாளித்ததை பார்த்த போது வியப்பாக இருந்தது. சிரியா நாட்டவர் இருவர் வந்திருந்தனர், அவர்களை ஒருவரின் ரத்தம் நார்மல் இல்லை என மற்றொருவருக்கு மட்டுமே எடுக்க முடியும் என கூறினார் அந்த nurse , நிராகரிக்கப்பட்டவர் பரவாயில்லை இன்னொரு unit ஐயும் அவருடன் வந்த மற்ற நபரிடம் சேர்த்து  எடுக்க கூறினார், ஆனால் அந்த nurse ஒருவருடமிருந்து ஒரு unit மட்டுமே எடுக்க முடியும் என விவரிக்க பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை. அடுத்து ஐந்து சவுதி நாட்டவர்கள்  அவர்களின் உறவினருக்கு ரத்தம் கொடுக்க வந்தார்கள், இரண்டு பேர் உடல் எடை குறைவாக இருந்ததால் நிராகரிக்கபட்டார்கள் , மீதி மூன்று பேரிடம் ரத்தம் எடுக்க அந்த nurse தயாரானார், அதில் ஒருவர் எவ்வளவு ரத்தம் எடுப்பீர்கள் என்று கேட்டார், 450 மில்லி என கூறி அந்த ரத்த பையையும் காட்டினார், அதை கேட்ட சவுதி டென்ஷன் ஆகி, என்னுடைய உடம்பிலிருந்து அவ்வளவு ரத்தம் எடுத்தால் நான் செத்து விடுவேன், ஒரு 100 மில்லி வேண்டுமானால் எடுத்து கொள் என கூறினார், அந்த பெண் இல்லை சார் ஒரு பையின் அளவு 450 மில்லி, உலகம் பூராவும் இப்படிதான் எடுக்கப்படுகிறது, குறைவாக எடுத்தால் உபயோகம் அற்று போய்  விடும் என கூறினார், ஆனால் அந்த சவுதி விடுவதாக இல்லை, எங்கள் நான்கு பேரிடமிருந்தும் நூறு நூறு மில்லி ஒரே பையில் பிடித்துகொள் என ஏதோ குழாயில் தண்ணி பிடிப்பது போல் விவாதம் செய்தார், அந்த பெண் அப்படியெல்லாம் செய்ய முடியாது சார், உங்களால் கொடுக்க முடியாதென்றால் நீங்கள் சென்று வேறு ஒருவரை அழைத்து வாருங்கள், என்று கூறி விட்டு உள்ளே சென்று விட்டார். இவர்கள் படுத்தியது போதாதென்று, ரத்தம் கொடுக்க வந்த என் நண்பர், ரத்தம் கொடுத்து முடித்த வுடன் லேசாக மயக்கமாகி என்னை டென்ஷன் ஆக்கினார்.

கரையான். 

செவ்வாய், நவம்பர் 19, 2013

முதலாளியின் நஷ்டம் என்னுடைய நஷ்டம்.....

என் முதலாளி குதிரை விற்காததால் அவருக்கு நஷ்டமோ இல்லையோ எனக்கு நஷ்டம்,  முதலாளிக்கு ஆதரவாக  பேசினாலும் மனது பூராவும் கோபமும் இயலாமை உணர்வும் இருப்பதை மறுக்க முடியாது. குதிரை விற்பனைக்கு ஏற்றவாறு எனக்கு ஊக்க தொகை(incentive ) வழங்கப்பட வேண்டும், சரியாக விற்பனை ஆகாததால் எனக்கும் நஷ்டம்தான். உற்பத்தியை பெருக்கி விற்பனை செய்யக்கூடிய அளவில் தயார் செய்வதற்காக வழங்கப்படும் தொகை இது, விற்பனை ஆகாதது என் தவறில்லை என்றாலும் எனக்கான ஊக்க தொகை கிடைக்காமல் போகும் . இது மட்டுமலாமல் இந்த குதிரைக்குட்டிகள் அடுத்த நிலையான பந்தய குதிரைகளாக ஆக்குவதற்கான பயிற்சிகளை செய்வது என் தலையில் திணிக்கப்படும்.  குட்டியாக இருந்து பந்தய குதிரை என்ற அடுத்த நிலைக்கு பயிற்சி அளிப்பது  பொறுமையை சோதிப்பதாகவும், நம்முடைய பணி நேரத்தை அதிகம் எடுத்து கொள்ளவும் செய்யும். இந்த குட்டிகள் நன்றாக பின்னாளில் பந்தயத்தில் ஓடும்போது அதில் வரும் லாபம் (10% commission from stakes money) பயிற்சியாளருக்கு(trainer) சேரும், ஆக பயிற்சியாளருக்கு இரட்டை லாபம் எனக்கு இரட்டை நஷ்டம்.
ஒரு நல்ல trainer என்றால் அவரிடம் பயிற்சிக்கு செல்லும் 10 குதிரைகளில் 3 குதிரைகள் ஜெயிக்க வேண்டும், 10-ல் 8 குதிரைகளாவது பந்தயத்தில் கலந்து கொள்ளவேண்டும். இரண்டு குதிரைகள் பல்வேறு காயங்கள் (tendinitis, fractures ,etc )காரணமாக  கதை முடிந்து போகும். ஆனால் எங்கள் பயிற்சியாளர் தலை கீழ் 10 இல் 3 பந்தயத்தில் கலந்து கொண்டால் பெரிய விஷயம் அதில் ஒன்று ஜெயித்தால் அது பெரும் அதிசயம். மற்ற 7 குதிரைகளும் குப்பைக்குத்தான் போகும். இந்த நிலையை மாற்ற இரண்டு ஆண்டுகள் முன்னர் எங்கள் முதலாளி என்னிடம் ஆலோசனை கேட்டார், நான் அவரிடம் systematic training programme ஐ விளக்கினேன், அவர் உடனே குட்டிகளை முதல் மூன்று மாதங்கள் பயிற்சி   செய்யும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்,  சென்ற ஆண்டு முதல் எங்கள் குட்டிகள் ஜெயிக்க ஆரம்பித்து விட்டன, இந்த ஆண்டு அக்டோபர் முதல் வாரத்தில் எங்கள் பண்ணை 2 year old குட்டி மிக சிறப்பாக ஜெயித்தது, உடனே இந்நாட்டு மன்னர் விலைக்கு வாங்கி விட்டார். இப்போது பயிற்சியாளருக்கு இரட்டை லாபம் அந்த குட்டி விற்ற விலையில்(  3 மில்லியன் சவுதி ரியால்) 5 சதவீதம் அவருக்கு முதலாளி கொடுப்பார்.  இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் இவை ஜெயிக்காமல் போயிருந்தால் பயிற்சியாளர் என் மேல் பழியை போட்டு  தப்பி இருப்பார்.
"எனக்கும் கோவேறு கழுதைக்கும் பெரும் வித்தியாசம் இல்லை என்ற எண்ணம் அவ்வப்போது உதிப்பதையும் மறுக்க முடியாது........"

கரையான்.

திங்கள், நவம்பர் 11, 2013

லாபமில்லை....

இலாபமில்லை என்ற சொல் பல இடங்களில் உபயோகப்படுத்தப்படுகிறது, அதுவும் விவசாயம் மற்றும் கால்நடை சார்ந்த தொழில் செய்பவர்களில் பலர் உற்பத்தி செய்பவன் இழப்பையே சந்திக்க வேண்டியுள்ளது என்று புலம்புவது இப்போது வாடிக்கை ஆகி விட்டது. (நம்முடைய முக நூல் (face book ) பதிவில் கூட சொக்கன் கருப்பட்டி உற்பத்தியாளர்கள் பற்றி குறிப்பிட்டு இருந்தான்).
சென்றமாத இறுதி மற்றும் இந்த மாத தொடக்கத்தில் எங்கள் பண்ணையின் ஒரு வயது குதிரைகள் விற்பனை நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் சவுதியில் உள்ள அனைத்து பண்ணையாளர்களின் ஒரு வயது குட்டிகளுக்கான விற்பனை நடக்கும், எங்கள் பண்ணையின் உற்பத்தியான 35 குட்டிகளும் கலந்து கொண்டன...விற்பனை மிக மோசமாக இருந்தது, உற்பத்தி விலையில் பாதி கூட கேட்கப்பட வில்லை(உலகளாவிய பொருளாதார மந்த நிலை?), நான் விற்பனை அரங்கில் உட்கார்ந்து கொண்டிருந்தேன், அப்போது ஏற்கனவே எனக்கு பழக்கமான ஒரு சவூதி காரர் என்னருகில் உட்கார்ந்தார், பெரிய பணக்காரர் ஒரு மில்லியன் டாலர் கொடுத்து கூட குதிரை வாங்குவார்(ஆனால் அதை மருத்துவம் செய்யும் மருத்துவருக்கு நூறு டாலர் கொடுக்க பத்து முறை பேரம் பேசுவார்) என்னிடம் மிக கோபமாக "உங்க முதலாளி என்ன எல்லா குதிரைக்கும் மில்லியன் எதிர்பார்க்கிறார், கொஞ்சம் குறைத்து விற்றால் என்ன அவரிடம் பணமா இல்லை " என்றார். நான் அவரிடம் "என் முதலாளி பணம் போடுகிறார் மிக விலை உயர்ந்த குதிரைகளை வெளி நாடுகளில் இருந்து வாங்கி வருகிறார் அவர் எதிர் பார்ப்பதில் என்ன தவறு " என்றேன். உடனே அவர் "பத்து மில்லியன் செலவு செய்து விட்டு இருபது மில்லியன் எதிர் பார்க்கிறார், அவர் எவ்வளவு விலைக்கு  வாங்கினார் என்பது இணையதளத்தில் உள்ளதே" என்றார்.
நான் அவருக்கு விளக்க ஆரம்பித்தேன்," என் முதலாளி பத்து மில்லியன் கொடுத்து அமெரிக்க அல்லது ஐரோப்பா விலிருந்து பத்து சினை குதிரை வாங்குகிறார் என்று வைத்து கொள்வோம், இங்கு வந்த வுடன் அந்த பத்தில் ஒரு குதிரை abort ஆகி விடும், ஒன்பது குட்டிகள்தான் மிஞ்சும், மேலும் பாக்கி உள்ள ஒன்பது குதிரைகளும் எந்த பிரச்னையும் இல்லாமல் குட்டி போட்டாலும் பல்வேறு பிரச்னைகளால்(neo natal infection )அதில் ஒரு குட்டி இறந்து விடும் , மீதி எட்டு குட்டிகள்தான் மிஞ்சும், மிஞ்சிய எட்டு குட்டிகளில் விற்பனை வயதை அடைவதற்குள் paddock injuries அல்லது colic போன்ற காரணங்களால் ஒரு குட்டி மரணம் அடைந்து விடும், ஆக எஞ்சி இருப்பது ஏழு குட்டிகள்தான், இந்த ஏழில் ஒன்று அல்லது இரண்டு குட்டிகள் கால் கோணல் மாணலாக(conformational deformities )இருப்பதால் வாங்க ஆள் இருக்காது, எஞ்சி இருப்பது ஐந்து அல்லது ஆறு குட்டிகள் , இவற்றை விற்றுத்தான் என் முதலாளி போட்ட பத்து மில்லியன் -ஐ  எடுக்க வேண்டும் இதில் இந்த குட்டிகள் மற்றும் அதன் அம்மாக்களுக்கு தீவனம், தொழிலாளர் மற்றும் மருத்துவ செலவுகள் , அவர் போட்ட பணத்திற்கான வட்டி , எல்லாம் கூடி ஒரு குட்டிக்கான  சராசரி விலை இரண்டு மில்லியனை தொட்டு விடும், ஆகவே அவர் எதிர்பார்ப்பதில் என்ன தவறு" என்றேன். மேலும் அவரிடம் ,"இப்போது நீங்கள் buyer என்பதால் குறை கூறுகிறீர்கள் , எங்கள் முதலாளி குறைவான விலைக்கே விற்கிறார் என்று வைத்து கொள்வோம் , 10,000 ரியாலுக்கு குதிரையை நீங்கள் வாங்குகிறீர்கள் , அதை பயிற்சி அளித்து பந்தயத்தில் ஓட்டி, ஜெயிக்கவும் செய்து விட்டால், உங்களை விட பெரும் முதலாளிகள்(royals ) உடனே அந்த குதிரையை வாங்க உங்களிடம் பேரம் பேசினால், பத்தாயிரம் கொடுத்துதானே வாங்கினேன் எனக்கு மேலும் ஒரு பத்தாயிரம் போதும் என இருபதாயிரத்திர்கா விற்பீர்கள், ஒரு மில்லியன் வேண்டும் என கேட்க மாட்டீர்களா இப்போது நீங்கள் seller ஆகி விடுகிறீர்கள்....." என்றேன் . அந்த மனிதர் கோபம் தணிந்து " நீ சொல்வது சரிதான் என்று கூறி விட்டு எழுந்து சென்று விட்டார்.

கரையான்.

ஞாயிறு, அக்டோபர் 27, 2013

"EXECUTIVE MASTER HEALTH CHECK-UP"

மருத்துவ துறை அலட்சியத்தால் ஏற்படும் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கி (பல ஆண்டு பெரும் இழுதடிப்பிக்கு பின் ) உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. வரவேற்கத்தக்க ஒன்றுதான் என்றாலும் மிக நீண்ட இழுபறிக்கு பின்னர் (1998 -ல் நடந்த சம்பவம்) வழங்கப்பட்டுள்ளது சாதாரண மக்கள் நீதி மன்றத்தை அணுக ஊக்கப்படுத்துவதாக இல்லை.
நான் சவுதியில் அனுபவித்ததை ஏற்கனவே சொல்லி /எழுதி இருக்கிறேன், சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட அனுபவத்தையும் எழுதுகிறேன்.
சவுதி திரும்பும் முன்னராக ஒரு complete health check-up செய்து கொள்ளலாம் என்று ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றேன்.  மொத்தமாக நான்காயிரத்து ஐந்த்நூறு கட்டினால் எல்லா பரிசோதனைகளும்(பிரேத பரிசோதனை தவிர) செய்து பிரச்னைகள் இருந்தால் அந்த துறை நிபுணர்களின் அறிவுரையும் வழங்கப்படும் என்று கூறினார்கள் அதற்கு "EXECUTIVE MASTER HEALTH CHECK-UP" என்று அழகாக  பெயரும் வைத்துள்ளார்கள்.  ரொக்கமாக இல்லாமல் டெபிட் கார்டு உபயோகித்தால் ஒன்னரை சதவீதம் சர்வீஸ் டாக்ஸ் என்றார்கள், அங்கே இருந்த இரண்டு ATM கருவிகளும் வேலை செய்ய வில்லை, ஆகவே வேறு வழியில்லை கார்ட் உபயோகித்துதான் ஆக வேண்டும். பணம் கட்டிய பின்னர் ஒவ்வொரு டெஸ்ட் ஆக  செய்தார்கள், ECG நார்மலாக இல்லை, எனவே tread mill அல்லது Echo Cardiograph செய்ய வேண்டும் என்றார்கள், tread mill ecg நான் பணம் கட்டிய திட்டத்திலேயே அடக்கம் என்பதால் புதிதாக பணம் கட்ட வேண்டியதில்லை என்று நினைத்தேன், ஆனால் என்னை பரிசோதித்த மருத்துவர், tread mill க்கு பதிலாக  echo செய்து கொண்டால் நல்லது மிக நுணுக்கமாக தெரிந்து விடும் என்றார், echo வுக்கு மேலும் 1700 ரூபாய் கட்ட வேண்டும் என்றார்கள், அதை கட்டி echo எடுத்ததில் normal  என்று கூறி விட்டார்கள், இருந்தாலும் specialist இடம் ஒரு ஒபினியன் வாங்கி  விடுங்கள் என்றார்கள், அதற்கு தனியாக 300 ரூபாய் கட்டி அவரை போய் பார்க்க சொன்னார்கள்,அவர் என்னுடைய ecg யையும் echo இரண்டையும் பார்த்து விட்டு, கொஞ்சம் சந்தேகமாகத்தான் இருக்கிறது எதற்கும் ஒரு treadmill ecg செய்து விடுங்களேன் என்றார், நொந்து விட்டேன்...திரும்பவும் treadmill செய்ய 1500 கொடுத்து treadmill ecg செய்து முடித்தபோது அந்த துறையின் தலைவர் மற்றும் பேராசிரியர்கள் பணி நேரம் முடித்து சென்று விட்டார்கள். அங்கிருந்த மாணவி ஒருவர் எல்லாம் நன்றாகவே இருக்கிறது ஒன்றும் பிரச்னை இல்லை என்றார், எதற்கும் சந்தேகத்திற்கு கொஞ்சம் அனுபவசாலியாக தெரிந்த ஒரு ஆபீஸ் அசிஸ்டன்ட் போல இருந்தவரிடமும் என்னுடைய report ஐ காட்டினார்(வெள்ளை சட்டை வெள்ளை பான்ட் அணிந்து பெரிதாக குங்கும போட்டு வைத்திருந்தார்...கண்டிப்பாக டாக்டர் கிடையாது, அனுபவ வைத்தியர் போல தெரிந்தார்.) அவரும் ஒன்னும் பிரச்னை இல்லை என்று கூறி என்னை அனுப்பினார்(எல்லோரும் பணி முடிந்து வீடு செல்லும் அவசரத்தில் இருந்தனர்)...இப்படித்தான் பெரும்பாலான diagnosis செய்யப்படுகிறதோ என்று நினைத்து கொண்டேன் .....

கரையான்.

வெள்ளி, அக்டோபர் 25, 2013

நண்பர் குமரவேல் .....PASUMAI VIKATAN.



எந்த விளைபொருளாக இருந்தாலும், அதை அப்படியே சந்தைப்படுத்தாமல் மதிப்புக் கூட்டி விற்றால்தான் அதிக லாபம் பார்க்க முடியும்' என்கிற விழிப்பு உணர்வு, விவசாயிகள் மத்தியில் பெருகி வரும் காலமிது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வேளாண் அறிவியல் நிலையங்களிலும் மதிப்புக் கூட்டும் தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சிகளும், அதற்கான கருவிகள் பற்றிய விவரங்களையும் சொல்லிக் கொடுத்து வருகிறார்கள். 'பசுமை விகடன்’ கருவிகள் சிறப்பிதழுக்காக, காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம், வேளாண் அறிவியல் நிலைய மனையியல் துறை உதவிப் பேராசிரியை டாக்டர். விமலாராணியிடம் மதிப்புக்கூட்டும் கருவிகள் பற்றி கேட்டோம். அவர் தந்த தகவல்கள் இங்கே...
பனீர் அழுத்தும் கருவி
பாலை நன்றாகக் காய்ச்சி, அதில் சிட்ரிக் அமிலம் அல்லது எலுமிச்சைச் சாறு கலந்து விட்டால், பால் திரியும். அதை, காடா துணியில் வடிகட்டி, அத்துணியுடனே இக்கருவியில் சதுர வடிவில் இருக்கும் ஃபிரேமில் வைத்துத் திருகினால், தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு கெட்டியான பனீர் கிடைக்கும். இதைத் தண்ணீரில் கழுவி 'பேக்' செய்து குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாம். வட்ட வடிவ பனீர் தயாரிக்கும் கருவியும் இருக்கிறது. ஆனால், சதுர வடிவத்துக்குத்தான் வணிகரீதியாக விற்பனை வாய்ப்புகள் உள்ளன. இக்கருவியில் அதிகபட்சமாக 5 லிட்டர் பாலைப் பிழிய முடியும். 1 லிட்டர் பாலிலிருந்து 200 கிராம் வரை பனீர் கிடைக்கும். இக்கருவி, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு தயாரிக்கப்பட்டிருப்பதால், துரு பிடிக்காது. இதன் விலை 2 ஆயிரத்து 500 ரூபாய்.
சேமியா பிழியும் கருவி
சேமியா தயாரிப்பதற்கான பொருட்களைக் கலந்து பிசைந்து, இக்கருவியில் வைத்து சுற்றினால், சேமியா வெளிவரும். இதை உலர்த்தி பேக் செய்யலாம். இக்கருவியில் சேமியாவின் தடிமனை மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது. தவிர, நீளமாகப் பிழியும் வசதியும் உள்ளது. இதன் விலை 2 ஆயிரத்து 500 ரூபாய்.
பிஸ்கெட் தயாரிக்கும் அடுமனை இயந்திரம் (பேக்கரி)
தேவையான மூலப்பொருட்களைக் கலந்து பிசைந்து, தேவைப்படும் வடிவ அச்சில் நிரப்பி... மின்சாரத்தில் இயங்கும் இக்கருவியில் உள்ள 'ட்ரே’யில் வைத்து இயக்கினால், அரை மணிநேரத்தில் பிஸ்கெட் தயார். உள்ளே சூடேறிக் கொண்டிருக்கும் பொருளின் நிறம் மாறுவதைப்  பார்க்கும் வகையில் கண்ணாடி அமைக்கப்பட்டுள்ளது. இதில் கேக்குகளையும் தயாரிக்க முடியும். இது 1,000 ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் வரையிலான விலைகளில், பல்வேறு வடிவங்களில் கிடைக்கிறது.  
மூடி போடும் இயந்திரம்
ரோஸ் மில்க், பாதாம் பால், குளிர்பானங்கள்... போன்ற திரவ வடிவப் பொருட்களை பாட்டில்களில் அடைத்து, அவற்றுக்கு தகர மூடி போட இக்கருவி பயன்படுகிறது. நாம் வைக்கும் பாட்டிலின் அளவுக்கு ஏற்ப மூடியின் அளவை மாற்றியமைக்கும் வசதியும் உண்டு. இதன் விலை 2 ஆயிரத்து 200 ரூபாய். ஊறுகாய் பாட்டில்களைக் காற்றுப் புகாதபடி அடைத்து மூடி போடுவதற்கான பிரத்யேகக் கருவியும் உள்ளது. இதன் விலை 2 ஆயிரத்து 600 ரூபாய்.
பேக்கிங் கருவி (Sealing Machine)
மஞ்சள், மிளகாய், தனியா, மிளகு, சீரகம் போன்ற பொருட்களை அரைத்து கிடைக்கும் பொடியை பேக் செய்யும் கருவி இது. இதன் மூலம் மிக எளிதாக பேக் செய்ய முடியும். இது 500 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரையிலான விலைகளில், பல்வேறு அளவுகளில் கிடைக்கிறது.
வெற்றிட பேக்கிங் போடும் கருவி (Vacuum Packing Machine)
காற்றுடன் சேர்த்தோ அல்லது காற்றை நீக்கியோ பேக் செய்ய, இக்கருவி பயன்படுகிறது. மின்சாரத்தில் இயங்கும் இக்கருவியில் அதிகபட்சம் 5 கிலோ வரை அளவுள்ள பொருட்களை பேக் செய்ய முடியும். இதன் விலை ஒன்றரை லட்ச ரூபாய்க்கு மேல்.
தேங்காய் துருவும் கருவி    தேங்காய் துருவல் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பர்பி உள்ளிட்ட பொருட்களுக்காக தேங்காயை துருவுவதற்கு, இக்கருவி பயன்படுகிறது. இதை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு, தேங்காய் மூடியை ஒரு கையில் பிடித்துக்கொண்டு, மறு கையில் கைப்பிடியை வேகமாக சுழற்றினால், துருவல்கள் கீழே கொட்டும். இதன் விலை 300 ரூபாய்.
மொத்தக் கருவிகள் மற்றும் அதற்கான விளக்கங்களை விமலாராணி சொல்லி முடிக்க...
''தொழில்முனைவோராக விரும்புபவர்கள், இதுபோன்ற மதிப்புக் கூட்டி விற்கும் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டு தொழி லில் இறங்கலாம். மகளிர் சுயஉதவிக் குழுவில் இருக்கும் பெண்களும் இதில் ஈடுபடலாம். இதற்கான பயிற்சிகளை எங்கள் மையத்தில் இலவசமாகவே தந்து வருகிறோம். அனைவரும் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'' என்று அழைப்பு வைத்தார்... வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் குமரவேலு!
தொடர்புக்கு, 
வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம்,
காஞ்சிபுரம் மாவட்டம்.,
தொலைபேசி: 044-27452371,
செல்போன்: 99942-83960.
நண்பர் குமாரவேல் அவர்களை பாராட்டி சென்னை நட்சத்திரங்கள் அனைவரும் அவருடைய செல் பேசிக்கு ஓயாது missed call கொடுக்கவும்....

கரையான்.

Dr.Ganesh


நம்ம கணேஷ் விகடன் புத்தகத்தில்.....

கரையான்.

புதன், அக்டோபர் 23, 2013

கல்லூரி மாணவர் to கல்லூரி மாணவியின் தந்தை

குஜிலி சொன்னது மாதிரி காலம் மிக வேகமாக பறந்து கொண்டுதான் இருக்கிறது. வழக்கமாக எல்லா தந்தைகளைப்போன்று தான் கல்லூரி சேர்க்கும்போது எனக்கும் என்ன ஒரே ஒரு வித்தியாசம் பொருளாதார நெருக்கடி இல்லை. காயத்ரி முதலிலேயே தொழில் நுட்ப படிப்புகளுக்கு போக மாட்டேன் என்று கூறி விட்டதால் MBBS , BE சேர்க்க வேண்டுமென்ற நெருக்கடி எனக்கில்லை. எட்டாவது படிக்கும்போதே B.Com ., தான் படிக்கவேண்டும் என முடிவு செய்து விட்டதால் பெரிய அளவில் அழுத்தம் இல்லை என்றுதான் சொல்வேன். குழந்தைகளை தேவை இல்லாத அழுத்தத்திற்கு உட்படுத்த விரும்ப வில்லை ஆகவே அவர்கள் முடிவிற்கு விட்டு விட்டேன்.
குஜிளியின் கேள்விக்கு வருகிறேன் காயத்ரி அண்ணா ஆதர்ஷ் கல்லூரியை விரும்புகிறாளா  என்பது, இந்த கல்லூரியில் சேரும் முன்னர் schram academy என்ற பள்ளியில் படித்தாள் , அது பொருளாதார நிலையில் மேல் தட்டு வர்க்கத்தினர் குழந்தைகள் படிக்கும் பள்ளி, அந்த பள்ளியில் சேர்க்க எனக்கு மனம் இல்லை என்றாலும் என் சகோதரரின் வற்புறுத்தல் காரணமாக அங்கே சேர்க்க வேண்டியதாகி விட்டது. காயத்ரி உடன் படித்த அனைவரும் வசதி படைத்தவர்கள், அவள் வகுப்பு தோழர்/தோழியருக்கு பிறந்தநாள் என்றால் அவர்கள் கொண்டாடுவதே KFC , தலைப்பாகட்டி பிரியாணி , நில்கிரிஸ் , mcrennet கேக் என்றுதான், மிக சாதாரணமாக என் மனைவியிடம் " அம்மா ஒரு ஆயிரம் ரூபாய் கொடு friends க்கு பார்ட்டி கொடுக்கணும்" என மாதம் ஒரு முறையாவது என் மனைவியின் ரத்த அழுத்தத்தை ஏகிற வைப்பாள். அல்லது பார்ட்டி என்றால் skywalk என்ற ஒரு multiplex mall -இல்தான் வைத்து கொள்வார்கள். ஒவ்வொரு முறையும் வீட்டில் என் மனைவிக்கும் மகளுக்கும் பெரும் போராட்டம்தான். நான் விடுமுறையில் வீட்டில் இருந்தால் நான்தான் காரிலோ பைக்கிலோ பள்ளியில் விட வேண்டும், இப்படி இருந்த காயத்ரி இப்போது அப்படியே தலை கீழ்....
சென்ற முறை விடுமுறையில் இருந்தபோது காரிலே கல்லூரியில் விட்டு  வருகிறேன் என்று கூறியபோது வேண்டாம் என்று கூறினாள் எனக்கு ஆச்சரியம் ஏன் என்று கேட்டேன், "என்னுடன் படிப்பவர்களில் 95 சதவீதம் பேர் நடுத்தர குடும்பங்களிலிருந்து வந்திருக்கிறார்கள் பொருளாதார நிலையில் மிகவும் பின் தங்கியவர்கள் அதிகம், கல்லூரி வருவதற்கே கஷ்டபடுவர்கள் இருக்கிறார்கள், நான் வசதியானவளாக இருந்தால் என்னுடனும் பழகுவதற்கே யோசிப்பார்கள்(சிலர் அதை அவளிடமே சொல்லியும் இருக்கிறார்கள்)என்றாள் . உடன் படிக்கும் தோழிகள் மூன்று பேருக்கு ஒரே நாளில் பிறந்த நாள், அதை சிறப்பாக கொண்டாட முடிவு செய்து எல்லோரும் பணம் சேர்த்து ,கேக் வாங்கி வரும் பொறுப்பை காயத்ரியிடம் கொடுத்திருக்கிறார்கள், நாங்கள் இருவரும் கேக் வாங்க Mc'Rennet  அழைத்து சென்றேன், நான் 1200 ரூபாய் கேக் -ஐ செலக்ட் செய்தேன், அவளோ 500 ரூபாய்க்குள் தான் வாங்குவேன் என்று கூறினாள் , வகுப்பில் 50 பேராவது இருப்பீர்கள் அது பத்தாது என்றேன், ஒவ்வொருவரும் பத்து இருபதுன்னுதான்பா போட முடியும் ஒரு சிலரால் அதுவும் கொடுக்க முடியாது., அந்த budget உள்தான் வாங்க முடியும் என்றாள். சில நாட்களில் காண்டீனில் என்ன காயத்ரி சாப்பிட்டாய் என்று நான் கேட்பதுண்டு, "இருபது ரூபாய்க்கு முறுக்கு வாங்கி friends எட்டுபேர் ஷேர் பண்ணி சாப்பிட்டோம்பா" என்பாள் . எப்படி இருந்த காயத்ரி இப்படி ஆயிட்டே. என்று எல்லோரும் நக்கல் அடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
So Gujili,whether Gayathri likes it or not I like Anna Adarsh College.......

கரையான்.

செவ்வாய், அக்டோபர் 22, 2013

chennai


மூணாப்பும்  பதிமூணாப்பும் 

கீர்த்தி குமரவேல் & காயத்ரி குமரன் 

செவ்வாய், அக்டோபர் 08, 2013

பெரியவர்

என்னுடைய முந்தைய பதிவில் ஒரு பெரியவரின் படத்தை போட்டிருந்தேன் , அவர் பற்றி ஒருவரும் பதிவு செய்யாதது வருத்தமளிக்கிறது. குஜிலி கூட கமெண்ட் எழுத வில்லை...
பரவாயில்லை. சில நாட்களுக்கு முன் தீபா, போலி  சுவாமிஜிகளை பற்றி வருந்தி அவருடைய நியாயமான கோபத்தை முகநூளில் பதிந்திருந்தார் .
இந்த சுவாமிகளை உருவாக்குபவர்கள் யார், இப்போது பாதிக்கப்பட்டவர்களை போன்ற  சாமானி மக்கள்தான். கடவுளுக்கும் நமக்கும் இடையில் ஏன் ஒரு தூதர்/இடைதரகர். மக்கள் ஏன் இவர்களிடம் சென்று விழுகிறார்கள் ....கண்டிப்பாக சுயலாபதிற்குதான், ஏதோ கிடைக்கும் என்ற எண்ணத்தில் இவர்களிடம் சென்று விழுந்து தேவையற்ற ஒன்று கிடைக்கும்போது கொதித்து எழுகிறார்கள். ஒரு ஆண்மகன் (கிழவனாக இருந்தாலும்) உன் மகளை இரவு பூஜைக்கு விட்டு செல், அவளுக்கு தோஷம் கழிக்க வேண்டும் என்று சொன்னால் அதை நம்பி விட்டு விட்டு வந்த தந்தை தாய் சம அளவு தவறு செய்தவர்கள் ஆகிறார்கள். நான் இந்த பாபுஜிகளுக்கு வக்காலத்து வாங்க வில்லை. இவர்களைப்போன்ற தவறு செய்பவர்கள் கொடுக்கப்படும் தண்டனை, இன்னொரு முறை அந்த தவறை செய்ய அவர்கள் இருக்க கூடாது, உயிருடன் இருந்தாலும் அந்த தவறை மறு முறை செய்ய இயலாமல் செய்து விட வேண்டும் என்ற கருத்து உடையவன். ஆசாரம் பாபு இதற்கு முன்னரே பல வழக்குகளில்(கொலை குற்றம் உட்பட) சிக்கி விடுதலை ஆகி உள்ளார், இப்படி கிரிமினல் ரெகார்ட் உள்ளவரை எப்படி மக்கள் நம்பி  செல்கிறார்கள்.(நாம் உடனே அரசியல் வாதிகளை குறை சொல்வோம். இவரிடம் சென்று ஆசி பெற எந்த அரசியல் வாதியும் கூற வில்லை...அப்படியே கூறினாலும் செல்லும் மக்களுக்கு புத்தி எங்கே போனது) பாதிக்கப்பட பெண்ணின்  தந்தை இப்போது வருத்த படுகிறார்.
அவருடைய வயது அவர்மேல் தம் நம்பிக்கையை அதிகரித்தது என்று கூறலாம், ஆண்களில் தவறு செய்ய வாய்ப்பு கிடைக்கததால் நல்லவர்களாக இருப்பவர்கள் பலர்  இதில் எல்லா வயதினரும் அடக்கம் . அவருக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த முட்டாள் தந்தையை எப்படி தண்டிப்பது. 

கரையான்.

வெள்ளி, அக்டோபர் 04, 2013

HOME

திருநெல்வேலி விருந்தோம்பல்  கோவையில் ......

விடுமுறையில் தாயகம் சென்ற வேளையில் ஆயுர்வேத சிகிச்சைக்காக பாலக்காடு அருகில் உள்ள ஒரு கிராமத்திற்கு செல்ல வேண்டி இருந்தது. சென்னையிலிருந்து கோவைக்கு விமானம் ஏறுவதற்கு கொஞ்சம் முன்னர்தான் கோவையில்  நண்பர் சொக்கனை அழைத்தேன், மாமனாரை மருத்துவ மனை அழைத்து செல்ல முன் பதிவு செய்திருப்பதாகவும் அந்த நேரத்தில் வர இயலாது என்றும் கூறினார், பரவாயில்லை நான் சென்று விடுகிறேன் என்று கூறி என் தொலைபேசியை அனைத்து விட்டேன். கோவையில் சென்றடைந்ததும் தொலைபேசியை ஆன் செய்தவுடன் சொக்கனிடமிருந்து அலைபேசி செய்தி " விமான நிலையம் வெளியில் காத்திருக்கிறேன் " என்று. நீ வருவதால் அப்பாஇண்ட்மெண்ட் ஐ மாலைக்கு மாற்றி விட்டேன், என்று கூறி என்னை அழைத்து சென்று மதிய உணவருந்தி ரயில் நிலையம் வரை வந்து வழி அனுப்பி சென்றார்.
(இந்த பெரியவர் நான் ஆயுர்வேத சிகிச்சையில் இருந்தபோது என்னை வந்து விரைவில் குணமடைய வாழ்த்தி சென்றார். முற்றும் துறந்த முனிவர்களாக இருந்தாலும் நவீன் தொழில் நுட்பத்தை சிறப்பாக உபயோகிக்கிறார்கள்)
பதினைந்து நாள் சிகிச்சை முடிந்து திரும்பும் போதும் சொக்கன் கோவை ரயில் நிலையம் வந்து சந்தித்தான்(நெல்லை விருந்தோம்பலின் உச்சகட்டம்...நன்றி சொக்கா... ), பின்னர் ஈரோடில் நண்பர் எஸ்.கே.பி., பகவதி, தங்கவேலு அனைவரும் மிக சிறப்பாக கவனித்தார்கள்.

மேலும் எழுதுவேன்....

கரையான்.

வியாழன், அக்டோபர் 03, 2013

AFTER A LONG TIME...

நம் வலைப்பதிவில் பதிந்து பல நாட்கள் ஆகி விட்டது.  முக நூலில் தோழர்/தோழியரின் பதிவுகளை பார்த்து வந்தாலும் சில பல காரணங்களால்(சோம்பேறி தனமும் ஒரு காரணம் ) பதிவுகள் செய்ய இயலாமல் ஆகி விட்டது. திரும்பவும் நம் பிளாகிற்கு வருவதற்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது ( IDC முடிந்து கல்லூரி திரும்புவது போன்ற ஒரு குதுகலம்)....

முருங்கை .....என்னடா இவன் சம்பந்தமே இல்லாமல் முருங்கை பற்றி எழுதுகிறானே என நினைக்க வேண்டாம்....
கடந்த வாரத்தில் என் முதலாளி (ஷேக்) என்னை அழைத்து ஒரு புத்தகத்தை கொடுத்தார், அது முழுவதுமாக அரபியில் எழுதி இருந்தது, அவரிடம் இது என்ன என்று கேட்டேன், அவர் முருங்கீ பற்றி தெரியுமா என்றார், அப்போதுதான் அந்த புத்தகத்தின் அட்டையில் முருங்கை கீரை படம் இருந்த தை பார்த்தேன். அவரிடம் இதன் பெயர் முருங்கை என்றேன். அவர் அந்த புத்தகம் (கிட்டத்தட்ட எழுபது பக்கங்கள் ) முருங்கையின் உபயோகம், அதில் உள்ள சத்துக்கள் என விரிவாக எழுதி உள்ளது. அதில் கால்சியம், புரதம்,இரும்பு இவை எல்லாம் பால் மற்றும் இறைச்சி யை விட பல மடங்கு அதிகம் இருக்கிறது தெரியுமா என்றார், எனக்கு அது பற்றி தெரியாது என்றேன்,  ஆனால் இது ஒரு சாதரணமான உணவு தென் இந்தியாவில் பெரும்பாலான  மக்கள் இதனை சாப்பிடுவார்கள் என்றேன். அவர் அதன் பெருமைகளை விவரித்தார் , கடைசியாக அதன் அப்ரோடிசியாக் குணம் பற்றியும் எடுத்து கூறினார்(அதைதான் ஏற்கனவே பாக்கிய ராஜ் முந்தானை முடிச்சு படத்தில் கூறி விட்டாரே), கடைசியாக அவர் இந்த மரங்களை இந்தியாவிலிருந்து உடனே கொண்டு வர ஏற்பாடு செய்ய கூறினார், குறைந்தது நூறு மரங்களாவது வேண்டும் என்றும்  கூறினார். நான் அவரிடம் இந்த மரங்கள் என்னிடமே உள்ளது என்றேன், எங்கே என்றார் என் வீடு மற்றும் குதிரைகள் உள்ள பகுதியில் என்றேன், என்னுடைய பன்னையிலா என்றார் ஆம், நான் இந்தியாவிலிருந்து வரும்போது கொண்டு வந்து வளர்த்து வருகிறேன் என்றேன். அவர் என்னுடைய வீட்டில் குறைந்தது இருபது மரங்கள் வைக்க ஏற்பாடு செய்யுங்கள் , மேலும் பண்ணையில் நூறு மரங்களாவது வேண்டும் என்றார். பிறகுதான் கூறினார், முருங்கை இலைகள் பவுடராக்க பட்டு மாத்திரைகலாக விற்கப்படுகிறது என்றும், முருங்கை இலைகள் தேநீர் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுவதாக் கூறினார்.
இப்போது தினமும் நான் வளர்த்து வரும் முருங்கை மரத்தின் இலைகளை  சூப் செய்து குடித்து வருகிறார்.

நம் நாட்டு பழங்கால வைத்தியங்கள் நாம் ஒதுக்கி தள்ளினாலும் எங்கோ ஒரு மூலையில் அதன் மகத்துவத்தை உணரத்தான் செய்கிறார்கள்.....

கரையான்.

ஞாயிறு, ஆகஸ்ட் 25, 2013

நன்றி...நன்றி...

அடியேனின் அழைப்பை ஏற்று ,கல்லூரியில் பணி இருந்தும் ,என் வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த கீழ்காணும் நட்சத்திரங்களுக்கு ,
என் குடும்பத்தார் சார்பாக மனமார்ந்த நன்றி!


குறிப்பு:
 வருவார்கள் என்று எதிர்பார்தவர்களை,வரக்காணோம்!

பிரியமுடன்,
பாய்.



சனி, ஜூலை 27, 2013

திருமண அழைப்பிதழ்

அன்பார்ந்த நட்சத்திரங்களே,
இறைவன் நாடினால்,வரும் 17-08-2013 சனிக்கிழமை காலை 11 மணி அளவில் எனது சகலை[என் துணைவியாரின் அக்கா] மகனது திருமணம் ,'சென்னை-சூளை-டிமெல்லோஸ் சாலை-நடராஜ் திரையரங்கம் அருகில்-இலக்கம் 2-ல் உள்ள 'தமிழ் நாடு ஹஜ் கமிட்டி திருமண மண்டபத்தில்' வைத்து நடைபெற உள்ளது.
இதையே,எங்களது நேரடி அழைப்பாக ஏற்று,நீங்கள் உங்கள் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டு சிறப்பித்துத் தருமாறு வேண்டுகிறேன்.
குறிப்பு:
குடும்பம் இல்லாமல் வரவேண்டாம்.

உங்கள் நல்வரவை நாடும்,
டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம்,
திருமதி.அஹ்மத் இப்ராஹீம்,
சென்னை-600017.

புதன், ஜூலை 24, 2013

தாயக விஜயம்

இறைவன் நாடினால்,நான் ஆகஸ்ட் 4 முதல் 17 வரை தாயகத்தில் இருப்பேன்.
எனது முன் பயண நிரல் வருமாறு:
4 முதல் 12 வரை - சென்னை.
13 -சாத்தான்குளம்.
14 முதல் 16 வரை - சென்னை.
17- சென்னை.[சகலை மகன் திருமணம்.மண்டபத்தில் நம் குடும்ப 'கெட் டுகதர்'. நாளை அழைப்பிதழ் போடுகிறேன்.]
குறிப்பு:
1.எனது வீடு சென்னை-தி.நகரில்-மோதிலால் தெருவில்[ரங்கநாதன் தெருவிற்கு நேர் எதிரில் உள்ளது]48 ஆம் இலக்கத்தில் உள்ளது.நட்சத்திரங்கள் குடும்பத்தோடு வரவும்.
2.எனது கைப்பேசி எண்: 7299332422
3.வரும் போது,எங்களுக்கு தரவேண்டிய அன்பளிப்புடன்,கரையான் வீட்டிற்கு கொடுக்காமல் விட்ட,அன்பளிப்பையும் சேர்த்துகொண்டு வரவும்.

பிரியமுடன்,
பாய்.

ஞாயிறு, ஜூலை 21, 2013

HOME


நான் 26 ஜூலை முதல் செப்டம்பர் 10 வரை தாயகத்தில் இருப்பேன். அனைவரும் வந்து என்னை சந்திக்குமாறு அன்புடன்  கேட்டு கொள்கிறேன்.

கரையான்.

பின் குறிப்பு:    அன்பளிப்புகளை தவிர்க்கவும்.


நட்சத்திர குடும்பம்

பாய்.

வியாழன், ஜூலை 18, 2013

Outstanding student in year 6 - Mr.Salman



சல்மான் பீர் அவர்களின் இளைய மகன் அவர்களுக்கு
வாழ்த்துக்கள்.....வாழ்வில் எல்லா வளமும் பெற்றும் மென்மேலும் வெற்றிகளை குவிக்க வாழ்த்துக்கள்.....

சென்னை நட்சத்திரங்கள்..சார்பாக கரையான்.

புதன், ஜூலை 17, 2013

Pictures from Kaaikari garden 2013




1 - Carrots - they are out of control, I didn't thin them out so they are too dense.
2 - I planted beans but I didnt know that these were the climber variety so I made some home-made supports, will see how long it lasts!
3 - some tomatoes have started to ripen
4 - shows the whole plot - I have thakkali, kathrikkaai, pacha milagai, koda milagai, carrots, beans and kaaramana mexican pacha milagai.

Munnar pictures - second try






These images are from Munnar - I loved this place. 1st picture - in front of Anaimudi. # 2 - the hills from the guest house that we stayed at, # 3 - view of the Munnar river (I am not sure about the name of the river) # 4 - Anaimudi in all its glory with my dad's profile. # 5 - sprawling tea estates.
கால்நடை மருத்துவரா சில சமயம் சுவாரஸ்யமான பிரச்னைகளை சமாளிக்க வேண்டியது இருக்கும் ...அதைப்போன்ற அனுபவங்கள் பாய் அவர்களுக்கு பல இருக்கும் என்று நினைக்கிறேன், அவற்றை பகிர்ந்து கொள்வார் என்று எழுதி இருந்தேன், குதிரை மட்டுமல்ல ஒட்டகம் ஆடு என பலவற்றிலும் சகலகலா வல்லவர் என்பதால் மற்ற விலங்குகள் பற்றி சுவாரஸ்யமான தகவல்களை சொல்லலாம்.
ஒட்டகங்கள் breeding season இல் கொஞ்சம் aggressive ஆக இருக்கும் அந்த நேரங்களில் அவைகளுக்குள் சண்டை இட்டுக்கொள்வது சகஜம். அவ்வாறு சண்டை இடும்போது mandible fracture ஏற்படுவது சகஜம்,(anatomically camels have a long and weak mandible prone for fracture). 
பொதுவா இந்தமாதிரி பிரச்னை வந்தால் எக்ஸ் - ரே , எடுக்கணும் , ரத்தம் டெஸ்ட் பண்ணனும் இப்படி பல விஷயங்கள் இருந்தாலும், ஒரு கால்நடை மருத்துவரா என்ன செய்ய முடியுமோ அதத்தான் செய்ய வேண்டியதிருக்கும். 






இதெல்லாம் ஒரு surgery ன்னு சொல்ல முடியாது plumbing and electrical work அப்படின்னுதான் சொல்ல முடியும். மின்சார வயர், ட்ரில்லேர் , கட்டிங் பிளையர் என்று கிடைத்த பொருள்களை வைத்து surgery (??????) யை முடித்தேன். 
THE END RESULT 
இந்த புகைப்படம் அறுவை சிகிச்சைக்கு ஒருவாரம் பின்னர் எடுக்கப்பட்டது. அருமையாக புண் எல்லாம் ஆறி  விட்டது ....மிகவும் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் இந்த அறுவை சிகிச்சை முடிந்த வுடனே ஒட்டகம் சாப்பிட ஆரம்பித்து விட்டது. 

கரையான்.

செவ்வாய், ஜூலை 16, 2013

மன்னிக்கவும்-1

பல மாதங்களாக நம் பூவலைக்குள் வராததற்கு...
கடந்த ஜனவரி முதலே,கடுமையான வேலைப்பளு-அலுவலகத்திலும் சரி;வீட்டிலும் சரி.
எம் மருத்துவமனையிலோ,கடும் கூட்டம்.நானும்,நண்பன் ஜாஹிரும் வைத்தியத்தில் வல்லவர்கள் என்பதால்.அரபிகள் எங்களைத்தான் நாடி வருகிறார்கள்.எகிப்து-சூடான் மருத்துவர்கள் பக்கம் போவதில்லை[கரையான் சொல்லியிருப்பான் போல..]
வீட்டுப் பணியை எடுத்துக் கொண்டால்,சென்னை-டி.நகரில் வீடு கட்டும் பணி குறித்து அன்றாடம் பொறியாளருடன் உரையாடல்.என் குடும்பத்தை அங்கு குடியமர்த்தான் வேண்டி ,இந்தியாவில் பல்வேறு ஏற்பாடுகள்-மின் இணைப்பு, பள்ளிக்கூடங்கள் சேர்ப்பு,ரேசன் கார்ட் பெறல்,எரிவாயு இணைப்பு,மனைவி பெயரில் வங்கி கணக்கு தொடங்கல்,மகனை ஐ.ஐ.டி.கோச்சிங்கில் சேர்த்தல் .....[அவனுக்கு குஜிலி வேலை தருவதாக கூறியுள்ளதால்].
கத்தரிலோ,பள்ளிக்கூடத்தில் செட்டில்மென்ட்,வீடு மாற்றல்,வீட்டுப் பொருட்களை பேக்கிங் செய்து ஊருக்கு அனுப்பல்,குடும்பத்தாரை  ஊருக்கு அனுப்பல்.....இத்தியாதி...இத்தியாதி...

பாய்

படித்ததில் பிடித்தது...

My Wife DOES NOT WORK !!!

Conversation between a Husband (H) and a Psychologist (P):

P : What do you do for a living Mr. Bandy?
H : I work as an Accountant in a Bank.

P : Your Wife ?
H : She doesn't work. She's a Housewife only.

P : Who makes breakfast for your family in the morning?
H : My Wife, because she doesn't work.

P : At what time does your wife wake up for making breakfast?
H : She wakes up at around 5 am because she cleans the house first before making breakfast.

P : How do your kids go to school?
H : My wife takes them to school, because she doesn't work.

P : After taking your kids to school, what does she do?
H : She goes to the market, then goes back home for cooking and laundry. You know, she doesn't work.

P : In the evening, after you go back home from office, what do you do?
H : Take rest, because i'm tired due to all day works.

P : What does your wife do then?
H : She prepares meals, serving our kids, preparing meals for me and cleaning the dishes, cleaning the house then taking kids to bed.

Whom do you think works more, from the story above???

The daily routines of your wives commence from early morning to late night. That is called 'DOESN'T WORK'??!!

Yes, Being Housewives do not need Certificate of Study, even High Position, but their ROLE/PART is very important!

Appreciate your wives. Because their sacrifices are uncountable. This should be a reminder and reflection for all of us to understand and appreciate each others roles.

All about a WOMAN ....
* When she is quiet, millions of things are running in her mind.

* When she stares at you, she is wondering why she loves you so much in spite of being taken for granted.

* When she says I will stand by you, she will stand by you like a rock.

Never hurt her or take her wrong or for granted...


கரையான்.

திங்கள், ஜூலை 15, 2013

veterinarian

பாய் குறிப்பிட்ட "கால்நடை மருத்துவர்கள் தான் சிறந்தவர்கள்" குறிப்பை படித்தவுடன் என் நினைவிற்கு வந்தது செட்டிநாடு குதிரை பண்ணையில் பணிபுரிந்த போது நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது....
ஒரு முறை நான் பணியிலிருந்த பொது ஒரு குதிரை அதன் அறையில் சம்பந்தமே இல்லாமல் அதன் அறைக்குள்ளேயே சுற்றி சுற்றி வருகிறது தலையை மேல் நோக்கி பார்த்துக்கொண்டே சுற்றி வருகிறது என்று கூறினார்கள்.  தலையில் ஏதாவது அடி பட்டிருக்குமோ, இல்லை காதுக்குள்ளே கட்டேறும்போ சித்தேறும்போ நிழைந்து விட்டதோ என்றெல்லாம் எண்ணி எனக்கு தலை  கிறுகிறுத்து விட்டது. பின்னர் ஒருவாறாக குதிரையை பிடிக்க சொல்லி சோதித்து பார்த்தேன், ஒன்றும் இல்லை (ஒன்றும் தெரிய வில்லை) எல்லாம் நார்மல். ஒரே ஒரு அறிகுறி மட்டுமே நார்மல் இல்லாமல் இருந்தது, அதாவது "showing the white of the eyes" கண்ணின் வெண்மை பகுதி(sclera) சாதாரண மாக அதிகம் தெரியாது, ஒரு சில குதிரைகள் கொஞ்சம் nervous ஆக இருந்தாலோ, பயந்தாலோ நன்றாக தெரியும்(அவைகளை fractious என முடிவு செய்து கொஞ்சம் ஜாக்கிரதையாகவே அணுகுவோம்), பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக விசாரணை செய்ய ஆரம்பித்தேன், ஒரு வழியாக  அது "kittipul syndrome" என்பதை கண்டு பிடித்தேன். பண்ணையில் பணியாளர்கள் தங்களின் ஓய்வு நேரத்தில் அந்த குதிரை இருக்கும் கொட்டகை அருகில் கிட்டிபுல் (சென்னை பாஷையில் சொல்ல வேண்டுமென்றால் கில்லி) விளையாடிக்கொண்டு இருந்தார்கள் , அவர்களில் ஒருவர் அடித்த கில்லி அந்த குதிரையின் அறை கூரையில் வேகமாக வந்து சொருகி கொண்டது, இதை பார்த்து பயந்த குதிரை அதன் அறைக்குள்ளேயே வெகு வேகமாக ஓட ஆரம்பித்து விட்டது. அந்த கில்லியை அங்கிருந்து எடுத்த பின்னர் குதிரை சகஜ நிலைக்கு திரும்பி வந்தது.
சில நேரங்களில் இந்த மாதிரி CID வேலைகளெல்லாம் கூட செய்ய வேண்டும்.
நிறைய நேரங்களில் diagnostic aids இல்லாமல் பிரச்னைகளை கண்டு பிடிக்கும்போது கஷ்டமாகத்தான் இருக்கும்.
ஒருமுறை ஒரு stallion  கடுமையான colic இல் இருந்தது, அப்போது ஒரு வெள்ளைக்கார கால்நடை மருத்துவ நண்பரும் என்னுடன் இருந்தார், அந்த குதிரையின் testicle பெரிதாக வீங்கி இருந்தது, நாங்கள் இருவரும் அனேகமாக அது hernia வாக இருக்கும் என முடிவு செய்தோம், அப்போது அவர் "நான் சென்று ultrasound scanner எடுத்து வருகிறேன், அந்த வீக்கம் intestine தானா  என்பதை பார்ப்போம் என்றார், நான் அவரிடம் வெறும் steth வைத்துப்பார் intestinal sounds கேட்டால் உள்ளே intestine இருப்பது உறுதியாகி விடும் என்றேன், steth இலேயே உறுதி ஆகி விட்டது. மேலும் intestinal movements ம் தோலின் வழியாகவே நன்றாக தெரிந்தது. ரெண்டு பேராக இருந்தால் இது ஒரு plus தான். விவாதித்து விரைவாக  முடிவுகள் எடுக்கலாம்.
Dystocia சரி செய்து குட்டியை வெளியே எடுக்கும்போது குதிரை கடுமையாக strain செய்யும், அதை தடுப்பது எப்படி என்பதை அந்த நண்பர் எனக்கு சொல்லி கொடுத்தார் , epidural போட்டால் ஒரு சில குதிரைகள் நிற்க முடியாமல் கீழே படுத்து விடும், epidural -ம் போடக்கூடாது குதிரை முக்குவதையும் தடுக்க வேண்டும் எப்படி, ஒரு tube ஐ (naso - gastric  tube ) எடுத்து குதிரை மூக்கு வழியாக naso - tracheal ஆக insert செய்து விட்டால் அந்த குதிரையால் முக்க முடியாது, இதை அவர்தான் சொல்லி கொடுத்தார்.
(இந்த மாதிரி நிறைய விஷயங்கள் பாய் பகிர்ந்துகொள்வார்)
கரையான்.

ஞாயிறு, ஜூலை 14, 2013

Quote about Vet

"Personally I have always felt that the best doctor in the world is the veterinarian.He can't ask his patients  'what is the matter?'...He's  just got to know".

By,
Will Rogers.

போட்டது,
பாய்.

சனி, ஜூலை 13, 2013

கிறுக்கல்கள்....

"After all life is 1% what happens to you and 99% of how you react to it
"அனைத்து வாழ்க்கை "நீங்கள் அதை எப்படி 1% என்ன நடக்கிறது மற்றும் 99% பின்"
குஜிளியின் வாக்கியத்தை கூகுள்  மொழிபெயர்ப்பில் போட்டபோது வந்த அர்த்தம்...
இந்த தமிழுக்கு குஜிலி சொன்ன ஆங்கில வாக்கியமே கொஞ்சம் புரிந்த மாதிரி இருக்கு.
அதை புரிந்து கொண்ட என்னதான் நம்ம கவலைப்பட்டாலும் நடப்பதை நம்மால் தடுக்க முடியாது.... வாழ்க்கையை அதன் போக்கிலேயே விட்டு அதில பயணிப்போம்...இப்படிதான் நான் அர்த்த படுத்தி கொள்கிறேன்.   சில சமயங்களில் நம்மை பெரிய அளவில்  கோபப்படுத்தும் நிகழ்வுகள் நடக்கும்போது நம்முடைய ரியாக்சன் -ஐ கொஞ்சம் தள்ளி போட்டு பின்னர் ரியாக்ட் செய்தால் விளைவுகள் நமக்கு சாதகமாகவே முடியும். பொதுவாக வேலை செய்யும் இடங்களில் vet -க்கும் manager க்கும் எப்போதுமே ஒரு பனிப்போர் அல்லது ego யுத்தம் இருந்து கொண்டேதான் இருக்கும். நம்முடைய ஒரு சில முடிவுகளை mangers நம்மை தட்டி வைக்க வேண்டும் என்பதற்காகவே மாற்றுவார்கள். அந்த நேரங்களில் கோபம் வந்தாலும் கொஞ்சம் அடக்கி கொள்வது நமக்கு நன்மை பயக்கவே செய்யும். விற்பனைக்கு செல்லும் குட்டி குதிரைகளை வாகனங்களில் எடுத்து செல்லும்போது sedate செய்வது என் வழக்கம், என்னுடன் பணி புரிந்த மேலாளர் என்னை தட்டி வைப்பதற்காக அதெல்லாம் தேவை இல்லை என்று கூறி ஊசி கொடுப்பதை தடுத்து விட்டார். நானும் சும்மா இருந்து விட்டேன், ஐந்து கிலோ மீட்டர் கூட சென்று இருக்காது, மேலாளர் பதட்டமாக தொலை பேசியில் அலறினார்," டாக்டர் தயவு செய்து உடனே வரவும், கொண்டு சென்ற எட்டு குட்டிகளில் மூன்று பயங்கர கலாட்டா  செய்து வண்டிக்குள்ளேயே விழுந்து விட்டது என்ன செய்வது " என்றார். திரும்பவும் பண்ணைக்கே எடுத்து வந்து எல்லாவற்றையும் இறக்கி அந்த மூன்று குட்டிகளுக்கு சிகிச்சை அளித்து திரும்ப sedate செய்து அனுப்பி வைத்தேன், இப்படி பலவும் புதிதாக இங்கு வேலைக்கு சேர்ந்த நேரத்தில் ஏற்கனவே பல ஆண்டுகளாக குப்பை கொட்டிக்கொண்டு இருக்கும் நபர் என்னை எதிரியாக  பார்த்தார், ஒவ்வொருமுறை மாற்றங்கள் செய்யும்போதும் ஏதாவது முட்டுக்கட்டை போட்டுக்கொண்டே இருப்பார், எதற்கும் சளைக்காமல் react செய்யாமல் நம்  வழிக்கு கொண்டு வந்து அதனால் எவ்வளவு பயன் உண்டு என்பதை உணர்ந்த பின் இப்போது சிறிய வேலை என்றாலும்  நம்மிடம் கேட்க ஆரம்பித்து விட்டார். நிறைய விஷயங்களில் நம்முடைய எதிர் வினையை கொஞ்சம் தள்ளி போட்டாலே பெரும்பால பிரச்னைகள்  தீர்ந்து விடும். 

சில சமயங்களில் குழந்தைகளை படுத்துவதைபார்த்தால் சிரிப்பாக இருக்கும். என்  மகள் அக்ஷயா ஒரு முறை கணித பாடத்தில் 98% எடுத்திருந்தால், என் மனைவி குழந்தையிடம் அந்த ரெண்டு மார்க் கூட எடுத்திருந்த நல்லா  இருக்கும் என வருந்தி கொண்டு இருந்தார், அந்த கணத்தில்  98 பெருசா 2 பெருசா ? அந்த குறைந்த ரெண்டை எண்ணி 98 ஐ கொண்டாட மறந்து விடுகிறோம்.. 
 என்னதான் ஆயிரம் குதிரைகளை சாவின் விளிம்பிலிருந்து காப்பாற்றி இருந்தாலும் செத்துப்போன விலை உயர்ந்த குதிரைதான் எப்போதும் நினைவில் இருக்கும் "செத்தும் கெடுத்தான் " என்பது போல்....
சொக்கன் என்னதான் கோடி கோடியாக மருந்து விற்று கம்பெனிக்கு கொடுத்தாலும் , collection பண்ண முடியாம விட்ட பத்தாயிரம் ரூபாய் ஒரு பிளாக்  மார்க்தான். ...

கரையான். 


மட்டில்லா மகிழ்ச்சி!

பல வருடங்களுக்குப் பிறகு நண்பன் டி.பீ. உடனும்,பல மாதங்களுக்குப் பிறகு நண்பன் பீருடனும் சாட்டிங் செய்து பேசியதில்.....

மற்றவர்களும் கொஞ்சம் வந்தால் நன்றாக இருக்கும்...

பிரியமுடன்,
பாய்.

திங்கள், ஜூலை 08, 2013

HAPPY BIRTHDAY BHAI

இன்று பிறந்தநாள் காணும் பாய் அவர்கள் எல்லா வளங்களுடன் பல்லாண்டு ஆரோக்கிய வாழ்வு வாழ வாழ்த்தும்

சென்னை நட்சத்திரங்கள் 

ஞாயிறு, ஜூலை 07, 2013

கவலை கவலை கவலை

வயது ஆக ஆக வயோதிகம் வருதோ இல்லையோ கவலைகளின் அளவு கூடுவது இயல்பு அதாவது வங்கி கணக்கில் காசு அதிகம் சேர சேர நம்முடைய  உடலுக்கான மருத்துவ செலவு அதிகமாவது போல். என்னடா சம்பந்தமே இல்லாம பிதற்று ரானேன்னு நீங்கள் நினைக்கலாம்.
 பண்ணையில இந்த வருஷம் அருமையான உற்பத்தி, குறைந்த mortality நல்ல  conception என்று சந்தோஷப்பட எண்ணிக்கொண்டிருக்கும்போது பண்ணையின் top stallion திடீரென்று மண்டையபோட்டு என்னோட மன உறுதி, திறமை மேல இருக்கிற நம்பிக்கை எல்லாத்தையும்  பஞ்சராக்கி விட்டது. ஒரு stud farm ல stallion  சாகும்போது மொத்த breeding programme தலை கீழாகி விடும்.  அதன் மதிப்பு கிட்டத்தட்ட ஒரு மில்லியன்  டாலர்.   இதைப்போன்ற சம்பவங்கள் நிகழும்போது அதை முதலாளிக்கிட்ட சொல்லுவது போன்ற  தர்ம சங்கடமான நிலை அனுபவித்து பார்க்கும்போதுதான் அந்த கஷ்டம் தெரியும். அது stallion ஒ mare ஒ அதன் விலை நம்முடைய சங்கடத்தை அதிகப்படுத்தும். முதலாளியை பார்க்கவே கொஞ்சம் கஷ்டமாகவும் உறுத்தலாகவும் இருக்கும்.ஆனால்  வேறு வழியே இல்லை சொல்லித்தான் ஆகணும்.  பலமுறை இந்த வலியை அனுபவித்திருந்தாலும் ஒவ்வொரு முறையும் இந்த நிலையில் இருக்கும்போதும் முதல்முறை இந்த சங்கடம் ஏற்படுவது போல்தான் உணர்கின்றேன்.(ஓவரா தண்ணிய போட்டு மட்டை ஆகி விட்டு அடுத்த நாள் மனைவியை face செய்ய சங்கட  படும் கணவன் மாதிரி என்றுகூட சொல்லலாம்).  இந்த நிலையிலும் ஒன்றை நினைத்து என் மனதை தேற்றி கொள்வேன், அது என்னன்னா இந்த செய்திய கேட்கும் முதலாளியின் நிலை, மில்லியன் மில்லியனா காச போட்டு வாங்கி அந்த குதிரைய பத்திரமா பாத்துக்க  எனக்கு சம்பளத்தையும் அள்ளி கொடுத்து கடைசியில குதிர செத்து போச்சுன்னு நான் சொல்லும்போது அவருக்கு எப்படி இருக்கும்?

கரையான்.

புதன், ஜூன் 26, 2013

அடிமேல் அடித்தால் அம்மியும் நகரும்

மக்கா எத்தன நாளுதான் மௌனம் காக்குரீங்கன்னு  பாக்குறேன்...

சரி என்னோட கதைக்கு வர்றேன்... அடிபட்டு emergency யில் அட்மிட்டான எனக்கு MRI SCAN  எடுக்கனும்னு டாக்டர் சொல்லி, அதற்கு இன்சூரன்ஸ் கம்பெனி அனுமதி கோரி கடிதம் அனுப்பினார், scan செய்ய 700 ரியால்,ஆதலால்  இன்சூரன்ஸ் நிறுவன அனுமதி வேண்டும் அதற்கு காத்திருக்குமாறு கூறி விட்டு சென்று விட்டார். காலை பத்துமணி முதல் மாலை மூன்று மணி வரை காத்திருந்து மருத்துவமனை ஒன்றும் செய்யாதலால் நான் அங்கிருத்த ஊழியர்களிடம் சென்று வலி தாங்க முடிய வில்லை ஏன் இவ்வளவு நேரம் என்று கேட்டேன். பின்னர் அவர்கள், என்னுடைய இன்சூரன்ஸ் கம்பெனி  ஸ்கேன் செய்ய அனுமதி இன்னும் வழங்க வில்லை என்று கூறினார்கள், நான் என்னுடைய பணத்தை செலுத்துகிறேன், என்று கூறி செலுத்திய பிறகுதான் என்னை ஸ்கேன் செய்ய அழைத்து சென்றார்கள்.
எல்லாம் முடிந்த பின்னர் அந்த இன்சூரன்ஸ் கம்பெனி யின் representative அந்த மருத்துவமனையிலேயே இருந்தார், அவரிடம், ஏன் என்னுடைய claim க்கு approval கிடைக்க வில்லை என்று கேட்டேன், அதற்க்கு அவர், உங்களை சோதித்த மருத்துவர் அவருடைய ரிப்போர்ட் -ல் cause of injury: "Was kicked by a horse at  his home" என்று எழுதி உள்ளார், வீட்டில் என்ன குதிரை வளர்ப்பார்களா ? என கேள்வி எழுப்பி உங்கள் இன்சூரன்ஸ் நிராகரிக்கப்பட்டு விட்டது என்று விளக்கம் அளித்தார், மேலும் என்ன நடந்தது என்று என்னிடம் விசாரித்தார், நான் விளக்கமா ஒட்டகத்திடம் அடி வாங்கிய கதையை சொன்னேன். பொறுமையாக கேட்ட அவர் சவுதி காப்பீட்டு சட்டப்படி " உங்கள் பணியில் அடிபட்டால் அந்த வகையான காயங்கள் காப்பீட்டுக்குள் வராது அதற்கு நீங்கள் claim செய்ய முடியாது " நீங்கள் சாலையில் நடக்கும்போதோ அல்லது drive செயும்போது, அல்லது உடல் நிலை சரியில்லாமல் போனால்தான் காப்பீடு பெற முடியும், உங்கள் பணி  சார்ந்த காயங்கள்/பிரச்னைகளுக்கு (professional hazards) இன்சூரன்ஸ் கிடையாது. என்று கூறினார்.  ரிப்போர்ட் எழுதிய மருத்துவர் பொண்டாட்டியிடம் அடி வாங்கியதால் காலில் காயம் என்று எழுதி இருந்தால் கூட பரவாயில்லை இப்படி அநியாயத்திற்கு தண்டம் அழ வைத்து விட்டாரே என்று எண்ணி கொண்டேன்.
(பிறகு அலுவலகத்தில் அந்த பில்லை கொடுத்து காசு வாங்கி விட்டேன்)

கரையான் 

ஞாயிறு, ஜூன் 16, 2013

LONG TIME NO SEE

பிளாகில் எழுதி பல நாட்கள் ஆகி விட்டது. இந்த நீண்ட மௌனம் கிட்டத்தட்ட நண்பர்களுக்குள் உள்ள சிறு பிணக்கினால் யார் முதலில் பேசுவது என்ற ஒரு ஈகோ உருவாகுமே அது போன்று ஒரு நிலைமையை ஏற்படுத்தி விட்டது... யாராவது ஒருவர் இந்த மௌனத்தை உடைத்து வருவார்கள் என்று பார்த்தால் நாட்கள் மாதங்கள் உருண்டோடி விட்டது... நானே மௌனத்தை களைக்கிறேன்.....
சில நேரங்களில் ஒருவரின் வலி மற்றவரின் நகைச்சுவை ஆகி விடும்...அடிபட்டவரின் வலி நகைப்பவருக்கு தெரியாது...அது போலதான் எனக்கு ஒவ்வொரு முறையும் குதிரையிடம் அடி வாங்கி மருத்துவமனை செல்லும்போதும் நான் அந்த மருத்துவமனையின் show piece/ specimen/ comedy piece ஆகி விடுவேன்.
பத்து நாட்களுக்கு முன் ஒட்டகங்களுக்கு vaccine கொடுக்க வேண்டிஇருந்தது . குட்டி ஒட்டகங்கள் ஐந்து ஆறு மாதங்கள் வயதுடையவை. பணியாளர்கள் ஒரு சிறிய இடத்தில் பத்து பத்து ஒட்டகங்களாக அடைத்து அதை விரட்டி பிடிப்பார்கள் , பின்னர் நான் ஊசி போட வேண்டும். இப்படி விரட்டும்போது அந்த இடமே களேபரமாக இருக்கும். அப்படி நான் ஒரு ஒட்டகத்துக்கு ஊசி போட்டுக்கொண்டு இருக்கும்போது பணியாளர்கள்  இன்னொரு ஒட்டகத்தை விரட்டி பிடிக்க முயற்சி செய்தார்கள், அது கண்மண் தெரியாமல் ஓடி வந்து என் மீது மோதி நான் கீழே விழ என் மேல் அந்த ஒட்டகம் விழுந்தது. என்னுடைய இடது கால் முட்டி அந்த ஒட்டகத்தின் கீழ் மாட்டிக்கொண்டது. மயக்கம் வரும் அளவுக்கு வலி, உடனே வீங்கியும் விட்டது. முதலுதவி செய்து பின்னர் மருத்துவமனைக்கு சென்றேன், அந்த மருத்துவமனையின் receptionist முதல் டாக்டர் வரை நான் ஒரு vip நோயாளி ஆகி விட்டேன், நல்ல வேலையாக x ray இல் எலும்பு முறிவு இல்லை என்று கூறி விட்டார்கள். ஆனாலும் முட்டியை மடக்க முடியவில்லை, வலியும் பயங்கரமாக இருந்தது.
எனக்கு எப்படி ஆனது என்பதை receptionist தொடங்கி டாக்டர், நர்ஸ் , x ray எடுப்பவர் என அனைவரும் விழிகள் விரிய ஆச்சரியமாக கேட்டுக்கொண்டே இருந்தார்கள், ஒரு பிலிப்பினோ நர்ஸ் உன் முட்டிய உடைத்த அந்த ஒட்டகத்தை கொன்று விடு என அறிவுரை வேறு கூறினார்.
அடுத்த நாள் நடக்கவே முடிய வில்லை,கொஞ்சம் பெரிய மருத்துவமனைக்கு சென்றேன், emergency -யில் அனுமதிக்கப்பட்டேன், திரும்பவும் முதலிலிருந்து ஒட்டகம்-ஊசி-நான்-கீழே-விழுந்து-ஒட்டகம்-மேலே-விழுந்து-, receptionist -டாக்டர்-நர்ஸ்-x -ray technician , இந்த மருத்துவமனையில் கூடுதலாக MRI scan technician எல்லோருக்கும் கதையை திரும்ப சொல்லி (அவர்கள் வீட்டில் குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டும்போது அல்லது நண்பர்களுடன் அரட்டை அடிக்கும்போது  சொல்ல ஒரு கதை கிடைத்து விட்டது ) என்னுடைய வலி மரத்து விட்டது. ஒரு வழியாக MRI scan நார்மல் என்று கூறி விட்டார்கள். பத்து நாட்கள் ஆகி விட்டது ...இப்போது நார்மலாக நடக்க ஆரம்பித்து விட்டேன்....
(விரைவில் குணம் அடைய வாழ்த்தவிருக்கும் பாய்,குஜிலி,GFK, பாண்டி செந்தில்,சொக்கன், தாஸ் மற்றும் அனைவருக்கும் நன்றி...)

MRI SCAN -க்கு காப்பீடு (insurance ) கிடைக்காத கதை நாளை எழுதுகிறேன்......

கரையான்.

சனி, மார்ச் 23, 2013

A Tribute to my Appa Dr.S.Krishnaswamy:


A Tribute to my Appa Dr.S.Krishnaswamy:
My Appa was a great inspiration in my life and I consider myself lucky to have such a father. He taught us Bharatiar poetry and taught us “Jaathigal illaiyadi papa athai taazhthi uyirthi solval paavum”, he also taught me to be Bharathiar’s puthimai penn and to be fearless. I want to pay tribute to such a man whom I was privileged to call “Appa”.
Imgine a 15 year old boy,  suffering severe headaches because of hunger and had to live on one bun and tea a day. His father had sent him to Ambur to live as a paying guest and study his 10th standard. In spite of this he topped the state in his final exams. Next his father sent him as a cement factory worker to the north. When his headmaster heard about this he was shocked, he immediately arranged a scholarship and brought him back to join his 11th grade in Bangalore. This young man was my father. From thereon he studied always with a scholarship and never looked back. He topped all the exams and was a gold medalist in his PhD. He was a great brother and helped his siblings in their studies and career. He was a great teacher with his students in premier institutions like NIH, CDC and IISC. When most people plan their retirement in his mid fifties,  he started a company and made it a multi crore turnover company. He was a fantastic human being to be around. He would always encourage us to be curious to learn more, ask questions. He never pitied himself orlose confidence because of his childhood poverty. He always challenged us to dream big, not be afraid to fail. He once told me life is always full of stress, so enjoy the stress, thrive on it and you will go far.
He had a premonition of his own death and told my mother that his mother was calling him. He told my mother twice on the day he died somebody was calling him. He lived life on his own terms and died on his own terms too.
I quote his favorite kural  “ vaiyyagathil vaazhvaanthu vaazhbavan, vaanyurarum deivathul vaikkapadum” . He who lives life as a role model in society will be created a God among the high heavens. For my Appa this was mission accomplished.

வெள்ளி, மார்ச் 01, 2013

படித்ததில் பிடித்தது face book லிருந்து.

என் கடைசி கடிதம் :
-----------------------------------

வானம் காய்ந்தது 
வாழ்க்கை ஓய்ந்தது 
மானம் காக்கும் துணி கூட
உழைத்து தேய்ந்தது

கல்லணை கட்டியது முதல்
கஞ்சிக்கு பஞ்சமில்லை...
கர்நாடகாவை பிரித்தது முதல்
அழுதது கொஞ்சமில்லை...

மழைநீரும் தூறவில்லை
மனரணமோ ஆறவில்லை
மின்சாரத்தோட ஓசை இல்லை
மீண்டும் பிறக்க ஆசையில்லை

சீக்கிரமே சாக வேண்டும்...
அதற்குள் சென்னை சென்று
பார்க்க வேண்டும் ..

அங்கே ,
கார் தயாரிக்க கரண்ட் இருக்கு -எங்க
கஞ்சிக்கு வழியில்லை
பீர் தயாரிக்க கரண்ட் இருக்கு
நெஞ்சி பொறுக்க வில்லை

ஹுன்டாயும் போர்டும்
உலகெல்லாம் ஏற்றுமதி...
உண்ண அரிசி பருப்பெல்லாம்
உள்ளுரில் இறக்குமதி

அமெரிக்காவுக்கு உழைக்க
ஐ டி வளர்த்தாலும்,
அடுத்த வேலை உணவுக்கு
சாப்ட்வேரையா சாப்பிடுவீர் ?

அங்கே ,
PUB'm Club'm கரன்டுல
ஜொலிக்குது - எங்க
பம்பும் செட்டும் வறண்டு
வறண்டு .. வலிக்குது :(

எத்தொழில் செய்தினும்
காசு வரும் - ஆனால்
இத்தொழிலில் மட்டும்தானே
உணவு வரும் ?

தலைநகர் வளர்வதில்
தவறொன்ன்னும் இல்லை - ஆனால்
தலைமட்டும் வளர்வது
வளர்ச்சி இல்லை

உழைத்து களைத்து
விளைத்தவன் விவசாயி - அதை
அடித்து பிடித்து
வாங்கியவன் வியாபாரி

தண்ணீர் , மின்சாரம் ,
தரகர், நஷ்டம் ,என்னென்று நான் சொல்ல
வாழ தெரியாமல் சாகவில்லை
வாழ முடியாமல் போகிறேன்

சச்சின் சதத்தையும்
ஷாருக்கான் படத்தையும்
கொண்டாடும் நீங்கள் - நாட்டு
உணவுக்கு உழைத்து
உணவே கிடைக்காமல்
உயிர் விடும் நாங்கள்


ஊருக்கே உழைத்தோம்
ஒரு வாய்க்கு போராட்டம்
வசதி வாய்ப்பு கூடவில்லை
நிம்மதியாக கூட வாழவில்லை

கடைசி ஆசை ..
இறைவா... ..

புழுவாக புல்லாக
மலிவான மண்ணாக
எலியாக எறும்பாக
ஏர் பூட்டும் எருதாக
எதுவாக பிறப்பினும்
ஏற்று கொள்வேன் _ ஆயின் இந்த
இடரான இந்தியாவில்
பிறந்திட வேண்டாம் ...


- உங்கள் தமிழன் , உழவன் ..

- வை .நடராஜன்

http://ursnattu.blogspot.in/


கரையான்.

செவ்வாய், பிப்ரவரி 26, 2013

ஆணாதிக்க உலகம் - facebook இல் படித்ததில் பிடித்தது....

ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?

ஒரு ஆண் கடுமையா உழைச்சா... பொண்டாட்டியைக் கண்டுக்க மாட்டேங்கறான்னு மட்டம் தட்டுவாங்க.

பொண்டாட்டியை கவனிச்சுக்கிட்டா.. அவளையே சுத்தி சுத்தி வரான். வேலை வெட்டி இல்லாத பயன்னு கட்டம் கட்டுவாங்க..

அது போகட்டும்.. ஒரு பொண்ணைப் பார்த்து அழகா இருக்கேன்னு சொன்னா அது ஈவ் டீசிங்..ன்னு கெளப்பி விடுவாங்க.

கண்டுக்காம போனா அழகை ரசிக்கத் தெரியாத ஜடம்..!ன்னு அமுக்கி வைப்பாங்க.

எதுக்காச்சும் அழுதோம்ன்னா பொம்பள மாதிரி அழறான் பாரும்பாங்க..

திடமா இருந்தா நெஞ்சுல ஈவு இரக்கம் இல்லாத அரக்கன்னு வாருவாங்க..

பொண்டாட்டியை கேட்டு முடிவெடுத்தா தானா முடிவெடுக்கத் தெரியாத முட்டாள்..ன்னு பட்டம்.

சரின்னு நாமளே ஒரு முடிவு எடுத்தா தான் ஆம்பிளைங்கற அகங்காரம்..ன்னு திட்டும்.

ஏதாவது பிடிச்சது வாங்கிட்டுப் போய் கொடுத்தா "என்னத்துக்கு இப்போ காக்கா பிடிக்கிறீங்க..?" அப்படின்னு ஒரு நக்கல்.

ஒன்னும் வாங்கிட்டுப் போகலேன்னா "ஒரு முழம் பூவுக்கு விதியத்துப் போயிட்டேனே..!" ன்னு மூக்கை சிந்திக்கிட்டு விக்கல்..

ஒரு குறிக்கோளோடு உழைச்சா, " வேலையைக் கட்டிகிட்டு மாரடிக்க வேண்டியதுதானே.. எதுக்கு உங்களுக்கு பொண்டாட்டி..?" ன்னு ஏசல்.

சரின்னு சினிமாவுக்கு அழைச்சுட்டுப் போனா, " அந்த ஹீரோ மாதிரி ஒரு லட்சியம் வேணுமுங்க மனுஷனுக்கு.. எப்படி உழைச்சு முன்னேறி கார் பங்களா வாங்கினான் பாத்தீங்களா..?" ன்னு பூசல்..

இந்த கருத்து ஒஹோ என்று இருக்கிறதுன்னு எழுதினா, ஆனாதிக்க உலகம் அப்படின்னு சொல்லுவாங்க.

இது தப்பு பெண்கள் நல்லவர்கள்ன்னு எழுதினா உலகம் தெரியாத பைத்தியம்ன்னு சொல்லுவாங்க.



கரையான்.