திங்கள், ஏப்ரல் 30, 2012

தங்க்லீஷ் அடிப்பவர்களுக்கு ....

நமது ப்ளாக்கை ஒரு விண்டோவிலும்,இன்னொரு விண்டோவில்        "http://www.google.com/transliterate/tamil"  என்ற சைட்டை  ஓபன் செய்து அதில்,தங்க்ளிஷை டைப் செய்யவும்.அது,தமிழில் வந்தவுடன்,காப்பி செய்து ,அதை நமது ப்ளாக்கில் பேஸ்ட்  செய்யவும்.நன்றாக இருக்கும்.
குறிப்பு:டேய் செந்திலு,தலைப்பை ஒழுங்கா படி!



பாய்.

சனி, ஏப்ரல் 28, 2012

பெரியோர் அருகாமையும் அருமையும்






பாய்,

 இன்னும் விசேஷம் என்னவென்றால் நாங்கள் நால்வரும் இன்றும் ஒரே வீட்டில் (நான், என் பெண் , பாட்டி ஒரு வீட்டிலும்  , மற்றும் அம்மாவின் குடும்பம் எங்கள் வீட்டு மாடியிலும் ) வசிக்கிறோம்..being with me  they are of immense help to me(esp for office going ladies elders should always be with them.).still my grandma used to call all three of us as கண்ணு  அல்லது  சாமி  and inturn my mother calls we two as kannu or sammy and i call my daughter as kannu or sammy. I feel happy and proud that we all are living  in a same house.

பாமா

Reply to Bhai's 14 = 42

 
ok, bhai. like you r 14 =42 euaton i too have one equation.
It is ---person no 1 is d(2) who is d(3) who is d(4).
here d( ) means daughter of.
the age of them are 16 is d(42) who is d(63) who is d(91).
also u can see the cultural difference among generations. this was taken some 3 days before in front of my house.
Yes bhai it  is my daughter, myself, amma and patty(real patty and not the catch word).
 
Yours,
Bama.

ஞாயிறு, ஏப்ரல் 22, 2012

Pirandha naazhl Vaazhthukkal

GFK Avargallukku koda kodee pirandha naazhl vaazhtukkazhl

Chennai Natchathirangal...

மனதை பாதித்த நிகழ்வுகள்

சமீபத்தில் பத்திரிக்கைகளில் மற்றும் தொலைகாட்சியில் பார்த்த ஒரு செய்தி மிகவும் மனதை புண்ணாக்கியது....
தைரிய லக்ஷ்மி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டது, இந்த மாணவி மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து மிக கஷ்டப்பட்டு படித்து பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர், கிண்டி அண்ணா பல்கலை கழகத்தில் பொறியியல் பட்ட படிப்பு முதலாம் ஆண்டு மாணவி, ஆங்கில மொழியில் படிக்க கடினமாக இருப்பதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெயரில் தைரியம் இருந்து என்ன பயன்.
மற்றொரு மாணவர் அதே பல்கலை கழகத்தில்  முதலாமாண்டு மாணவர் தர்மபுரி மாவட்டடத்திலேயே முதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று அண்ணா பல்கலை கழகத்தில் இடம் பிடித்தவர், அவர் என்ன காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரிய வில்லை.இந்த மாணவர் ஒரு சிறந்த கவிஞரும் கூட, மேலும் இவர் குடும்பம் bonded labour- ஆக இருந்தவர்கள். அப்போதைய மாவட்ட ஆட்சியரின் உதவியால் பள்ளிப்படிப்பை தொடர்ந்து மாவட்டத்தின் சிறந்த மாணவராக இருந்தவர், மேலும் அந்த மாவட்டத்தின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் பல ஏழை மாணவர்களுக்கு உதாரணமாகவும் விளங்கியவர், இவருடைய குடும்பத்தினர் இன்றும் மிக ஏழ்மையான நிலையிலேயே உள்ளனர், ஓலை குடிசையில் வாழ்ந்து கொண்டு தினக்கூலிகள்-ஆய் காலம் தள்ளுபவர்கள். அவருடைய தாய் கணவரிடமிருந்து பிரிந்து வாழ்பவர்(single mother) இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்தவர்,தற்கொலை செய்து கொள்ள பெரிய கஷ்டம் என்னவாக இருக்கும் என யாருக்கும் தெரிய வில்லை.
தற்கொலை செய்து கொள்பவர்கள் கோழைகள் என்பதை விட சுய நலக்காரர்கள் என்பதுதான் என் கருத்து.  இறப்புக்குப்பின் அவர்களின் குடும்பத்தின் துயர், தாய் தந்தையரின் சிதைந்து போகும் நம்பிக்கை என எதையும் இவர்கள் சிந்தித்து பார்ப்பதில்லை. இவ்வளவு நாட்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் சரியாகி விடும்  என்று நம்பிக்கையுடன் காத்திருந்த தாய் தந்தை மற்றும் உறவுகளின் துயரங்களை எண்ணாதவர்கள் சுயநலக்காரர்களே. பட்டணத்தில் படிக்கும் குழந்தை நகரத்தில் உள்ளவர்கள் போல் இருக்க வேண்டும் என்று கடன் உடன் வாங்கி நல்ல துணி மணிகள், இன்ன பிற வசதிகள் செய்து கொடுத்த தாயின் நிலை என்னவாகும்... 

கரையான்.
 

சனி, ஏப்ரல் 21, 2012

Especially posted for Neal


Dedicated to Neal's cousin







நன்றி: சிந்தனைச் சரம் மாத இதழ்,மதுரை.

குறிப்பு: இச்சிறு கதையை  படிக்கும் போது,கண்கள் நீரைச் சொரிந்தன.பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில்,நண்பர்களுக்கு கடிதம் எழுதியதை அப்படியே,படம் பிடித்து காட்டியது.

தொடரும்.......

சேர்த்தது.
அன்புள்ள மாமா,
பாய்.

வேலைப்பளு மற்றும் மன அழுத்தம்....

குடும்பத்தினருடன் கழிக்க நேரம் கிடைப்பதில்லை என்பது பொறுப்பிலிருந்து தப்பிக்க தம்மை தாமே ஏமாற்றிக்கொள்ளும் ஒரு யுக்தி என்பது என் கருத்து.  ஒரு மணி நேர தூக்கத்தை தியாகம் செய்து அந்த நேரத்தை குழந்தைகளுடனும் மனைவியுடனும் செலவிடலாமே. நாம் நேர மேலாண்மை (time management) -இல் கவனம் செலுத்துவதில்லை என்பதுதான் உண்மை. அலுவலக நேரம் முடிந்தவுடன் நாம் அவருக்கு முன்னாள் கிளம்பி விட்டால்  நம் மேலதிகாரி தப்பாக நினைத்து கொள்வாரோ என்ற தயக்கம் நாம் எவ்வளவு உயரம் சென்றாலும் இருக்கத்தான் செய்கிறது...அதே நேரத்தில்  கடைக்கு அழைத்து செல்வதாக காலையிலேயே வாக்கு கொடுத்ததால் மனைவி/வாழ்க்கை துணை நமக்காக காத்திருப்பாரே, குழந்தைகள் ஏமாற்றம் அடைந்து விடுவார்களே என்ற எண்ணம் நமக்கு எழுவதில்லை. இந்த வேலை இல்லை என்றால் இன்னொரு வேலை தேடிக்கொள்ளலாம்,குடும்பத்தினரை அந்த வகையில் சேர்க்க இயலாது.
நான் பண்ணையில் resident vet -ஆக இருப்பதால் சில சௌகரியங்கள் இருந்தாலும் அசௌகரியங்களும் உண்டு. இரவு பகல் என்று பார்க்காமல் எப்போதும் அழைப்பு வரலாம், ஆனால் பணி நேரத்தை நம் வசதிக்கு அமைத்து கொள்ளலாம் என்பது வசதி. "அப்பா வேலைக்கு போறா மாதிரியே தெரியல, எப்ப பாத்தாலும் வீட்டுலேயே இருக்காரே என என் குழந்தைகள் "சில நேரங்களில் கமென்ட் அடிப்பது உண்டு, அவர்களே சில நேரங்களில் அப்பா என்ன "கெஸ்ட் மாதிரி அப்பப்ப வீட்டுக்கு வந்து போறாரு" என்றும் நக்கல் அடிப்பது உண்டு. மார்ச் ஏப்ரல் மாதங்களில் பிரீடிங் சீசன் உச்சத்தில் இருக்கும் என்பதால், தொடர்ந்து வேலைப்பளுவும் அதனால் உண்டாகும் டென்சன் களும் குறைவில்லாமல் இருக்கும். அந்த நேரங்களில் இரவுகள் சில பல  நாட்கள் என்னுடைய கைப்பேசி இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை தொல்லை கொடுத்துக்கொண்டே இருக்கும்(சில நேரங்களில் காலை மூன்று மணி போன்ற நேரங்களில் இந்த மாதிரி தொல்லை பேசி அழைப்புகள் சந்தோஷ அனுபவங்களையும் கொடுக்கும்-குடும்பஸ்தர்களுக்கு புரியும்.). 
பெரும்பாலான வியாழக்கிழமை இரவுகள் குழந்தைகள் மற்றும் மனைவியுடன் உட்கார்ந்து கொண்டாடும்  barbecue இரவுகள். கோழிய சுட்டு திங்கிற இரவு. நெருப்ப போட்டு விட்டு சுத்தி உட்கார்ந்து கோழியை சுட்டு தின்னும் சுகம் (அனுபவித்துப்பாரு சொக்கா...ஓட்டல் போறத விட அவ்வளவு சூப்பரா இருக்கும்..உங்க வீட்டு மொட்ட மாடியிலேயே போடலாம் வாரத்துல அல்லது இரண்டு வாரத்திற்கு ஒரு முறை முயற்சி செய்து பார் ரத்த கொதிப்பெல்லாம் பக்கத்துக்கு வீட்டு காரனுக்கு  போய் விடும்.)

மேலும் எழுதுவேன்....

கரையான்.

வியாழன், ஏப்ரல் 19, 2012

கவிஞருக்கு B.P எகிறியது எதனால்.... ஒரு ஆய்வு....

விற்பனை இலக்கை அடையாததாலா
அடைந்த இலக்கிற்கு ஊக்கத்தொகை கிடைக்காததாலா
 ஊக்கத்தொகை கிடைத்த மகிழ்ச்சியை கொண்டாடியதாலா
 அக்ஷய திரியைக்கு தங்கம் வாங்க திட்டமிட்டதாலா.....

தோழர்களே/தோழியரே கண்டு பிடியுங்கள்...உங்களால் முடிந்தால்...

கரையான்.
 
 
 

புதன், ஏப்ரல் 18, 2012

சொக்கனுக்கு பதில்

என் மனைவி மற்றும் குழந்தைகள் சவுதியை விட்டு சென்னையிலேயே செட்டில் ஆக சென்று இருபது நாட்கள் ஓடி விட்டது. இப்போது நான் தனிமையில்.
 உன்னுடைய குடும்ப மருத்துவர் சொல்வது போல் தாயக  விஜயத்தின் போது குழந்தை மற்றும் மனைவியுடன் மட்டும் செலவிட்டு விட முடியாது. நாம் தாயகத்தில் இல்லாத நாட்களில் நடந்த காது குத்தல், கல்யாணம், கருமாதி என்று பல நிகழ்வுகள், உடல் நலம் குன்றி தேறிய சொந்தங்கள், தண்ணியடிக்க காத்திருக்கும் நண்பர்கள்(get to gether) இப்படி பலரையும் திருப்தி படுத்தி  மூச்சு விட்டு நிமிர்வதற்குள் விடுமுறை காலம் முடிந்து விடும், திரும்பி செல்லும்போது மனைவியின் ஏக்க பெரு மூச்சும் குழந்தைகளின் ஏமாற்ற பார்வையும் சொந்தங்களின் வசவுகளும் சுமந்து விமான பயணத்தில் சத்தமின்றி மனதுக்குள் அழத்தான் முடியும். 
நம்மில் பலர் உடல் ஆரோக்கியத்தை கொஞ்சமும் மனதில் கொள்ளாமல் உழைத்து ஓடாய் தேய்ந்து தங்கள் நிறுவனத்தை கட்டி காப்பதாய் நினைத்து கொண்டு இருக்கிறார்கள், அந்த நிறுவனமே நம் ஆரோக்கியம் குறைந்து கொஞ்சம் ஓய்வெடுத்தால் வீட்டுக்கு அனுப்பி விடும் என்பதை மறந்து விடக்கூடாது. 
(இந்த தலைப்பில் தொடர்ந்து எழுதுவேன்....)

கரையான். 

வியாழன், ஏப்ரல் 12, 2012

செவ்வாய், ஏப்ரல் 10, 2012

"Egg Bound in a Sheep "



நேற்று எமது மருத்துவமனைக்கு  ஒரு செம்மறி ஆடு வந்தது.
சென்னை நட்சத்திரங்களில் ஒருவரும்,கத்தர் நாட்டின் பிரபல அறுவை சிகிச்சை வல்லுனருமாகிய டாக்டர்.ஜாஹிர் ஹுசைன் அவர்கள்
அறுவை சிகிச்சை செய்து ,வயிற்றில் இருந்து "அந்த " "முட்டைகளை " எடுப்பதைத் தான் பார்கிறீர்கள்.
 

குறிப்பு:அந்த முட்டைகள்,நாளை இன்குபாட்டரில் வைக்கப்படுமாம்.

பாய்.

ஞாயிறு, ஏப்ரல் 08, 2012

14 = 42


FRUSTRATING WEEK

வெளிநாட்டில் பணிபுரியும்/வாழ்ந்து கொண்டிருக்கும் எல்லோருக்கும் வருவது போன்றதுதான் என்றாலும் கொஞ்சம் வித்தியாசமான பிரச்சினை எனக்கு இந்த வாரம் முழுவதும். என் பெரியப்பா எண்பது வயதை பூர்த்தி செய்வதால் அவருடைய எண்பதாவது பிறந்த நாளை  வெகு விமரிசையாக கொண்டாட குடும்பத்தினர் அனைவரும் முடிவெடுத்து, தேதி முடிவு செய்யும் முன்னரே என்னிடம் கேட்டனர், நானும் ஏப்ரல் 9 -ல் இரண்டு நாட்கள் விடுமுறையில் தாயகம் வந்து செல்ல சம்மதித்தேன்(இப்போது breeding season என்பதால் என்னால் ஜூன் வரை நீண்ட விடுமுறைகள் எடுக்க இயலாது). மார்ச் மாத கடைசியில் என்னுடைய மேலாளரிடம் நான் ஏப்ரல் 8 சென்று 10 தேதியில் திரும்பி விடுவதாக விடுமுறை கேட்டேன், அவரும் ஒரு சிறிய நிபந்தனையுடன்   செல்ல அனுமதி அளித்தார், அதாவது அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்த குதிரை குட்டி போட்டவுடன் எப்போது வேண்டுமானாலும் செல்லலாம் என கூறினார், அந்த குதிரை மார்ச் 30 தேதி due ஆகவே நானும் இந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டேன். என்னுடைய கஷ்ட காலம் ஏப்ரல் பதினைந்தில் குட்டி போட வேண்டிய குதிரை ஏப்ரல் ஒன்றாம் தேதியே குட்டி போடுகிறது, அந்த அமெரிக்க குதிரைக்கு பிறகு குட்டி போட வேண்டிய ஆறு குதிரைகள் வரிசையாக ஒரு வாரம் முன்னரே குட்டி போட்டு விட்டன, ஆனால் நான் எதிர் பார்த்த குதிரை மட்டும் இன்று இந்த நிமிடம் வரை குட்டி போட வில்லை. நாளை விடிந்தால் குடும்ப விழா..நொந்து போய் இங்கே குதிரை குட்டி போடுமா என்று உட்கார்ந்து கொண்டு இருக்கிறேன். அந்த குதிரை இனிமேல் குட்டியை போட்டால் என்ன விட்டையை போட்டால் என்ன? குடும்பத்தினருடன் குதுகலமாக இருக்கும் வாய்ப்பு போனது போனதுதான் ....

கரையான்.