சனி, டிசம்பர் 22, 2012

A cat allergy problem

Hello My Dear Veterinary colleagues,
One of my students sent me this problem about her cat. Please let me know if you have any suggestions.
Here it is...

My cat has a food allergy to an unknown allergen. He has been like this for over a year now and he scratches his head/face and pulls out his hair on his lower back, around his butt, and front and back legs. I took him to the vet where he said it is symptomatic of a food allergy. Unless I get him tested, which I simply cannot afford, it is trial and error. He was eating Wellness brand Chicken cat food, then I switched him to Wellness Core Brand Chicken which is gluten and grain free and still no improvement. My vet said it was possibly chicken so I switched to gluten and grain free Turkey and Duck and still nothing. I started looking into the starch components of these foods and saw that potato was the main carbohydrate source so I just got him a Green Pea and Duck formula Limited Ingredient Diet. I also changed his litter in case he was allergic to some scent in it but that did not help either. I am at my wits end with this because I feel like nothing helps and he suffers. I have been taking him to the vet every 3 weeks for depro medrol shots to help relieve the itching/hair pulling but I also do not want him to be on those long term. Do you, have any ideas I can try or maybe you have read something that is a common root to this problem in felines?

From Gujili

பாயின் தயவு-புதிய வரவு


சனி, டிசம்பர் 15, 2012

Deepa's dad passed away this morning quite unexpectedly. He had diabetes and was on dialysis but no one expected him to pass away, so it is shock. Please pass this message on to the MVC folks since I know many folks knew of him and were helped by him in some way or the other.

He was huge inspiration for me, it is so sad!!

Angela.

தீபா மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்...

சென்னை நட்சத்திரங்கள் 

ஞாயிறு, டிசம்பர் 09, 2012

மன உளைச்சல்களின் தொடச்சி..


http://www.youtube.com/watch?v=leptTnFS0pA
மன உளைச்சல்களிலிருந்து விடுபட பல்வேறு வழிகளை கடை பிடித்தாலும் குழந்தைகள்தான் சிறந்த மருந்து...மேலே உள்ள லிங்க் மூலமாக வீடியோ வை பார்த்தால் எல்லா கவலைகளும் மறந்து சிரிப்பது நிச்சயம்.

கரையான்.

சனி, டிசம்பர் 08, 2012

சில்லறை வணிகத்தில் வெளிநாட்டு நேரடி முதலீடு

         இப்ப தொலைக்காட்சி, வலையகம் மற்றும் செய்தித்தாள்  என எதை திறந்தாலும் கண்ணில் படுவது சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு (foreign direct investment in retail sector) பற்றிய செய்திகள்தான். எத்தனைதான் கழுதை கத்து கத்தினாலும் கண்டிப்பாக வரப்போகும் ஒன்றுதான், எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் மதிய அரசு ஒருபோதும் பின்  வாங்கப்போவதில்லை, ஆள்வோர்  யாராக இருந்தாலும் அது  காங்கிரஸ், பீ ஜே பீ  அல்லது இடது சாரியாக இருந்தாலும் கண்டிப்பாக வந்தே தீரும், இப்போது வன்மையாக வால்மார்ட் போன்ற அந்நிய நிறுவனங்களை  எதிர்க்கும் கம்யுனிஸ்டுகள் கூட அவர்கள் கடை திறந்ததும் நன்கொடைக்கு அவர்களிடம் உண்டி குலுக்கப்போவது  உண்மை. ஏற்கனவே வங்கி காப்பீடு என அனைத்து துறைகளிலும் அந்நிய நிறுவனங்களை அனுமதித்தாகி விட்டது. சில்லறை வணிகத்துக்கு மட்டும் ஏன் இவ்வளவு எதிர்ப்பு, சில்லறை வணிகத்தில் ஈடு பட்டுள்ள சாமானியர்களின் எதிர்காலம் கேள்வி குறியாக்கப்பட்டதே  முக்கிய காரணம் என்கிறார்கள்.  ஆதரிப்போர் இடைத்தரகர்களின் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு விவசாயிகளுக்கு அவர்களின் உற்பத்தி பொருட்களுக்கு உரிய  விலை கிடைக்க இந்த மாதிரியான நிறுவனங்களின் வரவு வழி வகுக்கும் என வாதிடுகிறார்கள்.  என்னைப்பொருத்த வரை விவசாயிகள் பயனடைவார்கள் என்பது தவறான வாதம் என்றே கருதுகிறேன். ஏனென்றால் வால்மார்ட் போன்ற பெரு  நிறுவனங்களின் தரக்கட்டுப்பாடு என்ற பெயரில் அவர்கள் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு விளைபொருட்கள் உற்பத்தி செய்வது என்பது சாதாரண விவசாயிகளுக்கு குதிரைக்கொம்பு. உதாரணமாக கத்திரிக்காய்-ஐ  எடுத்துகொண்டால், சொத்தை கத்திரிக்காய் எல்லோரும் அறிந்த ஒன்று, கிராமத்தில் கத்திரிக்காய் வாங்கும்போது காய்களில்  குறைந்தது 25 சதவீதமாவது பூச்சி உள்ளதாக இருக்கும். கத்திரியில் பூச்சிகள் கட்டுபடுத்துவது என்பது கடினமானது, அப்படி பூச்சி பட்டுள்ள காய்களை பெரு  நிறுவனங்கள் தரக்கட்டுப்பாடு என்னும் பெயரில் ஒதுக்கி விடும், ஆனால் உள்ளூர் நிறுவனங்கள் வாங்கும்போது அவ்வாறு தரம் பிரிப்பதில்லை. சில மாதங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள், ரிலையன்ஸ் நிறுவனம் அவர்களிடம் வாங்கும் தக்காளியில் தரக்கட்டுப்பாடு என்று கூறி பாதிக்கும்  மேல் கழித்து விடுவதாகவும் அவை வீணாகுவதாகவும் கூறி போராட்டம் நடத்தினார்கள்.
     இவ்வாறு பூச்சிகள் இல்லாமல் காய்கறிகளை உற்பத்தி செய்ய உழவன் அதிகப்படியான பூச்சிகொல்லிகளை உபயோகிக்க முற்படுவான், அதன் மூலம் உற்பத்தி விலை ஏறுவதுடன் நுகர்வோருக்கு பூச்சிகொல்லிகள் நிறைந்த காய்கள்  கிடைக்க வாய்ப்புகள் அதிகம். எங்கள் பண்ணைக்கு அருகில் ஒரு விவசாய பண்ணை உள்ளது அதில் பணிபுரியும் பெரும்பாலானவர்கள் நம் ஊர்காரர்கள், அவர்களிடம் ஏன் பாண்டா, carrefour போன்ற நிறுவனங்களுக்கு விற்பதில்லை என்று கேட்டேன், அவர்கள் சொன்னது தரக்கட்டுப்பாடு என்ற பெயரில் கழித்து கட்டி நமக்கு ஒன்றும் மிஞ்சாமல் செய்து விடுவார்கள் என்பதுதான். பெரு நிறுவனங்கள் நம்மூர் contract farming கோழி நிறுவனங்கள் போல் முடிந்தவரை உழவனிடம் கொள்ளை அடிக்கத்தான் பார்க்கும்.
   சுருங்க சொன்னால் வேட்டி தலப்பா கட்டி வந்த இடைத்தரகர்கள் கோட் சூட் போட்டு  வந்து உழவனின் கோவணத்தையும் உருவி செல்ல போகிறார்கள்.

கரையான் 

மன உளைச்சல்கள்

மன உளைச்சல் இன்றைய வாழ்வில் தவிர்க்கமுடியாத அங்கமாகிவிட்டது.அது பணி இடத்தில் மட்டுமல்லாமல் வாழ்வின் எல்லாப் பிராயங்களிலும் பின்னிப் பிணைந்த ஒன்றாகிவிட்டது.குழந்தையை crecheல் தள்ளிவிட்டுப் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்கிற கட்டாயத்தில் ஒரு வயதைத் தாண்டாத குழந்தைக்கு stress தொடங்கி விடுகிறது .பள்ளிப் பருவத்தில் ஏகத்துக்கும் சிலபஸ் ..ப்ராஜெக்ட் வொர்க் ..கட்டாயமாகப் படுகிற எக்ஸ்ட்ரா curricular activities ...எல்லோர் முன்னிலும் ஆசிரியரால் திட்டப்படுகிற மாணவர்கள் பத்தாவது வகுப்புப் பாடத் திட்டத்தை ஒன்பதாவது படிக்கிற போதே முடித்து விடத் துடிக்கிற தனியார் பள்ளிகள்..தினமும் அவர்கள் எதிர்கொள்ளும் class testகள் குழந்தைகளை எப்போதுமே சந்தேக உணர்வோடு கண்காணிக்கிற பெற்றோர்கள் ..சோசியல் நெட் வொர்க்குகள் தருகிற மறைமுக மன அழுத்தங்கள் ..சமுக ஏற்றத் தாழ்வுகள் என எப்போதுமே மன அழுத்த வாழ்வு முறைக்கு இன்றைய பிள்ளைகள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் நமது பள்ளிப் பருவத்திலிருந்து ரொம்பவே மாறிவிட்டது .

இன்னும் அடுத்த கட்டத்தில் வேலை.. திருமணம் ...குழந்தைகளின் படிப்பு..சமுக நிர் பந்தங்களுக்க்காக maintain செய்ய வேண்டிய சொந்த வீடு.. கார் .ஆபரணங்கள் ..உடைகள் ..பிரம்மாண்டமான விழாக்கள் ..ஒரு பக்கம். எதிர் பாராமல் வந்து ஆளைக் குப்புறத் தள்ளும் நோய்கள் ..மருத்துவச் செலவுகள் என இன்னொரு பக்கம் ..பணியிடத்தில் எப்போதுமே நிலவுகிற பாதுகாப்பற்ற தன்மை ஓவராய் வேலை வாங்குகிற அல்லது result எதிர்பார்க்கிற மேலதிகாரிகளின் நிர்பந்தங்கள் ..என்று stress வாழ்வின் பெரும் பகுதியில் அங்கமாகி விட்டது 

இதற்கிடையில் ஈகோ காரணமாக நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளுகிற stress..எத்ர்காலம் குறித்த பயத்தில் நிகழ காலம் தொலைத்து நம்பிக்கையின்மையின் காரணமாக ஏற்படுகிற மன அழுத்தங்கள் ..என தெனாலி திரைப் படத்தில் கமல் எல்லாம் பய மயம் என்ற மாதிரி இன்று பிறப்பிலிருந்து இறப்பு வரை எல்லாம் stress மயம் என்றாகி விட்டது ..இதற்கிடையில் வாழ்வில் நம்பிக்கை வைத்து தைரியத்தோடு பிரச்சினைகளை எதிர் கொள்ளுகிற தன்மையை குழந்தைப் பருவத்திலிருந்தே பிள்ளைகளுக்கு கொடுப்பது முக்கியம் .நன்றாகப் படிக்கிற பிள்ளைகளை விட மன தைரியத்தோடும் நிதானத்தோடும் பிரச்சினைகளை.. செயல்பாடுகளை... சக மனிதர்களை ..நேர்முக மறைமுக எதிரிகளைக் கையாளும் சாணக்கியத் தந்திரங்களை கற்றுத் தர வேண்டியது அவசியம் ..நல்லவனாக இருப்பதோடு வல்லவனாவகவும் இருப்பது இன்றையத் தேவை 
Chocks.


மன உளைச்சல்கள்


கஷ்டப்பட்டு எழுதுன பதிவுக்கு கமென்ட் வரவில்லை என்றாலும் மன உளைச்சல்தான்....

கரையான் 

வியாழன், டிசம்பர் 06, 2012

மன உளைச்சல்கள்....

     அதிக சம்பாத்தியம் அதிக உயரம் ஆனந்தம் சேர்பதில்லை, மாறாக மேலும் பொறுப்புகளையும், எதிர்பார்ப்புகளையும் சேர்த்து உளைச்சல்களைதான் சேர்க்கிறது.  இன்றைய உலக வாழ்வில் அதிக சம்பாத்தியமும் பணியில் உயர்வடைய வேண்டிய கட்டாயங்களும் எல்லோருக்கும் இருக்கும் நிர்ப்பந்தம். எல்லாவற்றையும் உதறி விட்டு இருப்பதே போதும் என வாழ்ந்து விட முடியாது. நம்மை சுற்றி இருப்பவர்கள்(குடும்பத்தினர் ) அதற்கு தயாராக இருப்பார்களா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.  மன உளைச்சல்களிலிருந்து வெளி வருவதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையை பின் பற்றுகிறார்கள். என்னுடைய வழியை நான் சொல்கிறேன்.  வேலை இருக்கிறதோ இல்லையோ காலை ஐந்து மணிக்கு பணிக்கு தயாராகி விடுகின்றேன். பணியிடத்தில் சென்றடைந்ததும் முந்தைய தினத்தில் காயமுற்ற அல்லது இன்றைய தினம் பார்க்க வேண்டிய குதிரைகளின் தற்போதைய நிலை குறித்து அறிந்து கொள்கிறேன். பின்னர்  சவாரிக்கு தயாராக இருக்கும் குதிரையில் உட்கார்ந்து அரை மணி நேரம் பயிற்சி முடிந்த பின்னர் புதிதாக பயிற்சி தொடங்கப்பட்ட குட்டி குதிரைகளின் வேலைகளை மேற்பார்வை இட இரண்டு மணி நேரம். அதன் பின்னர் பிரச்னைக்குரிய குதிரைகளுக்கு சிகிச்சை. காலை பணிகள் முடிந்த பின்னர் உடற்பயிற்சி கூடம்    சென்று ஒரு மணி நேரம் தீவிர உடற்பயிற்சி . வீடு வந்து மதிய உணவு தயார் செய்து உண்டு முடிக்கும்போது மதிய பணி  நேரம் துவங்கும், திரும்ப பண்ணையில் பணி  துவங்கினால் மாலை ஆறு மணி வரை வேலை. காலை எழுந்தது முதல் உடல் அயரும் வரை தொடர்ந்து வேலை செய்து விட்டு  செல்லும்போது மற்ற எதுவும் நினைவுக்கு வருவதில்லை.
   உனக்கு வசதி இருக்கிறது குதிரை ஏற்றம் செய்கிறாய், வசதி இல்லாதவர் என்ன செய்வது என கேட்கலாம், குதிரை ஓட்ட வழி இல்லாத நேரத்தில் நீண்ட தூரம் நடக்க ஆரம்பித்து விடுவேன். மனம் போன போக்கில் நடந்த அனுபவம் நிறைய உண்டு.  மன  அமைதி பெற  குதிரை ஓட்ட நினைத்து குதிரை ஒட்டி கொண்டிருந்தேன், சில நாட்களில் அந்த குதிரைக்கு என்ன மன உளைச்சலோ தெரிய வில்லை நான் உட்கார்ந்தால் நகர மறுத்தது இடது புறம் செல்ல சொன்னால்  வலது புறம் திரும்பும்  வலது புறம் திருப்பினால் இடதுபுறம் செல்லும்(என் மனைவியிடம் பேசி இருக்கும் போல ) கொஞ்சம் கொஞ்சமாக தாஜா செய்து இப்போது ஓரளவுக்கு நான் சொல்வதை கேட்க ஆரம்பித்து உள்ளது(நம் ராசி குதிரை மனைவி எல்லாம் ஒரே மாதிரி)

கரையான்.....

புதன், டிசம்பர் 05, 2012

mental stress

http://www.youtube.com/watch?v=VBbDn34X-Lo

சமீபத்தில் விஜய் டிவி  நீயா நானா நிகழ்ச்சியில் தலைப்பு  மன உளைச்சல் பற்றியது. மிகவும் அருமையாக இருந்தது. திருமணம் தள்ளிப்போவதால் ஏற்படும் மன உளைச்சல் பற்றி ஒரு பெண் விவரித்தார்.  அதில்  வீட்டில் மூன்று பெண்கள் என்பதால் தாய் தந்தைக்கு  பின் சீர் செய்ய ஆண் வாரிசுகள் இல்லை என்பதும் ஒரு காரணம் என்பதை கேட்டபோது நாம் இன்னும் எந்த நூற்றாண்டில் இருக்கிறோம் என்று குழப்பமாக இருந்தது. பெண்ணை நன்றாக படிக்க வைத்து நல்ல வேலை வாங்கி கொடுத்து நகை சீர் வரதட்சணை எல்லாம்  செய்து திருமணம் செய்து கொடுத்த பின்னரும் அவள் சாகும் வரை சீர் செய்ய வேண்டும் என நினைப்பது என்ன வகையான மனப்பாங்கு. இதைப்போன்ற கையாலாகாதவர்களை திருமணம் செய்து கொண்டு கஷ்டப்படுவதை விட கல்யாணமாகாமலே இருந்துவிடலாம். எதனால்  மன உளைச்சல் என்று பலரும் விவரித்த போது நம் நிலை எவ்வளவோ பரவாயில்லை என்றுதான் தோன்றியது , சிறு விஷயங்கள் கூட  பெரிதாக்கப்பட்டு மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பது நன்றாகவே தெரிந்தது கல்லூரிக்கு செல்லும் ஒரு பெண் தன்னுடைய செல் பேசிக்கு வரும் wrong அழைப்புகளால் மன உளைச்சல் அடைவதாக கூறினார் இதற்கு மிக சுலபமான வழி செல் பேசி வைத்துக்கொள்ளாமல் தவிர்ப்பது அல்லது எண்ணை மாற்றி விடுவது. ஆனால் அந்த பெண் அதை செய்யாமல் இன்னும் மன உளைச்சளிலேயே இருப்பது விநோதமாக இருந்தது. வேலை இல்லாமல் இருப்பதால் ஏற்படும் மன உளைச்சல் பற்றி ஒருவர் கூறினார், மிகவும் வருத்தமாக இருந்தது, நான் கூட எட்டு மாதங்கள்  வேலை இல்லாமல் இருந்த அனுபவம் உண்டு, கையிலே காசில்லை  என்றாலும்  மனதில் தைரியம் இருந்தது மேலும் ஆதரவாக குடும்பம் இருந்தது, அதனால்  உளைச்சலில் இருந்து வெளி வர முடிந்தது.
தொடருவேன் .....

கரையான் 

Things we take for granted....

Hello Friends-
Its been ages since I blogged. I wanted to write today about the things we take for granted in our life.
We seem to assume that somehow we are given the God given previlege to have all the things we have in this life. I have this little exercise I do whenever I feel negative.I make a mental list of all the things I should be grateful for starting with intact limbs and functioning body, not being born in a war torn nation, not being born in a region which oppresses women, having not faced want or poverty, having a loving family,husband and child, the list goes on by the end of it you are so overwhelmed by the mercy of God that you feel like a whiner for complaining about things.
So to rephrase Kennedy's quotation, ask not what the world can do for you, ask what you can do for the world.
Love to everyone
GFK

திங்கள், டிசம்பர் 03, 2012

தாயகம்2012 --- 10

                                                 தமிழக மல்யுத்த வீரர்கள்

திங்கள், நவம்பர் 26, 2012

புலம்பல்கள்

பிளாக்கில்  எழுதி ரொம்ப நாள் ஆகி விட்டது.....நேற்று என் மனைவி , என்ன ஆச்சு உங்களுக்கு எல்லாம் ரொம்ப நாட்களாக பதிவுகளையே காணோம் என்று கேட்ட வுடன்தான் உரைத்தது....நம்மோட ரசிகைக்காகவாவது உடனே எழுத வேண்டுமென்று...வேலைப்பளு என்றெல்லாம் காரணம் சொல்ல முடியாது, சரியாக சொல்ல வேண்டுமென்றால் சோம்பேறித்தனம். நடுவில் சென்னைக்கு ஒருவார விஜயம் செய்தது பற்றி எழுத வேண்டும் என்று நினைத்து கொண்டே  இருந்தேன், ஆனால் என்ன காரணமோ தெரிய வில்லை தள்ளி போய்க்கொண்டே இருந்தது...
ஒவ்வொரு வருடமும் சென்னை செல்லும்போதும் நம்மூரில் நடக்கும் மாற்றங்களை பார்த்து வியப்படைவது உண்டு, ஆனால்  சமீப காலங்களில் நம்மூரில் நடக்கும் மாற்றங்கள் கொஞ்சம் கவலை அடைய வைக்கிறது...மக்கள் ஒரு வகையான இறுக்கத்தில் இருப்பது நன்றாகவே தெரிகிறது. எல்லோரும் ஒருவகையான டென்ஷனில்  திரிகிறார்கள் என்று கூறினால் மிகை ஆகாது...இன்றைய நிலையில்  அலுவலகத்திற்கு சரியான நேரத்தில் சென்றடைவோமா என்ற நினைப்பே ஒரு டென்ஷன்தான்...அலுவலகம் சென்றடைந்தவுடன் அங்கு பணி  நிமித்தமான டென்ஷன்கள் தனி.  அடுத்தது பெரும்பாலனா மக்கள் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, கொலேச்டிரால் என்று ஏதாவது ஒரு வியாதிக்காக சிகிச்சையில் இருப்பது. இதுவல்லாமல் டாஸ்மாக் பெரும்பாலானவர்களுக்கு அத்தியாவசியம் என்றாகி விட்டது. பணக்காரர்கள்தான் என்றில்லாமல் அன்றாடம் காய்ச்சிகளும் பார்ட்டி என்று கூடி குடித்து கொண்டாடுவது என்பது ஒரு கெளரவம் என்றாகி விட்டது. கைநிறைய சம்பாதிப்பவர்கள் கூட மேலும் மேலும் சம்பாதிக்க வேண்டும் என்ற நினைப்பிலேயே இருப்பதால் சம்பாதித்ததை அனுபவிக்கிறார்களா என்றால் இல்லை என்றே கூற வேண்டும்...

புலம்பல்கள் தொடரும்....

கரையான்.


Kumaran & Bhai

By,
Chennai Stars

திங்கள், நவம்பர் 12, 2012

தாயகம்2012 --- 9





இவர் எங்க வீட்டு டிரைவர் .படத்தில் உள்ள என் அப்பாவின் 1970 மாடல்  அம்பாசடர் காரை ஓட்டுபவர்.
இந்த விஜயத்தில் ,கால்நடை மருத்துவம் குறித்து பேசினார்.

அதாவது ,[ஓட்டுபவர்]:நம்ம அரசு கால்நடை மருத்துவமனைக்கு வயிறு  உப்பிய என் ஆடுகளை கொண்டு சென்றால் ,உறுதியான சாவு தான் ஏற்படுகிறது .
ஆகையினால் ,தற்போதெல்லாம்,இந்த பிரச்சினை ஏற்பட்டால்,ஒரு சிறிய செவென் அப்புடன் ,ஒரு குவார்ட்டரை கலந்து வாயில் ஊற்றி விடுகிறேன் .சூப்பர் ரிசல்ட் தான் என்றார் .


எனக்கோ,ஒரு பக்கம்,சிரிப்பை அடக்க முடியவில்லை,மறு பக்கம் தன் முதலாளி என்றும் பாராமல் என்னிடம் அவ்வாறு கூறியது,இன்னொரு பக்கம் கால்நடை மருத்துவராகிய என்னிடமே கூறியது,இறுதி பக்கம் நம் சக மருத்துவர்களை என்ன சொல்வது என்ற சிந்தனை .

பாய்.

Deepavali

Hello All,

Happy Diwali to all! May the festival of lights fill your lives and your families with light, happiness and many blessings!

Gujili

வியாழன், நவம்பர் 01, 2012

மொழிப்பிரச்சனை

சென்னை விஜயத்தின் பொது நான் பார்த்த மிகப்பெரிய மாற்றங்களில் ஒன்று வெளி மாநில தொழிலாளர்களின் அதிகரித்த எண்ணிக்கை. எங்கு பார்த்தாலும் பெங்காலிகளும் பீகாரிகளும் நிறைந்திருக்கிறார்கள். சென்னை மட்டும் அல்லாமல் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் கட்டிட தொழிலாளர்கள், ஓட்டல் பணியாளர்கள் என எங்கும் வெளி மாநிலத்தவர்கள் பணி புரிகிறார்கள். சவுதியில் பெரும்பாலான உடல் உழைப்பு தொழில்களில் குறிப்பாக சாலை மற்றும் கட்டுமான தொழில்களில் பாகிஸ்தானிகளும், நம் நாட்டிலிருந்து தமிழகத்தவர்களும் அதிகமாக இருப்பார்கள். நம்மவர்களுக்கு சுத்தமாக எந்த மொழியும் வராது தமிழை தவிர, பாகிஸ்தானியர்கள் குறிப்பாக பஷ்டூ இனத்தவர்கள் உருது கூட பேச மாட்டார்கள், இவர்கள் எப்படி கூட்டாக  கட்டிடத்தை உருப்படியாக கட்டி முடிக்கிறார்கள் என வியப்பாக இருக்கும். கிட்ட தட்ட அதே நிலைதான் இப்போது நம் ஊரிலும். முன்னெல்லாம் நம்மூரில்  ஆந்திராவை சேர்ந்தவர்கள் கட்டுமான தொழில்களில் அதிகம் வருவார்கள், சென்னையில் தெலுங்கு பேச தெரிந்தவர்கள் அதிகம் என்பதால் பெரிதாக பிரச்னை இருக்காது. ஆனால் இப்போது நம் மக்கள் ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள்.
சென்ற வாரம் என் மனைவி பத்து நாள் விஜயமாக சவுதி வந்திருந்தார். அக்கம் பக்கம் இருக்கும் அவரது நண்பிகள் அவருக்கு பக்ரித் விருந்து கொடுத்தார்கள் கிட்ட தட்ட இரண்டு மணி நேரம் பெண்கள் மட்டும் என்  வீட்டில் உட்கார்ந்து அவரவர் செய்து எடுத்து வந்த திண் பண்டங்களை பகிர்ந்து  உண்டு அளவளாவி சென்றார்கள். இது என்ன பெரிய விஷயம் என்றால், வந்திருந்த ஆறு பெண்மணிகளில் ஒரே ஒரு பெண்ணுக்குத்தான் கொஞ்சம்(எஸ், நோ ,குட் ) என்கிற அளவில் ஆங்கிலம் தெரியும், என் மனைவிக்கு ( கோயிஸ்(fine), சலாம்) என்கிற அளவில்தான் அரபி தெரியும். அதில் ஒரு பெண் சமீபத்தில் குழந்தை பெற்றவள் புதிதாக பிறந்த குழந்தையின் பெயரை என் மனைவி  எப்படி கேட்டார் என்பதை என்னிடம் விவரித்தார்,விழுந்து விழுந்து சிரித்தேன்,
என் மனைவி அந்த பெண்ணிடம் அந்த குழந்தையை காட்டி "what is his name" என்று இரண்டு மூன்று முறை கேட்டும் அந்த பெண்ணுக்கு புரிய வில்லை..பின்னர் என் மனைவி " I Shakila, You Samaha, He Mohammad என்று ஒவ்வொருவராக காட்டி அவர்கள் பெயரை சொல்லி கடைசியாக அந்த குழந்தையை காட்டி What is his name? " என்று கேட்டு அந்த குழந்தையின் பெயரை தெரிந்து கொண்டுள்ளார்.
சில சமயங்களில் சமையல் பற்றி அவர்களுடன் பேசியதாக சொல்லுவாள், அவர்களிடம் பேசி கற்று கொண்டதை தயவு செய்து எனக்கு சமைத்து கொடுக்காதே என்று கண்டிப்பாக கூடி விடுவேன், அவர்கள் சொன்னதை அரைகுறையாக புரிந்து கொண்டு என்னை இம்சிக்க வேண்டாம் என்பதால்தான் இந்த முடிவு........

கரையான்.

செவ்வாய், அக்டோபர் 30, 2012

Hurricane Sandy

புயல் சாண்டி   நேற்று சாயங்காலம் இங்கு  வந்து கிழக்கு ஓர மாவட்டங்களை  கலக்கிவிட்டது . எங்கள் ஊரில் சேதம் அவ்வளவு இல்லை என்றாலும் பக்கத்து மாவட்டங்களில் அலைகள் 30 அடிக்கு மேல் ஏறி சாலைகளெல்லாம் தண்ணீர் வந்து சில ஊர்களில் வீடு கூரைகள் மட்டும் ஏறி விட்டது.. சென்னை இல் வாழும் போது பல புயல்களின் அனுபவங்கள் என்  எண்ணத்திற்கு ஞயாபகம் வந்தது. நாங்கள் எண்ணூரில் பல வருடங்கள் இருந்ததால் கடலோரத்தில் அலைகள் கடூரமாக வரும் காட்சிகள் ஏன் நினைவிற்கு வந்தது. குறிபாக மணல் சாக்குகளை  வீடு கூரைகளில் போடுவார்கள்.  என்  தஹப்பன் மற்றும் பக்கத்துக்கு வீடு மக்கள் எல்லோரும் சேர்ந்து ஒருவர்றுகு ஒருவர் உதவி செய்வார்கள்.
இந்த ஊரில் அதிகமான பாதுகாப்பு முறைகளை மக்கள் கடைபிடிபதால் சேதம் அவ்வள்ளவு  கிடையாது.  எங்களுக்கு  12 மணிநேரம் மின்சாரம்  கிடையாது. இன்னும் குளூர் அதிகம் இல்லாதலால் தப்பித்தோம். தென் மாவட்டங்களில் கிட்டத்தட்ட் 3 அடி snow. எங்களுக்கு மழை யோடு புயல் நின்று விட்டது.  பல்கலைகழகமும் இரண்டு நாள்  விடுமுறை , ஆகையால் வீட்டில் ஓய்வு எடுத்து கொண்டிருக்கிறோம் . எல்லாம் நன்மைக்கே கே இறைவனே என்று நன்றி சொல்ல வேண்டியது தான்.
குஜிலி 

வெள்ளி, அக்டோபர் 26, 2012

வாழ்த்துக்கள்

சென்னை நட்சத்திரங்கள் அனைவருக்கும் பக்ரித் நல் வாழ்த்துக்கள்....

கரையான்.

புதன், அக்டோபர் 17, 2012

from facebook

There was a farmer who had a horse and a goat….. 
One day, the horse became ill.
 So he called the veterinarian, who said:

"Well, your horse has a virus. He must take this medicine for three days.
I'll come back on the 3rd day and if he's not better, we're going to have to put him down.

Nearby, the goat listened closely to their conversation.

The next day, they gave the horse the medicine and left.

The goat approached the horse and said: “Be strong, my friend.
Get up or else they're going to put you to sleep!”

On the second day, they again gave the horse the medicine and left.

The goat came back and said: "Come on buddy, get up or else you're going to die!
Come on, I'll help you get up. Let's go! One, two, three..."

On the third day, they came to give the horse the medicine and the vet said:
"Unfortunately, we're going to have to put him down tomorrow. Otherwise,
the virus might spread and infect the other horses".

After they left, the goat approached the horse and said: "Listen pal, it's now or never!
Get up, come on! Have courage! Come on! Get up! Get up! That's it, slowly! Great!
Come on, one, two, three... Good, good. Now faster, come on...... Fantastic! Run, run more!
Yes! Yay! Yes! You did it, you're a champion...!!!"

All of a sudden, the owner came back, saw the horse running in the field and began shouting:
It's a miracle! My horse is cured. We must have a grand party. Let's kill the goat!!!!

The Lesson:
Nobody truly knows which employee actually deserves the merit of success, or who's actually contributing the necessary support to make things happen.

Remember:
LEARNING TO LIVE WITHOUT RECOGNITION IS A
SKILL!!!!

If anyone ever tells you that your work is unprofessional, remember:

AMATEURS BUILT THE ARK [which saved all the species]

and

PROFESSIONALS BUILT THE TITANIC [all died tragically]





facebook -இல் இருந்து....





கரையான்.

செவ்வாய், அக்டோபர் 16, 2012

Chennai விஜயத்தின்போது ,


சமிபத்தில் கரையான் மற்றும் பாய் அவர்களின் சென்னை  விஜயத்தின்பொது நமது சென்னை ஸ்டார்ஸ்  நிருபரின் கேமரா கைவண்ணம் .....













இதில் யார் பாய், யார் கரையான்  என்பது, left to anybody's guess......

ASAD

படித்ததில் பிடித்தது....



ஒரு ரூபாய்க்கு ஒரு சாப்பாடு... 

மதிய உணவு வேளை

ஈரோடு, பவர்ஹவுஸ் ரோடு, அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள ஏ.எம்.வி உணவு விடுதி அருகில், காலில் செருப்பு கூட இல்லாதவர்கள், உடம்பில் சட்டை போடாமல் துண்டு மட்டும் கொண்டு இருப்பவர்கள், ஒரு காலத்தில் வெள்ளையாக இருந்த வேட்டியை அணிந்தவர்கள், நைந்து போன புடவையுடன் காணப்பட்டவர்கள் என சுமார் இருபது பேர் அந்த உணவு விடுதி அருகே, கண்களில் கவலையையும், கையில் ஒரு பையையும் வைத்துக்கொண்டு நின்றார்கள்.

சிறிது நேரத்தில் உணவு விடுதியில் இருந்து அழைப்பு வந்ததும் கையில் இருந்த ஒரு டோக்கனையும், ஒரு ரூபாயையும் கொடுத்துவிட்டு ஒரு பார்சல் சாப்பாட்டை வாங்கிக்கொண்டு திரும்பினர்.

பார்த்த நமக்கு ஆச்சர்யம், இந்த காலத்தில் ஒரு ரூபாய்க்கு ஒரு சாப்பாடா என்று!

உள்ளே வாங்க விவரமா சொல்றேன் என்று மெஸ் உரிமையாளர் வெங்கட்ராமன் அழைத்துச் சென்றார், முதல்ல சாப்பிடுங்க என்று சூடான சாப்பாடை சாம்பார், ரசம், மோர் கூட்டு பொரியல், அப்பளத்துடன் வழங்கினார் சுவையாகவும், திருப்தியாகவும் இருந்தது.

நீங்க சாப்பிட்ட சாப்பாட்டின் விலை இருபத்தைந்து ரூபாய், இந்த சாப்பாட்டைதான் இப்போது வந்தவர்கள் ஒரு ரூபாய் கொடுத்து வாங்கிச் சென்றார்கள், அவர்களுக்கு மட்டும்தான் ஒரு ரூபாய். அது ஏன் அவர்களுக்கு மட்டும் ஒரு ரூபாய் என்ற உங்கள் சந்தேகத்தை விளக்கிவிடுகிறேன்.

எங்க ஒட்டலுக்கு எதிரே உள்ள அரசு ஆஸ்பத்திரியில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் சுற்றுப்பக்கம் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஏழை, எளிய மக்கள்தான். நோயாளிகளுக்கு மதிய உணவு ஆஸ்பத்திரியில் வழங்கப்பட்டுவிடும், ஆனால் கூட இருக்கும் உறவினர்களுக்கு ஆஸ்பத்திரி நிர்வாகப்படி உணவு வழங்கமுடியாது, அவர்கள் வெளியில்தான் சாப்பிட்டுக்கொள்ள முடியும், அவசரமாக வந்தாலும், நிதானமாக வந்தாலும் அவர்கள் கையில் காசு இருக்காது.

ஆகவே அவர்களைச் சார்ந்த உறவினர்கள், நண்பர்கள் பலர் பல நாள் ஒட்டலுக்கு வந்து சாப்பாடு என்ன விலை என்று கேட்பதும் கையில் உள்ள காசை திரும்ப, திரும்ப எண்ணிப்பார்ப்பதும், பிறகு அரைச்சாப்பாடு என்ன விலை என்று கேட்டு அதையும் வாங்காமல் கடைசியில் ஒரு டீயும் வடையும் சாப்பிட்டு போவார்கள் சில நேரம் வெறும் டீயுடன் வயிற்றைக்காயப் போட்டுக்கொண்டு போவார்கள்.

தினமும் ஒரே மாதிரி மனிதர்கள் வருவதில்லை ஆனால் அன்றாடம் வரக்கூடிய இருபதுக்கும் குறையாத மனிதர்கள் பலரும் நான் மேலே சொன்னது போல ஒரே மாதிரிதான் நடந்து கொள்வார்கள்

பசியாற சாப்பாடு போட கடை நடத்தும் எனக்கு இதை பார்தது மனசு பகீர் என்றது. சரி தினமும் இருபது பேருக்கு ஒரு வேளையாவது உணவு தானம் செய்தது போல இருக்கட்டும் என்று எண்ணி இருபது சாப்பாடை பார்சல் கட்டி வைத்துவிடுவேன், ஆனால் இலவசமாக கொடுத்தால் அவர்களது தன்மானம் தடுக்கும், ஆகவே பெயருக்கு ஒரு ரூபாய் வாங்கிக்கொள்கிறேன். மேலும் இந்த இருபது பேரை அடையாளம் காட்டுவதற்காக ஆஸ்பத்திரியில் உள்ள உள்நோயாளிகளை கவனித்துக்கொள்ளும் வார்டு பொறுப்பாளரிடம் இருந்து டோக்கன் வாங்கிவரவேண்டும்.

இதுதான் சார் விஷயம். இது இல்லாம எங்க ஒட்டலில் சாப்பிடும் உடல் ஊனமுற்றவர்களுக்கு 10சதவீதமும், கண் பார்வையற்றவர்களுக்கு இருபது சதவீதமும் எப்போதுமே தள்ளுபடி உண்டு. பொருளாதார நிலமை கூடிவந்தால் மூன்று வேளை கூட கொடுக்க எண்ணியுள்ளேன்.

இந்த விஷயத்துல நாங்களும் கொஞ்சம் புண்ணியம் தேடிக்கிறோம் என்று என்னை தெரிந்தவர்கள் வந்து இருபது சாப்பாட்டிற்கான முழுத்தொகையை (ஐநூறு ரூபாய்)கொடுத்துவிட்டுப் போவார்கள், நான் அவர்கள் பெயரை போர்டில் எழுதிப்போட்டு நன்றி தெரிவித்துவிடுவேன் என்ற வெங்கட்ராமன், நமக்கு விடை கொடுக்கும் போது சொன்னது இதுதான்...

"எப்படியோ வர்ர ஏழை,எளியவர்களுக்கு வயிறு நிறையுது, எங்களுக்கு மனசு நிறையுது''


கரையான்.



திங்கள், அக்டோபர் 15, 2012

படித்ததில் பிடித்தது.....




கடலூர்:ஆசையாக வளர்த்த பெண் நாய், அதிகளவில் குட்டிகளை ஈன்று, தெருச்சண்டையை கொண்டு வந்ததால், கால்நடை மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்யப்பட்டது.

இந்த சுவாரஸ்யமான சம்பவம் பற்றிய விவரம்:கடலூர் திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்தவர் நாகராஜன்; டைலர். இவர் மனைவி ரமணி. இவர் தன் வீட்டில், பெண் நாய் ஒன்றை ஆசையாக வளர்த்து வந்தார். இந்த நாய் இதுவரை, இரு ஆண்டுகளில், ஐந்து முறை நடந்த பிரசவத்தில், 24 குட்டிகளை ஈன்றது.இதனால் அப்பகுதியில் நாய்கள் அதிகளவில் சுற்றித் திரிந்தன. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், நாகராஜன் வீட்டினரிடம் தினமும் தகராறில் ஈடுபட்டனர்.

விரக்தியடைந்த நாகராஜன், தன் வீட்டில் உள்ள நாயை எங்கேயாவது கொண்டு விட ஏற்பாடு செய்தார். இதற்கு, அவரது மனைவி ரமணி ஒப்புக் கொள்ளாததால், இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.ஆசையாக வளர்த்த நாயை பிரியவும் மனமில்லாமல், தெருவில் வசிப்போருக்கு பதில் சொல்லவும் முடியாமல் தவித்த கணவன், மனைவி கலந்து பேசி, நாய்க்கு, குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி, கடலூர் புதுப்பாளையம் மெயின் ரோட்டில் உள்ள அரசு கால்நடை பராமரிப்பு மருத்துவமனையில், நாயை சேர்த்து, டாக்டரிடம் நடந்த விவரங்களைக் கூறி, குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.
இதுவரை, ஆண் நாய்களுக்கு மட்டுமே கருத்தடை செய்யப்பட்ட மருத்துவமனையில், நாகராஜன் - ரமணி தம்பதியரின் வேண்டுகோளுக்கிணங்க, முதல் முறையாக பெண் நாய்க்கு, கால்நடை <உதவி டாக்டர், ஸ்டாலின் வேதமாணிக்கம், கால்நடை பராமரிப்பு உதவியாளர், ராமு ஆகியோர் மயக்க மருந்து கொடுத்து, 45 நிமிடம் கருத்தடை ஆபரேஷன் செய்தனர். அடுத்த ஒரு மணிநேரத்தில் நாயை, "டிஸ்சார்ஜ்' செய்து, தம்பதி இருவரும் பத்திரமாக அழைத்துச் சென்றனர்.

கரையான் .

வியாழன், அக்டோபர் 11, 2012

Hello Chennai Stars,


பம்பில தண்ணி வராட்டி என்ன ?...

நம்ம bloggers கொஞ்சம் சொர்ந்துபோனத்தால் , அவர்களை உசுபெத்த இந்த........!!!

Just for fun.. Enjoy a great week end!!!!

ASAD
 

வியாழன், அக்டோபர் 04, 2012

பேராசை பெரு நஷ்டம்

 ஈமு கோழி, நாட்டு கோழி, கொப்பரை என்று தினுசு தினுசா ஆசை காட்டி மக்களை ஏமாத்திகிட்டே  தான் இருக்கானுங்க மக்களும் ஏமாந்து கிட்டேதான் இருக்காங்க...ஆன் லைன் டிரேடிங் -இல் முதலீடு செய்து உங்களின் பணத்திற்கு 8.5% வட்டி தருகிறோம், ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதம் 8500 ரூபாய் கிடைக்கும் என்று அவன் கூறினால் முதலீடு செய்ய எப்படி புற்றீசல் போல மக்கள் புறப்படுகிறார்கள், பேராசைதான். இப்படி எல்லாம் உண்மையாக கிடைக்கும் என்றால் எங்களைப்போன்றவர்கள் ஏன் வெளி நாட்டில் சாணி அள்ளிக்கொண்டு இருக்கப்போகிறோம். ஐந்து லட்சத்தை முதலீடு செய்து விட்டு மாதம் மாதம் வட்டியை வாங்கி கொண்டு நிம்மதியாக உண்டு உறங்கி எழுந்திருக்க மாட்டோமா. ஒரு கோடி ரெண்டு கோடி என்பது போய்  இப்போதெல்லாம் ஐநூறு கோடி ஆயிரம் கோடிகள் தாண்டி இருபதாயிரம் முப்பதாயிரம் கோடிகளில் பித்தலாட்டம் நிகழ்ந்து கொண்டுள்ளது இதற்கெல்லாம் காரணம் பேராசை. இதில் படித்தவர் பாமரர் என்றெல்லாம் பேதம் இல்லை. படித்தவர்களிடம் ஆங்கிலத்தில் புரியாத விஷயங்களை சொல்லி ஏமாற்றுகிறார்கள், படிக்காதவரிடம் விளங்காத கணக்குகளை சொல்லி குழப்பி படிய வைக்கிறார்கள் இந்த ஏமாற்று காரர்கள்.
பேராசை கண்ணை மறைக்கும்  என்பார்கள், உண்மைதான் ஈமு  கோழி பெரிய அளவில் விளம்பரம் செய்யப்படும் பொழுதே கால்நடை மருத்துவ பல்கலை கழகம் துணை வேந்தர் பல பேட்டிகளில் இது சாத்தியமில்லாதது என்பதை பல இதழ்களில் விளக்கமாக கூறினார், ஆனால் அவர்கள் செய்த விளம்பரங்களும்,  அதுவும் நம்ம ஊருல சினிமாக்காரன் சொல்லி விட்டால் அதுதான் வேதம்  என்றென்னும் முட்டாள்களே அதிகம், விளைவு இப்போது முதலுக்கே மோசம். மக்களின் பலவீனத்தை சரியாக பயன் படுத்த தெரிந்தவர்கள் இந்த பித்தலாட்ட காரர்கள். பல ஆண்டுகளுக்கு முன்னரே தனியார் நிதி நிறுவனங்கள் அதிக வட்டி தருவதாக் ஆசை காட்டி பலரை ஏமாற்றிய சம்பவம் சென்னை நகரில் நடந்தது, அதில் ஏமாந்தவர்கள் பெரும்பாலானோர் மெத்த படித்தவர்கள், அரசு துறைகளில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், அவர்களுடைய பணம் இது வரை கிடைக்கவில்லை, வழக்குகள் இன்னும் இழுத்துக்கொண்டே தான் உள்ளது. அதன் பிறகு தேக்கு மர வளர்ப்பு திட்டம், போரெக்ஸ் டிரடிங், இப்படி பல கவர்ச்சி திட்டங்கள் , கவர்ச்சியான நடிகர் நடிகைகளை வைத்து விளம்பர படுத்தி ஏமாற்றிக்கொண்டேதான் இருக்கிறார்கள் மக்களும் ஏமாந்து கொண்டேதான் இருக்கிறார்கள். மக்களின் பேராசையே இவர்களின் மூலதனம்.

கரையான்.

புதன், அக்டோபர் 03, 2012

நுணலும்தன் வாயால் கெடும்

சில நேரங்களில் இடம் பொருள் ஏவல் அறியாமல் வார்த்தைகளை விடுவது சிலருக்கு அடிக்கடி நிகழ்வது...கடந்த வாரம் எங்கள் முதலாளி பண்ணையில் தங்கி இருந்த சமயம் எங்களை இரவு உணவு அவருடன் அருந்த அழைத்திருந்தார், நான் மற்றும் பண்ணையில் பணி  புரியும் சில மேலாளர்கள், பொறியாளர்கள் சென்றோம்,  பொறியாளர் ஒருவர் பாகிஸ்தானி, கொஞ்சம் வயதானவர் அதனால் அவர் பேசுவதை பெரும்பாலனவர்கள் சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை.மேலும் அவர் எல்லோரிடமும் அதிகம் உரிமை எடுத்து கொண்டு கொஞ்சம் அதிக்கப்படியாக பேசுவார். எங்கள் முதலாளியுடன் நிறைய சவுதி நண்பர்களும் இரவு உணவில் கலந்து கொள்ள வந்திருந்தார்கள், வந்திருந்தவர்களில் நிறைய பேர் வசதிபடைத்தவர்கள் மற்றும் அரசு பணியில் பெரிய பொறுப்புகளில் இருப்பவர்கள்...எங்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். பின்னர் உணவு அருந்த உட்கார்ந்தபோது கலகலப்பாக பேசிக்கொண்டே உணவருந்தினோம், அப்போது எங்கள் பாகிஸ்தானி நண்பர் ஜாலியாக பேசுவதாக எண்ணி " சவுதியில இப்ப பிறக்குற குழந்தைகளெல்லாம் போலிகள்" என்றார். ஒரு கணம் சாப்பிட்டு கொண்டு இருந்தவர்கள் அனைவரும்(என் முதலாளி உட்பட)கொஞ்சம் அதிர்ந்து விட்டார்கள், எல்லோரும் அந்த பாகிஸ்தானி யையே திரும்பி பார்த்தார்கள், பெரும்பாலனவர்கள் முகம் கொஞ்சம் மாறி விட்டது என்றே சொல்ல வேண்டும். எங்கள் முதலாளி கொஞ்சம் சுதாரித்து கொண்டு " சயீத் நீ எதை வைத்து இப்படி சொல்கிறாய்" என்றார்,
"அறுபது எழுபது வயதானவர்கள் எல்லாம் ஊக்க மருந்துகளை(aphrodisiacs) உபயோகித்து குழந்தை பெற்று கொள்கிறார்கள் அதைத்தான் கூறினேன்" என்றார், அதன் பின்னர்தான் கொஞ்சம் சகஜ நிலை திரும்பியது.
சற்று கற்பனை செய்து பாருங்கள்  இதே நம்மூரில் இப்படி ஒரு விஷயத்தை சர்வ சாதாரணமாக கூறி விட்டு எந்த வித சேதாரமும் இல்லாமல் தப்பிக்க முடியுமா. 
சில நேரங்களில் நான் கூட இப்படி உளறியது உண்டு(ஆனால் இந்த அளவுக்கு damaging ஆக கிடையாது)
ஒரு முறை என் முதலாளி மகனுடன் உரையாடிக்கொண்டு இருந்த போது குழந்தைகளின் எண்ணிக்கை பற்றி பேச்சு வந்தது. நான் அவனிடம் அதிகம் குழந்தைகள் பெற்றால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி கூறி கொண்டிருந்தேன், அவன் முகத்தில் ஒரு சிறிய புன்னகை , திடீரென்று பொறி தட்டியது முதலாளிக்கே நாற்பது குழந்தைகளுக்கும் மேல், அவர் மகனிடம் இதைப்பற்றி விவாதிப்பது சரியல்ல என்று நிறுத்தி கொண்டேன்.....

கரையான் 

வெள்ளி, செப்டம்பர் 28, 2012

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா....

(கீழ் உள்ள கவிதை யார் எழுதியது என்று நினைவில்லை எப்பொழுதே எடுத்து கோப்பில் வைத்தது)

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா....

வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!

சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்து விட்டு ஓடுகிறாய்!

என் பசி மறந்து உனக்காகக் காத்திருக்கும் பொழுது

காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு..

ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!

சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு ...கெஞ்சுபவனைப்போல...

மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்!

பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும்

சின்னப்பையனைபோல... மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!

அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது...

பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !

கை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும்போது

குளிரடிப்பதாய் கூறி - ஒரு குழந்தையை போல அழுகிறாய் !

மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்...

கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்

கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...

அழுவதும்... அணைப்பதும்...

கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...

இடைகிள்ளி... நகை சொல்லி...

அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி "

இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...

எனைத் தீயில் தள்ளி வாழ்வு அள்ளிச் சென்றுவிட்டாய்...

என் துபாய் கணவா! கணவா - எல்லாமே கனவா?

கணவனோடு இரண்டு மாதம்...

கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?

12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ...

5 வருடமொருமுறை ஒலிம்பிக்....

4 வருடமொருமுறை உலகக் கோப்பை கிரிக்கெட்... .....

2 வருடமொருமுறை கணவன் ...

நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!

இது வரமா ..? சாபமா...?

அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர் உண்டோ ?

கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?

நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய்

நான் மோகத்தில் நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய்

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...

வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்

விட்டுகொடுத்து.... தொட்டு பிடித்து...

தேவை அறிந்து... சேவை புரிந்து...

உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து...

தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு...

வார விடுமுறையில் பிரியாணி.... காசில்லா நேரத்தில் பட்டினி...

இப்படிக் காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்

இரண்டு மாதம் மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்..

பாசாங்கு வாழ்க்கை புளித்து விட்டது கணவா!

தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?

எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?

இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?

விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?

பணத்தைத் தரும்... பாரத வங்கி ! பாசம் தருமா?

நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்

அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால்

விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?

பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு...

நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே?

பாலையில் நீ! வறண்டது என் வாழ்வு!

வாழ்க்கை பட்டமரமாய் போன பரிதாபம் புரியாமல்

ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!

உன் துபாய் தேடுதலில்... தொலைந்து போனது -

என் வாழ்க்கையல்லவா..?

விழித்துவிடு கணவா! விழித்து விடு -

அந்த கடவுச்சீட்டு வேண்டாம்... கிழித்துவிடு!

விசாரித்து விட்டு போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா!


Bhai

வியாழன், செப்டம்பர் 27, 2012

தாயகம்2012 --- 8

செமினார் -இரண்டாவது நாள் 
படத்தை பெரிதாக்கிஆட்களை ,
நீங்களே அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.

பாய்.








திங்கள், செப்டம்பர் 24, 2012

நட்சத்திரங்களின் வேண்டுகோளுக்கு இணங்க [தமிழாக்கமாக தரப்படுகிறது]


நட்சத்திரங்களின் வேண்டுகோளுக்கு  இணங்க....
   [தமிழாக்கமாக தரப்படுகிறது]


சிவமோகன்:---லிடியா ,தனம்மாள்,கிறிஸ்டோபர் .....என்ன...உங்க அப்பா,தாத்தா,பூட்டன் பெயரையெல்லாம் சொன்னால் தான் ,எலுந்திருப்பியா!   மேலே உள்ள விளம்பரத்தில் உள்ள "FOURTS"என்ற வார்த்தையை உச்சரி.
லிடியா:---        "FOURTS"         
(பாயின் குறிப்பு:லிடியா,நம்ம குஜிலி மாதிரி சூப்பெராக  கரெக்டாக தான் உச்சரித்தாள்.ஆரம்பம் முதலே,அவள் ஆங்கில வழி கல்வியில் படித்தவள் ஆயிற்றே!)
சிவமோகன்:---லிடியா,உக்காரு,என்ன உச்சரிக்கிறாய்!உனக்கு "ஃப்" தான் தருவேன்.
சிவமோகன்:--இப்ராஹீம்,நீ அதை உச்சரி.
இப்ராஹீம்:--     "FOURTS" 
(பாயின் குறிப்பு:ஏதோ உச்சரித்தேன்.  ஆரம்பம் முதலே,நான் தமிழ்   வழி கல்வியில் படித்தவன்   ஆயிற்றே!)      
சிவமோகன்:-இப்ராஹீம்,நீ ரொம்ப கரக்டாக உச்சரித்தாய்.ஒரு நாள்,நீ லண்டன்,பாரிஸ்,நியூ யார்க் ஆகிய இடங்களுக்கு சென்று,எனது ஆங்கிலத்தை பரப்புவாய்.உனக்கு : "ஏ " கிரேடு  தருவேன்.

 குறிப்பு:சிவமோகன் வாயில் சீனியை அள்ளிப் போடுங்கள்.லண்டன்,பாரிஸ்,நியூ யார்க் ஆகிய இடங்களுக்கு போகாவிட்டாலும்,தோஹா-மக்கா என பாதி தூரம் வந்து விட்டேன்.


பிரியமுடன்,
பாய்.
ஹாய் ,


வரவேற்புக்கு நன்றி, பாய்  மற்றும்  choka அவர்களுக்கு ....




 



 I had Recently flushed one Red sindhi cow in a Govt.farm at Utranchal . I am sharing the photo containing 7 day old embryos. It is a great feeling to see a life of 7 day old under the microscope. some of the embryos are really a copy book style (blastocyst).

என்னடா ! வந்ததும், வராததுமா  சுப்ஜெக்ட் பேசி  ரம்பம் போடுறன்னு நினைகவேண்டம் .

சந்திப்போம் ......

சனி, செப்டம்பர் 22, 2012

ASAD-அசத்தல் பிரசாத்


வருக....வருக...வருக...

அருண் பிரசாத் அவர்களே!
உங்கள் வரவு ,
அருமையான பிரசாதம்,
போல் நல்வரவாகுக...

பிரியமுடன்,
பாய்.

குறிப்பு:
கட் அவுட் கரையானே,
நம் அசத்தல் பிரசாத்திற்கு ,
ஒரு கட் அவுட் வை!
Hi,




Guess how Mr.Sivamohan (our English teacher) would have reacted to this notice??? put up on a convenient store.

Bhai wud've started to miming him right away....

Happy week end..

ASAD
 

Hello every one...

Hello,

A big thanks to Bhai for helping me to come in to blog.

Thanks for your welcome Karayanchavadi ( I doubt how many of us know, that this is the basis for you nick name)

It has become a routine for me to chk the blog as soon as I open my PC. Helps us to forget all our worries at work . I invite more and more of our friends to join in and share their views in the blog.

HF cow in my friend's farm
These two guys (Bhai and karayan) are simply great in their postings. So hilarious!!!

ASAD..

வெள்ளி, செப்டம்பர் 21, 2012

தாயகம்2012 --- 7

தாய்க் கல்லூரியில்,செமினாரில் 
நானும்-கரையானும் கலந்து கொண்டோம்.
வழக்கம் போல் அடியேன்,நம் நண்பன் பாபுவின் 
அழைப்பின் பேரில் கலந்து கொண்டேன்.

நேரில் சந்தித்தால்,பாபுவைப் போன்று 
யாரும் கவனிக்க மாட்டார்கள்.
அவன் நன்றாக வாழட்டும்.

குறிப்பு:கரையான்-நீ வாங்கிய சான்றிதழை ,ப்ளாக்கில் ஏற்றவும்.



பாய்.











வியாழன், செப்டம்பர் 20, 2012

புதன், செப்டம்பர் 19, 2012

கரையான் படும் பாடு

எவ்வளவு கஷ்டப்பட்டு ,நம்ம கரையான் ப்லாக்கிர்க்காக டைப் அடிக்கிறான்.
நீங்களோ,ஒரு கமென்ட் கூட அடிப்பதில்லை.

பாய்.

செவ்வாய், செப்டம்பர் 18, 2012