ஞாயிறு, பிப்ரவரி 15, 2015

நீண்ட நாட்களுக்கு பின்னர் திரும்பவும் பதிவிடுவதில் மகிழ்ச்சி....

நான் நீண்ட நாட்களாக பதிவிடாமல் இருந்தமைக்கு நம் நண்பர்கள் பலவிதமான காரணங்களை நம் whatsapp மூலம் தெரிவித்துள்ளனர்...விரைவு இன்டர்நெட் வசதி இல்லாமைதான் முக்கிய காரணம், மேலும் பெரும்பாலான பதிவிகளுக்கு நம் நண்பர்கள் பெரிதாக தங்கள் கருத்துக்களை தெரிவிக்காததால் தோழர்/தோழியர் நாம் எழுதுவதை பெரிதாக எடுத்துக்கொண்டு அதைப்பற்றிய கருத்துக்களை பதிவிடுவதில்லை என்பதால் ஒரு நீண்ட நெடிய break எடுக்க வேண்டியதாகி விட்டது.
நம் தோழி தீபா அவர்களின் மறைவு எல்லோருக்குமே பேரிழப்புதான்...மரணங்கள் என்னை முடக்கிப்போட்டதில்லை...மிக நெருங்கிய உறவுகள் மற்றும் நண்பர்களை வாழ்வின் முக்கிய தருணங்களில் இழந்தவன் நான்.
பொருளாதார ரீதியாக நான் இன்னல்களை சந்தித்த காலம் இப்போதில்லை, வசதியாக வாழ தேவையான செல்வம் திரைகடலோடி தேடி சேர்த்து விட்டேன். புதிதாக ஒரு துறையில் நுழையும் போது எல்லோருக்கும் ஏற்படும் இன்னல்கள் யாராக இருந்தாலும் சந்தித்தே ஆக வேண்டும், அதற்கு நான் விதிவிலக்கல்ல.
இப்போது களத்தில் காணும் பல்வேறு விஷயங்களை வரும் நாட்களில் விவாதிக்க உள்ளேன், நம் நண்பர்கள் சிலருக்கு வருத்தம்/எரிச்சலாக இருக்கலாம்.
கால்நடை பராமரிப்பு துறை மற்றும் ஆவின்-ல் பணிபுரியும் தோழர்/தோழியருக்கு ஒரு வேண்டுகோள்...artificial insemination -இல் fertility rate எவ்வளவு.... அது எப்படி கணக்கிடப்படுகிறது.....

கரையான்.