சனி, ஜூலை 27, 2013

திருமண அழைப்பிதழ்

அன்பார்ந்த நட்சத்திரங்களே,
இறைவன் நாடினால்,வரும் 17-08-2013 சனிக்கிழமை காலை 11 மணி அளவில் எனது சகலை[என் துணைவியாரின் அக்கா] மகனது திருமணம் ,'சென்னை-சூளை-டிமெல்லோஸ் சாலை-நடராஜ் திரையரங்கம் அருகில்-இலக்கம் 2-ல் உள்ள 'தமிழ் நாடு ஹஜ் கமிட்டி திருமண மண்டபத்தில்' வைத்து நடைபெற உள்ளது.
இதையே,எங்களது நேரடி அழைப்பாக ஏற்று,நீங்கள் உங்கள் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டு சிறப்பித்துத் தருமாறு வேண்டுகிறேன்.
குறிப்பு:
குடும்பம் இல்லாமல் வரவேண்டாம்.

உங்கள் நல்வரவை நாடும்,
டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம்,
திருமதி.அஹ்மத் இப்ராஹீம்,
சென்னை-600017.

புதன், ஜூலை 24, 2013

தாயக விஜயம்

இறைவன் நாடினால்,நான் ஆகஸ்ட் 4 முதல் 17 வரை தாயகத்தில் இருப்பேன்.
எனது முன் பயண நிரல் வருமாறு:
4 முதல் 12 வரை - சென்னை.
13 -சாத்தான்குளம்.
14 முதல் 16 வரை - சென்னை.
17- சென்னை.[சகலை மகன் திருமணம்.மண்டபத்தில் நம் குடும்ப 'கெட் டுகதர்'. நாளை அழைப்பிதழ் போடுகிறேன்.]
குறிப்பு:
1.எனது வீடு சென்னை-தி.நகரில்-மோதிலால் தெருவில்[ரங்கநாதன் தெருவிற்கு நேர் எதிரில் உள்ளது]48 ஆம் இலக்கத்தில் உள்ளது.நட்சத்திரங்கள் குடும்பத்தோடு வரவும்.
2.எனது கைப்பேசி எண்: 7299332422
3.வரும் போது,எங்களுக்கு தரவேண்டிய அன்பளிப்புடன்,கரையான் வீட்டிற்கு கொடுக்காமல் விட்ட,அன்பளிப்பையும் சேர்த்துகொண்டு வரவும்.

பிரியமுடன்,
பாய்.

ஞாயிறு, ஜூலை 21, 2013

HOME


நான் 26 ஜூலை முதல் செப்டம்பர் 10 வரை தாயகத்தில் இருப்பேன். அனைவரும் வந்து என்னை சந்திக்குமாறு அன்புடன்  கேட்டு கொள்கிறேன்.

கரையான்.

பின் குறிப்பு:    அன்பளிப்புகளை தவிர்க்கவும்.


நட்சத்திர குடும்பம்

பாய்.

வியாழன், ஜூலை 18, 2013

Outstanding student in year 6 - Mr.Salman



சல்மான் பீர் அவர்களின் இளைய மகன் அவர்களுக்கு
வாழ்த்துக்கள்.....வாழ்வில் எல்லா வளமும் பெற்றும் மென்மேலும் வெற்றிகளை குவிக்க வாழ்த்துக்கள்.....

சென்னை நட்சத்திரங்கள்..சார்பாக கரையான்.

புதன், ஜூலை 17, 2013

Pictures from Kaaikari garden 2013




1 - Carrots - they are out of control, I didn't thin them out so they are too dense.
2 - I planted beans but I didnt know that these were the climber variety so I made some home-made supports, will see how long it lasts!
3 - some tomatoes have started to ripen
4 - shows the whole plot - I have thakkali, kathrikkaai, pacha milagai, koda milagai, carrots, beans and kaaramana mexican pacha milagai.

Munnar pictures - second try






These images are from Munnar - I loved this place. 1st picture - in front of Anaimudi. # 2 - the hills from the guest house that we stayed at, # 3 - view of the Munnar river (I am not sure about the name of the river) # 4 - Anaimudi in all its glory with my dad's profile. # 5 - sprawling tea estates.
கால்நடை மருத்துவரா சில சமயம் சுவாரஸ்யமான பிரச்னைகளை சமாளிக்க வேண்டியது இருக்கும் ...அதைப்போன்ற அனுபவங்கள் பாய் அவர்களுக்கு பல இருக்கும் என்று நினைக்கிறேன், அவற்றை பகிர்ந்து கொள்வார் என்று எழுதி இருந்தேன், குதிரை மட்டுமல்ல ஒட்டகம் ஆடு என பலவற்றிலும் சகலகலா வல்லவர் என்பதால் மற்ற விலங்குகள் பற்றி சுவாரஸ்யமான தகவல்களை சொல்லலாம்.
ஒட்டகங்கள் breeding season இல் கொஞ்சம் aggressive ஆக இருக்கும் அந்த நேரங்களில் அவைகளுக்குள் சண்டை இட்டுக்கொள்வது சகஜம். அவ்வாறு சண்டை இடும்போது mandible fracture ஏற்படுவது சகஜம்,(anatomically camels have a long and weak mandible prone for fracture). 
பொதுவா இந்தமாதிரி பிரச்னை வந்தால் எக்ஸ் - ரே , எடுக்கணும் , ரத்தம் டெஸ்ட் பண்ணனும் இப்படி பல விஷயங்கள் இருந்தாலும், ஒரு கால்நடை மருத்துவரா என்ன செய்ய முடியுமோ அதத்தான் செய்ய வேண்டியதிருக்கும். 






இதெல்லாம் ஒரு surgery ன்னு சொல்ல முடியாது plumbing and electrical work அப்படின்னுதான் சொல்ல முடியும். மின்சார வயர், ட்ரில்லேர் , கட்டிங் பிளையர் என்று கிடைத்த பொருள்களை வைத்து surgery (??????) யை முடித்தேன். 
THE END RESULT 
இந்த புகைப்படம் அறுவை சிகிச்சைக்கு ஒருவாரம் பின்னர் எடுக்கப்பட்டது. அருமையாக புண் எல்லாம் ஆறி  விட்டது ....மிகவும் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் இந்த அறுவை சிகிச்சை முடிந்த வுடனே ஒட்டகம் சாப்பிட ஆரம்பித்து விட்டது. 

கரையான்.

செவ்வாய், ஜூலை 16, 2013

மன்னிக்கவும்-1

பல மாதங்களாக நம் பூவலைக்குள் வராததற்கு...
கடந்த ஜனவரி முதலே,கடுமையான வேலைப்பளு-அலுவலகத்திலும் சரி;வீட்டிலும் சரி.
எம் மருத்துவமனையிலோ,கடும் கூட்டம்.நானும்,நண்பன் ஜாஹிரும் வைத்தியத்தில் வல்லவர்கள் என்பதால்.அரபிகள் எங்களைத்தான் நாடி வருகிறார்கள்.எகிப்து-சூடான் மருத்துவர்கள் பக்கம் போவதில்லை[கரையான் சொல்லியிருப்பான் போல..]
வீட்டுப் பணியை எடுத்துக் கொண்டால்,சென்னை-டி.நகரில் வீடு கட்டும் பணி குறித்து அன்றாடம் பொறியாளருடன் உரையாடல்.என் குடும்பத்தை அங்கு குடியமர்த்தான் வேண்டி ,இந்தியாவில் பல்வேறு ஏற்பாடுகள்-மின் இணைப்பு, பள்ளிக்கூடங்கள் சேர்ப்பு,ரேசன் கார்ட் பெறல்,எரிவாயு இணைப்பு,மனைவி பெயரில் வங்கி கணக்கு தொடங்கல்,மகனை ஐ.ஐ.டி.கோச்சிங்கில் சேர்த்தல் .....[அவனுக்கு குஜிலி வேலை தருவதாக கூறியுள்ளதால்].
கத்தரிலோ,பள்ளிக்கூடத்தில் செட்டில்மென்ட்,வீடு மாற்றல்,வீட்டுப் பொருட்களை பேக்கிங் செய்து ஊருக்கு அனுப்பல்,குடும்பத்தாரை  ஊருக்கு அனுப்பல்.....இத்தியாதி...இத்தியாதி...

பாய்

படித்ததில் பிடித்தது...

My Wife DOES NOT WORK !!!

Conversation between a Husband (H) and a Psychologist (P):

P : What do you do for a living Mr. Bandy?
H : I work as an Accountant in a Bank.

P : Your Wife ?
H : She doesn't work. She's a Housewife only.

P : Who makes breakfast for your family in the morning?
H : My Wife, because she doesn't work.

P : At what time does your wife wake up for making breakfast?
H : She wakes up at around 5 am because she cleans the house first before making breakfast.

P : How do your kids go to school?
H : My wife takes them to school, because she doesn't work.

P : After taking your kids to school, what does she do?
H : She goes to the market, then goes back home for cooking and laundry. You know, she doesn't work.

P : In the evening, after you go back home from office, what do you do?
H : Take rest, because i'm tired due to all day works.

P : What does your wife do then?
H : She prepares meals, serving our kids, preparing meals for me and cleaning the dishes, cleaning the house then taking kids to bed.

Whom do you think works more, from the story above???

The daily routines of your wives commence from early morning to late night. That is called 'DOESN'T WORK'??!!

Yes, Being Housewives do not need Certificate of Study, even High Position, but their ROLE/PART is very important!

Appreciate your wives. Because their sacrifices are uncountable. This should be a reminder and reflection for all of us to understand and appreciate each others roles.

All about a WOMAN ....
* When she is quiet, millions of things are running in her mind.

* When she stares at you, she is wondering why she loves you so much in spite of being taken for granted.

* When she says I will stand by you, she will stand by you like a rock.

Never hurt her or take her wrong or for granted...


கரையான்.

திங்கள், ஜூலை 15, 2013

veterinarian

பாய் குறிப்பிட்ட "கால்நடை மருத்துவர்கள் தான் சிறந்தவர்கள்" குறிப்பை படித்தவுடன் என் நினைவிற்கு வந்தது செட்டிநாடு குதிரை பண்ணையில் பணிபுரிந்த போது நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது....
ஒரு முறை நான் பணியிலிருந்த பொது ஒரு குதிரை அதன் அறையில் சம்பந்தமே இல்லாமல் அதன் அறைக்குள்ளேயே சுற்றி சுற்றி வருகிறது தலையை மேல் நோக்கி பார்த்துக்கொண்டே சுற்றி வருகிறது என்று கூறினார்கள்.  தலையில் ஏதாவது அடி பட்டிருக்குமோ, இல்லை காதுக்குள்ளே கட்டேறும்போ சித்தேறும்போ நிழைந்து விட்டதோ என்றெல்லாம் எண்ணி எனக்கு தலை  கிறுகிறுத்து விட்டது. பின்னர் ஒருவாறாக குதிரையை பிடிக்க சொல்லி சோதித்து பார்த்தேன், ஒன்றும் இல்லை (ஒன்றும் தெரிய வில்லை) எல்லாம் நார்மல். ஒரே ஒரு அறிகுறி மட்டுமே நார்மல் இல்லாமல் இருந்தது, அதாவது "showing the white of the eyes" கண்ணின் வெண்மை பகுதி(sclera) சாதாரண மாக அதிகம் தெரியாது, ஒரு சில குதிரைகள் கொஞ்சம் nervous ஆக இருந்தாலோ, பயந்தாலோ நன்றாக தெரியும்(அவைகளை fractious என முடிவு செய்து கொஞ்சம் ஜாக்கிரதையாகவே அணுகுவோம்), பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக விசாரணை செய்ய ஆரம்பித்தேன், ஒரு வழியாக  அது "kittipul syndrome" என்பதை கண்டு பிடித்தேன். பண்ணையில் பணியாளர்கள் தங்களின் ஓய்வு நேரத்தில் அந்த குதிரை இருக்கும் கொட்டகை அருகில் கிட்டிபுல் (சென்னை பாஷையில் சொல்ல வேண்டுமென்றால் கில்லி) விளையாடிக்கொண்டு இருந்தார்கள் , அவர்களில் ஒருவர் அடித்த கில்லி அந்த குதிரையின் அறை கூரையில் வேகமாக வந்து சொருகி கொண்டது, இதை பார்த்து பயந்த குதிரை அதன் அறைக்குள்ளேயே வெகு வேகமாக ஓட ஆரம்பித்து விட்டது. அந்த கில்லியை அங்கிருந்து எடுத்த பின்னர் குதிரை சகஜ நிலைக்கு திரும்பி வந்தது.
சில நேரங்களில் இந்த மாதிரி CID வேலைகளெல்லாம் கூட செய்ய வேண்டும்.
நிறைய நேரங்களில் diagnostic aids இல்லாமல் பிரச்னைகளை கண்டு பிடிக்கும்போது கஷ்டமாகத்தான் இருக்கும்.
ஒருமுறை ஒரு stallion  கடுமையான colic இல் இருந்தது, அப்போது ஒரு வெள்ளைக்கார கால்நடை மருத்துவ நண்பரும் என்னுடன் இருந்தார், அந்த குதிரையின் testicle பெரிதாக வீங்கி இருந்தது, நாங்கள் இருவரும் அனேகமாக அது hernia வாக இருக்கும் என முடிவு செய்தோம், அப்போது அவர் "நான் சென்று ultrasound scanner எடுத்து வருகிறேன், அந்த வீக்கம் intestine தானா  என்பதை பார்ப்போம் என்றார், நான் அவரிடம் வெறும் steth வைத்துப்பார் intestinal sounds கேட்டால் உள்ளே intestine இருப்பது உறுதியாகி விடும் என்றேன், steth இலேயே உறுதி ஆகி விட்டது. மேலும் intestinal movements ம் தோலின் வழியாகவே நன்றாக தெரிந்தது. ரெண்டு பேராக இருந்தால் இது ஒரு plus தான். விவாதித்து விரைவாக  முடிவுகள் எடுக்கலாம்.
Dystocia சரி செய்து குட்டியை வெளியே எடுக்கும்போது குதிரை கடுமையாக strain செய்யும், அதை தடுப்பது எப்படி என்பதை அந்த நண்பர் எனக்கு சொல்லி கொடுத்தார் , epidural போட்டால் ஒரு சில குதிரைகள் நிற்க முடியாமல் கீழே படுத்து விடும், epidural -ம் போடக்கூடாது குதிரை முக்குவதையும் தடுக்க வேண்டும் எப்படி, ஒரு tube ஐ (naso - gastric  tube ) எடுத்து குதிரை மூக்கு வழியாக naso - tracheal ஆக insert செய்து விட்டால் அந்த குதிரையால் முக்க முடியாது, இதை அவர்தான் சொல்லி கொடுத்தார்.
(இந்த மாதிரி நிறைய விஷயங்கள் பாய் பகிர்ந்துகொள்வார்)
கரையான்.

ஞாயிறு, ஜூலை 14, 2013

Quote about Vet

"Personally I have always felt that the best doctor in the world is the veterinarian.He can't ask his patients  'what is the matter?'...He's  just got to know".

By,
Will Rogers.

போட்டது,
பாய்.

சனி, ஜூலை 13, 2013

கிறுக்கல்கள்....

"After all life is 1% what happens to you and 99% of how you react to it
"அனைத்து வாழ்க்கை "நீங்கள் அதை எப்படி 1% என்ன நடக்கிறது மற்றும் 99% பின்"
குஜிளியின் வாக்கியத்தை கூகுள்  மொழிபெயர்ப்பில் போட்டபோது வந்த அர்த்தம்...
இந்த தமிழுக்கு குஜிலி சொன்ன ஆங்கில வாக்கியமே கொஞ்சம் புரிந்த மாதிரி இருக்கு.
அதை புரிந்து கொண்ட என்னதான் நம்ம கவலைப்பட்டாலும் நடப்பதை நம்மால் தடுக்க முடியாது.... வாழ்க்கையை அதன் போக்கிலேயே விட்டு அதில பயணிப்போம்...இப்படிதான் நான் அர்த்த படுத்தி கொள்கிறேன்.   சில சமயங்களில் நம்மை பெரிய அளவில்  கோபப்படுத்தும் நிகழ்வுகள் நடக்கும்போது நம்முடைய ரியாக்சன் -ஐ கொஞ்சம் தள்ளி போட்டு பின்னர் ரியாக்ட் செய்தால் விளைவுகள் நமக்கு சாதகமாகவே முடியும். பொதுவாக வேலை செய்யும் இடங்களில் vet -க்கும் manager க்கும் எப்போதுமே ஒரு பனிப்போர் அல்லது ego யுத்தம் இருந்து கொண்டேதான் இருக்கும். நம்முடைய ஒரு சில முடிவுகளை mangers நம்மை தட்டி வைக்க வேண்டும் என்பதற்காகவே மாற்றுவார்கள். அந்த நேரங்களில் கோபம் வந்தாலும் கொஞ்சம் அடக்கி கொள்வது நமக்கு நன்மை பயக்கவே செய்யும். விற்பனைக்கு செல்லும் குட்டி குதிரைகளை வாகனங்களில் எடுத்து செல்லும்போது sedate செய்வது என் வழக்கம், என்னுடன் பணி புரிந்த மேலாளர் என்னை தட்டி வைப்பதற்காக அதெல்லாம் தேவை இல்லை என்று கூறி ஊசி கொடுப்பதை தடுத்து விட்டார். நானும் சும்மா இருந்து விட்டேன், ஐந்து கிலோ மீட்டர் கூட சென்று இருக்காது, மேலாளர் பதட்டமாக தொலை பேசியில் அலறினார்," டாக்டர் தயவு செய்து உடனே வரவும், கொண்டு சென்ற எட்டு குட்டிகளில் மூன்று பயங்கர கலாட்டா  செய்து வண்டிக்குள்ளேயே விழுந்து விட்டது என்ன செய்வது " என்றார். திரும்பவும் பண்ணைக்கே எடுத்து வந்து எல்லாவற்றையும் இறக்கி அந்த மூன்று குட்டிகளுக்கு சிகிச்சை அளித்து திரும்ப sedate செய்து அனுப்பி வைத்தேன், இப்படி பலவும் புதிதாக இங்கு வேலைக்கு சேர்ந்த நேரத்தில் ஏற்கனவே பல ஆண்டுகளாக குப்பை கொட்டிக்கொண்டு இருக்கும் நபர் என்னை எதிரியாக  பார்த்தார், ஒவ்வொருமுறை மாற்றங்கள் செய்யும்போதும் ஏதாவது முட்டுக்கட்டை போட்டுக்கொண்டே இருப்பார், எதற்கும் சளைக்காமல் react செய்யாமல் நம்  வழிக்கு கொண்டு வந்து அதனால் எவ்வளவு பயன் உண்டு என்பதை உணர்ந்த பின் இப்போது சிறிய வேலை என்றாலும்  நம்மிடம் கேட்க ஆரம்பித்து விட்டார். நிறைய விஷயங்களில் நம்முடைய எதிர் வினையை கொஞ்சம் தள்ளி போட்டாலே பெரும்பால பிரச்னைகள்  தீர்ந்து விடும். 

சில சமயங்களில் குழந்தைகளை படுத்துவதைபார்த்தால் சிரிப்பாக இருக்கும். என்  மகள் அக்ஷயா ஒரு முறை கணித பாடத்தில் 98% எடுத்திருந்தால், என் மனைவி குழந்தையிடம் அந்த ரெண்டு மார்க் கூட எடுத்திருந்த நல்லா  இருக்கும் என வருந்தி கொண்டு இருந்தார், அந்த கணத்தில்  98 பெருசா 2 பெருசா ? அந்த குறைந்த ரெண்டை எண்ணி 98 ஐ கொண்டாட மறந்து விடுகிறோம்.. 
 என்னதான் ஆயிரம் குதிரைகளை சாவின் விளிம்பிலிருந்து காப்பாற்றி இருந்தாலும் செத்துப்போன விலை உயர்ந்த குதிரைதான் எப்போதும் நினைவில் இருக்கும் "செத்தும் கெடுத்தான் " என்பது போல்....
சொக்கன் என்னதான் கோடி கோடியாக மருந்து விற்று கம்பெனிக்கு கொடுத்தாலும் , collection பண்ண முடியாம விட்ட பத்தாயிரம் ரூபாய் ஒரு பிளாக்  மார்க்தான். ...

கரையான். 


மட்டில்லா மகிழ்ச்சி!

பல வருடங்களுக்குப் பிறகு நண்பன் டி.பீ. உடனும்,பல மாதங்களுக்குப் பிறகு நண்பன் பீருடனும் சாட்டிங் செய்து பேசியதில்.....

மற்றவர்களும் கொஞ்சம் வந்தால் நன்றாக இருக்கும்...

பிரியமுடன்,
பாய்.

திங்கள், ஜூலை 08, 2013

HAPPY BIRTHDAY BHAI

இன்று பிறந்தநாள் காணும் பாய் அவர்கள் எல்லா வளங்களுடன் பல்லாண்டு ஆரோக்கிய வாழ்வு வாழ வாழ்த்தும்

சென்னை நட்சத்திரங்கள் 

ஞாயிறு, ஜூலை 07, 2013

கவலை கவலை கவலை

வயது ஆக ஆக வயோதிகம் வருதோ இல்லையோ கவலைகளின் அளவு கூடுவது இயல்பு அதாவது வங்கி கணக்கில் காசு அதிகம் சேர சேர நம்முடைய  உடலுக்கான மருத்துவ செலவு அதிகமாவது போல். என்னடா சம்பந்தமே இல்லாம பிதற்று ரானேன்னு நீங்கள் நினைக்கலாம்.
 பண்ணையில இந்த வருஷம் அருமையான உற்பத்தி, குறைந்த mortality நல்ல  conception என்று சந்தோஷப்பட எண்ணிக்கொண்டிருக்கும்போது பண்ணையின் top stallion திடீரென்று மண்டையபோட்டு என்னோட மன உறுதி, திறமை மேல இருக்கிற நம்பிக்கை எல்லாத்தையும்  பஞ்சராக்கி விட்டது. ஒரு stud farm ல stallion  சாகும்போது மொத்த breeding programme தலை கீழாகி விடும்.  அதன் மதிப்பு கிட்டத்தட்ட ஒரு மில்லியன்  டாலர்.   இதைப்போன்ற சம்பவங்கள் நிகழும்போது அதை முதலாளிக்கிட்ட சொல்லுவது போன்ற  தர்ம சங்கடமான நிலை அனுபவித்து பார்க்கும்போதுதான் அந்த கஷ்டம் தெரியும். அது stallion ஒ mare ஒ அதன் விலை நம்முடைய சங்கடத்தை அதிகப்படுத்தும். முதலாளியை பார்க்கவே கொஞ்சம் கஷ்டமாகவும் உறுத்தலாகவும் இருக்கும்.ஆனால்  வேறு வழியே இல்லை சொல்லித்தான் ஆகணும்.  பலமுறை இந்த வலியை அனுபவித்திருந்தாலும் ஒவ்வொரு முறையும் இந்த நிலையில் இருக்கும்போதும் முதல்முறை இந்த சங்கடம் ஏற்படுவது போல்தான் உணர்கின்றேன்.(ஓவரா தண்ணிய போட்டு மட்டை ஆகி விட்டு அடுத்த நாள் மனைவியை face செய்ய சங்கட  படும் கணவன் மாதிரி என்றுகூட சொல்லலாம்).  இந்த நிலையிலும் ஒன்றை நினைத்து என் மனதை தேற்றி கொள்வேன், அது என்னன்னா இந்த செய்திய கேட்கும் முதலாளியின் நிலை, மில்லியன் மில்லியனா காச போட்டு வாங்கி அந்த குதிரைய பத்திரமா பாத்துக்க  எனக்கு சம்பளத்தையும் அள்ளி கொடுத்து கடைசியில குதிர செத்து போச்சுன்னு நான் சொல்லும்போது அவருக்கு எப்படி இருக்கும்?

கரையான்.