வெள்ளி, ஜூலை 10, 2009

கல்யாணத்துக்கு முன்ன சாப்பாடு கிடைக்காம கஷ்டப்பட்டேன். அப்புறம்?... ஒரு வழியா கல்யாணம் ஆயிடிச்சி... இப்ப?.... இப்ப..நல்ல சாப்பாடு கிடைக்காம கஷ்டப்படுறேன்--------

நாம மத்தவங்களுக்கு உதவத்தான் பிறந்து இருக்கோம்.... சரி ... அப்ப மத்தவங்க எதுக்குப் பிறந்து இருக்காங்க?--------

பதற்றம் VS நடுக்கம் :காதலி மாசமாய் இருப்பது தெரிய வரும்போது வருவது பதற்றம். காதலி மாசமாய் இருப்பது மனைவிக்கு தெரிய வரும்போது வருவது நடுக்கம்

.--------வீட்ல எப்பவும் சிரிப்பு சத்தம் கேக்குதே? மனைவி என் மேல பாத்திரத்த தூக்கி போடுவா. மேல படலேன்னா நான் சிரிப்பேன், பட்டதுன்னா அவள் சிரிப்பா.--------

கண்ணே! நான் உன்னை என் மனச் சிறையில் வைத்திருந்தேன், உன் அப்பா என்னை மத்திய சிறையில் வைத்துவிட்டார்.---------

மனுஷனாப் பொறந்தா வாழ்க்கையில ஏதாவது பெரிசா சாதிக்கணும்... நல்லவேளை…நான் கொழந்தையாத் தான் பொறந்தேன்.----------

மனைவியை அடிப்பவர்களுக்கு ஒரு வருட சிறை தண்டனை என்று அறிவித்து விடலாமா

அரசே?.... வேண்டாம் அவ்வளவு தைரியமானவர்களை நம் படையில் சேர்த்துக்கொள்ளுங்கள்!!-----------

நான் படித்தவை நண்பர்களுக்காக.....

கரையான்.

வியாழன், ஜூலை 09, 2009

திடீரென்று மனைவி தாயகம் செல்ல வேண்டிய நெருக்கடி, பிள்ளைகளுக்கு பரீட்சை நேரம் என்பதால், நான்தான் பார்த்துக்கொள்ள வேண்டும், பண்ணையில் வேலை செய்வதால், இது ஒரு சவுகரியம் பணி நேரத்தை கொஞ்சம் மாற்றிக்கொள்ளலாம் , இருபத்தைந்து நாட்களுக்கு குழந்தைகளை கவனித்து, உணவு சமைத்து,பாத்திரம் கழுவி,துணி துவைத்து,etc..etc எல்லாம் செய்ய வேண்டிய கட்டாயம். புள்ளைங்க எப்படியெல்லாம் என்ன நெனச்சி கஷ்டப்படபோவுதோ,சின்னவ ராத்திரி எழுந்து அழுதா அவளுக்கு பூஸ்ட் பாலில் கலந்து கொடுத்திடுங்க,"செல்லங்களா உங்க எல்லோருக்கும் அம்மா ஐந்து ரியால் கொடுக்கிறேன், பள்ளியில ஏதாவது வாங்கி சாப்பிடுங்க, என்ன அப்பாவ கஷ்டப்படுத்த கூடாது.என்று ஒரு பெரிய லெக்சர் கொடுத்துவிட்டு என் மனைவி ஊருக்கு கிளம்பி சென்ற வுடன் குழந்தைகள் அனைவரும் என்னமோ "20-20 உலக கோப்பை ஜெயித்த வீரர்கள் போல ரெண்டு கையையும் உயர்த்தி தட்டிக்கொண்டு குதியாட்டம் போட்டதை பார்த்து கொஞ்சம் மிரண்டு போய் விட்டேன். என்னவோ ஹிட்லர் கொஞ்ச நாளுக்கு casual leave போட்டுட்டு போறது போல பசங்க குதியாட்டம் போட்டத என் பொண்டாட்டி பாத்திருந்தால் அவ்வளவுதான்....
மனைவியை ஊருக்கு அனுப்பிய அடுத்த நாள், கண்ணீர் சிந்தி கஷ்டப்பட்டு வெங்காயம் வெட்டிக்கொண்டு இருக்கிறேன், சின்னவள் அக்ஷ்யா என்னிடம் வந்து ஏனப்பா அம்மா ஊருக்கு போய்ட்டாங்கன்னு அழரயா, இன்னும் கொஞ்சம் நாள்தான்ப்பா நம்ம எல்லாம் ஊருக்கு போய் அம்மாவ பாக்குலாம்,கவலைப்படாதே" உங்களுக்கெல்லாம் அம்மா ஊருக்கு போனது கஷ்டமா இல்லையாம்மா என நான் கேட்டேன், இதெல்லாம் பெரிய விஷயமாப்பா, அதான் நீ இருக்கிறே சமைக்க மற்ற எல்லாம் வேலையும் பார்க்க, உன்னால முடியலன்னா HERFY இலையோ MC டானல்ட்,KFC லியோ சாப்பிட்டுக்க வேண்டியதுதான்.
பண்ணையில வேலை நெருக்கடி போதாதுன்னு வீட்டு வேலையும் சேர்ந்ததால், சிக்கன் செய்யும்போது உப்புக்கு பதில் சர்க்கரையை கொட்டி குழந்தைகிளின் கிண்டலை சமாளித்தது ஒரு பெரிய காமெடி.
பெரியவள் காயத்திரி" அப்பா நீயே அம்மாவ விட நல்லாத்தான் சமைக்கிரே அம்மாவ வேணும்னா அங்கயே இருந்து பாட்டியை பாத்துக்க சொல்லலாம்பா"
ஒரு முறை குஜிலி நான் செட்டிநாடு குதிரைப்பன்னையில் பணிபுரியும்போது அங்கு வந்திருந்தார், "குமரன் குழந்தைங்க ரொம்ப வேகமா வளருவாங்க, இப்பதான் குழந்தையா பாத்தா மாதிரி இருக்கும் அதுக்குல்ள்ள இவ்வளவு பெரிசாயிட்டங்கலேன்னு மலைப்பா இருக்கும்" என்று கூறியதுதான் இப்போது நினைவு வருகிறது.
"டேய் கார்த்தி பரீட்சைக்கு படிக்கிறயா, நான் சொல்லி தர்றேன் உன்னோட பாட புத்தகம் எடுத்து வா" என்று நான் கூறினால் "அப்பா உனக்கு இதெல்லாம் தெரியாதுப்பா, நீ படிச்சது வேற இப்ப நாங்க படிக்கறது வேற, இது கொஞ்சம் கஷ்டமப்பா" அவன் எனக்கு சொல்லி தருகிறான்.
நான் படும் கஷ்டத்தை பார்த்து இங்குள்ள நண்பர் ஒருவர் அவர் குடும்பத்துடன் வந்து அவர் மனைவியை விட்டு சமைத்து கொடுத்து விட்டு சென்றார், குழந்தைகள் சாப்பிட்டு விட்டு "ஐயோ பாவம்ப்பா அந்த அங்கிள்" என்று அடிக்கும் கமென்ட் கொஞ்சம் எனக்கே ஓவராகத்தான் படுகிறது.
இன்னும் பதினாறு நாட்கள் கடத்த வேண்டும், அதற்குள் இன்னும் என்னவெல்லாம் காமெடி நடக்கப்போவுதோ.....
கரையான்.

செவ்வாய், ஜூலை 07, 2009

Blogspot Vs GetTogether

List out the differences :Blogspot /Gettogether
1.True Friendship/Tour Friendship.
2.get in touch round the clock/once in a bluemoon[Kurinchippoo]
3.cheap/expensive.
4.no need to travel/should travel.
5.indirect communication/direct.
Dear Friends-try to list out some other differences.
BHAI.

சனி, ஜூலை 04, 2009

நம் நண்பர்கள் சிரிக்க சில சர்தார்ஜி/மதராசி ஜோக்ஸ்
சர்தாரின் அப்பா இறந்து போனார். துக்கம் தாளாமல் சர்தார் உக்கார்ந்து அழுது கொண்டிருந்தார். அப்போது அவருக்கு ஒரு போன் கால் வருகிறது. பேசி முடித்தவுடன் இன்னும் பலமாக அழத் தொடங்கினார்.
நண்பர்: இப்போ என்ன ஆச்சு?
சர்தார்: என் தங்கை போன் பண்ணினா.. அவளோட அப்பாவும் இறந்துட்டாராம்...!!

கோர்ட்டில்...
ஜட்ஜ்: ஆர்டர்..ஆர்டர்..ஆர்டர்..
சர்தார்: பிட்சா, ரெண்டு இட்லி, மூணு தோசை, நாலு பூரி, அஞ்சு வடை, ஒரு கூல் ட்ரின்க்...
ஜட்ஜ் : ஷட் அப்..
சர்தார்: இல்ல.. இல்ல.. எனக்கு செவன் அப்..

சர்தாரின் மனைவி இறந்த போது அவர் தனது பெயரை மாற்றிக் கொண்டார். எப்படி தெரியுமா?
சர்தார் B.A (Bachelor Again)
சர்தாருக்கு மறுமணம் நடந்தது. மீண்டும் அவர் தனது பெயரை மாற்றிக் கொண்டார். இப்போ அவரோட பேர் என்ன தெரியுமா?
சர்தார் M.A (Married Again)

சர்தார்: சார், என்னோட செக் புக் தொலஞ்சு போச்சு..
மேனஜர்: பார்த்து சார், யாராவது உங்க கையெழுத்தை போட்டு ஏமாத்திடப் போறாங்க..
சர்தார்: நான் என்ன பேக்கா? இப்படி ஏதாவது நடக்கும்னு தான் முதலிலேயே எல்லா செக்கிலையும் கையெழுத்து போட்டு வச்சிருக்கேன்..
சர்தார்ஜிகளின் புத்திசாலி தனத்திற்காகவும் ஒரு ஜோக்

இங்கிலாந்து. ரயில் நிலையம். மூன்று சர்தார்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எதிரே மூன்று வெள்ளையர்கள். சர்தார் போய் ஒரே ஒரு டிக்கட் மட்டும் வாங்கி வந்தார். வெள்ளைக்காரர்களுக்கோ ஆச்சரியம். எப்படி ஒரே ஒரு டிக்கட்டில் இவர்கள் பயணம் செய்கிறார்கள் என்று பார்க்க விரும்பினார்கள் . ரயில் வந்ததும் எல்லோரும் ஏறினர். டிக்கட் செக் பண்ண ஆள் வந்தபோது மூன்று சர்தாரும் எழுந்து கழிவறைக்குள் சென்று நின்று கொண்டார்கள். TTE கதவை தட்ட ஒரே ஒரு கையை மட்டும் நீட்டி டிக்கட்டை நீட்ட, அவர் போய் விட்டார். ஆகா, இத்தனை நாள் இதை நாம் செய்யாமல் போய் விட்டோமே என்று வெள்ளைக்காரர்களுக்கு தோன்றியது. திரும்பி வரும்போது வெள்ளைக்காரர் ஒரே ஒரு டிக்கட் மட்டும் எடுத்தார்கள். இந்த முறை சர்தார்கள் ஒரு டிக்கட் கூட எடுக்க வில்லை. மற்றவர்களுக்கோ குழப்பம். என்னடா இந்தத் தடவை டிக்கட்டே எடுக்க வில்லை, சரி பார்ப்போம் என்று ரயிலில் ஏறினார்கள். வெள்ளை மக்கள் மூவரும் TTE வருவதைப் பார்த்தவுடன் கழிவறைக்குள் ஓடி விட்டனர். இப்போது சர்தார் ஒருவர் பொறுமையாக எழுந்து போய் கழிவறையின் கதவைத் தட்டினார்.."சார்.. டிக்கட்..?"
இதெல்லாம் மாற்ற பிளாகில் நான் படித்தது, நண்பர்களுக்காக....
கரையான்.

வெள்ளி, ஜூலை 03, 2009

gujili avarkale பல நகைச்சுவை அனுபவங்கள் என் சொந்த அனுபவங்களும் உண்டு என்பதை நான் வெட்கம் இல்லாமல் ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும்.

நண்பர்கள் சிரிக்க மேலும் சில நகைச்சுவைகள் biலாகில் படித்தது.

பேரங்கள் எப்படிப் படியும்? அதீத சாமர்த்தியசாலி யாரோ அவருடையநோக்கத்திற்குப் படியும்.அதை விளக்கிக் கற்பனைச் சம்பவம் ஒன்றை ஒருவர் எழுதியிருக்கிறார்.அதை நீங்கள் அறியத்தருவதில் உவகை கொள்கிறேன்.படித்து மகிழுங்கள்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

காட்சி ஒன்று:ஒரு தந்தைக்கும் அவருடைய மகனுக்கும் நடக்கும் உரையாடல்!"மகனே, நான் தேர்ந்தெடுக்கும் பெண்ணை நீ திருமணம் செய்துகொள்ள வேண்டும்""நோ, டாடி, என் விருப்பப்படி என் திருமணம் அமைவது நல்லது. பெண்ணைத்தேர்ந்தெடுப்பதை என்னிடம் விட்டு விடுங்கள்"பெண் யாரென்று தெரிந்தால் நீ மறுக்க மாட்டாய்"ஆர்வத்துடன் மகன் கேட்டான்: "யாரது டாடி!"பெண் பில்கேட்ஸின் மகள்""அப்படியென்றால் டபுள்ஓக்கே !"

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

காட்சி இரண்டு:அடுத்து அந்தப் பையனின் தந்தை பில்கேட்ஸைச் சந்தித்துப் பேசுகிறார்"உங்களுடைய மகளுக்கு என்னிடம் ஒரு நல்ல வரன் இருக்கிறது!""என் மகளுக்கு இப்போது திருமணம் செய்யும் உத்தேசம் இல்லை. ஒரு ஆண்டுசெல்லட்டும்.""நான் சொல்லும் இளைஞன் உலக வங்கியின் துணைத் தலைவர்."ஆச்சரியம் அடைந்த பில்கேட்ஸ், உற்சாகமாகச் சொல்கிறார் "ஆகா, சின்னவயதிலேயே உலக வங்கியின் துணைத் தலைவரா? அப்படியென்றால் எனக்குச்சம்மதமே!"

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பையனின் அப்பா, முடிவாக உலகவங்கியின் தலைவரைச் சந்திக்கிறார்."உங்கள் வங்கியின் துணைத்தலைவர் பதவிக்கு அசத்தலாகப் பொருந்தக்கூடியஇளைஞன் ஒருவனை எனக்குத் தெரியும். அழைத்து வரவா?""வேண்டாம். ஏற்கனவே அந்தப் பதவியில் இருவர் இருக்கிறார்கள்""ஆனால் நான் சொல்லும் இளைஞன் பில்கேட்ஸின் மாப்பிள்ளை!""ஓ..... அப்படியென்றால் உடனே பதவியளிக்க நான் தயார்!+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இப்படித்தான் உலகலவில் முக்கியமான பேரங்கள் நடக்கின்றன!

புதன், ஜூலை 01, 2009

பிளாகில் படித்தது நண்பர்களுக்காக

இரு நண்பர்கள், பார்டியில்...ந1 : "என் மனைவி தேவதை! "

ந2 : "நீ அதிர்ஷ்டசாலி, என் மனைவி உயிரோட இருக்கா!!"

நிச்சயத்தின்போது...மகன்: "யப்பாடி.. ஒரு வழியா அம்மா மாதிரி பெண் கிடச்சாச்சு!"

அப்பா: "உனக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!!

"மகன்: "கல்யாணம் செஞ்சா எவ்வளவு செலவாகும்ப்பா?"

அப்பா: "தெரியலப்பா... இன்னமும் செலவு செஞ்சிகிட்டுதான் இருகேன்!!

"மனைவி: "ஏங்க.. திருடுபோன "கிரிடிட் கார்ட்" பத்தி ஏன் போலீஸ் கம்பளென்ட் செய்யல?"

கணவன்: "திருடன் உன்னவிட கம்மியா செலவு பண்றான், அதான்!"

இரண்டு நண்பர்கள் பாரில்...கண்ணா: சே!.. இந்த பொண்டாடிங்களை அடக்கவே முடியாது போல.. நீ எப்டிடா?

விநோத்: நேத்து என் பொண்டாட்டி முட்டி போட்டு நடக்க வச்சேன்.

கண்ணா: ஆஆ.. அப்புறம்?

விநோத்: அப்புறம் சொன்னா.. "மரியாதையா, ஆம்பள மாதிரி கட்டிலுக்கு கீழ இருந்து வெளிய வந்து சண்ட போடுன்னு!"

மனைவிகிட்ட சண்டை வராமல் இருக்க... 5 வார்தை மந்திரம்!

"என்னை மன்னிச்சிகோ!" & "நீ சொன்னா சரிதான்!"

கரையான்.