புதன், டிசம்பர் 11, 2013

மறக்க முடியுமா...

ஹாக்கி விளையாட தெரிந்தவர்கள்  நம்ம வகுப்பில் ரெண்டு பேர்தான் தேறுவார்கள் என நினைக்கிறேன் வரதராஜன் மற்றும் வைரவசாமி , மற்ற வேறு யாரும் விளையாடியதாக நினைவில் இல்லை. நம்முடைய ஜூனியர்  அணியில் கிட்டத்தட்ட எட்டு பேர் கல்லூரி அணிக்காக விளையாடி கொண்டு இருந்தார்கள், அவர்கள் அணியின் முன் நம் அணி அர்ஜென்டினா கால்பந்து அணியுடன் இந்திய கால்பந்து அணி விளையாடினால் எப்படி இருக்குமோ அதுபோன்ற நிலைதான். இருந்தாலும் நம் அணி வீரர்கள் அருமையான ஒரு கூட்டமாக எதிரணியை குழப்பி, குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதில் வல்லவர்கள். இந்த முறை வரதராஜன் எனக்கு கோல் கீபர் வேலை கொடுக்காமல் மிட் பீல்ட் பதவி கொடுத்தார்(அப்போதுதான் முதல் முறையாக நான்  ஹாக்கி ஸ்டிக்-ஐ தொட்டேன்), ஓடி கொண்டே இரு எங்கேயும் நிற்காதே, பந்து எவரிடம் போனாலும் குச்சியுடன்(ஸ்டிக்) அவர்களை விரட்டிக்கொண்டே இரு இதுதான் கேப்டன்-ன் கட்டளை. மற்ற நண்பர்களுக்கும் அதே கட்டளைதான், இதிலே கொடுமை என்னவென்றால் பலருக்கும் ஆட்ட விதிமுறைகள் கூட தெரியாது, ஆனால் எல்லோரும் ஸ்டிக் ஐ எடுத்துக்கொண்டு களம் இறங்கி விட்டார்கள். காப்டனின் இன்னொரு கட்டளை "அவர்கள் கோல்  அடிக்க விட்டுவிட கூடாது, tie breaker ல் பார்த்து கொள்ளலாம்."  இருந்தாலும் அவர்கள் ஒரு கோல் அடிக்க ஆட்டத்தில்  பரபரப்பு கூடி விட்டது, தட்டு தடுமாறி நம் அணிக்காக வரதராஜனும் ஒரு கோல் அடிக்க எதிரணி வலுவாக இருந்தாலும் கொஞ்சம் அவர்களின் தன்னம்பிக்கையில் ஒரு சிறு விரிசல்...இது போதுமே நம்ம ஆட்கள் வழக்கமான கோஷ்டி கோஷ்டியாக தடுப்பாட்டம் ஆடி மேலும் அவர்கள் வெற்றி கோலை  அடிக்காமல் தடுத்து வெற்றி-தோல்வியை நிர்ணயம் செய்ய tie breaker முறைக்கு பந்தயத்தை நடத்தி சென்றார்கள். Tie breaker -ல் வரதராஜன் goal keeper  ஆக செயல் பட்டார், அந்த முறையிலும் 3-3 என டிரா ஆகி விட்டது, அடுத்ததாக sudden death முறை, அந்த முறையில் நாம் வெற்றி பெற்றோம். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் நம் அணி யானையின் காதில் புகுந்த எறும்பு, வெறும் இரண்டு வீரர்கள்களை வைத்துக்கொண்டு ஒரு பெரிய அணியை வீழ்த்தினோம். 
(சென்ற பதிவில் பாய் பௌலிங் பற்றி சொல்ல மறந்து விட்டேன் நம் அணி pg அணியுடன் விளையாடிய ஒரு மாட்சில் dr .iyappan அவர்களை முதல் பந்திலேயே கிளீன் போல்ட் ஆக்கி வீழ்த்தியது இன்னும் கண் முன்னே நிற்கிறது, நான்தான் அப்போது wicket -keeper )

கரையான்.

திங்கள், டிசம்பர் 09, 2013

சனி, டிசம்பர் 07, 2013

மறக்க முடியுமா??

கிரிக்கெட்டில் நம்ம வகுப்பில் பல ஜாம்பவான்கள் இருந்தாலும் கல்லூரி அணிக்கு தேர்வானவர்கள் குறைவுதான். அருண்,செந்தில்,பாய், பாபு, பார்த்திபன்,தாஸ்,குமாரவேல்  இப்படிப்பட்ட சூப்பர் டூபர் வீரர்கள் இருந்தாலும் நமக்கு இரண்டு வருட ஜூனியர்கள் பாஸ்கர் சேதுபதி தலைமையிலான அணி ரொம்பவும் வலிமை வாய்ந்ததாக  இருந்தது. நம்ம வகுப்பு அணி எப்போதும் முதல் சுற்றில் தோற்று வெளியேறியதில்லை, எப்படியோ அடித்து பிடித்து இறுதி சுற்றுக்கு வந்து சேர்ந்து விடுவோம். அப்படி ஒரு ஆட்டத்தில் நமக்கு இரு வருட ஜூனியர் களுடனான ஆட்டம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. டாசில் வென்ற எதிரணி நம்மை பாட்டிங் செய்ய அழைத்தது. நம்ம அணியின் "the wall" என்று அழைக்கப்படும் பாபு, முதல் ஓவரிலேயே திரும்பி விட்டான், தலை சிறந்த மட்டையாளர்கள் எல்லாம் தலை தப்பினால் போதும் என்று சென்ற வேகத்திலேயே சுவற்றில் அடித்த பந்தாய் திரும்பி விட்டார்கள்,எதிரணியை சேர்ந்த சத்தியமூர்த்தி மேற்கிந்திய தீவு வேகப்பந்து வீச்சாளர்களான Holding, Garner, Marshal ரேஞ்சுக்கு பந்து வீசிக்கூண்டு இருந்தான், இருபது ரன்னுக்குள் 4 விக்கெட்களை பறி  கொடுத்து விட்டு நம் அணி தடுமாறி கொண்டு இருந்தது, நம்முடைய அணி வீரர்களுக்குள்ளே கடும் போட்டி யார் பாட்டிங் செய்ய கடைசியாக செல்வதென்று (நான் போகல நீ போ அடுத்து என்று ஒவ்வொருவரும் அடுத்தவரை அனுப்புவதிலேயே குறியாக இருந்தார்கள்) ஜாம்பவான் களுக்கே இந்த நிலை என்றால் என்னைப்போன்ற tailenders நிலைமை என்னவாகும், இப்படி நீ போ நான் போ என்ற போட்டியில் ஐந்தாவது ஆட்டகாரனாக என்னை தள்ளி விட்டார்கள்(அனுப்பினார்கள் என்ற சொல் இங்கே உபயோகப்படுத்த முடியாது), முதல் சில பந்துகள் வயிற்றில், கையில் என உதை  வாங்கி கதறிக்கொண்டு நின்றேன், சில அடிகள் வாங்கிய பின் கொஞ்சம் கோபம், பொண்ணுங்க முன்னாள் அடி வாங்கியதால் ஏற்பட்ட அவமானம் (நம்முடைய ஜூனியர் களை ஊக்கப்படுத்த அவர்கள் பாட்ச் பெண்கள் மைதானத்திற்கு வந்திருந்தார்கள்) எல்லாமாக சேர்ந்து இனி தப்பிக்க வேறு வழியே இல்லை பதில் தாக்குதல்தான் ஒரே வழி என முடிவு செய்தேன்..சத்தியமூர்த்தியின் பந்து வீச்சை சமாளிக்க ஒரே வழி திரும்ப தாக்குவது, கண்ணை மூடிக்கொண்டு மட்டை சுழட்ட இரண்டு சிக்ஸர், அது வரை தெனாவட்டாக பந்து வீசிக்கொண்டு இருந்த எதிர் அணி கொஞ்சம் இறங்கி  வந்தது, என்னுடன் தாஸ் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினான், நாங்கள் இருவரும் கிட்டத்தட்ட அறுபது ரன்கள் சேர்த்தோம், பின்னர் தாஸ் அவுட்டாகி வெளியேற அருண் வந்தான், நன்றாக விளையாடிக்கொண்டு இருக்கும்போது அருண் ஒரு single run -க்கு அழைக்க நான் வேகமாக ஓடினேன், ஆனால் அவன் அழைத்தானே தவிர ஓட வில்லை, நான் அவுட்டாகி வெளியேற வேண்டியதாகியது , பயங்கர கடுப்பில் பிட்சிலேயே வைத்து அவனை திட்டி விட்டு வந்தேன்.(அதற்காக பிறகு மன்னிப்பு கேட்டேன்), முடிவில் ஓரளவு மரியாதையான ரன்கள் எடுத்திருந்தோம், 130 என்று நினைக்கிறேன். நாம் அந்த மாட்சில் தோற்றாலும் போராடி தோற்றோம் அவர்கள் 8 விக்கட்டுகளை இழந்து கடைசி ஓவரில்தான் வெல்ல முடிந்தது....நம் அணியில் பாய், பார்த்திபன், பாபு, அருண், செந்தில், குமாரவேல் சிறப்பாக பந்து வீசினார்கள்.

கரையான்.

வெள்ளி, டிசம்பர் 06, 2013

மறக்கமுடியுமா...


இந்த புகைப்படத்தை  பார்க்கும்போது பழைய நினைவுகள் சிறகடித்து பறக்க ஆரம்பித்து விட்டது....
நம்ம பாட்ச் -ல ஒரு பெரிய பலம்  நான் பெரியவன் என்ற எண்ணம் இல்லாமல்  ஒரு அணியாக செயல் படுவது... நான் கைப்பந்து மற்றும் சிறகுப்பந்து ஆகிய  விளையாட்டுகளிலும் நன்றாக விளையாடக்கூடியவனாக இருந்தாலும், கிட்டத்தட்ட எல்லா விளையாட்டுகளிலும் கலந்து கொண்டு விளையாடினேன்.(செஸ், carrom ஆகிய மூளையை உபயோகித்து விளையாட வேண்டிய விளையாட்டுக்கள் தவிர) அதில் நடந்த சுவாரஸ்யமான தகவல்கள் என் நினைவிலிருந்து.....
நம்முடைய immediate juniors உடன் விளையாடிய கால்பந்து போட்டி மறக்கமுடியாத ஒன்று...வரதராஜன் வைரவசாமி அப்பாலோ ஆகிய முக்கிய வீரர்கள் சேர்ந்து ஒரு அணியை உருவாக்கினார்கள் என்னை goal keeper(பலி கடா) ஆக தேர்வு செய்து, மிகப்பெரிய பொறுப்பை(காக்கை  தலையில் பனம்பழம்) என்னிடம் ஒப்படைத்தார்கள், நமக்கு எதிர் அணி நல்ல பலம் வாய்ந்தது, அதில் நம் கல்லூரி அணியின் முக்கியமான வீரர்கள் இருந்தது அவர்களுக்கு பெரும் பலம். என்னதான் சிறந்த வீரர்களாக இருந்தாலும் எதிர் அணியில் உள்ளவர்கள் ஒரு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு விளையாடா  விட்டால் நன்றாக விளையாடுபவர்களின் ரிதம்(rhythm ) பாதித்து   அவர்களால் சிறப்பாக விளையாட்டை வெளி படுத்த முடியாது, நம் ஜூனியர்கள் ராணுவ வீர்கள் போல் சிறப்பாக அணி வகுத்து விளையாடுபவர்கள் நம் அணி வீரர்கள் நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்து விட்டது போல் சிதறி ஓடி அணி வகுப்பை சீர் குலைப்பவர்கள், இதனால் அந்த சிறந்த அணி திணறி விட்டது. நம் அணியில் எல்லோரும் mid fielders , defenders, forward எல்லா நிலைகளிலும் விளையாடி எதிரணியின் அனைத்து ஆட்டக்காரர்களையும் நிலைகுலைய வைத்து வெறுப்பேற்றி கொண்டு இருந்தார்கள், ஒரே இடத்தில் நின்று ஆடியவர்கள் என்றால் நான் கோல் கீபர் மற்றவர் அப்பாலோ அவன் முட்டியில் அடிபட்டிருந்ததால் அதிகம் ஓட முடியாமல் defendfer ஆக விளையாடிக்கொண்டு இருந்தான். முதல் பாதியில் கோல்  இல்லை , இரண்டாவது பாதியிலும் அதே நிலை , வரதராஜன் நாம் எப்படியாவது சமன் செய்து விட்டால் tie breaker  இல் ஜெயித்து விடலாம் என்று ஆலோசனை கொடுத்தார். இன்னும் பத்து நிமிடங்கள்தான் அவர்கள் ஜெயிக்க விளையாடிக்கொண்டு இருந்தார்கள் நாங்கள் தோற்காமல் இருக்க விளையாடி கொண்டு இருந்தோம். ஒரு கட்டத்தில் அவர்கள் அணியின் ஐயப்பன் மிகவும் கடுப்பாகி மைதானத்தின் அவர்கள் பக்க பாதியிலிருந்து பந்தை வேகமாக உதைத்தான்,பந்து என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது, சுலபமாக பிடிக்க கூடியதாக பறந்து வந்து கொண்டிருந்தது, நானும் முன்னேறி பிடிக்க செல்கிறேன், அது வரை சும்மா இருந்த அப்பாலோ தலையால் முட்டி பந்தை திருப்பி அனுப்ப முயற்சி செய்ய அவன் நடு  மண்டையில் பட்டு பந்து மேலெழுந்து பின்னோக்கி பறக்க தொடங்கியது, அதாவது என் தலைக்கு மேல் கோலை நோக்கி, அவ்வளவுதான் ஆட்டம் முடிந்து விட்டது...
இன்னும் சுவாரஸ்யமான தமாஷ்களுடன்  தொடரலாம்....

கரையான்.

திங்கள், டிசம்பர் 02, 2013

யாரிடமும் சொல்லிடாத சொக்கா.....

நம்மிடம் பல நேரங்களில் நண்பர்கள் "உனக்கு மட்டும்தான் தெரியும் வேற யாருகிட்டயும் இத பத்தி பேசாத" என முக்கியமான அல்லது உப்புசப்பில்லாத விஷயங்களை சொல்வதுண்டு.  இந்த உனக்கு மட்டும் தெரிந்த மேட்டர் பலருக்கும் தெரியும் என்பதுதான் உண்மை.
சென்ற முறை தாயகம் வந்திருந்தபோது நம்ம எஸ்.கே.பீ மற்றும் நண்பர்களை சந்திப்பதற்காக ஈரோடு சென்றிருந்தேன். எஸ்.கே.பீ என்னை அழைக்க ரயில் நிலையம் வந்திருந்தான், சம்பிரதாயமான நலம் விசாரிப்புகளுக்கு பின் "மாப்பிள நான் துபாய் போவது யாருக்கும் தெரியாது நீ இத பத்தி யாருக்கிட்டயும் பேச வேணாம்" என்றான், ஒருவேள நாம பிரதமர் மன்மோகனுக்கோ, முதல்வர் ஜெயலலிதாவுக்கோ சொல்லி இவன் துபாய் போவதா தடுத்துடுவோம்னு நினைக்கிறானோ என்று நினைத்து சத்தியம் செய்யாத குறையாக நான் யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று கூறினேன். அவனுடன் கால்நடை மருத்துவமனையில் உள்ள வீட்டிற்கு சென்றடைந்தேன். வீட்டிற்கு வெளியே வேறொரு கால்நடை மருந்தகத்தில் பணி  புரியும் கால்நடை மருத்துவர் நின்றிருந்தார், நாங்கள் காரை விட்டு இறங்கியவுடன் அறிமுகப்படலம் முடிந்த வுடன், "நீங்க எப்ப சார் துபாய் போறீங்க " என்று எஸ்.கே.பீ இடம் கேட்டார், அவரிடம் எதையோ சொல்லி சமாளித்தான்,பின்னர் என்னிடம்"வேற ஒன்னும் இல்லடா துறை ரீதியா அனுமதிக்கு விண்ணபித்து இருக்கேன் அதான் அவனுக்கு தெரிஞ்சிருக்கு" என்றான். கொஞ்சம் நேரம் கழித்து வேறொரு கால்நடை மருத்துவர், அவர் வேறொரு துறையில்(கால்நடை மருத்துவத்திற்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத) பணி  புரிகிறார், "என்ன அண்ணாச்சி துபாய் போறீங்கன்னு கேள்வி பட்டேன் " என்று எஸ்.கே.பீ யை பார்த்து வினவினார்.  அடுத்த நாள் நாங்கள் இருவரும் ஒரு பால்பண்ணைக்கு சென்றோம், எங்கள் இருவரையும் அந்த பண்ணைக்கு வேறொரு கால்நடை மருத்துவர் அழைத்து சென்றார், அவரும் எஸ்.கே.பீ இடம் துபாய் செல்வதை பற்றி விசாரித்தார், இப்போது எனக்கு பழகி விட்டது, அந்த பண்ணையில் எங்கள் பணி முடிந்தவுடன் அந்த பண்ணையின் முதலாளி " என்னங் டாக்டர்  துபாய் போராருங்க்லாட்ருக்கு...சொல்லவே இல்லீங்...." எஸ் கே பீ "உங்களுக்கு எப்படி தெரியும் " என்றான் "அட போங்  இந்த விஷயம் ஊரு பூர தெரியுங் அல்லாம் பேசிக்றாங்  "   எனக்கு மட்டுமே தெரிந்த  ராணுவ ரகசியம் ஊரு பூரா சிரிப்பா சிரிக்குதே என நினைத்து கொண்டேன். பின்னர் சந்தித்த அனைவரும் (பகவதி , தங்கவேல் உட்பட) இந்த ரகசியத்தை எஸ் கே பீ இடம் கேட்டார்கள்.
நாங்கள் இருவரும் அந்த பால் பண்ணையிலிருந்து வெளியேறும்போது ஒரு மாடு மற்றொரு மாட்டிடம் எங்களை காட்டி ஏதோ கத்தியது அதன் பாஷை புரியாததால் அந்த வார்த்தைகளை கூகிள் மொழிபெயர்ப்பில் போட்டு பார்த்தேன், கீழ்கண்டவாறு மொழி பெயர்த்தது...
 " ஏற்கனவே நமக்காக இருந்த ஒரே நல்ல மருத்துவர் பொள்ளாச்சி இப்ராஹிம்  பாய் அவரு துபாய் போய்ட்டார் , அடுத்த சூப்பர் மருத்துவர் இவரும் துபாய் போறாரு நம்ம கதி இனி அதோகதிதான்"

கரையான்.