வியாழன், நவம்பர் 28, 2013

சனி, நவம்பர் 23, 2013

ரத்த தானம்

 என்னுடன் பணி  புரியும் ஒரு தொழிலாளிக்கு குதிரை அடித்ததால் கால் முறிவு ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டார், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறிவிட்டார்கள், அதற்கு அவருக்கு நான்கு யூனிட் ரத்தம் O +ve  ரத்தம் தேவை, தயார் ஆனவுடன் அறுவை சிகிச்சை செய்வதாக கூறினார்கள், எங்கள் பண்ணையில் பணி புரியும் மற்ற வேலை ஆட்கள் மற்றும் நான் என எட்டு பேர் சென்றோம், ஆனால் அதில் மூன்று பேரிடம் மட்டுமே ரத்தம் எடுக்க முடியும் என கூறி விட்டார்கள், வேறு குரூப், மற்றும் haemoglobin அளவு குறைவாக இருந்தது என கூறி நிராகரித்து விட்டார்கள், குறைந்தது 13.0mg இருக்க வேண்டும் எனக்கு 12.9 mg என்பதால் என்னிடமும் ரத்தம் எடுக்க முடியாது என்று கூறி விட்டார்கள், பின்னர் நண்பர்களுக்கு தகவல் கூறி இரண்டு பேர் வந்து ரத்தம் கொடுத்தார்கள்,  ரத்த வங்கியில் காத்திருக்கும் நேரத்தில் அங்கு பணியிலிருந்த பிலிப்பின்ஸ் நாட்டை சேர்ந்த nurse -ஐ பார்த்து மிக பரிதாபமாக இருந்தது. பல நாட்டவர்கள் பல மொழி பேசுபவர்கள் என அவர்களை சமாளித்ததை பார்த்த போது வியப்பாக இருந்தது. சிரியா நாட்டவர் இருவர் வந்திருந்தனர், அவர்களை ஒருவரின் ரத்தம் நார்மல் இல்லை என மற்றொருவருக்கு மட்டுமே எடுக்க முடியும் என கூறினார் அந்த nurse , நிராகரிக்கப்பட்டவர் பரவாயில்லை இன்னொரு unit ஐயும் அவருடன் வந்த மற்ற நபரிடம் சேர்த்து  எடுக்க கூறினார், ஆனால் அந்த nurse ஒருவருடமிருந்து ஒரு unit மட்டுமே எடுக்க முடியும் என விவரிக்க பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை. அடுத்து ஐந்து சவுதி நாட்டவர்கள்  அவர்களின் உறவினருக்கு ரத்தம் கொடுக்க வந்தார்கள், இரண்டு பேர் உடல் எடை குறைவாக இருந்ததால் நிராகரிக்கபட்டார்கள் , மீதி மூன்று பேரிடம் ரத்தம் எடுக்க அந்த nurse தயாரானார், அதில் ஒருவர் எவ்வளவு ரத்தம் எடுப்பீர்கள் என்று கேட்டார், 450 மில்லி என கூறி அந்த ரத்த பையையும் காட்டினார், அதை கேட்ட சவுதி டென்ஷன் ஆகி, என்னுடைய உடம்பிலிருந்து அவ்வளவு ரத்தம் எடுத்தால் நான் செத்து விடுவேன், ஒரு 100 மில்லி வேண்டுமானால் எடுத்து கொள் என கூறினார், அந்த பெண் இல்லை சார் ஒரு பையின் அளவு 450 மில்லி, உலகம் பூராவும் இப்படிதான் எடுக்கப்படுகிறது, குறைவாக எடுத்தால் உபயோகம் அற்று போய்  விடும் என கூறினார், ஆனால் அந்த சவுதி விடுவதாக இல்லை, எங்கள் நான்கு பேரிடமிருந்தும் நூறு நூறு மில்லி ஒரே பையில் பிடித்துகொள் என ஏதோ குழாயில் தண்ணி பிடிப்பது போல் விவாதம் செய்தார், அந்த பெண் அப்படியெல்லாம் செய்ய முடியாது சார், உங்களால் கொடுக்க முடியாதென்றால் நீங்கள் சென்று வேறு ஒருவரை அழைத்து வாருங்கள், என்று கூறி விட்டு உள்ளே சென்று விட்டார். இவர்கள் படுத்தியது போதாதென்று, ரத்தம் கொடுக்க வந்த என் நண்பர், ரத்தம் கொடுத்து முடித்த வுடன் லேசாக மயக்கமாகி என்னை டென்ஷன் ஆக்கினார்.

கரையான். 

செவ்வாய், நவம்பர் 19, 2013

முதலாளியின் நஷ்டம் என்னுடைய நஷ்டம்.....

என் முதலாளி குதிரை விற்காததால் அவருக்கு நஷ்டமோ இல்லையோ எனக்கு நஷ்டம்,  முதலாளிக்கு ஆதரவாக  பேசினாலும் மனது பூராவும் கோபமும் இயலாமை உணர்வும் இருப்பதை மறுக்க முடியாது. குதிரை விற்பனைக்கு ஏற்றவாறு எனக்கு ஊக்க தொகை(incentive ) வழங்கப்பட வேண்டும், சரியாக விற்பனை ஆகாததால் எனக்கும் நஷ்டம்தான். உற்பத்தியை பெருக்கி விற்பனை செய்யக்கூடிய அளவில் தயார் செய்வதற்காக வழங்கப்படும் தொகை இது, விற்பனை ஆகாதது என் தவறில்லை என்றாலும் எனக்கான ஊக்க தொகை கிடைக்காமல் போகும் . இது மட்டுமலாமல் இந்த குதிரைக்குட்டிகள் அடுத்த நிலையான பந்தய குதிரைகளாக ஆக்குவதற்கான பயிற்சிகளை செய்வது என் தலையில் திணிக்கப்படும்.  குட்டியாக இருந்து பந்தய குதிரை என்ற அடுத்த நிலைக்கு பயிற்சி அளிப்பது  பொறுமையை சோதிப்பதாகவும், நம்முடைய பணி நேரத்தை அதிகம் எடுத்து கொள்ளவும் செய்யும். இந்த குட்டிகள் நன்றாக பின்னாளில் பந்தயத்தில் ஓடும்போது அதில் வரும் லாபம் (10% commission from stakes money) பயிற்சியாளருக்கு(trainer) சேரும், ஆக பயிற்சியாளருக்கு இரட்டை லாபம் எனக்கு இரட்டை நஷ்டம்.
ஒரு நல்ல trainer என்றால் அவரிடம் பயிற்சிக்கு செல்லும் 10 குதிரைகளில் 3 குதிரைகள் ஜெயிக்க வேண்டும், 10-ல் 8 குதிரைகளாவது பந்தயத்தில் கலந்து கொள்ளவேண்டும். இரண்டு குதிரைகள் பல்வேறு காயங்கள் (tendinitis, fractures ,etc )காரணமாக  கதை முடிந்து போகும். ஆனால் எங்கள் பயிற்சியாளர் தலை கீழ் 10 இல் 3 பந்தயத்தில் கலந்து கொண்டால் பெரிய விஷயம் அதில் ஒன்று ஜெயித்தால் அது பெரும் அதிசயம். மற்ற 7 குதிரைகளும் குப்பைக்குத்தான் போகும். இந்த நிலையை மாற்ற இரண்டு ஆண்டுகள் முன்னர் எங்கள் முதலாளி என்னிடம் ஆலோசனை கேட்டார், நான் அவரிடம் systematic training programme ஐ விளக்கினேன், அவர் உடனே குட்டிகளை முதல் மூன்று மாதங்கள் பயிற்சி   செய்யும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்,  சென்ற ஆண்டு முதல் எங்கள் குட்டிகள் ஜெயிக்க ஆரம்பித்து விட்டன, இந்த ஆண்டு அக்டோபர் முதல் வாரத்தில் எங்கள் பண்ணை 2 year old குட்டி மிக சிறப்பாக ஜெயித்தது, உடனே இந்நாட்டு மன்னர் விலைக்கு வாங்கி விட்டார். இப்போது பயிற்சியாளருக்கு இரட்டை லாபம் அந்த குட்டி விற்ற விலையில்(  3 மில்லியன் சவுதி ரியால்) 5 சதவீதம் அவருக்கு முதலாளி கொடுப்பார்.  இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் இவை ஜெயிக்காமல் போயிருந்தால் பயிற்சியாளர் என் மேல் பழியை போட்டு  தப்பி இருப்பார்.
"எனக்கும் கோவேறு கழுதைக்கும் பெரும் வித்தியாசம் இல்லை என்ற எண்ணம் அவ்வப்போது உதிப்பதையும் மறுக்க முடியாது........"

கரையான்.

திங்கள், நவம்பர் 11, 2013

லாபமில்லை....

இலாபமில்லை என்ற சொல் பல இடங்களில் உபயோகப்படுத்தப்படுகிறது, அதுவும் விவசாயம் மற்றும் கால்நடை சார்ந்த தொழில் செய்பவர்களில் பலர் உற்பத்தி செய்பவன் இழப்பையே சந்திக்க வேண்டியுள்ளது என்று புலம்புவது இப்போது வாடிக்கை ஆகி விட்டது. (நம்முடைய முக நூல் (face book ) பதிவில் கூட சொக்கன் கருப்பட்டி உற்பத்தியாளர்கள் பற்றி குறிப்பிட்டு இருந்தான்).
சென்றமாத இறுதி மற்றும் இந்த மாத தொடக்கத்தில் எங்கள் பண்ணையின் ஒரு வயது குதிரைகள் விற்பனை நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் சவுதியில் உள்ள அனைத்து பண்ணையாளர்களின் ஒரு வயது குட்டிகளுக்கான விற்பனை நடக்கும், எங்கள் பண்ணையின் உற்பத்தியான 35 குட்டிகளும் கலந்து கொண்டன...விற்பனை மிக மோசமாக இருந்தது, உற்பத்தி விலையில் பாதி கூட கேட்கப்பட வில்லை(உலகளாவிய பொருளாதார மந்த நிலை?), நான் விற்பனை அரங்கில் உட்கார்ந்து கொண்டிருந்தேன், அப்போது ஏற்கனவே எனக்கு பழக்கமான ஒரு சவூதி காரர் என்னருகில் உட்கார்ந்தார், பெரிய பணக்காரர் ஒரு மில்லியன் டாலர் கொடுத்து கூட குதிரை வாங்குவார்(ஆனால் அதை மருத்துவம் செய்யும் மருத்துவருக்கு நூறு டாலர் கொடுக்க பத்து முறை பேரம் பேசுவார்) என்னிடம் மிக கோபமாக "உங்க முதலாளி என்ன எல்லா குதிரைக்கும் மில்லியன் எதிர்பார்க்கிறார், கொஞ்சம் குறைத்து விற்றால் என்ன அவரிடம் பணமா இல்லை " என்றார். நான் அவரிடம் "என் முதலாளி பணம் போடுகிறார் மிக விலை உயர்ந்த குதிரைகளை வெளி நாடுகளில் இருந்து வாங்கி வருகிறார் அவர் எதிர் பார்ப்பதில் என்ன தவறு " என்றேன். உடனே அவர் "பத்து மில்லியன் செலவு செய்து விட்டு இருபது மில்லியன் எதிர் பார்க்கிறார், அவர் எவ்வளவு விலைக்கு  வாங்கினார் என்பது இணையதளத்தில் உள்ளதே" என்றார்.
நான் அவருக்கு விளக்க ஆரம்பித்தேன்," என் முதலாளி பத்து மில்லியன் கொடுத்து அமெரிக்க அல்லது ஐரோப்பா விலிருந்து பத்து சினை குதிரை வாங்குகிறார் என்று வைத்து கொள்வோம், இங்கு வந்த வுடன் அந்த பத்தில் ஒரு குதிரை abort ஆகி விடும், ஒன்பது குட்டிகள்தான் மிஞ்சும், மேலும் பாக்கி உள்ள ஒன்பது குதிரைகளும் எந்த பிரச்னையும் இல்லாமல் குட்டி போட்டாலும் பல்வேறு பிரச்னைகளால்(neo natal infection )அதில் ஒரு குட்டி இறந்து விடும் , மீதி எட்டு குட்டிகள்தான் மிஞ்சும், மிஞ்சிய எட்டு குட்டிகளில் விற்பனை வயதை அடைவதற்குள் paddock injuries அல்லது colic போன்ற காரணங்களால் ஒரு குட்டி மரணம் அடைந்து விடும், ஆக எஞ்சி இருப்பது ஏழு குட்டிகள்தான், இந்த ஏழில் ஒன்று அல்லது இரண்டு குட்டிகள் கால் கோணல் மாணலாக(conformational deformities )இருப்பதால் வாங்க ஆள் இருக்காது, எஞ்சி இருப்பது ஐந்து அல்லது ஆறு குட்டிகள் , இவற்றை விற்றுத்தான் என் முதலாளி போட்ட பத்து மில்லியன் -ஐ  எடுக்க வேண்டும் இதில் இந்த குட்டிகள் மற்றும் அதன் அம்மாக்களுக்கு தீவனம், தொழிலாளர் மற்றும் மருத்துவ செலவுகள் , அவர் போட்ட பணத்திற்கான வட்டி , எல்லாம் கூடி ஒரு குட்டிக்கான  சராசரி விலை இரண்டு மில்லியனை தொட்டு விடும், ஆகவே அவர் எதிர்பார்ப்பதில் என்ன தவறு" என்றேன். மேலும் அவரிடம் ,"இப்போது நீங்கள் buyer என்பதால் குறை கூறுகிறீர்கள் , எங்கள் முதலாளி குறைவான விலைக்கே விற்கிறார் என்று வைத்து கொள்வோம் , 10,000 ரியாலுக்கு குதிரையை நீங்கள் வாங்குகிறீர்கள் , அதை பயிற்சி அளித்து பந்தயத்தில் ஓட்டி, ஜெயிக்கவும் செய்து விட்டால், உங்களை விட பெரும் முதலாளிகள்(royals ) உடனே அந்த குதிரையை வாங்க உங்களிடம் பேரம் பேசினால், பத்தாயிரம் கொடுத்துதானே வாங்கினேன் எனக்கு மேலும் ஒரு பத்தாயிரம் போதும் என இருபதாயிரத்திர்கா விற்பீர்கள், ஒரு மில்லியன் வேண்டும் என கேட்க மாட்டீர்களா இப்போது நீங்கள் seller ஆகி விடுகிறீர்கள்....." என்றேன் . அந்த மனிதர் கோபம் தணிந்து " நீ சொல்வது சரிதான் என்று கூறி விட்டு எழுந்து சென்று விட்டார்.

கரையான்.