நம் நண்பர் இளங்கோ அவர்களின் புகைப்படம் இந்த வார பசுமை விகடனில் வந்திருந்தது.....என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறோம்...
ஏ. சுப்பிரமணியன், கணக்கன்பட்டி.
நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியின், பால் அறிவியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர். இளங்கோ பதில் சொல்கிறார். ''கறந்த பால் சுமார் 6 முதல் 8 மணி நேரம் வரைதான் நன்றாக இருக்கும். அதற்கு மேல் அந்தப் பாலில் பாக்டீரியாக்கள் பெருகத் தொடங்கி விடும். இந்த பாக்டீரியாக்கள் பாலில் உள்ள லேக்டோஸ் என்ற பொருளை சாப்பிட்டுத்தான் பெருகுகின்றன. பாக்டீரியாக்கள் பெருகிய பிறகுதான் பால் கெட்டுப்போய் புளிப்புத் தன்மைக்கு மாறுகிறது. குளிர் சாதனப்பெட்டியில் வைக்கும்போது பாக்டீரியாக்களின் பெருக்கம் தடைபடும். குளிர் நிலையில் இருந்தாலும், 12 மணி நேரத்துக்குள் பயன்படுத்தி விடுவதுதான் நல்லது.

மறுசுழற்சி செய்யத்தக்க தரமான பாலிதீன் பைகளில் அடைத்துதான் விற்பனை செய்ய வேண்டும். பண்ணைகளில் வேலை செய்பவர்கள் கையுறை அணிய வேண்டும். இவற்றையெல்லாம் சரியாகக் கடைபிடித்தால், கறந்து 8 மணி நேரம் வரை பாலைக் கெட்டுப்போகாமல் வைத்திருக்க முடியும்.''
கரையான்.
We expect a lot more photographs,interviews and articles from Elango as there are so many feathers are waiting to decorate his cap in the profession.Congrats
பதிலளிநீக்குChocks
Waalthukkal Elango.
பதிலளிநீக்குNamma Dairy Science labla,yedhuwume kedawillai.
BHAI.