புதன், ஜூன் 26, 2013

அடிமேல் அடித்தால் அம்மியும் நகரும்

மக்கா எத்தன நாளுதான் மௌனம் காக்குரீங்கன்னு  பாக்குறேன்...

சரி என்னோட கதைக்கு வர்றேன்... அடிபட்டு emergency யில் அட்மிட்டான எனக்கு MRI SCAN  எடுக்கனும்னு டாக்டர் சொல்லி, அதற்கு இன்சூரன்ஸ் கம்பெனி அனுமதி கோரி கடிதம் அனுப்பினார், scan செய்ய 700 ரியால்,ஆதலால்  இன்சூரன்ஸ் நிறுவன அனுமதி வேண்டும் அதற்கு காத்திருக்குமாறு கூறி விட்டு சென்று விட்டார். காலை பத்துமணி முதல் மாலை மூன்று மணி வரை காத்திருந்து மருத்துவமனை ஒன்றும் செய்யாதலால் நான் அங்கிருத்த ஊழியர்களிடம் சென்று வலி தாங்க முடிய வில்லை ஏன் இவ்வளவு நேரம் என்று கேட்டேன். பின்னர் அவர்கள், என்னுடைய இன்சூரன்ஸ் கம்பெனி  ஸ்கேன் செய்ய அனுமதி இன்னும் வழங்க வில்லை என்று கூறினார்கள், நான் என்னுடைய பணத்தை செலுத்துகிறேன், என்று கூறி செலுத்திய பிறகுதான் என்னை ஸ்கேன் செய்ய அழைத்து சென்றார்கள்.
எல்லாம் முடிந்த பின்னர் அந்த இன்சூரன்ஸ் கம்பெனி யின் representative அந்த மருத்துவமனையிலேயே இருந்தார், அவரிடம், ஏன் என்னுடைய claim க்கு approval கிடைக்க வில்லை என்று கேட்டேன், அதற்க்கு அவர், உங்களை சோதித்த மருத்துவர் அவருடைய ரிப்போர்ட் -ல் cause of injury: "Was kicked by a horse at  his home" என்று எழுதி உள்ளார், வீட்டில் என்ன குதிரை வளர்ப்பார்களா ? என கேள்வி எழுப்பி உங்கள் இன்சூரன்ஸ் நிராகரிக்கப்பட்டு விட்டது என்று விளக்கம் அளித்தார், மேலும் என்ன நடந்தது என்று என்னிடம் விசாரித்தார், நான் விளக்கமா ஒட்டகத்திடம் அடி வாங்கிய கதையை சொன்னேன். பொறுமையாக கேட்ட அவர் சவுதி காப்பீட்டு சட்டப்படி " உங்கள் பணியில் அடிபட்டால் அந்த வகையான காயங்கள் காப்பீட்டுக்குள் வராது அதற்கு நீங்கள் claim செய்ய முடியாது " நீங்கள் சாலையில் நடக்கும்போதோ அல்லது drive செயும்போது, அல்லது உடல் நிலை சரியில்லாமல் போனால்தான் காப்பீடு பெற முடியும், உங்கள் பணி  சார்ந்த காயங்கள்/பிரச்னைகளுக்கு (professional hazards) இன்சூரன்ஸ் கிடையாது. என்று கூறினார்.  ரிப்போர்ட் எழுதிய மருத்துவர் பொண்டாட்டியிடம் அடி வாங்கியதால் காலில் காயம் என்று எழுதி இருந்தால் கூட பரவாயில்லை இப்படி அநியாயத்திற்கு தண்டம் அழ வைத்து விட்டாரே என்று எண்ணி கொண்டேன்.
(பிறகு அலுவலகத்தில் அந்த பில்லை கொடுத்து காசு வாங்கி விட்டேன்)

கரையான் 

ஞாயிறு, ஜூன் 16, 2013

LONG TIME NO SEE

பிளாகில் எழுதி பல நாட்கள் ஆகி விட்டது. இந்த நீண்ட மௌனம் கிட்டத்தட்ட நண்பர்களுக்குள் உள்ள சிறு பிணக்கினால் யார் முதலில் பேசுவது என்ற ஒரு ஈகோ உருவாகுமே அது போன்று ஒரு நிலைமையை ஏற்படுத்தி விட்டது... யாராவது ஒருவர் இந்த மௌனத்தை உடைத்து வருவார்கள் என்று பார்த்தால் நாட்கள் மாதங்கள் உருண்டோடி விட்டது... நானே மௌனத்தை களைக்கிறேன்.....
சில நேரங்களில் ஒருவரின் வலி மற்றவரின் நகைச்சுவை ஆகி விடும்...அடிபட்டவரின் வலி நகைப்பவருக்கு தெரியாது...அது போலதான் எனக்கு ஒவ்வொரு முறையும் குதிரையிடம் அடி வாங்கி மருத்துவமனை செல்லும்போதும் நான் அந்த மருத்துவமனையின் show piece/ specimen/ comedy piece ஆகி விடுவேன்.
பத்து நாட்களுக்கு முன் ஒட்டகங்களுக்கு vaccine கொடுக்க வேண்டிஇருந்தது . குட்டி ஒட்டகங்கள் ஐந்து ஆறு மாதங்கள் வயதுடையவை. பணியாளர்கள் ஒரு சிறிய இடத்தில் பத்து பத்து ஒட்டகங்களாக அடைத்து அதை விரட்டி பிடிப்பார்கள் , பின்னர் நான் ஊசி போட வேண்டும். இப்படி விரட்டும்போது அந்த இடமே களேபரமாக இருக்கும். அப்படி நான் ஒரு ஒட்டகத்துக்கு ஊசி போட்டுக்கொண்டு இருக்கும்போது பணியாளர்கள்  இன்னொரு ஒட்டகத்தை விரட்டி பிடிக்க முயற்சி செய்தார்கள், அது கண்மண் தெரியாமல் ஓடி வந்து என் மீது மோதி நான் கீழே விழ என் மேல் அந்த ஒட்டகம் விழுந்தது. என்னுடைய இடது கால் முட்டி அந்த ஒட்டகத்தின் கீழ் மாட்டிக்கொண்டது. மயக்கம் வரும் அளவுக்கு வலி, உடனே வீங்கியும் விட்டது. முதலுதவி செய்து பின்னர் மருத்துவமனைக்கு சென்றேன், அந்த மருத்துவமனையின் receptionist முதல் டாக்டர் வரை நான் ஒரு vip நோயாளி ஆகி விட்டேன், நல்ல வேலையாக x ray இல் எலும்பு முறிவு இல்லை என்று கூறி விட்டார்கள். ஆனாலும் முட்டியை மடக்க முடியவில்லை, வலியும் பயங்கரமாக இருந்தது.
எனக்கு எப்படி ஆனது என்பதை receptionist தொடங்கி டாக்டர், நர்ஸ் , x ray எடுப்பவர் என அனைவரும் விழிகள் விரிய ஆச்சரியமாக கேட்டுக்கொண்டே இருந்தார்கள், ஒரு பிலிப்பினோ நர்ஸ் உன் முட்டிய உடைத்த அந்த ஒட்டகத்தை கொன்று விடு என அறிவுரை வேறு கூறினார்.
அடுத்த நாள் நடக்கவே முடிய வில்லை,கொஞ்சம் பெரிய மருத்துவமனைக்கு சென்றேன், emergency -யில் அனுமதிக்கப்பட்டேன், திரும்பவும் முதலிலிருந்து ஒட்டகம்-ஊசி-நான்-கீழே-விழுந்து-ஒட்டகம்-மேலே-விழுந்து-, receptionist -டாக்டர்-நர்ஸ்-x -ray technician , இந்த மருத்துவமனையில் கூடுதலாக MRI scan technician எல்லோருக்கும் கதையை திரும்ப சொல்லி (அவர்கள் வீட்டில் குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டும்போது அல்லது நண்பர்களுடன் அரட்டை அடிக்கும்போது  சொல்ல ஒரு கதை கிடைத்து விட்டது ) என்னுடைய வலி மரத்து விட்டது. ஒரு வழியாக MRI scan நார்மல் என்று கூறி விட்டார்கள். பத்து நாட்கள் ஆகி விட்டது ...இப்போது நார்மலாக நடக்க ஆரம்பித்து விட்டேன்....
(விரைவில் குணம் அடைய வாழ்த்தவிருக்கும் பாய்,குஜிலி,GFK, பாண்டி செந்தில்,சொக்கன், தாஸ் மற்றும் அனைவருக்கும் நன்றி...)

MRI SCAN -க்கு காப்பீடு (insurance ) கிடைக்காத கதை நாளை எழுதுகிறேன்......

கரையான்.

சனி, மார்ச் 23, 2013

A Tribute to my Appa Dr.S.Krishnaswamy:


A Tribute to my Appa Dr.S.Krishnaswamy:
My Appa was a great inspiration in my life and I consider myself lucky to have such a father. He taught us Bharatiar poetry and taught us “Jaathigal illaiyadi papa athai taazhthi uyirthi solval paavum”, he also taught me to be Bharathiar’s puthimai penn and to be fearless. I want to pay tribute to such a man whom I was privileged to call “Appa”.
Imgine a 15 year old boy,  suffering severe headaches because of hunger and had to live on one bun and tea a day. His father had sent him to Ambur to live as a paying guest and study his 10th standard. In spite of this he topped the state in his final exams. Next his father sent him as a cement factory worker to the north. When his headmaster heard about this he was shocked, he immediately arranged a scholarship and brought him back to join his 11th grade in Bangalore. This young man was my father. From thereon he studied always with a scholarship and never looked back. He topped all the exams and was a gold medalist in his PhD. He was a great brother and helped his siblings in their studies and career. He was a great teacher with his students in premier institutions like NIH, CDC and IISC. When most people plan their retirement in his mid fifties,  he started a company and made it a multi crore turnover company. He was a fantastic human being to be around. He would always encourage us to be curious to learn more, ask questions. He never pitied himself orlose confidence because of his childhood poverty. He always challenged us to dream big, not be afraid to fail. He once told me life is always full of stress, so enjoy the stress, thrive on it and you will go far.
He had a premonition of his own death and told my mother that his mother was calling him. He told my mother twice on the day he died somebody was calling him. He lived life on his own terms and died on his own terms too.
I quote his favorite kural  “ vaiyyagathil vaazhvaanthu vaazhbavan, vaanyurarum deivathul vaikkapadum” . He who lives life as a role model in society will be created a God among the high heavens. For my Appa this was mission accomplished.

வெள்ளி, மார்ச் 01, 2013

படித்ததில் பிடித்தது face book லிருந்து.

என் கடைசி கடிதம் :
-----------------------------------

வானம் காய்ந்தது 
வாழ்க்கை ஓய்ந்தது 
மானம் காக்கும் துணி கூட
உழைத்து தேய்ந்தது

கல்லணை கட்டியது முதல்
கஞ்சிக்கு பஞ்சமில்லை...
கர்நாடகாவை பிரித்தது முதல்
அழுதது கொஞ்சமில்லை...

மழைநீரும் தூறவில்லை
மனரணமோ ஆறவில்லை
மின்சாரத்தோட ஓசை இல்லை
மீண்டும் பிறக்க ஆசையில்லை

சீக்கிரமே சாக வேண்டும்...
அதற்குள் சென்னை சென்று
பார்க்க வேண்டும் ..

அங்கே ,
கார் தயாரிக்க கரண்ட் இருக்கு -எங்க
கஞ்சிக்கு வழியில்லை
பீர் தயாரிக்க கரண்ட் இருக்கு
நெஞ்சி பொறுக்க வில்லை

ஹுன்டாயும் போர்டும்
உலகெல்லாம் ஏற்றுமதி...
உண்ண அரிசி பருப்பெல்லாம்
உள்ளுரில் இறக்குமதி

அமெரிக்காவுக்கு உழைக்க
ஐ டி வளர்த்தாலும்,
அடுத்த வேலை உணவுக்கு
சாப்ட்வேரையா சாப்பிடுவீர் ?

அங்கே ,
PUB'm Club'm கரன்டுல
ஜொலிக்குது - எங்க
பம்பும் செட்டும் வறண்டு
வறண்டு .. வலிக்குது :(

எத்தொழில் செய்தினும்
காசு வரும் - ஆனால்
இத்தொழிலில் மட்டும்தானே
உணவு வரும் ?

தலைநகர் வளர்வதில்
தவறொன்ன்னும் இல்லை - ஆனால்
தலைமட்டும் வளர்வது
வளர்ச்சி இல்லை

உழைத்து களைத்து
விளைத்தவன் விவசாயி - அதை
அடித்து பிடித்து
வாங்கியவன் வியாபாரி

தண்ணீர் , மின்சாரம் ,
தரகர், நஷ்டம் ,என்னென்று நான் சொல்ல
வாழ தெரியாமல் சாகவில்லை
வாழ முடியாமல் போகிறேன்

சச்சின் சதத்தையும்
ஷாருக்கான் படத்தையும்
கொண்டாடும் நீங்கள் - நாட்டு
உணவுக்கு உழைத்து
உணவே கிடைக்காமல்
உயிர் விடும் நாங்கள்


ஊருக்கே உழைத்தோம்
ஒரு வாய்க்கு போராட்டம்
வசதி வாய்ப்பு கூடவில்லை
நிம்மதியாக கூட வாழவில்லை

கடைசி ஆசை ..
இறைவா... ..

புழுவாக புல்லாக
மலிவான மண்ணாக
எலியாக எறும்பாக
ஏர் பூட்டும் எருதாக
எதுவாக பிறப்பினும்
ஏற்று கொள்வேன் _ ஆயின் இந்த
இடரான இந்தியாவில்
பிறந்திட வேண்டாம் ...


- உங்கள் தமிழன் , உழவன் ..

- வை .நடராஜன்

http://ursnattu.blogspot.in/


கரையான்.

செவ்வாய், பிப்ரவரி 26, 2013

ஆணாதிக்க உலகம் - facebook இல் படித்ததில் பிடித்தது....

ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?

ஒரு ஆண் கடுமையா உழைச்சா... பொண்டாட்டியைக் கண்டுக்க மாட்டேங்கறான்னு மட்டம் தட்டுவாங்க.

பொண்டாட்டியை கவனிச்சுக்கிட்டா.. அவளையே சுத்தி சுத்தி வரான். வேலை வெட்டி இல்லாத பயன்னு கட்டம் கட்டுவாங்க..

அது போகட்டும்.. ஒரு பொண்ணைப் பார்த்து அழகா இருக்கேன்னு சொன்னா அது ஈவ் டீசிங்..ன்னு கெளப்பி விடுவாங்க.

கண்டுக்காம போனா அழகை ரசிக்கத் தெரியாத ஜடம்..!ன்னு அமுக்கி வைப்பாங்க.

எதுக்காச்சும் அழுதோம்ன்னா பொம்பள மாதிரி அழறான் பாரும்பாங்க..

திடமா இருந்தா நெஞ்சுல ஈவு இரக்கம் இல்லாத அரக்கன்னு வாருவாங்க..

பொண்டாட்டியை கேட்டு முடிவெடுத்தா தானா முடிவெடுக்கத் தெரியாத முட்டாள்..ன்னு பட்டம்.

சரின்னு நாமளே ஒரு முடிவு எடுத்தா தான் ஆம்பிளைங்கற அகங்காரம்..ன்னு திட்டும்.

ஏதாவது பிடிச்சது வாங்கிட்டுப் போய் கொடுத்தா "என்னத்துக்கு இப்போ காக்கா பிடிக்கிறீங்க..?" அப்படின்னு ஒரு நக்கல்.

ஒன்னும் வாங்கிட்டுப் போகலேன்னா "ஒரு முழம் பூவுக்கு விதியத்துப் போயிட்டேனே..!" ன்னு மூக்கை சிந்திக்கிட்டு விக்கல்..

ஒரு குறிக்கோளோடு உழைச்சா, " வேலையைக் கட்டிகிட்டு மாரடிக்க வேண்டியதுதானே.. எதுக்கு உங்களுக்கு பொண்டாட்டி..?" ன்னு ஏசல்.

சரின்னு சினிமாவுக்கு அழைச்சுட்டுப் போனா, " அந்த ஹீரோ மாதிரி ஒரு லட்சியம் வேணுமுங்க மனுஷனுக்கு.. எப்படி உழைச்சு முன்னேறி கார் பங்களா வாங்கினான் பாத்தீங்களா..?" ன்னு பூசல்..

இந்த கருத்து ஒஹோ என்று இருக்கிறதுன்னு எழுதினா, ஆனாதிக்க உலகம் அப்படின்னு சொல்லுவாங்க.

இது தப்பு பெண்கள் நல்லவர்கள்ன்னு எழுதினா உலகம் தெரியாத பைத்தியம்ன்னு சொல்லுவாங்க.



கரையான்.

சனி, பிப்ரவரி 23, 2013

பாய் வாழ்ந்த வீடுகள்-சாத்தான்குளம்

 1.பிறந்த வீட்டின் பின்புறம் - 1969 to 1986.[தற்போது பாழடைந்து கிடக்கிறது,ஒரு வறிய குடும்பம் வசிக்கிறது.]



2.இருந்த வீடு - 1986 to 2006.[பைக்  நிற்கும் வீடு-என் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு தெரியும்]

                                        



3. தற்போதைய வீடு - 2006

காலங்கள் உருண்டோடுவதைப் பாருங்கள்,

பாய்.