திங்கள், மார்ச் 07, 2011
ஞாயிறு, மார்ச் 06, 2011
My Precious Flower
Dear Friends:
Recently my nephew(Manish's Brother's son) has been extremely sick and had to undergo major surgery removing four feet of his small intestine. Mani Konaar is of course in India. In order to make my nephew feel better i wrote this poem and of course i am sharing it with you all.
GFK
Recently my nephew(Manish's Brother's son) has been extremely sick and had to undergo major surgery removing four feet of his small intestine. Mani Konaar is of course in India. In order to make my nephew feel better i wrote this poem and of course i am sharing it with you all.
GFK
My Precious Flower
The beautiful garden had a storm
my wonderful flower was harmed
But this flower of mine will soon bloom
and come out of his deep gloom.
He will shine like the brightest star in the sky
he will give getting better a good try.
I know sometimes you feel like a good cry
but don’t let the pain give you a try.
You are the light of our house and clan
God has for you the grandest plan.
My precious flower is going to blossom again
All that he might have lost he will soon regain.
There is nothing but the best waiting for you
this whole family lives and breathes for you.
Oh sweet wonderful, precious flower of mine
you are going to be soon more than fine.
For Anish
with love and hugs
from Chachee.
Spring break! yeah....
I can't believe it is March which usually means spring here in our area. Some people saw robins which is a sure sign that spring is here. I am not so sure based on the crazy weather we have.
It is spring break for us here for this whole week which doesn't really mean anything to me, other than a break from teaching for a week; We had nice warm weather (50 F - a nice balmy 10 C!) this past week and a lovely torrential out pour. I was delighted to see the rain and experience the phenomenon of melting, very foreign to me since I had not seen it this past two months. Well, the rain was all well and good until I was reminded once again of the joys of owning an OLD home. We had finished our basement with concrete last summer hoping that it will take care of the rain water that was seeping into our muddy basement. We had pipes under the basement and also made an area in the corner of the basement for water to collect from the pipes and fill into a bucket. Well, the rain that melted most of the snow, flowed down the hill and into our basement and finally started collecting in the bucket. We had to bail out more than 350 gallons of water nonstop for many hours for two days and through the night. Talk about a whole body workout! I couldn't help thinking about our home country where people are suffering from drought and here we are bailing out gallons of water into the roadside drain. The rest of the basement where the water could not get into the pipes started to spill around the corners starting out a flood in the basement. Needless to say it has been an eventful past few days. We finally got the plumber to put in a sump pump in the basement which bails out the water and it has been on for the past 48 hrs. The ground is so saturated and it doesn't help that we live on a hill so the water comes down and has to go somewhere; except that happens to be under our basement! Usually it is not a huge problem but with record snowfalls and rains this year everything has been out of the ordinary. So I can't believe I am saying this - but when I was bailing out all the rain water I was praying for the rain not only to stop but for it to become cold and freeze. இக்கரைக்கு அக்கறை எப்போதும் பச்சை.
Spring break also means catching up on work and in my case I am trying to complete a research project as I have to present at two different conferences in April. So I have been setting up experiments and I started a major one this afternoon. This experiment involves some timed collection of media and addition of nutrients. I started the experiment at noon and I am supposed to add some nutrients at 6:30 p.m. today. Well guess what happens now? The rain that has been pouring all day turns to sleet and ice and the roads were so icy with sleet 1 cm thickness in 1 hour that it was too treacherous for me to drive to work to add the nutrients to my cells. Well, the consequence - the experiment is wasted. It takes approximately 3 weeks to grow the cells to this point before I can set up this experiment and now I couldn't drive out to continue the next step. This experiment with all the reagents also costs approximately $1000.00 to set up.
As I was contemplating about what a waste all this was and how I wish I had driven out to work anyway, this car comes up our street and starts to slide all over the road and it almost went into our drive way to hit my new car that was parked in our driveway! Yikes..
I have been taught so many valuable lessons these past few days, once again hitting it home that my plans are not God's plans and vice versa even in day to day or hour to hour stuff.
All I can do now is, thank God and start my work all over again tomorrow and hope for the best.
Gujili
வியாழன், மார்ச் 03, 2011
சவுதி வாழ்க்கை
மத்திய கிழக்கு நாடுகள்-பணிசூழல் என்னுடைய பார்வையில்
நம்முடைய நண்பரின் கதையை எழுதி இருந்தேன், இதுவரை நாம் பார்த்தது நாணயத்தின் ஒரு பக்கத்தைதான்(one side of the coin) , நம் மேலும் சில தவறுகள் இருக்கின்றது
என்பதை தெளிவு படுத்தவே இந்த பதிவு. இங்கு வந்து அவதிப்பட்ட நண்பரின்
உறவினர் மதீனா நகரில் பணி புரிகின்றார், அவரிடம் நான் பேசும்போது
இங்கு வந்து அவதிப்பட்டவரைப்பற்றி சில விஷயங்கள் கூறினார்
ஊரிலே வேலை ஏதும் செய்யாமல் சோம்பேறியாக சுற்றிக்கொண்டு, தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாகி வெட்டியாக பொழுதை கழித்துக்கொண்டு இருந்தார் இங்கு வந்தால் திருந்தி விடுவார் என கிட்ட தட்ட ஒன்னேகால் லட்சம் செலவு செய்து நான்தான் அவரை இங்கு வேலைக்கு அழைத்து வந்தேன் என கூறினார். இது எப்படி இருக்கின்றது என்றால், நம் ஊரில் குடி காரனாகி விட்ட மகனை திருத்த கல்யாணம் செய்து வைக்கும் தாய்மார்கள் போல்தான். மற்ற வெளி நாடுகள் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது, ஆனால் இங்கு எல்லாமே கொஞ்சம் மாறு பட்டுதான் இருக்கும், பழங்கால அடிமை முறைதான் இங்கே இன்னமும், கொஞ்சம் பெயர்மாற்றம் செய்யப்பட்டு "sponsorship" என அழைக்கப்படுகிறது. நாம் ஒரு குறிப்பிட்ட sponsor விசாவில் வந்தால் நம் பாஸ்போர்ட் அவரிடம் ஒப்படைத்து விட வேண்டும், அவர் நமக்காக இக்காமா எனப்படும் residence permit அட்டையை நமக்கு கொடுப்பார், அந்த அட்டை நம்மிடம் இல்லை என்றால் என் நேரமும் காவல்துறை சிறையில் அடைக்க முடியும், பேங்க், மருத்துவமனை என எங்கு சென்றாலும் அந்த கார்டை நாம் காட்ட வேண்டும். நாம் இந்த நாட்டை விட்டு தாய் நாட்டுக்கோ மற்ற நாட்டுக்கோ செல்ல வேண்டுமென்றால், sponsor நம்முடைய பாஸ்போர்ட்டை எடுத்து சென்று உள்துறை அமைச்சகத்திடம் exit/ re-entry அனுமதி பெற்று தந்தால் மட்டுமே நாம் செல்ல முடியும். நம்முடைய sponsor தவிர வேறு யாரிடமும் வேலை செய்வது சட்டத்திற்கு புறம்பானது, சிறையில் அடைக்கப்படலாம்.
நம் நண்பர் கதைக்கு வருவோம், இந்த ஊரில் survive ஆக வேண்டுமென்றால் மன உறுதியும், உடல் உறுதியும் இருந்தால் ஒழிய காலத்தை ஓட்டுவது மிக கடினம்.
நண்பர் சொக்கன் சொல்லலாம், நம் நம் ஊரில் மட்டும் என்ன வாழ்கிறது
இங்கேயும் கஷ்ட்டப்பட்டால்தான் தேற முடியும் என. நம் ஊரில் பாவ
புண்ணியம் பார்ப்பவர்கள் அதிகம், மேலும் நம் கஷ்டத்தை அடுத்தவரிடம்
கூறி ஆறுதல் தேடலாம், இங்கு அப்படி இல்லை, நம்முடன் பணி புரியும் ஒவ்வொருவரும் அதீத மன உளைச்சலும், வேதனையிலும் உழலும்போது நமக்கு எப்படி ஆறுதலாக இருப்பார்கள். அந்த நண்பர் இங்கு survive ஆக கொஞ்சமும் வாய்ப்பில்லை என்பதை அவரை பார்த்த முதல் நாளிலேயே புரிந்து கொண்டேன்.
(மேலும் எழுதுவேன்.....)
கரையான்.
புதன், மார்ச் 02, 2011
சவுதி வாழ்க்கை
சவுதியில் வந்து துன்பப்பட்ட நண்பரின் கதை தொடர்ச்சி....
அவர் பணிபுரியும் கம்பனி சம்பளத்தை அறுநூறு ரியாலாக குறைத்து வேலை செய்ய சொன்னதால், தான் ஊருக்கே செல்வதாக கூறி வேலையிலிருந்து விலகுவதாக கூறி விட்டார், டிரைவராக பணிபுரிந்தால் தொள்ளாயிரம் கொடுப்பதாக கூறினார்கள், ஆனால் அவருக்கு வண்டி ஓட்ட தெரியாது மேலும் அவர் லைசென்ஸ் எடுக்க குறைந்தது இரெண்டாயிரம் ரியாலாவது ஆகும். ஆகவே அவர் தாய் நாட்டுக்கு திருப்பி அனுப்புமாறு கூறி விட்டார், அவருக்கான விசா செலவு என அவருடைய சம்பள பாக்கி(மூன்று மாதம்) பிடித்து கொண்டு 500 ரியால் மேலும் கட்ட வேண்டும், விமான டிக்கெட் அவரே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என நிபந்தனைகளுடன் அவருடைய பாஸ்போர்டை அவரிடம் கொடுத்தார்கள், ஏற்கனவே நஷ்டப்பட்டது போதாது என்று ஊருக்கு செல்லவும் கிட்டத்தட்ட அவர் 5000 ரியால் செலவு செய்ய வேண்டி இருந்தது. அவருக்கான பண மற்றும் பயண டிக்கெட் ஏற்பாடு செய்து கொடுத்ததில் கடந்த வாரம் மிகவும் கஷ்டமான வாரமாக கழிந்தது.
கரையான்.
இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி
புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி
விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்
கொடுத்து இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.
கடந்த 23-ம் தேதி கொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க.
செயலாளர் பெரியண்ண அரசு தலைமையில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும்
விழா நடந்து கொண்டிருந்தது.அப்போது பயனாளிகள் பட்டியலில் இருந்து
விஜயகுமார் என்ற பெயர் வாசிக்கப்பட்டதும்,கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச்
சேர்ந்த விஜயகுமார் என்ற விவசாயி மேடையேறினார்.
அவருக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கிக் கொண்டார்.ஒரு
விநாடி அங்கே நின்றவர்,டி.வி.யை பெரியண்ண அரசுவிடமே திருப்பிக்
கொடுத்துவிட்டு,கூடவே ஒரு மனுவையும் கொடுத்தார்.ஏதோ கோரிக்கை மனு
கொடுக்கிறார் என்று அரசுவும் சாதாரணமாக வாங்கிப் படித்தார்.
அதில் ‘மனிதனுக்கு டி.வி. என்பது பொழுதுபோக்கு சாதனம்தான். ஆனால் அதைவிட
முக்கியமானது உணவு, உடை, உறைவிடம். தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள்
இருக்கின்றன. இவை தன்னிறைவு அடைந்து விட்டனவா? குறிப்பாக, விவசாயிகளைப்
பாதிக்கும் மின்சாரத்துறை தன்னிறைவு அடைந்து விட்டதா?
துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த
டி.வி.யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இதற்கு மட்டும்
எங்கிருந்து நிதி வந்தது?இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள்
தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள். டி.வி. வழங்கும் பணத்தை வைத்து
விவசாயிகளுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.
தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான
மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒரு மாவட்டத்தையாவது தன்னிறைவு
அடையச் செய்திருக்கலாம். இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான
மருத்துவம், கல்வி, மும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை
வழங்கினாலே போதும்.
அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி.வி.முதல் கார் வரை அனைத்தையும்
வாங்கிக் கொள்வோம். எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே பூர்த்தி செய்து
தன்னிறைவு அடைந்து விடுவோம்.
விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர் பற்றாக்குறை, லஞ்சம்,
ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக
நான் எப்படி டி.வி. பார்க்க முடியும்? எனவே எனக்கு இந்த டி.வி. வேண்டாம்.
முதல்வர் கருணாநிதி மீது எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும்
உள்ளது.
எனவே,இந்த டி.வி.யை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்த சந்தர்ப்பத்தைப்
பயன்படுத்திக் கொள்கிறேன்.அவர் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என் மனம்
மேலும் வேதனைப்படும். அரசு மற்றும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச்
செய்தாலே போதும். இந்தியா வல்லரசாகிவிடும்’ என்று நீண்டது அந்த மனு.
இதைப் படித்த பெரியண்ண அரசு முகத்தில் ஈயாடவில்லை.அருகில் இருந்த
அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். என்றாலும் அந்த மனுவையும் டி.வி.யையும்
வாங்கி வைத்துக் கொண்டு மேலும் பரபரப்பை உண்டாக்காமல் விஜயகுமாரை அனுப்பி
வைத்தார் அரசு.
இதன் பின்னர் விஜயகுமாரிடம் பேசினோம்.
“நான் ஒரு சாதாரண விவசாயி. விவசாயிகள் எல்லாம் மின்வெட்டால்
பாதிக்கப்பட்டு விளைநிலத்தை ரியல் எஸ்டேட்காரன்கிட்ட வித்துட்டு நகரத்துல
போய் கூலி வேலைக்கும்,ஹோட்டல் வேலைக்கும் அல்லாடிக்கிட்டிருக்கான்.
இந்த நிலை, நாளைக்கு எனக்கும் என் பிள்ளைகளுக்கும் வரப் போகிறது.
எதிர்காலத்தை நினைத்து மனம் கலங்கிப் போய் இருக்கிறது. ராத்திரியில
படுத்தால் தூக்கம் வர மாட்டேங்குது.
சாராயத்தை குடிச்சுட்டு, ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும்
வர்க்கம் சோம்பேறியாகிக்கிட்டிருக்கு.ரொம்ப சீப்பா கணக்குப் போட்டாலும்
ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க. தமிழ்நாட்டில் ரெண்டு கோடி
குடும்ப அட்டைகள் இருக்கு.2கோடி குடும்ப அட்டைக்கும் டி.வி. கொடுத்தால்
இருபது லட்சம் கோடி செலவாகும்.இதை வைத்து 88 துறைகளையும் தன்னிறைவு
அடையச் செய்தாலே போதுமே.
கனத்த இதயத்தோடும், வாடிய வயிறோடும் இருக்குறவனுக்கு எதுக்கு டி.வி.?
அவன் பொழப்பே சிரிப்பா சிரிக்கும்போது அவன் டி.வி. பாத்து வேற
சிரிக்கணுமாக்கும்.அதுனாலதான் நான் டி.வி.யை திருப்பிக் கொடுத்தேன்’’
என்றார்.
டி.வி.யை திருப்பிக் கொடுத்த கையோடு முதல்வர் கருணாநிதிக்கு கடிதம்
ஒன்றையும் எழுதியிருக்கிறார் விஜயகுமார்.
அந்தக் கடிதத்தில் ‘கொத்தமங்கலத்துக்கு வந்த டி.வி.க்கள் 2519. அதில்
2518 மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். எனக்கான ஒரு டி.வி.யை எனது அன்புப்
பரிசாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்’என்று குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ்
செய்துள்ளார்.
மக்களிடம் இருந்து சுரண்டப்படும் பணத்தில் மக்களுக்கே கொடுக்கப்படும்
லஞ்சம் தான் இலவசங்கள் என்பதை விவசாயி விஜயகுமார் பொட்டில் அடித்தாற்போல்
தெளிவுபடுத்தியுள்ளார். மக்களை சோம்பேறிகளாக்கும் இலவசத்துக்கு எதிராக
போர் தொடுத்திருக்கும் அவரை பாராட்டத்தான் வார்த்தைகளே கிடைக்கவில்ல
நன்றி:பத்மநாபன்.பா.
--
வளமுடன் வாழ வாழ்த்தும்
என்றும் அன்புடன்,
BAAI
விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்
கொடுத்து இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.
கடந்த 23-ம் தேதி கொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க.
செயலாளர் பெரியண்ண அரசு தலைமையில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும்
விழா நடந்து கொண்டிருந்தது.அப்போது பயனாளிகள் பட்டியலில் இருந்து
விஜயகுமார் என்ற பெயர் வாசிக்கப்பட்டதும்,கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச்
சேர்ந்த விஜயகுமார் என்ற விவசாயி மேடையேறினார்.
அவருக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கிக் கொண்டார்.ஒரு
விநாடி அங்கே நின்றவர்,டி.வி.யை பெரியண்ண அரசுவிடமே திருப்பிக்
கொடுத்துவிட்டு,கூடவே ஒரு மனுவையும் கொடுத்தார்.ஏதோ கோரிக்கை மனு
கொடுக்கிறார் என்று அரசுவும் சாதாரணமாக வாங்கிப் படித்தார்.
அதில் ‘மனிதனுக்கு டி.வி. என்பது பொழுதுபோக்கு சாதனம்தான். ஆனால் அதைவிட
முக்கியமானது உணவு, உடை, உறைவிடம். தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள்
இருக்கின்றன. இவை தன்னிறைவு அடைந்து விட்டனவா? குறிப்பாக, விவசாயிகளைப்
பாதிக்கும் மின்சாரத்துறை தன்னிறைவு அடைந்து விட்டதா?
துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த
டி.வி.யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இதற்கு மட்டும்
எங்கிருந்து நிதி வந்தது?இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள்
தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள். டி.வி. வழங்கும் பணத்தை வைத்து
விவசாயிகளுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.
தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான
மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒரு மாவட்டத்தையாவது தன்னிறைவு
அடையச் செய்திருக்கலாம். இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான
மருத்துவம், கல்வி, மும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை
வழங்கினாலே போதும்.
அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி.வி.முதல் கார் வரை அனைத்தையும்
வாங்கிக் கொள்வோம். எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே பூர்த்தி செய்து
தன்னிறைவு அடைந்து விடுவோம்.
விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர் பற்றாக்குறை, லஞ்சம்,
ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக
நான் எப்படி டி.வி. பார்க்க முடியும்? எனவே எனக்கு இந்த டி.வி. வேண்டாம்.
முதல்வர் கருணாநிதி மீது எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும்
உள்ளது.
எனவே,இந்த டி.வி.யை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்த சந்தர்ப்பத்தைப்
பயன்படுத்திக் கொள்கிறேன்.அவர் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என் மனம்
மேலும் வேதனைப்படும். அரசு மற்றும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச்
செய்தாலே போதும். இந்தியா வல்லரசாகிவிடும்’ என்று நீண்டது அந்த மனு.
இதைப் படித்த பெரியண்ண அரசு முகத்தில் ஈயாடவில்லை.அருகில் இருந்த
அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். என்றாலும் அந்த மனுவையும் டி.வி.யையும்
வாங்கி வைத்துக் கொண்டு மேலும் பரபரப்பை உண்டாக்காமல் விஜயகுமாரை அனுப்பி
வைத்தார் அரசு.
இதன் பின்னர் விஜயகுமாரிடம் பேசினோம்.
“நான் ஒரு சாதாரண விவசாயி. விவசாயிகள் எல்லாம் மின்வெட்டால்
பாதிக்கப்பட்டு விளைநிலத்தை ரியல் எஸ்டேட்காரன்கிட்ட வித்துட்டு நகரத்துல
போய் கூலி வேலைக்கும்,ஹோட்டல் வேலைக்கும் அல்லாடிக்கிட்டிருக்கான்.
இந்த நிலை, நாளைக்கு எனக்கும் என் பிள்ளைகளுக்கும் வரப் போகிறது.
எதிர்காலத்தை நினைத்து மனம் கலங்கிப் போய் இருக்கிறது. ராத்திரியில
படுத்தால் தூக்கம் வர மாட்டேங்குது.
சாராயத்தை குடிச்சுட்டு, ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும்
வர்க்கம் சோம்பேறியாகிக்கிட்டிருக்கு.ரொம்ப சீப்பா கணக்குப் போட்டாலும்
ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க. தமிழ்நாட்டில் ரெண்டு கோடி
குடும்ப அட்டைகள் இருக்கு.2கோடி குடும்ப அட்டைக்கும் டி.வி. கொடுத்தால்
இருபது லட்சம் கோடி செலவாகும்.இதை வைத்து 88 துறைகளையும் தன்னிறைவு
அடையச் செய்தாலே போதுமே.
கனத்த இதயத்தோடும், வாடிய வயிறோடும் இருக்குறவனுக்கு எதுக்கு டி.வி.?
அவன் பொழப்பே சிரிப்பா சிரிக்கும்போது அவன் டி.வி. பாத்து வேற
சிரிக்கணுமாக்கும்.அதுனாலதான் நான் டி.வி.யை திருப்பிக் கொடுத்தேன்’’
என்றார்.
டி.வி.யை திருப்பிக் கொடுத்த கையோடு முதல்வர் கருணாநிதிக்கு கடிதம்
ஒன்றையும் எழுதியிருக்கிறார் விஜயகுமார்.
அந்தக் கடிதத்தில் ‘கொத்தமங்கலத்துக்கு வந்த டி.வி.க்கள் 2519. அதில்
2518 மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். எனக்கான ஒரு டி.வி.யை எனது அன்புப்
பரிசாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்’என்று குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ்
செய்துள்ளார்.
மக்களிடம் இருந்து சுரண்டப்படும் பணத்தில் மக்களுக்கே கொடுக்கப்படும்
லஞ்சம் தான் இலவசங்கள் என்பதை விவசாயி விஜயகுமார் பொட்டில் அடித்தாற்போல்
தெளிவுபடுத்தியுள்ளார். மக்களை சோம்பேறிகளாக்கும் இலவசத்துக்கு எதிராக
போர் தொடுத்திருக்கும் அவரை பாராட்டத்தான் வார்த்தைகளே கிடைக்கவில்ல
நன்றி:பத்மநாபன்.பா.
--
வளமுடன் வாழ வாழ்த்தும்
என்றும் அன்புடன்,
BAAI
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
