செவ்வாய், மார்ச் 31, 2009

நண்பர் பாய் அவர்கள் வரும் தேர்வில் தேர்ச்சி பெற வாழ்த்து கவிதை
ஒரு அடி ஸ்கேலில் உள்ள அனைத்து பதில்களும் கேள்வியாய் வரட்டும்
திருத்துபவர் டாடிஆகி கிரிக்கட்டுபற்றிய செய்திக்கும் மார்க்கு அள்ளி கொட்டட்டும்
அந்துவன் போல் நண்பர் கிடைத்து பிட்டுகளை ஜெராக்ஸ் செய்து கொடுக்கட்டும்
சப்பாதிபோல் ஆசிரியர் கிடைத்து கேள்வித்தாள் அவுட் செய்யட்டும்
மேலும் பல வெற்றிகளை குவித்து "A" கிரேடு களாக வாங்கி குவிக்கட்டும்.
கரையான்.

பாய் படும் பாடு

நண்பர்/நண்பிகளே,

நான் எங்கு சென்றாலும் ,அரசாங்கங்கள் ,விட மாட்டேன்கின்றன.அதுவும் ஒரு நாட்டில் இருந்து, கால்நடை நோய்களை விரட்ட வேண்டுமேன்றால்,என்னை தான் கெஞ்சுகிறார்கள்.தமிழ்நாடு அரசுப் பணியில் சேர்ந்த உடன் "றிந்டெர்பெஸ்த்" நோயை விரட்டினேன்.தற்போது கத்தார் அரசு ,அதே நோயை இங்கு விரட்ட கோரியுள்ளார்கள்.தினமும் செம வேலை.சரியான அலுப்பு.ஆதலால் ,ப்லொக்கில் வரமுடியவில்லை.எப்போது முடியுமோ தெரியவில்லை.இதற்கிடையில் M.B.A. முதல் வருட தேர்வுக்கு படித்து வருகிறேன்.[Examiner களாக நம் வெட் பல்கலைக்கழக வாத்தியார்கள் வந்தால் ,படிக்க வேண்டியது இல்லை. இம் .என்ன செய்ய!].

பாய்.

புதன், மார்ச் 25, 2009

நாயூறான் தண்ணியை போட்டு விட்டு செய்யும் தமாசுகளை பெரும்பாலும் தூர நின்று தான் நாங்கள் வேடிக்கை பார்ப்போம், சில சமயங்களில் நம் நண்பர்களில் சிலர் அவனை சமாதானம் செய்வதாக நினைத்து வம்பில் மாட்டிகொள்வதுண்டு. அப்படி ஒரு முறை நம் நண்பர் எம்பிரியோ செல்வராசு, நாயூரானிடம் மாட்டிக்கொண்டு மரண அவஸ்தை பட்டது இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது. ஒரு முறை நாயூறான் காசு இல்லாத காரணத்தால் பக்கத்தில் உள்ள நாவல் ஆஸ்பிடல் ரோட்டில் கிடைக்கும் பாக்கெட் சரக்கை அடித்து விட்டு, ஓவராகி விட்டது. திடீர் என்று ஞானோதயம் பிறந்து, தாம் தவறு செய்து விட்டோமே என எண்ணி வருந்தி, இனியும் நான் உயிர் வாழ்வது தவறு ஆகவே தற்கொலை செய்து கொள்ளபோகிறேன் என அறிவித்தார், பின்னர் விறு விறு வென்று நம் கல்லூரி ஆஸ்டலில் நியூ பிளாக், sun shade மேலே ஏறி அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக எல்லோரையும் மிரட்டிகொண்டு இருந்தார். நம் நண்பர்கள் குழாம் அவன் குதிப்பதை live ஆக பார்க்கும் ஆசையில் கீழே வரிசையாக உட்கார்ந்து பார்த்துகொண்டிருந்தார்கள், அப்போது நம் நண்பர் எம்பிரியோ செல்வராசு வெளியில் சென்று விட்டு வந்தவர், பதறிப்போய், நம் நண்பர்களை பார்த்து திட்டி விட்டு, நாயூரானை காப்பாற்ற விடு விடு வென்று மாடியில் ஏறி, நாயூரானிடம் பக்குவமாக எடுத்து சொல்லி அவனை கீழே இறக்க முயற்சி செய்தார், அந்த முயற்ச்சியில் மாடியில் நின்று கொண்டு அவர் தன்னுடைய கையை கொடுக்க, நாயூறான் செல்வராசுவின் கையை இறுக்கமாக பற்றிக்கொண்டு மேலே எழ முயற்சி செய்தான்,நாயூரன் செல்வராசுவை விட எடை அதிகம், செல்வராசுவால் நாயூரானை மேலே தூக்க முடியாது, அவரால் முடியாததால் அவரும் அவனுடம் சேர்ந்து விழுந்து விடுமோ என்ற பயத்தில் அவரும் கத்த தொடங் கி விட்டார் (நாயூறான் துணைக்கு அவனையும் அழைத்து செல்லாலாம் என நினைத்தானோ என்னவோ), பின்னர் ஒரு வழியாக செல்வராசுவின் கையை விட்டு விட்டு அவனாகவே ஏறி வந்து சேர்ந்தான். மற்ற நண்பர்கள் எல்லாம் சேர்ந்து நண்பர் செல்வராசு விடம் சென்று" நாங்கெல்லாம் என்ன கேணையங்களா, நீயும் நின்று வேடிக்கை பாத்துட்டு போவது தானே, அதை விட்டு விட்டு வீராப்பா பேசுனே" என நக்கல் அடித்து விட்டு சென்றார்கள்.
கரையான்.

என்ன ஆனார்கள்?

1. பிய்சரில் [Pfizer] பைசா இல்லையா?
2. குவைத்தில் குழப்பமா ?
3. மலேசியாவில் மயக்கமா ?
விடைக்காக காத்திருக்கும் ,
பாய்.

ஞாயிறு, மார்ச் 22, 2009

நம் கல்லூரி ஆடிடோரியத்தில் ஒரு விழா நடந்து கொண்டு இருந்தது, அதற்கு தலைமை டாக்டர் ரிச்சர்டு மாசிலாமணி, அவர் மேடையில் வந்தமர்ந்தவுடன் நம் வகுப்பு தோழர்கள் சிலர் விசில் அடித்தார்கள், இதை பார்த்த அவர் டென்சன் ஆகி விட்டார்,(முகம் சிவந்து அல்லது கருத்து விட்டார் என்று சொல்லவே முடியாது-இந்த இரண்டுமே அவருக்கு பொருந்தாது),உடனே மைக்கை பிடித்த அவர் கிட்ட தட்ட அரை மணி நேரம் நம் கழுத்தில் ரத்தம் வரும் வரை கத்தி போட்டு பலவிதமாக அறிவுரை கூறினார், அவரின் கோபத்தை பார்த்து auditorium நிசப்தமாகி விட்டது. ஒரு வழியாக அவர் கோபம் தணிந்து , அவரிடமிருந்த அறிவுரைகள் எல்லாம் காலியாகிய வுடன் இனியாவது திருந்தி மாணவர்கள் போல் நடந்து கொள்ளுங்கள், ரவுடிகள் போல் நடக்காதீர்கள் என்று கூறி முடித்தார், அவர் முடிக்கவும் நம் நண்பர்கள் திரும்பவும் விசில் அடிக்க அவர் கோபத்தின் உச்சிக்கே சென்று பின்னர் நொந்து நூடுல்ஸ் ஆகி எக்கேடோ கேட்டுப்போங்கள் என்று கூறி அவருடைய நாற்காலியில் உட்கார்ந்து விட்டார்.
கரையான்.

2008 பிற்பகுதியில் பாய்











சனி, மார்ச் 21, 2009

நம் கல்லூரியில் நானும் நாயூரானும் படித்தோமோ இல்லையோ மற்ற விஷயங்களில் நன்றாகவே அனுபவித்தோம் என்றுதான் சொல்ல வேண்டும். நம் கல்லூரி inter-class games பல முறை எதோ இந்தியா -பாகிஸ்தான் போர் போன்ற சூழலை உருவாக்கும், அதுவும் volley-ball போட்டியில் நம் ஜுனியர் (immediate juniors) களுடன் மோதும் பொது பெரிய போர் களம் போல் காட்சி அளிக்கும். ஒரு முறை அந்த மாதிரியான போட்டியில் மிகப்போராடி நம் வகுப்பு வெற்றி பெற்று விட்டோம், அதை கொண்டாடும் விதமாக நாயூறான் ஆர்வ மிகுதியில் நம் வகுப்பு நண்பர்களிடமிருந்து ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என வசூல் செய்து ஒரு பீர் பாட்டில் ஒன்றை வாங்கி வந்து விட்டான், அந்த பாட்டிலை திறந்து நுரை வருமாறு குலுக்கி எல்லார் மேலும் பீச்சி அடித்து கொண்டாடினான், அதை பார்த்து விட்ட நம் Physical Director வேகமாக ஓடி வந்து மிக கோபமாக கத்த ஆரம்பித்தார் மேலும் வழக்கம் போல் அவருடைய தங்லிஷில் எங்களுக்கு அறிவுரை கூற ஆரம்பித்தார்" see you know how much கஷ்டப்பட்டு your father and mother படிக்க வைக்கிறாங்க you people don't understand their கஷ்டம். you people are drinking in the வேர்வை சிந்தி உழைத்த பைசா." இப்படியாக அவர் கூறி முடித்து விட்டு இனிமேல் அப்படியெல்லாம் நீங்கள் செய்ய மாட்டீர்கள் என நம்புகிறேன் என அவரே அவருக்கு உறுதி கூறிவிட்டு திரும்பி செல்ல முனைந்தார், அப்போது நயூறான் அவன் கையில் இருந்த பீர் பாட்டிலை parasitology department முன் இருந்த சுவற்றில் வேகமாக அடித்து உடைத்தான், Physical Director முகம் சிவந்து, உங்களை எல்லாம் திருத்தவே முடியாது, என்று கூறி விட்டு அந்த இடத்திலிருந்து வேகமாக வெளியேறி விட்டார்.

கரையான்