இந்த புகைப்படத்தை பார்க்கும்போது பழைய நினைவுகள் சிறகடித்து பறக்க ஆரம்பித்து விட்டது....
நம்ம பாட்ச் -ல ஒரு பெரிய பலம் நான் பெரியவன் என்ற எண்ணம் இல்லாமல் ஒரு அணியாக செயல் படுவது... நான் கைப்பந்து மற்றும் சிறகுப்பந்து ஆகிய விளையாட்டுகளிலும் நன்றாக விளையாடக்கூடியவனாக இருந்தாலும், கிட்டத்தட்ட எல்லா விளையாட்டுகளிலும் கலந்து கொண்டு விளையாடினேன்.(செஸ், carrom ஆகிய மூளையை உபயோகித்து விளையாட வேண்டிய விளையாட்டுக்கள் தவிர) அதில் நடந்த சுவாரஸ்யமான தகவல்கள் என் நினைவிலிருந்து.....
நம்முடைய immediate juniors உடன் விளையாடிய கால்பந்து போட்டி மறக்கமுடியாத ஒன்று...வரதராஜன் வைரவசாமி அப்பாலோ ஆகிய முக்கிய வீரர்கள் சேர்ந்து ஒரு அணியை உருவாக்கினார்கள் என்னை goal keeper(பலி கடா) ஆக தேர்வு செய்து, மிகப்பெரிய பொறுப்பை(காக்கை தலையில் பனம்பழம்) என்னிடம் ஒப்படைத்தார்கள், நமக்கு எதிர் அணி நல்ல பலம் வாய்ந்தது, அதில் நம் கல்லூரி அணியின் முக்கியமான வீரர்கள் இருந்தது அவர்களுக்கு பெரும் பலம். என்னதான் சிறந்த வீரர்களாக இருந்தாலும் எதிர் அணியில் உள்ளவர்கள் ஒரு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு விளையாடா விட்டால் நன்றாக விளையாடுபவர்களின் ரிதம்(rhythm ) பாதித்து அவர்களால் சிறப்பாக விளையாட்டை வெளி படுத்த முடியாது, நம் ஜூனியர்கள் ராணுவ வீர்கள் போல் சிறப்பாக அணி வகுத்து விளையாடுபவர்கள் நம் அணி வீரர்கள் நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்து விட்டது போல் சிதறி ஓடி அணி வகுப்பை சீர் குலைப்பவர்கள், இதனால் அந்த சிறந்த அணி திணறி விட்டது. நம் அணியில் எல்லோரும் mid fielders , defenders, forward எல்லா நிலைகளிலும் விளையாடி எதிரணியின் அனைத்து ஆட்டக்காரர்களையும் நிலைகுலைய வைத்து வெறுப்பேற்றி கொண்டு இருந்தார்கள், ஒரே இடத்தில் நின்று ஆடியவர்கள் என்றால் நான் கோல் கீபர் மற்றவர் அப்பாலோ அவன் முட்டியில் அடிபட்டிருந்ததால் அதிகம் ஓட முடியாமல் defendfer ஆக விளையாடிக்கொண்டு இருந்தான். முதல் பாதியில் கோல் இல்லை , இரண்டாவது பாதியிலும் அதே நிலை , வரதராஜன் நாம் எப்படியாவது சமன் செய்து விட்டால் tie breaker இல் ஜெயித்து விடலாம் என்று ஆலோசனை கொடுத்தார். இன்னும் பத்து நிமிடங்கள்தான் அவர்கள் ஜெயிக்க விளையாடிக்கொண்டு இருந்தார்கள் நாங்கள் தோற்காமல் இருக்க விளையாடி கொண்டு இருந்தோம். ஒரு கட்டத்தில் அவர்கள் அணியின் ஐயப்பன் மிகவும் கடுப்பாகி மைதானத்தின் அவர்கள் பக்க பாதியிலிருந்து பந்தை வேகமாக உதைத்தான்,பந்து என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது, சுலபமாக பிடிக்க கூடியதாக பறந்து வந்து கொண்டிருந்தது, நானும் முன்னேறி பிடிக்க செல்கிறேன், அது வரை சும்மா இருந்த அப்பாலோ தலையால் முட்டி பந்தை திருப்பி அனுப்ப முயற்சி செய்ய அவன் நடு மண்டையில் பட்டு பந்து மேலெழுந்து பின்னோக்கி பறக்க தொடங்கியது, அதாவது என் தலைக்கு மேல் கோலை நோக்கி, அவ்வளவுதான் ஆட்டம் முடிந்து விட்டது...
இன்னும் சுவாரஸ்யமான தமாஷ்களுடன் தொடரலாம்....
கரையான்.

