வெள்ளி, டிசம்பர் 06, 2013

மறக்கமுடியுமா...


இந்த புகைப்படத்தை  பார்க்கும்போது பழைய நினைவுகள் சிறகடித்து பறக்க ஆரம்பித்து விட்டது....
நம்ம பாட்ச் -ல ஒரு பெரிய பலம்  நான் பெரியவன் என்ற எண்ணம் இல்லாமல்  ஒரு அணியாக செயல் படுவது... நான் கைப்பந்து மற்றும் சிறகுப்பந்து ஆகிய  விளையாட்டுகளிலும் நன்றாக விளையாடக்கூடியவனாக இருந்தாலும், கிட்டத்தட்ட எல்லா விளையாட்டுகளிலும் கலந்து கொண்டு விளையாடினேன்.(செஸ், carrom ஆகிய மூளையை உபயோகித்து விளையாட வேண்டிய விளையாட்டுக்கள் தவிர) அதில் நடந்த சுவாரஸ்யமான தகவல்கள் என் நினைவிலிருந்து.....
நம்முடைய immediate juniors உடன் விளையாடிய கால்பந்து போட்டி மறக்கமுடியாத ஒன்று...வரதராஜன் வைரவசாமி அப்பாலோ ஆகிய முக்கிய வீரர்கள் சேர்ந்து ஒரு அணியை உருவாக்கினார்கள் என்னை goal keeper(பலி கடா) ஆக தேர்வு செய்து, மிகப்பெரிய பொறுப்பை(காக்கை  தலையில் பனம்பழம்) என்னிடம் ஒப்படைத்தார்கள், நமக்கு எதிர் அணி நல்ல பலம் வாய்ந்தது, அதில் நம் கல்லூரி அணியின் முக்கியமான வீரர்கள் இருந்தது அவர்களுக்கு பெரும் பலம். என்னதான் சிறந்த வீரர்களாக இருந்தாலும் எதிர் அணியில் உள்ளவர்கள் ஒரு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு விளையாடா  விட்டால் நன்றாக விளையாடுபவர்களின் ரிதம்(rhythm ) பாதித்து   அவர்களால் சிறப்பாக விளையாட்டை வெளி படுத்த முடியாது, நம் ஜூனியர்கள் ராணுவ வீர்கள் போல் சிறப்பாக அணி வகுத்து விளையாடுபவர்கள் நம் அணி வீரர்கள் நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்து விட்டது போல் சிதறி ஓடி அணி வகுப்பை சீர் குலைப்பவர்கள், இதனால் அந்த சிறந்த அணி திணறி விட்டது. நம் அணியில் எல்லோரும் mid fielders , defenders, forward எல்லா நிலைகளிலும் விளையாடி எதிரணியின் அனைத்து ஆட்டக்காரர்களையும் நிலைகுலைய வைத்து வெறுப்பேற்றி கொண்டு இருந்தார்கள், ஒரே இடத்தில் நின்று ஆடியவர்கள் என்றால் நான் கோல் கீபர் மற்றவர் அப்பாலோ அவன் முட்டியில் அடிபட்டிருந்ததால் அதிகம் ஓட முடியாமல் defendfer ஆக விளையாடிக்கொண்டு இருந்தான். முதல் பாதியில் கோல்  இல்லை , இரண்டாவது பாதியிலும் அதே நிலை , வரதராஜன் நாம் எப்படியாவது சமன் செய்து விட்டால் tie breaker  இல் ஜெயித்து விடலாம் என்று ஆலோசனை கொடுத்தார். இன்னும் பத்து நிமிடங்கள்தான் அவர்கள் ஜெயிக்க விளையாடிக்கொண்டு இருந்தார்கள் நாங்கள் தோற்காமல் இருக்க விளையாடி கொண்டு இருந்தோம். ஒரு கட்டத்தில் அவர்கள் அணியின் ஐயப்பன் மிகவும் கடுப்பாகி மைதானத்தின் அவர்கள் பக்க பாதியிலிருந்து பந்தை வேகமாக உதைத்தான்,பந்து என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது, சுலபமாக பிடிக்க கூடியதாக பறந்து வந்து கொண்டிருந்தது, நானும் முன்னேறி பிடிக்க செல்கிறேன், அது வரை சும்மா இருந்த அப்பாலோ தலையால் முட்டி பந்தை திருப்பி அனுப்ப முயற்சி செய்ய அவன் நடு  மண்டையில் பட்டு பந்து மேலெழுந்து பின்னோக்கி பறக்க தொடங்கியது, அதாவது என் தலைக்கு மேல் கோலை நோக்கி, அவ்வளவுதான் ஆட்டம் முடிந்து விட்டது...
இன்னும் சுவாரஸ்யமான தமாஷ்களுடன்  தொடரலாம்....

கரையான்.

திங்கள், டிசம்பர் 02, 2013

யாரிடமும் சொல்லிடாத சொக்கா.....

நம்மிடம் பல நேரங்களில் நண்பர்கள் "உனக்கு மட்டும்தான் தெரியும் வேற யாருகிட்டயும் இத பத்தி பேசாத" என முக்கியமான அல்லது உப்புசப்பில்லாத விஷயங்களை சொல்வதுண்டு.  இந்த உனக்கு மட்டும் தெரிந்த மேட்டர் பலருக்கும் தெரியும் என்பதுதான் உண்மை.
சென்ற முறை தாயகம் வந்திருந்தபோது நம்ம எஸ்.கே.பீ மற்றும் நண்பர்களை சந்திப்பதற்காக ஈரோடு சென்றிருந்தேன். எஸ்.கே.பீ என்னை அழைக்க ரயில் நிலையம் வந்திருந்தான், சம்பிரதாயமான நலம் விசாரிப்புகளுக்கு பின் "மாப்பிள நான் துபாய் போவது யாருக்கும் தெரியாது நீ இத பத்தி யாருக்கிட்டயும் பேச வேணாம்" என்றான், ஒருவேள நாம பிரதமர் மன்மோகனுக்கோ, முதல்வர் ஜெயலலிதாவுக்கோ சொல்லி இவன் துபாய் போவதா தடுத்துடுவோம்னு நினைக்கிறானோ என்று நினைத்து சத்தியம் செய்யாத குறையாக நான் யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று கூறினேன். அவனுடன் கால்நடை மருத்துவமனையில் உள்ள வீட்டிற்கு சென்றடைந்தேன். வீட்டிற்கு வெளியே வேறொரு கால்நடை மருந்தகத்தில் பணி  புரியும் கால்நடை மருத்துவர் நின்றிருந்தார், நாங்கள் காரை விட்டு இறங்கியவுடன் அறிமுகப்படலம் முடிந்த வுடன், "நீங்க எப்ப சார் துபாய் போறீங்க " என்று எஸ்.கே.பீ இடம் கேட்டார், அவரிடம் எதையோ சொல்லி சமாளித்தான்,பின்னர் என்னிடம்"வேற ஒன்னும் இல்லடா துறை ரீதியா அனுமதிக்கு விண்ணபித்து இருக்கேன் அதான் அவனுக்கு தெரிஞ்சிருக்கு" என்றான். கொஞ்சம் நேரம் கழித்து வேறொரு கால்நடை மருத்துவர், அவர் வேறொரு துறையில்(கால்நடை மருத்துவத்திற்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத) பணி  புரிகிறார், "என்ன அண்ணாச்சி துபாய் போறீங்கன்னு கேள்வி பட்டேன் " என்று எஸ்.கே.பீ யை பார்த்து வினவினார்.  அடுத்த நாள் நாங்கள் இருவரும் ஒரு பால்பண்ணைக்கு சென்றோம், எங்கள் இருவரையும் அந்த பண்ணைக்கு வேறொரு கால்நடை மருத்துவர் அழைத்து சென்றார், அவரும் எஸ்.கே.பீ இடம் துபாய் செல்வதை பற்றி விசாரித்தார், இப்போது எனக்கு பழகி விட்டது, அந்த பண்ணையில் எங்கள் பணி முடிந்தவுடன் அந்த பண்ணையின் முதலாளி " என்னங் டாக்டர்  துபாய் போராருங்க்லாட்ருக்கு...சொல்லவே இல்லீங்...." எஸ் கே பீ "உங்களுக்கு எப்படி தெரியும் " என்றான் "அட போங்  இந்த விஷயம் ஊரு பூர தெரியுங் அல்லாம் பேசிக்றாங்  "   எனக்கு மட்டுமே தெரிந்த  ராணுவ ரகசியம் ஊரு பூரா சிரிப்பா சிரிக்குதே என நினைத்து கொண்டேன். பின்னர் சந்தித்த அனைவரும் (பகவதி , தங்கவேல் உட்பட) இந்த ரகசியத்தை எஸ் கே பீ இடம் கேட்டார்கள்.
நாங்கள் இருவரும் அந்த பால் பண்ணையிலிருந்து வெளியேறும்போது ஒரு மாடு மற்றொரு மாட்டிடம் எங்களை காட்டி ஏதோ கத்தியது அதன் பாஷை புரியாததால் அந்த வார்த்தைகளை கூகிள் மொழிபெயர்ப்பில் போட்டு பார்த்தேன், கீழ்கண்டவாறு மொழி பெயர்த்தது...
 " ஏற்கனவே நமக்காக இருந்த ஒரே நல்ல மருத்துவர் பொள்ளாச்சி இப்ராஹிம்  பாய் அவரு துபாய் போய்ட்டார் , அடுத்த சூப்பர் மருத்துவர் இவரும் துபாய் போறாரு நம்ம கதி இனி அதோகதிதான்"

கரையான்.

வியாழன், நவம்பர் 28, 2013

சனி, நவம்பர் 23, 2013

ரத்த தானம்

 என்னுடன் பணி  புரியும் ஒரு தொழிலாளிக்கு குதிரை அடித்ததால் கால் முறிவு ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டார், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறிவிட்டார்கள், அதற்கு அவருக்கு நான்கு யூனிட் ரத்தம் O +ve  ரத்தம் தேவை, தயார் ஆனவுடன் அறுவை சிகிச்சை செய்வதாக கூறினார்கள், எங்கள் பண்ணையில் பணி புரியும் மற்ற வேலை ஆட்கள் மற்றும் நான் என எட்டு பேர் சென்றோம், ஆனால் அதில் மூன்று பேரிடம் மட்டுமே ரத்தம் எடுக்க முடியும் என கூறி விட்டார்கள், வேறு குரூப், மற்றும் haemoglobin அளவு குறைவாக இருந்தது என கூறி நிராகரித்து விட்டார்கள், குறைந்தது 13.0mg இருக்க வேண்டும் எனக்கு 12.9 mg என்பதால் என்னிடமும் ரத்தம் எடுக்க முடியாது என்று கூறி விட்டார்கள், பின்னர் நண்பர்களுக்கு தகவல் கூறி இரண்டு பேர் வந்து ரத்தம் கொடுத்தார்கள்,  ரத்த வங்கியில் காத்திருக்கும் நேரத்தில் அங்கு பணியிலிருந்த பிலிப்பின்ஸ் நாட்டை சேர்ந்த nurse -ஐ பார்த்து மிக பரிதாபமாக இருந்தது. பல நாட்டவர்கள் பல மொழி பேசுபவர்கள் என அவர்களை சமாளித்ததை பார்த்த போது வியப்பாக இருந்தது. சிரியா நாட்டவர் இருவர் வந்திருந்தனர், அவர்களை ஒருவரின் ரத்தம் நார்மல் இல்லை என மற்றொருவருக்கு மட்டுமே எடுக்க முடியும் என கூறினார் அந்த nurse , நிராகரிக்கப்பட்டவர் பரவாயில்லை இன்னொரு unit ஐயும் அவருடன் வந்த மற்ற நபரிடம் சேர்த்து  எடுக்க கூறினார், ஆனால் அந்த nurse ஒருவருடமிருந்து ஒரு unit மட்டுமே எடுக்க முடியும் என விவரிக்க பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை. அடுத்து ஐந்து சவுதி நாட்டவர்கள்  அவர்களின் உறவினருக்கு ரத்தம் கொடுக்க வந்தார்கள், இரண்டு பேர் உடல் எடை குறைவாக இருந்ததால் நிராகரிக்கபட்டார்கள் , மீதி மூன்று பேரிடம் ரத்தம் எடுக்க அந்த nurse தயாரானார், அதில் ஒருவர் எவ்வளவு ரத்தம் எடுப்பீர்கள் என்று கேட்டார், 450 மில்லி என கூறி அந்த ரத்த பையையும் காட்டினார், அதை கேட்ட சவுதி டென்ஷன் ஆகி, என்னுடைய உடம்பிலிருந்து அவ்வளவு ரத்தம் எடுத்தால் நான் செத்து விடுவேன், ஒரு 100 மில்லி வேண்டுமானால் எடுத்து கொள் என கூறினார், அந்த பெண் இல்லை சார் ஒரு பையின் அளவு 450 மில்லி, உலகம் பூராவும் இப்படிதான் எடுக்கப்படுகிறது, குறைவாக எடுத்தால் உபயோகம் அற்று போய்  விடும் என கூறினார், ஆனால் அந்த சவுதி விடுவதாக இல்லை, எங்கள் நான்கு பேரிடமிருந்தும் நூறு நூறு மில்லி ஒரே பையில் பிடித்துகொள் என ஏதோ குழாயில் தண்ணி பிடிப்பது போல் விவாதம் செய்தார், அந்த பெண் அப்படியெல்லாம் செய்ய முடியாது சார், உங்களால் கொடுக்க முடியாதென்றால் நீங்கள் சென்று வேறு ஒருவரை அழைத்து வாருங்கள், என்று கூறி விட்டு உள்ளே சென்று விட்டார். இவர்கள் படுத்தியது போதாதென்று, ரத்தம் கொடுக்க வந்த என் நண்பர், ரத்தம் கொடுத்து முடித்த வுடன் லேசாக மயக்கமாகி என்னை டென்ஷன் ஆக்கினார்.

கரையான். 

செவ்வாய், நவம்பர் 19, 2013

முதலாளியின் நஷ்டம் என்னுடைய நஷ்டம்.....

என் முதலாளி குதிரை விற்காததால் அவருக்கு நஷ்டமோ இல்லையோ எனக்கு நஷ்டம்,  முதலாளிக்கு ஆதரவாக  பேசினாலும் மனது பூராவும் கோபமும் இயலாமை உணர்வும் இருப்பதை மறுக்க முடியாது. குதிரை விற்பனைக்கு ஏற்றவாறு எனக்கு ஊக்க தொகை(incentive ) வழங்கப்பட வேண்டும், சரியாக விற்பனை ஆகாததால் எனக்கும் நஷ்டம்தான். உற்பத்தியை பெருக்கி விற்பனை செய்யக்கூடிய அளவில் தயார் செய்வதற்காக வழங்கப்படும் தொகை இது, விற்பனை ஆகாதது என் தவறில்லை என்றாலும் எனக்கான ஊக்க தொகை கிடைக்காமல் போகும் . இது மட்டுமலாமல் இந்த குதிரைக்குட்டிகள் அடுத்த நிலையான பந்தய குதிரைகளாக ஆக்குவதற்கான பயிற்சிகளை செய்வது என் தலையில் திணிக்கப்படும்.  குட்டியாக இருந்து பந்தய குதிரை என்ற அடுத்த நிலைக்கு பயிற்சி அளிப்பது  பொறுமையை சோதிப்பதாகவும், நம்முடைய பணி நேரத்தை அதிகம் எடுத்து கொள்ளவும் செய்யும். இந்த குட்டிகள் நன்றாக பின்னாளில் பந்தயத்தில் ஓடும்போது அதில் வரும் லாபம் (10% commission from stakes money) பயிற்சியாளருக்கு(trainer) சேரும், ஆக பயிற்சியாளருக்கு இரட்டை லாபம் எனக்கு இரட்டை நஷ்டம்.
ஒரு நல்ல trainer என்றால் அவரிடம் பயிற்சிக்கு செல்லும் 10 குதிரைகளில் 3 குதிரைகள் ஜெயிக்க வேண்டும், 10-ல் 8 குதிரைகளாவது பந்தயத்தில் கலந்து கொள்ளவேண்டும். இரண்டு குதிரைகள் பல்வேறு காயங்கள் (tendinitis, fractures ,etc )காரணமாக  கதை முடிந்து போகும். ஆனால் எங்கள் பயிற்சியாளர் தலை கீழ் 10 இல் 3 பந்தயத்தில் கலந்து கொண்டால் பெரிய விஷயம் அதில் ஒன்று ஜெயித்தால் அது பெரும் அதிசயம். மற்ற 7 குதிரைகளும் குப்பைக்குத்தான் போகும். இந்த நிலையை மாற்ற இரண்டு ஆண்டுகள் முன்னர் எங்கள் முதலாளி என்னிடம் ஆலோசனை கேட்டார், நான் அவரிடம் systematic training programme ஐ விளக்கினேன், அவர் உடனே குட்டிகளை முதல் மூன்று மாதங்கள் பயிற்சி   செய்யும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்,  சென்ற ஆண்டு முதல் எங்கள் குட்டிகள் ஜெயிக்க ஆரம்பித்து விட்டன, இந்த ஆண்டு அக்டோபர் முதல் வாரத்தில் எங்கள் பண்ணை 2 year old குட்டி மிக சிறப்பாக ஜெயித்தது, உடனே இந்நாட்டு மன்னர் விலைக்கு வாங்கி விட்டார். இப்போது பயிற்சியாளருக்கு இரட்டை லாபம் அந்த குட்டி விற்ற விலையில்(  3 மில்லியன் சவுதி ரியால்) 5 சதவீதம் அவருக்கு முதலாளி கொடுப்பார்.  இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் இவை ஜெயிக்காமல் போயிருந்தால் பயிற்சியாளர் என் மேல் பழியை போட்டு  தப்பி இருப்பார்.
"எனக்கும் கோவேறு கழுதைக்கும் பெரும் வித்தியாசம் இல்லை என்ற எண்ணம் அவ்வப்போது உதிப்பதையும் மறுக்க முடியாது........"

கரையான்.

திங்கள், நவம்பர் 11, 2013

லாபமில்லை....

இலாபமில்லை என்ற சொல் பல இடங்களில் உபயோகப்படுத்தப்படுகிறது, அதுவும் விவசாயம் மற்றும் கால்நடை சார்ந்த தொழில் செய்பவர்களில் பலர் உற்பத்தி செய்பவன் இழப்பையே சந்திக்க வேண்டியுள்ளது என்று புலம்புவது இப்போது வாடிக்கை ஆகி விட்டது. (நம்முடைய முக நூல் (face book ) பதிவில் கூட சொக்கன் கருப்பட்டி உற்பத்தியாளர்கள் பற்றி குறிப்பிட்டு இருந்தான்).
சென்றமாத இறுதி மற்றும் இந்த மாத தொடக்கத்தில் எங்கள் பண்ணையின் ஒரு வயது குதிரைகள் விற்பனை நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் சவுதியில் உள்ள அனைத்து பண்ணையாளர்களின் ஒரு வயது குட்டிகளுக்கான விற்பனை நடக்கும், எங்கள் பண்ணையின் உற்பத்தியான 35 குட்டிகளும் கலந்து கொண்டன...விற்பனை மிக மோசமாக இருந்தது, உற்பத்தி விலையில் பாதி கூட கேட்கப்பட வில்லை(உலகளாவிய பொருளாதார மந்த நிலை?), நான் விற்பனை அரங்கில் உட்கார்ந்து கொண்டிருந்தேன், அப்போது ஏற்கனவே எனக்கு பழக்கமான ஒரு சவூதி காரர் என்னருகில் உட்கார்ந்தார், பெரிய பணக்காரர் ஒரு மில்லியன் டாலர் கொடுத்து கூட குதிரை வாங்குவார்(ஆனால் அதை மருத்துவம் செய்யும் மருத்துவருக்கு நூறு டாலர் கொடுக்க பத்து முறை பேரம் பேசுவார்) என்னிடம் மிக கோபமாக "உங்க முதலாளி என்ன எல்லா குதிரைக்கும் மில்லியன் எதிர்பார்க்கிறார், கொஞ்சம் குறைத்து விற்றால் என்ன அவரிடம் பணமா இல்லை " என்றார். நான் அவரிடம் "என் முதலாளி பணம் போடுகிறார் மிக விலை உயர்ந்த குதிரைகளை வெளி நாடுகளில் இருந்து வாங்கி வருகிறார் அவர் எதிர் பார்ப்பதில் என்ன தவறு " என்றேன். உடனே அவர் "பத்து மில்லியன் செலவு செய்து விட்டு இருபது மில்லியன் எதிர் பார்க்கிறார், அவர் எவ்வளவு விலைக்கு  வாங்கினார் என்பது இணையதளத்தில் உள்ளதே" என்றார்.
நான் அவருக்கு விளக்க ஆரம்பித்தேன்," என் முதலாளி பத்து மில்லியன் கொடுத்து அமெரிக்க அல்லது ஐரோப்பா விலிருந்து பத்து சினை குதிரை வாங்குகிறார் என்று வைத்து கொள்வோம், இங்கு வந்த வுடன் அந்த பத்தில் ஒரு குதிரை abort ஆகி விடும், ஒன்பது குட்டிகள்தான் மிஞ்சும், மேலும் பாக்கி உள்ள ஒன்பது குதிரைகளும் எந்த பிரச்னையும் இல்லாமல் குட்டி போட்டாலும் பல்வேறு பிரச்னைகளால்(neo natal infection )அதில் ஒரு குட்டி இறந்து விடும் , மீதி எட்டு குட்டிகள்தான் மிஞ்சும், மிஞ்சிய எட்டு குட்டிகளில் விற்பனை வயதை அடைவதற்குள் paddock injuries அல்லது colic போன்ற காரணங்களால் ஒரு குட்டி மரணம் அடைந்து விடும், ஆக எஞ்சி இருப்பது ஏழு குட்டிகள்தான், இந்த ஏழில் ஒன்று அல்லது இரண்டு குட்டிகள் கால் கோணல் மாணலாக(conformational deformities )இருப்பதால் வாங்க ஆள் இருக்காது, எஞ்சி இருப்பது ஐந்து அல்லது ஆறு குட்டிகள் , இவற்றை விற்றுத்தான் என் முதலாளி போட்ட பத்து மில்லியன் -ஐ  எடுக்க வேண்டும் இதில் இந்த குட்டிகள் மற்றும் அதன் அம்மாக்களுக்கு தீவனம், தொழிலாளர் மற்றும் மருத்துவ செலவுகள் , அவர் போட்ட பணத்திற்கான வட்டி , எல்லாம் கூடி ஒரு குட்டிக்கான  சராசரி விலை இரண்டு மில்லியனை தொட்டு விடும், ஆகவே அவர் எதிர்பார்ப்பதில் என்ன தவறு" என்றேன். மேலும் அவரிடம் ,"இப்போது நீங்கள் buyer என்பதால் குறை கூறுகிறீர்கள் , எங்கள் முதலாளி குறைவான விலைக்கே விற்கிறார் என்று வைத்து கொள்வோம் , 10,000 ரியாலுக்கு குதிரையை நீங்கள் வாங்குகிறீர்கள் , அதை பயிற்சி அளித்து பந்தயத்தில் ஓட்டி, ஜெயிக்கவும் செய்து விட்டால், உங்களை விட பெரும் முதலாளிகள்(royals ) உடனே அந்த குதிரையை வாங்க உங்களிடம் பேரம் பேசினால், பத்தாயிரம் கொடுத்துதானே வாங்கினேன் எனக்கு மேலும் ஒரு பத்தாயிரம் போதும் என இருபதாயிரத்திர்கா விற்பீர்கள், ஒரு மில்லியன் வேண்டும் என கேட்க மாட்டீர்களா இப்போது நீங்கள் seller ஆகி விடுகிறீர்கள்....." என்றேன் . அந்த மனிதர் கோபம் தணிந்து " நீ சொல்வது சரிதான் என்று கூறி விட்டு எழுந்து சென்று விட்டார்.

கரையான்.