சனி, மார்ச் 16, 2013
வெள்ளி, மார்ச் 01, 2013
படித்ததில் பிடித்தது face book லிருந்து.
என் கடைசி கடிதம் :
------------------------------ -----
வானம் காய்ந்தது
வாழ்க்கை ஓய்ந்தது
மானம் காக்கும் துணி கூட
உழைத்து தேய்ந்தது
கல்லணை கட்டியது முதல்
கஞ்சிக்கு பஞ்சமில்லை...
கர்நாடகாவை பிரித்தது முதல்
அழுதது கொஞ்சமில்லை...
மழைநீரும் தூறவில்லை
மனரணமோ ஆறவில்லை
மின்சாரத்தோட ஓசை இல்லை
மீண்டும் பிறக்க ஆசையில்லை
சீக்கிரமே சாக வேண்டும்...
அதற்குள் சென்னை சென்று
பார்க்க வேண்டும் ..
அங்கே ,
கார் தயாரிக்க கரண்ட் இருக்கு -எங்க
கஞ்சிக்கு வழியில்லை
பீர் தயாரிக்க கரண்ட் இருக்கு
நெஞ்சி பொறுக்க வில்லை
ஹுன்டாயும் போர்டும்
உலகெல்லாம் ஏற்றுமதி...
உண்ண அரிசி பருப்பெல்லாம்
உள்ளுரில் இறக்குமதி
அமெரிக்காவுக்கு உழைக்க
ஐ டி வளர்த்தாலும்,
அடுத்த வேலை உணவுக்கு
சாப்ட்வேரையா சாப்பிடுவீர் ?
அங்கே ,
PUB'm Club'm கரன்டுல
ஜொலிக்குது - எங்க
பம்பும் செட்டும் வறண்டு
வறண்டு .. வலிக்குது :(
எத்தொழில் செய்தினும்
காசு வரும் - ஆனால்
இத்தொழிலில் மட்டும்தானே
உணவு வரும் ?
தலைநகர் வளர்வதில்
தவறொன்ன்னும் இல்லை - ஆனால்
தலைமட்டும் வளர்வது
வளர்ச்சி இல்லை
உழைத்து களைத்து
விளைத்தவன் விவசாயி - அதை
அடித்து பிடித்து
வாங்கியவன் வியாபாரி
தண்ணீர் , மின்சாரம் ,
தரகர், நஷ்டம் ,என்னென்று நான் சொல்ல
வாழ தெரியாமல் சாகவில்லை
வாழ முடியாமல் போகிறேன்
சச்சின் சதத்தையும்
ஷாருக்கான் படத்தையும்
கொண்டாடும் நீங்கள் - நாட்டு
உணவுக்கு உழைத்து
உணவே கிடைக்காமல்
உயிர் விடும் நாங்கள்
ஊருக்கே உழைத்தோம்
ஒரு வாய்க்கு போராட்டம்
வசதி வாய்ப்பு கூடவில்லை
நிம்மதியாக கூட வாழவில்லை
கடைசி ஆசை ..
இறைவா... ..
புழுவாக புல்லாக
மலிவான மண்ணாக
எலியாக எறும்பாக
ஏர் பூட்டும் எருதாக
எதுவாக பிறப்பினும்
ஏற்று கொள்வேன் _ ஆயின் இந்த
இடரான இந்தியாவில்
பிறந்திட வேண்டாம் ...
- உங்கள் தமிழன் , உழவன் ..
- வை .நடராஜன்
http://ursnattu.blogspot.in/
கரையான்.
------------------------------
வானம் காய்ந்தது
வாழ்க்கை ஓய்ந்தது
மானம் காக்கும் துணி கூட
உழைத்து தேய்ந்தது
கல்லணை கட்டியது முதல்
கஞ்சிக்கு பஞ்சமில்லை...
கர்நாடகாவை பிரித்தது முதல்
அழுதது கொஞ்சமில்லை...
மழைநீரும் தூறவில்லை
மனரணமோ ஆறவில்லை
மின்சாரத்தோட ஓசை இல்லை
மீண்டும் பிறக்க ஆசையில்லை
சீக்கிரமே சாக வேண்டும்...
அதற்குள் சென்னை சென்று
பார்க்க வேண்டும் ..
அங்கே ,
கார் தயாரிக்க கரண்ட் இருக்கு -எங்க
கஞ்சிக்கு வழியில்லை
பீர் தயாரிக்க கரண்ட் இருக்கு
நெஞ்சி பொறுக்க வில்லை
ஹுன்டாயும் போர்டும்
உலகெல்லாம் ஏற்றுமதி...
உண்ண அரிசி பருப்பெல்லாம்
உள்ளுரில் இறக்குமதி
அமெரிக்காவுக்கு உழைக்க
ஐ டி வளர்த்தாலும்,
அடுத்த வேலை உணவுக்கு
சாப்ட்வேரையா சாப்பிடுவீர் ?
அங்கே ,
PUB'm Club'm கரன்டுல
ஜொலிக்குது - எங்க
பம்பும் செட்டும் வறண்டு
வறண்டு .. வலிக்குது :(
எத்தொழில் செய்தினும்
காசு வரும் - ஆனால்
இத்தொழிலில் மட்டும்தானே
உணவு வரும் ?
தலைநகர் வளர்வதில்
தவறொன்ன்னும் இல்லை - ஆனால்
தலைமட்டும் வளர்வது
வளர்ச்சி இல்லை
உழைத்து களைத்து
விளைத்தவன் விவசாயி - அதை
அடித்து பிடித்து
வாங்கியவன் வியாபாரி
தண்ணீர் , மின்சாரம் ,
தரகர், நஷ்டம் ,என்னென்று நான் சொல்ல
வாழ தெரியாமல் சாகவில்லை
வாழ முடியாமல் போகிறேன்
சச்சின் சதத்தையும்
ஷாருக்கான் படத்தையும்
கொண்டாடும் நீங்கள் - நாட்டு
உணவுக்கு உழைத்து
உணவே கிடைக்காமல்
உயிர் விடும் நாங்கள்
ஊருக்கே உழைத்தோம்
ஒரு வாய்க்கு போராட்டம்
வசதி வாய்ப்பு கூடவில்லை
நிம்மதியாக கூட வாழவில்லை
கடைசி ஆசை ..
இறைவா... ..
புழுவாக புல்லாக
மலிவான மண்ணாக
எலியாக எறும்பாக
ஏர் பூட்டும் எருதாக
எதுவாக பிறப்பினும்
ஏற்று கொள்வேன் _ ஆயின் இந்த
இடரான இந்தியாவில்
பிறந்திட வேண்டாம் ...
- உங்கள் தமிழன் , உழவன் ..
- வை .நடராஜன்
http://ursnattu.blogspot.in/
கரையான்.
செவ்வாய், பிப்ரவரி 26, 2013
ஆணாதிக்க உலகம் - facebook இல் படித்ததில் பிடித்தது....
ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?
ஒரு ஆண் கடுமையா உழைச்சா... பொண்டாட்டியைக் கண்டுக்க மாட்டேங்கறான்னு மட்டம் தட்டுவாங்க.
பொண்டாட்டியை கவனிச்சுக்கிட்டா.. அவளையே சுத்தி சுத்தி வரான். வேலை வெட்டி இல்லாத பயன்னு கட்டம் கட்டுவாங்க..
அது போகட்டும்.. ஒரு பொண்ணைப் பார்த்து அழகா இருக்கேன்னு சொன்னா அது ஈவ் டீசிங்..ன்னு கெளப்பி விடுவாங்க.
கண்டுக்காம போனா அழகை ரசிக்கத் தெரியாத ஜடம்..!ன்னு அமுக்கி வைப்பாங்க.
எதுக்காச்சும் அழுதோம்ன்னா பொம்பள மாதிரி அழறான் பாரும்பாங்க..
திடமா இருந்தா நெஞ்சுல ஈவு இரக்கம் இல்லாத அரக்கன்னு வாருவாங்க..
பொண்டாட்டியை கேட்டு முடிவெடுத்தா தானா முடிவெடுக்கத் தெரியாத முட்டாள்..ன்னு பட்டம்.
சரின்னு நாமளே ஒரு முடிவு எடுத்தா தான் ஆம்பிளைங்கற அகங்காரம்..ன்னு திட்டும்.
ஏதாவது பிடிச்சது வாங்கிட்டுப் போய் கொடுத்தா "என்னத்துக்கு இப்போ காக்கா பிடிக்கிறீங்க..?" அப்படின்னு ஒரு நக்கல்.
ஒன்னும் வாங்கிட்டுப் போகலேன்னா "ஒரு முழம் பூவுக்கு விதியத்துப் போயிட்டேனே..!" ன்னு மூக்கை சிந்திக்கிட்டு விக்கல்..
ஒரு குறிக்கோளோடு உழைச்சா, " வேலையைக் கட்டிகிட்டு மாரடிக்க வேண்டியதுதானே.. எதுக்கு உங்களுக்கு பொண்டாட்டி..?" ன்னு ஏசல்.
சரின்னு சினிமாவுக்கு அழைச்சுட்டுப் போனா, " அந்த ஹீரோ மாதிரி ஒரு லட்சியம் வேணுமுங்க மனுஷனுக்கு.. எப்படி உழைச்சு முன்னேறி கார் பங்களா வாங்கினான் பாத்தீங்களா..?" ன்னு பூசல்..
இந்த கருத்து ஒஹோ என்று இருக்கிறதுன்னு எழுதினா, ஆனாதிக்க உலகம் அப்படின்னு சொல்லுவாங்க.
இது தப்பு பெண்கள் நல்லவர்கள்ன்னு எழுதினா உலகம் தெரியாத பைத்தியம்ன்னு சொல்லுவாங்க.
கரையான்.
ஒரு ஆண் கடுமையா உழைச்சா... பொண்டாட்டியைக் கண்டுக்க மாட்டேங்கறான்னு மட்டம் தட்டுவாங்க.
பொண்டாட்டியை கவனிச்சுக்கிட்டா.. அவளையே சுத்தி சுத்தி வரான். வேலை வெட்டி இல்லாத பயன்னு கட்டம் கட்டுவாங்க..
அது போகட்டும்.. ஒரு பொண்ணைப் பார்த்து அழகா இருக்கேன்னு சொன்னா அது ஈவ் டீசிங்..ன்னு கெளப்பி விடுவாங்க.
கண்டுக்காம போனா அழகை ரசிக்கத் தெரியாத ஜடம்..!ன்னு அமுக்கி வைப்பாங்க.
எதுக்காச்சும் அழுதோம்ன்னா பொம்பள மாதிரி அழறான் பாரும்பாங்க..
திடமா இருந்தா நெஞ்சுல ஈவு இரக்கம் இல்லாத அரக்கன்னு வாருவாங்க..
பொண்டாட்டியை கேட்டு முடிவெடுத்தா தானா முடிவெடுக்கத் தெரியாத முட்டாள்..ன்னு பட்டம்.
சரின்னு நாமளே ஒரு முடிவு எடுத்தா தான் ஆம்பிளைங்கற அகங்காரம்..ன்னு திட்டும்.
ஏதாவது பிடிச்சது வாங்கிட்டுப் போய் கொடுத்தா "என்னத்துக்கு இப்போ காக்கா பிடிக்கிறீங்க..?" அப்படின்னு ஒரு நக்கல்.
ஒன்னும் வாங்கிட்டுப் போகலேன்னா "ஒரு முழம் பூவுக்கு விதியத்துப் போயிட்டேனே..!" ன்னு மூக்கை சிந்திக்கிட்டு விக்கல்..
ஒரு குறிக்கோளோடு உழைச்சா, " வேலையைக் கட்டிகிட்டு மாரடிக்க வேண்டியதுதானே.. எதுக்கு உங்களுக்கு பொண்டாட்டி..?" ன்னு ஏசல்.
சரின்னு சினிமாவுக்கு அழைச்சுட்டுப் போனா, " அந்த ஹீரோ மாதிரி ஒரு லட்சியம் வேணுமுங்க மனுஷனுக்கு.. எப்படி உழைச்சு முன்னேறி கார் பங்களா வாங்கினான் பாத்தீங்களா..?" ன்னு பூசல்..
இந்த கருத்து ஒஹோ என்று இருக்கிறதுன்னு எழுதினா, ஆனாதிக்க உலகம் அப்படின்னு சொல்லுவாங்க.
இது தப்பு பெண்கள் நல்லவர்கள்ன்னு எழுதினா உலகம் தெரியாத பைத்தியம்ன்னு சொல்லுவாங்க.
கரையான்.
சனி, பிப்ரவரி 23, 2013
ஞாயிறு, பிப்ரவரி 17, 2013
FROM FACE BOOK
வெளிநாட்டு வாழ்க்கை வேதனையே! இல்லை சாதனை - தினார்கும் ரியாலுக்கும் வாழ்க்கையை அடகு வைத்து விட்டு மீட்க முடியாமல் நீரிலேயே மூழ்கிக் கிடக்கும் மீன் குஞ்சுகள் நாங்கள்......
பண்டிகை நாட்களில் குடும்பத்தோடு
குதூகளிக்க முடியாமல் தங்களின் வாழ்த்துக்களை மனம் முழுக்க சோகத்தோடு கைப்பேசியில் கூக்குரலிட்டு கொஞ்சி மகிழ நேரில் இல்லாத காற்றலைகள் நாங்கள்......
இங்கே கண்ணே கனியமுதே என்றெல்லாம் தன் பெற்றக்குழந்தையை நெஞ்சுருகக் கட்டித்தழுவ முடியாதொரு துர்பாக்கியசாலிகள் நாங்கள்...
கொம்பியூட்டர், ஸ்கைப். போனிலும் சொந்த பந்தங்களின் குரல் கேட்டு கேட்டு எங்கள் பாசம் கூட இங்கு கமர்ஷியல் ஆகிப்போனது... தொலைதூர பாசம் செய்தே/காட்டியே தொலைந்து போனவர்கள் நாங்கள்...
நான் இங்கே நல்லா இருக்கேன். என்று எப்போதும் சொல்லும் இயற்கை நிலை குரலுக்கு சொந்தக்காரர்கள் நாங்கள்...
வியர்வையில் நாங்கள் வேலை செய்து துவண்டாலும் விடுமுறையில் ஊருக்கு போகும் முன் சென்ட் வாசனை திரவியங்கள் வாங்க மறப்பதில்லை நாங்கள்...(எங்கள் வியர்வையின் வாசம் வீட்டில் உள்ளோர் அறியாமல் இருக்க...)
உனக்கென்ன! விமானப்பயணம், வெளிநாட்டு ராஜ வாழ்க்கை என்று ஊருக்கு போனதும் உள்ளூர் வாசிகள் எங்களை பார்த்து விடும் பெருமூச்சு வளைகுடா நாட்டின் அரபி நாட்டு வெப்பத்தை விட சற்று அதிகமாகவே சுடுகிறது! (இவர்கள் பேச்சி)
வெளிநாட்டு மூட்டை பூஜ்ஜி கடியை விட இவர்கள் கடியைதான் தாங்க முடியவில்லை
கம்ப்யிட்டர்க்குள் அகப்பட்டுக்கொண்ட எலிகள்,
நாங்கள் கலப்பை பிடிக்கவில்லை ஆனால் நாங்களும்
களைத்துத்தான் போகிறோம்...
எண்ணெய் கிணற்று தவளைகள் நாங்கள்...
வாயுக்குழாயில் சிக்கிக்கொண்ட வாயில்லா பூச்சிகள் நாங்கள்...
திரைகடலோடி திரவியம் தேடும் திசைமாறிய பறவைகள் நாங்கள்...
ஆரம்பத்தில் முதலீடில்லா தொழில் இது என்று பெருமிதப்பட்டோம் எங்களுக்கே தெரியாமல் எங்கள் இளமையை அல்லவா முதலீடு செய்திருக்கின்றோம்...இப்போதுதா ன் புரியத்துவங்கியது சேர்ந்தே நரைக்கவும் துவங்கியது...
நாங்கள் முதலீடு செய்தது எங்கள் வாழ்க்கையை! வாலிபத்தை!!
இழப்பீடு கிடைக்காத இழப்பு இது , நஷ்ட்டஈடு கிடைக்காத நஷ்ட்டம் இது...
, அப்பாவின் அன்பு, குழந்தையின் மழலை, நண்பர்களுடன் அரட்டை இப்படி வீட்டு சாப்பாட்டுக்கு ஏங்கி தவிக்கும் எங்கள் நாக்கு
இங்க உள்ள பர்கர், பீசா, சன்விஜ், சாப்பிட்டு சாபிட்டு எங்கள் நக்கும் செத்து போச்சி பசி கொடுமைக்காக சாப்பிடுக்றோம்.
ஏதோ எங்கள் உடம்பில் கொஞ்சம் ஓட்டி கொண்டு இருக்கும் ரெத்தத்தை கூட மூட்டை பூச்சி குடித்து விடுகிறது .
எத்தனையோ இழந்தோம்.....
எல்லாவற்றையும் இழந்த நாங்கள் இன்னும் இங்கே ஏன் இருக்கின்றோம்...
இழப்பதற்கு ஒன்றுமில்லை என்பதாலா?
இல்லை இழப்பிலும் சுகம் கண்டுகொண்டதாலா?"
சொந்த மண்ணில் சொந்தங்களோடு சோறு திண்பவன்
......யாரடா ? இருந்தால் அவனே சொர்க்கம் கண்டவனடா!
உங்கள் விரல் தொடும் தூரத்தில் நான் இல்லை என்றாலும் !' உங்கள் மனம் தொடும் தூரத்தில் நான் இருப்பேன் !
நீங்கள் இருப்பது தொலைவில் தான் ஆனால் என் இதயம் மட்டும் உங்களுடன் பேசிக்கொண்டிருகின்றது...!
FACEBOOK- ல் சுட்டது.
கரையான்
பண்டிகை நாட்களில் குடும்பத்தோடு
குதூகளிக்க முடியாமல் தங்களின் வாழ்த்துக்களை மனம் முழுக்க சோகத்தோடு கைப்பேசியில் கூக்குரலிட்டு கொஞ்சி மகிழ நேரில் இல்லாத காற்றலைகள் நாங்கள்......
இங்கே கண்ணே கனியமுதே என்றெல்லாம் தன் பெற்றக்குழந்தையை நெஞ்சுருகக் கட்டித்தழுவ முடியாதொரு துர்பாக்கியசாலிகள் நாங்கள்...
கொம்பியூட்டர், ஸ்கைப். போனிலும் சொந்த பந்தங்களின் குரல் கேட்டு கேட்டு எங்கள் பாசம் கூட இங்கு கமர்ஷியல் ஆகிப்போனது... தொலைதூர பாசம் செய்தே/காட்டியே தொலைந்து போனவர்கள் நாங்கள்...
நான் இங்கே நல்லா இருக்கேன். என்று எப்போதும் சொல்லும் இயற்கை நிலை குரலுக்கு சொந்தக்காரர்கள் நாங்கள்...
வியர்வையில் நாங்கள் வேலை செய்து துவண்டாலும் விடுமுறையில் ஊருக்கு போகும் முன் சென்ட் வாசனை திரவியங்கள் வாங்க மறப்பதில்லை நாங்கள்...(எங்கள் வியர்வையின் வாசம் வீட்டில் உள்ளோர் அறியாமல் இருக்க...)
உனக்கென்ன! விமானப்பயணம், வெளிநாட்டு ராஜ வாழ்க்கை என்று ஊருக்கு போனதும் உள்ளூர் வாசிகள் எங்களை பார்த்து விடும் பெருமூச்சு வளைகுடா நாட்டின் அரபி நாட்டு வெப்பத்தை விட சற்று அதிகமாகவே சுடுகிறது! (இவர்கள் பேச்சி)
வெளிநாட்டு மூட்டை பூஜ்ஜி கடியை விட இவர்கள் கடியைதான் தாங்க முடியவில்லை
கம்ப்யிட்டர்க்குள் அகப்பட்டுக்கொண்ட எலிகள்,
நாங்கள் கலப்பை பிடிக்கவில்லை ஆனால் நாங்களும்
களைத்துத்தான் போகிறோம்...
எண்ணெய் கிணற்று தவளைகள் நாங்கள்...
வாயுக்குழாயில் சிக்கிக்கொண்ட வாயில்லா பூச்சிகள் நாங்கள்...
திரைகடலோடி திரவியம் தேடும் திசைமாறிய பறவைகள் நாங்கள்...
ஆரம்பத்தில் முதலீடில்லா தொழில் இது என்று பெருமிதப்பட்டோம் எங்களுக்கே தெரியாமல் எங்கள் இளமையை அல்லவா முதலீடு செய்திருக்கின்றோம்...இப்போதுதா
நாங்கள் முதலீடு செய்தது எங்கள் வாழ்க்கையை! வாலிபத்தை!!
இழப்பீடு கிடைக்காத இழப்பு இது , நஷ்ட்டஈடு கிடைக்காத நஷ்ட்டம் இது...
, அப்பாவின் அன்பு, குழந்தையின் மழலை, நண்பர்களுடன் அரட்டை இப்படி வீட்டு சாப்பாட்டுக்கு ஏங்கி தவிக்கும் எங்கள் நாக்கு
இங்க உள்ள பர்கர், பீசா, சன்விஜ், சாப்பிட்டு சாபிட்டு எங்கள் நக்கும் செத்து போச்சி பசி கொடுமைக்காக சாப்பிடுக்றோம்.
ஏதோ எங்கள் உடம்பில் கொஞ்சம் ஓட்டி கொண்டு இருக்கும் ரெத்தத்தை கூட மூட்டை பூச்சி குடித்து விடுகிறது .
எத்தனையோ இழந்தோம்.....
எல்லாவற்றையும் இழந்த நாங்கள் இன்னும் இங்கே ஏன் இருக்கின்றோம்...
இழப்பதற்கு ஒன்றுமில்லை என்பதாலா?
இல்லை இழப்பிலும் சுகம் கண்டுகொண்டதாலா?"
சொந்த மண்ணில் சொந்தங்களோடு சோறு திண்பவன்
......யாரடா ? இருந்தால் அவனே சொர்க்கம் கண்டவனடா!
உங்கள் விரல் தொடும் தூரத்தில் நான் இல்லை என்றாலும் !' உங்கள் மனம் தொடும் தூரத்தில் நான் இருப்பேன் !
நீங்கள் இருப்பது தொலைவில் தான் ஆனால் என் இதயம் மட்டும் உங்களுடன் பேசிக்கொண்டிருகின்றது...!
FACEBOOK- ல் சுட்டது.
கரையான்
ஞாயிறு, பிப்ரவரி 03, 2013
The guiltiest dog ever..
Friends,
Check this out..
https://www.facebook.com/photo.php?v=306317306152331&set=vb.552479714780967&type=2&theater
Gujili
Check this out..
https://www.facebook.com/photo.php?v=306317306152331&set=vb.552479714780967&type=2&theater
Gujili
சனி, பிப்ரவரி 02, 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




