ஞாயிறு, நவம்பர் 06, 2011

பக்ரித் வாழ்த்துக்கள்

நண்பர்கள் அனைவருக்கும் பக்ரித் வாழ்த்துக்கள்

சென்னை நட்சத்திரங்கள்.

சனி, நவம்பர் 05, 2011

photography at leisure,,,,msk





Intresting tweets from TWITTER

தேவதைகள் வெள்ளை உடையில் மட்டுமல்ல எண்ணைய் கறை படிந்த புடவையிலும் அம்மாவாய் வருவதுண்டு

SBI ல் Housing Loan வாங்குவதற்கு பதிலாக பெருமாள் கோவிலில் பிச்சை எடுத்தால் வீட்டுவேலை சீக்கிரம் முடிந்துவிடும்...#அனுபவம்

இந்திய தேசத்தைப் பொறுத்தவரை, தன் ஏழாவது மனைவிக்குத் 'தாஜ்மஹால்' கட்டியவனே சிறந்த காதலன்!

மாற்றம் வேண்டும் என்று மக்கள் நினைத்ததை அம்மா தவறாக புரிந்து கொண்டாரோ ?? #சட்டமன்றம் & நூலக மாற்றம்.

அம்மா சொன்னோன மாத்து துணிக்கூட எடுக்காம டக்குனு கெளம்புறாரே போதி தர்மர் !ஓ. பி .எஸ்ஸையே மிஞ்சிட்டார்

அது சரி.. 'மனிதத்தனம்' என்று மிருகங்கள் எந்த விதமான செயல்களுக்குப் பெயர் வைத்துள்ளனவோ..

ஒரே நாளில் தமிழ்நாட்டில் அதிகம் விற்பனையாவது, விற்பனையானது சிகரெட், டீ, இட்லி மற்றும் இடைதேர்தல்களின் போது ஓட்டு.!

அடிவாங்கி அழுத குழந்தை, சமாதானப்படுத்த தந்த பஞ்சுமிட்டாயை கன்னத்தில் கண்ணீர் மறையாமல் தின்பதும் ஆண்கள் திருமணநாள் கொண்டாடுவதும் ஒன்றுதான்

முட்டையில் இருந்து கோழி வந்ததா என தெரியவில்லை; ஆனால் காமராஜர், எம்.ஜி.ஆர் தொடர்ந்த சத்துணவில் கலைஞர் ஆட்சிக்கு பிறகுதான் முட்டை வந்தது.!

மனிதனை முதல்வனாக்க பெரியார் ஆரம்பித்த கட்சியை இன்று மாறும் முதல்வர்களை கடவுளாக்க பயன்படுத்துகிறார் வீரமணி.!

இந்தியாவில் லஞ்ச ஒழிப்பு துறை உண்டு, ஆனால் ஊழல் ஒழிப்பு துறை உண்டா? அன்னா ஹசாரே சொல்றதிலையும் ஒரு அர்த்தம் இருக்குப்பா...

66 கோடி ரூபாய் வழக்கிற்கே 1350 கேள்விகள்னா, 176000 கோடி ரூபாய்க்கு எத்தனை கேள்விகளோ? அடடடடா அப்பப்பப்பா

லஞ்சம் வாங்குவதும்;கொடுப்பது குற்றம் - சூப்பர்; அப்புறம் எப்படி தான் காரியம் சாதிக்கிறது?

தங்கபாலுவை கைது செய் என கோஷமிட்ட 11 பேருக்கு ரூ 200 அபராதம் # தலைவரை திட்டுறது உங்களுக்கு பப்ளிக்ல தம்மடிக்கிற மாதிரி ஆய்டுச்சா?

எல்லாவற்றுக்கும் கோபப்பட்டால் ஹர்பஜன்சிங்; எதுக்குமே கோபப்படாவிட்டால் மன்மோகன்சிங்.!

பீகாரில் 70% மக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள் - ஐ.நா # திகாரில் 100% பணக்காரர்களே இருக்கிறார்கள்,அதுக்கு என்ன செய்றது நைனா?

வயசு பையன் ஒருவன் பத்து பெண்கள் இருக்கும் இடத்தை எப்போ எந்த கிண்டலும் கேலியும் இல்லாமல் கடக்கிறானோ அன்று தான் இந்தியாவிற்கு சுதந்திரம்

Chocks
hi friends
I cant upload any photos
please help me

taa muchly

peer

வியாழன், நவம்பர் 03, 2011

லஞ்சம் வாங்கும் மக்கள் -



நன்றி: உணர்வு வார இதழ்
சேர்த்தது:
பாய்.

கூடங்குளம் அணுமின் நிலையம்


தமிழகத்தில் இன்று மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து இருக்கும் கூடங்குளம் அணுமின் பிரச்னை சில பல அரசியல் காரணங்களால் வேறு உருவெடுத்திருப்பது வருத்தமளிப்பதாக உள்ளது.  மத சார்பற்ற அரசாங்கம் என்று கூறிக்கொள்ளும் அரசுகள் தங்களுக்கு லாபம் உண்டென்றால் மத உணர்வுகளை கிளப்ப தயங்காது என்பதற்கு இந்த பிரச்சனை ஒரு சிறந்த உதாரணம்.
இந்த போராட்டங்கள் வலுப்பெற கிருத்துவ பிஷப்புகள் வெளி நாடுகளில் பணம் பெற்றுக்கொண்டு 
நாட்டின் முன்னேற்றத்திற்கு தடை ஏற்படுத்துவதாக ஒரு விஷமத்தனமான 
பிரச்சாரத்தை நடுவண் அரசே முன் நின்று நடத்துவது ஒரு கேவலமான அரசியல். கிருத்துவ பிஷப்புகள் என்ன வெளி நாட்டிலிருந்தா வந்தார்கள், அவர்களும் இந்திய குடிமக்கள்தானே, அவர்களுடைய 
குழந்தைகளும் சந்ததியினரும் இந்தியாவில்தானே வாழ்கிறார்கள், அவர்கள் எதிர்த்தால்
என்ன தவறு.  ஏற்கனவே அன்னா ஹசாரே  அவர்களின் போராட்டத்திற்கு மத சாயம் பூசி பிளவை உண்டாக்க முயற்சித்தது மத்திய அரசு அதே கொள்கையை பின்பற்றி இப்போது கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்போரிடையில் பிளவை ஏற்படுத்த ஒரு கேவலமான உத்தியை கையாண்டு வருகிறது. இவ்வளவு நாள் இல்லாமல் திட்டம் முடியும் நிலையில் ஏன் இந்த எதிர்ப்பு என எல்லோருக்கும் சந்தேகம் எழலாம்,
புகுஷிமா அணு உலையில் ஏற்பட்ட விபத்திற்கு பின்னர்தான் அணு உலைகளால் ஏற்படக்கூடிய அழிவின் தாக்கம் உலகிற்கு தெரிந்தது. தொழில் நுட்பத்தில் உலகின் முதல் நிலை நாடான ஜப்பான் நாடே இயற்கை
சக்தியின் முன் ஒன்றும் செய்ய இயலாதபோது நாம் சிறந்த தொழில் நுட்பத்தில் உருவாக்கி விபத்தே ஏற்படாதவாறு உண்டாக்கி உள்ளதாக மார்தட்டி 
கொள்வது வீண் ஜம்பமே ஒழிய ஏதுமில்லை. இதில் அரசு வீண் கெளரவம் பார்க்காமல் முடிவெடுப்பதே சிறந்ததாகும்...

கரையான்.