
வியாழன், மார்ச் 19, 2009
திங்கள், மார்ச் 16, 2009
நாயூறான் எதற்கு தகராறு செய்கிறோம் என்பதே தெரியாமல் சில சமயங்களில் தகராறு செய்து விட்டு வம்பில் மாட்டிக்கொள்வான். மெஸ்ஸில் ஒரு முறை அவனுக்கு கொடுக்கப்பட்ட உணவு சரியாக இல்லை என்று மெஸ் செகரெட்டரி (அவரும் நம் வகுப்பு தோழர்தான்) இடம் சென்று புகார் செய்தான், அவர் என்ன மன நிலையில் இருந்தாரோ என்னவோ, சாப்பாடு அப்படிதான் இருக்கும் இஷ்டம் இருந்தால் சாப்பிடு இல்லை என்றால் போ என கூற, வாக்குவாதம் முற்றி, நாயூரன் அவரை அடிக்க முயல அவர் தப்பிக்கும் முயற்சியில் கீழே விழுந்து கையில் hair line fracture ஆகி விட்டது, உடனே அவர் கையில் பெரிய கட்டு போட்டுக்கொண்டு வந்து அப்போதைய கல்லூரி முதல்வர் டாக்டர் ரிச்சர்டு மாசிலா மணி இடம் புகார் செய்து விட்டார், நாயூரன் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார் என்பது நிச்சயமாகி விட்டது(அனேகமாக சில நாட்கள் suspend செய்யப்படுவார் என்ற நிலை). நாயூரன் அன்று இரவே அவன் சொந்த ஊர் MLA வை சென்னையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் சென்று சந்தித்து நடந்தவற்றை எடுத்து கூறி நடவடிக்கை எடுக்காமல் செய்ய வேண்டி கொண்டார் அவர் உடனே அப்போதைய தி.மு.க அமைச்சரிடம் கூறி அவரை விட்டே தொலைபேசி மூலம் கல்லூரி முதல்வரிடம் பேச சொல்லி விட்டார். பிறகு கண் துடைப்பாக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணை முடிக்கப்பட்டது. அது நடந்து சில நாட்களில் டாக்டர் ரிச்சர்டு மாசிலாமணி நம் பல்கலைகழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப்பட்டார், அவருக்கு மாணவர்களின் சார்பில் முதல் வாழ்த்து சொன்னது நம் நண்பர் நாயுராந்தான். அவருக்கு மாலை அணிவித்து வாழ்த்து சொல்லும்போது அவர் அவனிடம்" தம்பி நீ போயி பாத்த MLA வையும் எனக்கு தெரியும், மந்திரியையும் எனக்கு தெரியும், இனியாவது, இந்த மாதிரி ரவுடி தனம் செய்யாமல் ஒழுங்காக படிச்சு முடிக்கிற வழியை பாரு" என்று கூறினார்.இந்த அனைத்து பிரச்சனைகளிலும் அதிகம் பாதிக்கப்பட்டது யார் என்றால் இந்த விஷயத்தில் சம்பந்தமே இல்லாத Dr.Paulraj (நம் co-ordinator department -ல் இருந்த ஒரு Associate Professor), அவரை இந்த பிரச்சினையை விசாரிக்க கல்லூரி முதல்வர் நியமித்திருந்தார், அவர் விசாரணைக்கு அழைக்கும் ஒவ்வொரு முறையும், நாயூறான் கண்டு கொள்ளாமல் இருக்க ஏன் விசாரணையை முடிக்கவில்லை என்று அவருக்கு கல்லூரி முதல்வர் memo கொடுத்து விட்டார், ஓய்வு பெரும் நேரத்தில் எனக்கு மெமோ வாங்கி கொடுத்து விட்டாயே என்று அவர் ஒரு பக்கம் அவனிடம் புலம்பி கொண்டு இருந்தார்.
கரையான்.
வெள்ளி, மார்ச் 13, 2009
NCC நாட்கள்
செவ்வாய், மார்ச் 10, 2009
yaaah
மதிய உணவு இடைவேளைக்கு பிறகு நரசிம்மனின் dairy science வகுப்பில் மும்முரமாக கண்ணை திறந்து வைத்துக்கொண்டு தூங்கி கொண்டு இருந்தோம் பெரும்பாலான நண்பர்கள், சிலர் பின் வரிசையில் நிம்மதியாக படுத்து தூங்கி கொண்டு இருந்தார்கள். அப்போது Dr. கதிரேசன் அவர்கள் NCC யில் இருந்த நண்பர்கள் தங்களின் உடை மற்றும் பூட்ஸ் திரும்ப ஒப்படைக்க வில்லை என அது பற்றி விசாரிக்க வந்தார். அவர் வந்து கிட்ட தட்ட பத்து நிமிடம் அர்ச்சனை செய்தார், யு பீபில் ஆர் நாட் ரிடர்நிங் த பூட்ஸ் அண்ட் யுனிபார்ம், ஐ ஆம் டெல்லிங் மேனி டைம்ஸ் யு ஆர் எக்ச்பரிமேண்டிங் மை பேஷன்ஸ் (பொறுமையை சோதிக்கிறீர்கள்), யு திங்க் யு பீபில் ஆர் பிக் , என்று கூறி நிறுத்தி விட்டு "என்ன நீங்கெல்லாம் அவ்வளவு பெரிய ஆட்களா" என தமிழிலும் கேட்டார்,உடனே பின்னால் படுத்திருந்த நம் நண்பர்களில் ஒருவர்"yaah" என கூறியதும், அவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க ஆரம்பித்து விட்டது. அவருடைய கோபம் மேலும் பல மடங்கு அதிகரித்து விட்டது,"ஹூ இஸ் தட் .... ஹூ இஸ் தட் " என கேட்டுக்கொண்டே gallery ஏற ஆரம்பித்து விட்டார், உட்கார்ந்திருந்த நாங்களெல்லாம் மிகுந்த டென்சன் ஆகி விட்டோம், நல்ல வேலையாக சில படிகள் மேலே ஏறியவர், என்ன நினைத்தாரோ திரும்பி சென்று விட்டார்.
கரையான்.
உயிர்க் கப்பல்
இதுபக்குவமாய் உயர் முதுகில்பாரம் சுமக்கும் கப்பல்!
வறட்சி மிகு நீரிலாவனத்தில்போகுங் கப்பல் -
இதுவாலும் முதுகும் கால்கள் நான்கும்வாய்த்திருக்கும் கப்பல்!
நீர்குடிக்க வாய்ப்பிருந்தால்நிறையக் குடிக்கும் கப்பல் -
மிகநெடும் பொழுது தாகம் தாங்கிநிற்கும் உயிர்க் கப்பல்!
பார் முழுதும் உள்ள மக்கள்பார்த்து வியக்கும் கப்பல் -
இதுபாதம் மணலில் புதைந்திடாமல்பாங்காய்ப் போகும் கப்பல்!
ஊர்ப் பயணம் செல்ல மக்கள்ஓட்டிப் போகும் கப்பல் -
மிகஉயர்ந்த உடலும் தடித்த தோலும்உடையதிந்தக் கப்பல்!
பார்த்துப் புல்லை மேய்ந்து நல்லபால் கொடுக்கும் கப்பல் -
இதுபாலைவனக் கப்பல் தம்பிபார்! பார்! ஒட்டகக் கப்பல்!-
திட்டக்குடி முத்து முருகன்
Posted By Bhai.
திங்கள், மார்ச் 09, 2009
படங்கள் பிரோம் 1991
படங்கள் யாவையும் JPEG FORMATIL போஸ்ட் செய்துள்ளேன். இருந்த எல்ல படங்களும் போஸ்ட் பண்ணியாச்சி. Please comment away
Gujili












qutub