ஞாயிறு, மார்ச் 08, 2009
வளைகுடா வசந்தங்கள்
2.நீரை விட பெட்ரோல் விலை குறைவு.
3.ஒரு நொடி கூட மின் வெட்டு கிடையாது.ஒரு வேலை,தடங்கல் ஏற்பட்டால் , உடன் ,மின்வாரியதினர் வீட்டில் ஜெநேரடர் கொண்டு வந்து பொருத்தி விடுவார்கள் .பழுது சரி செய்யும் வரை,அனைத்தும் இலவசம்.
4.ஒரு நாளும் நீர் தட்டுப்பாடு ஏற்பட்டதில்லை.ஒரு வேளை ஏற்பட்டால் , உடன்,நீர்வாரியதினர் லாரி மூலம் ,நீர் தருவார்கள்.பழுது சரி செய்யும் வரை அனைத்தும் இலவசம்.
5.எந்த ஒரு கட்டிட வேலையும் ,3 மாதத்தில் முடிந்து விடும்.
6.பாலைவனமாக இருந்தாலும், பல இடங்கள் பச்சைபசெலேன்று இருக்கும்.
7.நேரம் வெகு விரைவாக கழிந்துவிடும்.வெள்ளி முடிந்தவுடன்,அடுத்த வெள்ளி வந்துவிடும்.
8.ஒவ்வொரு 5 மீட்டருக்கும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் சலூன்.
9.மளிகை கடை முன்னால் நின்று ஹாரன் அடித்து ,சாமான்களை சொன்னால் , காரில் கொண்டு வந்து வைப்பார்கள்.இறங்க வேண்டியது இல்லை.
10.ஒவ்வாரு 2 கீ.மீ. ல் ,ஒரு ஷாப்பிங் மால்.
11.பிரதான ரோடுகள் ,மெதுவாக மற்றும் வேகமாக வோட்டு பவர்களுக்காக , அடையாள மிடப்பட்டுள்ளது.
12. பிரதான சாலைகளில் rash அண்ட் super fast driving செய்பவர்களை பிடிக்க காமெராக்கள் உள்ளன.minimum fine Rs.4000/-.ஒரு fine carries 2 points. 12 points accrue ஆனால் ,driving Licence ,முடக்கப்படும்.
13. கார் வாங்குவதை விட ,ல்ய்சன்ஸ் எடுப்பது வெகு சிரமம்.[பொள்ளாச்சியில் நான் VVIP ஆதலால் ,Motor Vehicle Inspector ல்ய்சன்சை ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து தந்தார் .லஞ்சமில்லை.]
14. பெண்களுக்கென்று எந்த அலுவலகத்திலும் கியூ கிடையாது.வந்து நின்றதும் , உடன் கவனித்து அனுப்பிவிடுவார்கள் .[பெண்களை அல்ல,அவர்களது வேலைய்யை.]
15. ஒரு Starbucks ,ஒவ்வொரு கீ.மீ. ல் .
16. ஒவ்வொரு செலவழியும் பொருட்களுக்கும் [expendable articles] ,கட்டாய expiry தேதி உண்டு. காலாவதி ஆனா பொருட்கள் ஒன்று மட்டும் கடையில் இருந்தாலும் , கடை சீல் வைக்கப்படும்.
17. பூங்காக்களில் ,family recreational இடங்களில் ,bachelors அனுமதி இல்லை.
18. Hierrarchy[bossism] கிடையாது.கடை நிலை ஊழியர்,முதல் நிலை அலுவலரை பெயர் சொல்லி அழைக்கலாம்.அவர் முன்பாக புகைக்கலாம்.அவர் நிற்க,இவர் இருக்கலாம்.[நமதூரில் ,immediate boss இக்கு முன்பு,நெளியிற நெளிவு இருக்கே, அப்பப்பா!]
19. லஞ்சம் என்றால் என்ன என்பது ,பலருக்கு தெரியாது.[ நமதூரில்,லஞ்ச ஒழிப்பு துறை தான்,லஞ்சத்தை ஆரம்பித்து வைத்தது.]
20. எந்த அலுவலகம் சென்றாலும் , டி ,காப்பி ,mineral நீர் இலவசம்.
21. எல்லாருக்கும் சம்பளம் ஆன்லைன் வசதியில்.[நான் பேங்கிற்கு போயி பல வருடங்கள் ஆகிறது.]
22. அதி தீவிர சிகிச்சை தேவைப்படின், ஹெலிகாப்டர் வந்து , இலவசமாக தூக்கி செல்லும்.
இன்னும் பல இருக்கலாம்.அவற்றை எனதருமை கரையான் எழுதலாம்.
பாய்.
சனி, மார்ச் 07, 2009
புதுசா கல்யாணமானவுங்க பொண்டாட்டிய பாத்து(சுமாரா இருந்தா கூட) ஐஸ்வர்யா ராய் சுஸ்மிதா சென்னு, அப்படியெல்லாம் புகழுவாங்க, கல்யாணமான ரெண்டாவது நாளே பொண்டாட்டிய பாத்து பேய் இன்னு சொன்னது என்னோட கண்கண்ட தெய்வம் ஆகத்தான் இருக்கும். கல்யாணமான புதுசுல கோவிலுக்கு போனோம். சாமியெல்லாம் கும்பிட்டு முடிச்சதும், எங்களோட வந்த என் பெரியம்மா, கோவில்ல கொஞ்ச நேரம் உட்கார்ந்து போகனும்னு சொன்னாங்க. இவரு அவங்ககிட்ட "அதான் சாமியெல்லாம் கும்பிட்டாச்சே போக வேண்டியது தானே" என்று கேட்டாரு. அவுங்க "நாம கோயிலில் இருந்து உடனே போனால் இங்க சுத்திக்கிட்டு இருக்கிற பேய்கள் நம்ம பின்னாலேயே வந்துடும்றது ஐதீகம் அதனால் இங்க உட்கார்ந்து இருந்து போனால் அது திரும்ப போய்டும் நம்ம பின்னால் வராது" என்றார். கொஞ்ச நேரம் கழிச்சு வீட்டுக்கு கிளம்பி நடக்க ஆரம்பித்தோம், இவரு விடுவிடு வென்று எனக்கு பத்தடி முன்னாள் நடந்து சென்று திரும்பி பார்த்து எங்க பெரியம்மாவிடம் "பேய் வராதுன்னு சொன்னீங்க பின்னாலேயே வருதேன்னு" என்னை காட்டி சொல்றாரு.
திருமதி கரையான்.
பிசியாலஜி ,அந்த வாத்தியார் பெயர் சரியாக ஞாபகம் இல்லை(அனேகமாக விஸ்வநாதன்), அவருடைய வகுப்பு பெரும்பாலும் பதினொன்று முதல் பன்னிரண்டு வரை இருக்கும் மெஸ் செல்லும் நண்பர்கள் 11:45 க்கு lecture ஹால் இன் பின் பக்க வழியாக தப்பி விடுவார்கள், சீக்கிரமாக சென்று இடம் பிடிப்பதற்கு. இது பல நாட்களாக நடந்து கொண்டிருந்தது, சிலர் அவர் அட்டெண்டன்ஸ் எடுத்து முடித்த வுடன் தப்பி விடுவார்கள். ஒரு நாள் வழக்கம் போல் அவர் அட்டெண்டன்ஸ் எடுத்த பின் பல நண்பர்கள் தப்பி விட்டார்கள், சிலர் கடைசி பத்து நிமிடத்தில் சென்று விட்டார்கள்(பாய் போன்ற நல்ல மனம் கொண்ட நண்பர்கள்), எதோ காரணத்தால், அவர் வகுப்பு முடிந்தவுடன் சில பெயர்களை அழைத்தார், ஆனால் அந்த நண்பர்கள் வகுப்பிலிருந்து ஏற்கனவே வெளியேறி விட்டார்கள். அட்டேண்டன்சில் அவர்கள் present ,வாத்தியார் குழம்பி விட்டார், அட்டெண்டன்ஸ் திரும்ப ஒருமுறை எடுத்ததில் கிட்டத்தட்ட் இருபது பேருக்கும் மேல் வகுப்பில் இல்லை, ஆனால் அட்டெண்டன்ஸ் படி present. கடும் கோபம் அடைந்த அவர்"மவனுங்களே வாங்கடா நீங்க எப்படி என்கிட்டருந்து பாஸ் ஆவுரீங்கன்னு பாத்துடுறேன்" என கருவிக்கொண்டே சென்றது இன்னும் பசுமையாக ஞாபகம் உள்ளது.
கரையான்.
திங்கள், மார்ச் 02, 2009
ஒட்டகப்பால் குடிச்சா பேதி ஆவறது ஏன்னா அது ரொம்ப concentrated ஆக இருப்பதால்தான், ஒட்டகங்கள் இயற்கையாகவே தண்ணீர் இல்லாத பிரதேசங்களில் இருப்பதால் அதுடைய பால், சிறுநீர் எல்லாமே concentrated ஆகத்தான் இருக்கும் இது இயற்கை அதற்களித்த வர பிரசாதம். அதுடைய பாலில் fat, protein எல்லாமே கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். மேலும் சர்க்கரை வியாதி நோயாளிகளுக்கு பயன் உண்டு, மற்ற விலங்கினங்களின் பாலை விட ஒட்டகப்பாலில் insulin கொஞ்சம் அதிகமாகவே இருக்கும், எனவே பச்சையாக குடிக்கும்போது சர்க்கரை வியாதி நோயாளிகளுக்கு இன்சுலின் ஊசி அல்லது மாத்திரை மூலம் செலுத்திய பயன் உண்டாகிறது. மேலும் பசு அல்லது எருமை மாட்டுப்பால் பச்சையாக குடித்தாலும் பெரும்பாலானவர்களுக்கு வயிற்று போக்கு நிச்சயம். மேலும் நான் எடுத்துக்கொண்டது கொஞ்சம் அதிக dose கிட்ட தட்ட ஒரு லிட்டர். இங்கு ஒட்டகப்பால் குடிக்க சென்றால், ஒட்டகம் வைத்திருப்பவர்கள் ஒரு பெரிய bowl ல் தருவார்கள், கொஞ்சமாக குடித்து விட்டு கீழே ஊற்றுவதை சவுதிகள் விரும்புவதில்லை.
கரையான்.
படங்கள் - ஆல் இந்தியா டூர், ஹோசூர்.
இப்போது எங்களுக்கு ஒரு வாரம் வசந்த காலம் விடுமுறை; என்றாலும் வேலை அதிகம் ஏனெனில் இந்த நேரத்தை வகுப்பு தயார் செய்வதற்கு உபாயோகிக்க வேண்டும். நான் அதுக்கு பதிலாக நேரத்தை முக்கியமான விஷயங்களிற்கு உபயோகிக்கிறேன். எனது ஆல் இந்தியா டூர் படங்களை கண்டுபிடுத்து விட்டேன். அதோடு சில ஹோசூர் படங்களும் உள்ளது. கிட்டத்தட்ட 34 படங்கள் இருப்பதால் படங்களை இன்ச்டல்மேன்டில் போஸ்ட் செய்கிறேன். மேலும் என்னிடம் SCANNER இல்லாதலால் ஆபீஸ் SECRETARYயின் SCANNER உதவியை நாட வேண்டும். படங்கள் ஒவ்வுன்றாய் காணும் போது நினைவுகள் மெதுவாக வருகிறது. DEHRA DUN இல் எடுத்த படம் ஒன்றில் மாதீச்வரன் ஒரு GORKA வேஷம் போட்டுள்ளான், ஆனால் மோகன்தாஸ் ஒரு மலை வாசி பெண்ணின் கோலத்தை அணிந்துள்ளான்..
திருவேணி சங்கம் padangalai பார்க்கும் bodhu அந்த தண்ணீரின் நிறம் என் மனதில் பச்சையாக தோன்றுகிறது..
அஜந்தாa elloraa குகைகளில் கூத்தடிச்சி விழையாண்ட நினைவுகள்; அங்கு சோறு கிடைக்காமல் அதிக பிரெச்சனை எனக்கு, ஏனென்றால் எனக்கு சோறு சாப்பிடாமல் இருக்க முடியாது.. இவ்வாறு பல நினைவுகள்..
சரி, நான் கண்டிப்பாக 2 வாரத்துக்குள் இந்த படங்களை போஸ்ட் செய்கிறேன்.
Gujili
ஞாயிறு, மார்ச் 01, 2009
கோவை பயிற்சி அனுபவங்கள்
2.செகண்ட் VAS டாக்டர் ஆசீர்வாதம்.SUBJECTIL துரைப்பலத்தை விட மோசம்.
ஆனால் சமாளிப்பதில் வல்லவர்.ஒரு நாள்,ஒருவர் முயலுடன் வந்து ,"டாக்டர் ,இந்த முயல் வழக்கமாக எட்டு குட்டி போடும்.இந்த முறை இரண்டு தான் போட்டது.பரிசோதனை செய்து காரணத்தை கூறவும்" என்றார்.
உடனே,"இதற்கான மெசின் லண்டனில் உள்ளது.நான் லெட்டர் தருகிறேன்.அங்கு கொண்டு சென்றால் ,நன்கு கவனிப்பார்கள் " என்று கூலாக சொன்னார்.வந்தவர் வந்த வழியே போய்விட்டார்.
இன்னொரு சமயம் ஒருவர் நாயை கொண்டு வந்து "சீசேரியன் செய்தால் பிழைக்காது என்று கூறுகிறார்களே" என்றார் .உடன் டாக்டர் .ஆசீர் ,"இல்லையே !எனது நாய் உயிருடன் தானே இருக்கிறது " என்றார்.வந்தவர் சம்மதிக்கவும் ,அவர் டூட்டி இல்லாத நாளைக்கு APPOINTMENT கொடுத்து அனுப்பிவிட்டார்.
[குறிப்பு: அவரது நாய்க்கு நாங்கள் தான் ஆபேரேசன் செய்தோம்.]
பாய்
.jpg)
.jpg)